Jump to content

கருக்கலைப்பு உரிமை: 50 வருட தீர்ப்பை மாற்றியது அமெரிக்க உச்ச நீதிமன்றம் - முழு விவரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருக்கலைப்பு உரிமை: 50 வருட தீர்ப்பை மாற்றியது அமெரிக்க உச்ச நீதிமன்றம் - முழு விவரம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

Abortion rights activists and anti-abortion activists rally at the Supreme Court, Washington, Usa - 23 Jun 2022

பட மூலாதாரம்,EPA

 

படக்குறிப்பு,

கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் மற்றும் கருக்கலைப்பு எதிர்ப்பு ஆர்வலர்கள் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பேரணி நடத்தினர்

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.

அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், 'கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை' என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதேபோல, 1992ஆம் ஆண்டில் பெனிசில்வேனியா மற்றும் கேசே இடையிலான வழக்கில், '22 முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்' என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள் மாற்றப்படும். கருக்கலைப்பு நடைமுறைக்கு தடை விதிக்க இனி மாகாணங்கள் ஒவ்வொன்றாக நடவடிக்கை மேற்கொள்ளும்.

அநேகமாக அமெரிக்கா மாகாணங்களில் பாதியாவது கருக்கலைப்புக்கு தடை விதிக்க ஏதுவாக புதிய சட்டம் அல்லது கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சட்டங்களை 13 மாகாணங்கள் இயற்றியுள்ளன. மற்றவை சில புதிய கட்டுப்பாடுகளை விரைவாக நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

மொத்தத்தில், கருத்தரிக்கும் வயதுடைய சுமார் 36 மில்லியன் பெண்கள் கருக்கலைப்புக்காக செல்ல முடியாத நிலையை இது ஏற்படுத்தும் என்று பிளாண்ட் பேரன்ட்ஹுட் என்ற கருக்கலைப்பு சேவை வழங்கும் சுகாதார அமைப்பு கூறுகிறது.

 

1px transparent line

 

1px transparent line

என்ன வழக்கு?

15 வாரங்களுக்குப் பிந்தைய சிசுவை கருக்கலைப்பு செய்வதற்கு மிஸ்ஸிசிப்பி மாகாணம் விதித்த தடையை எதிர்த்து நடைபெற்ற டாப்ஸ் மற்றும் ஜாக்சன் மகளிர் சுகாதார அமைப்பு இடையிலான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அந்த நீதிமன்ற அமர்வில், கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்பு உரிமைக்கு முடிவு காணும் வகையில், சித்தாந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

"எனவே கருக்கலைப்புக்கான உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை என்று நாங்கள் கருதுகிறோம் ... மேலும் கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்ப வழங்கப்பட வேண்டும்" என்று தீர்ப்பின் ஒரு பகுதியில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தமது சொந்த தீர்ப்புக்கு தலைகீழாக உள்ளது. இப்படி நடப்பது மிகவும் அரிதான செயல். மேலும் தேசத்தை பிளவுபடுத்தும் அரசியல் வாதங்கள் இதன் மூலம் தூண்டப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

கருக்கலைப்பு பற்றிய கருத்துக்கள் தொடர்பாக முரண்பட்ட நிலைபாடு நிலவும் மாகாணங்களில் (பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின் போன்றவை) - தேர்தல் அடிப்படையில் ஒவ்வோர் முறையும் தடை விதிக்கும் சட்ட நடைமுறையை தீர்மானிக்க முடியும்.

மற்றவற்றில், தனி நபர்கள் கருக்கலைப்புக்காக வெளி மாகாணங்களுக்குச் செல்லலாமா அல்லது அஞ்சல் சேவைகள் மூலம் கருக்கலைப்பு மருந்துகளை ஆர்டர் செய்யலாமா என்பது உள்ளிட்ட புதிய சட்டப் போராட்டங்களுக்கு இந்தத் தீர்ப்பு வழிவகுக்கலாம்.

 

A map shows which states have legislation prepared to affect abortion in the event of Roe v Wade being overturned

கலிபோர்னியா, நியூ மெக்சிகோ, மிஷிகன் உள்ளிட்ட பல மாகாணங்களில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆளுநர்கள் 'ரோ Vs வேட்' வழக்கில் முந்தைய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டால், கருக்கலைப்பு உரிமையை தங்கள் அரசியலமைப்பிற்குள் உள்ளடக்கும் திட்டங்களை ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கருக்கலைப்பு உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஏழு மாகாணங்களின் ஜனநாயக கட்சியின் அட்டர்னி ஜெனரல்களுடன் கடந்த வியாழக்கிழமை விவாதித்தார் என்று ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னணி

1973ஆம் ஆண்டு நடந்த மைல்கல் ரோ Vs வேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏழுக்கு இரண்டு வாக்குகள் மூலம் ஒரு பெண்ணின் கர்ப்பத்தை கலைக்கும் உரிமை அமெரிக்க அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பு அமெரிக்கப் பெண்களுக்கு அவர்கள் கருத்தரித்த முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்வதற்கான முழுமையான உரிமையை வழங்கியது, ஆனால் இரண்டாவது மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்து கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுவே 6-9 மாதங்களில் கருக்கலைப்பு செய்வது அறவே தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த பல தசாப்தங்களில், கருக்கலைப்புக்கு எதிரான தீர்ப்பை சுமார் ஒரு டஜன் மாகாணங்கள் திரும்பப் பெற்றுள்ளன.

 

1px transparent line

ரோ Vs வேட் வழக்கு: எளிதில் புரிந்து கொள்ள உதவும் சில பின் குறிப்புகள்

  • 1971இல் கருக்கலைப்பு செய்யத் தவறிய பெண் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது ரோ வெர்சஸ் வேட் வழக்கு என்று அழைக்கப்படுகிறது.
  • கருக்கலைப்பு வசதிகளை எளிதாக அணுக வேண்டும் என்றும் கர்ப்பம் மற்றும் கருக்கலைப்பு தொடர்பான முடிவு பெண்ணின் கையில் இருக்க வேண்டும் என்றும் அது அரசு அல்ல என்றும் மனுதாரர் கூறினார்.
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1973இல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. அதில் கருக்கலைப்பு சட்டபூர்வமானது மற்றும் கருக்கலைப்பு தொடர்பான முடிவுகளை எடுக்க கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசியலமைப்பு உரிமை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
  • இதன் பிறகு, மருத்துவமனைகளில் பெண்களுக்கு கருக்கலைப்பு வசதிகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
  • ஆனால் அதன் பிறகு விஷயம் தீவிரம் அடைந்தது. மதக் குழுக்களுக்கு இது மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது, ஏனென்றால் கருவுக்கு வாழ உரிமை உண்டு என்று அவர்கள் நம்பினர்.
  • இந்த விவகாரத்தில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இடையே கருத்துகள் வேறுபட்டன. 1980வாக்கில், இந்த பிரச்னை மத ரீதியிலானதாக மாறியது.

https://www.bbc.com/tamil/global-61927565

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்தால் ஒரு பிரச்சனையும் வராது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

சும்மா இருந்தால் ஒரு பிரச்சனையும் வராது.

எங்கை சொல்வழி கேட்டாத்தானே.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

சும்மா இருந்தால் ஒரு பிரச்சனையும் வராது.

ம் 50-60 திலதான் இப்படியான எண்ணம் வருகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 வருடங்களில் சரியாக சிந்தித்த மூளை இன்று மங்கி வருகிறது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருக்கலைப்பு உரிமை தீர்ப்பு: அமெரிக்காவில் அதிர்வலை - இந்திய சட்டம் என்ன சொல்கிறது?

9 மணி நேரங்களுக்கு முன்னர்
 

अमेरिका

பட மூலாதாரம்,EPA

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை சட்டபூர்வமாக்கப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அது தொடர்பான தீர்ப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது, இதன் பிறகு நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த நாட்டின் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரும் இதுவே இறுதியானது இல்லை என்று கருத்து கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, இப்போது அமெரிக்காவின் வெவ்வேறு மாகாணங்கள், கருக்கலைப்பு உரிமை பெண்களுக்கு சட்டபூர்வமானதா இல்லையா என்பது தொடர்பாக இனி சொந்தமாக விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

அமெரிக்காவின் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்கள், கருக்கலைப்பு சட்டங்கள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

13 மாகாணங்கள் ஏற்கெனவே கருக்கலைப்பை சட்டவிரோதமாக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

மூடப்படும் கருக்கலைப்பு கிளினிக்குகள்

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, அமெரிக்காவின் சில மாகாணங்களில் கருக்கலைப்பு கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன. இந்த முடிவின் நேரடி தாக்கம் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் பகுதியின் கருக்கலைப்பு மருத்துவமனையில் காணப்பட்டது.

 

கருக்கலைப்பு சட்டம்

பட மூலாதாரம்,EPA

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டவுடனேயே அங்கு கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. கருக்கலைப்பு கிளினிக்கின் கதவுகள் மூடப்பட்டன. மருத்துவமனை ஊழியர்கள்,கருக்கலைப்புக்காக முன்பதிவு செய்த நோயாளிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அவர்களின் அப்பாயின்ட்மென்ட் ரத்து செய்யப்பட்டதாகக் கூறினர்.

ஆஷ்லே ஹன்ட் ஒரு செவிலியர். அவர் பிபிசியிடம் கூறுகையில், சில நேரங்களில் நாம் மிகவும் மோசமான செய்திகளைக் கேட்கத் தயாராக இருக்கிறோம், ஆனால் அத்தகைய செய்தி நம்முடன் தொடர்புடையாக இருக்கும்போது அது நம் தலையில் இடி விழுந்தது போல ஆகிறது," என்று கூறினார்.

"இந்த அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படும் என்று நான் நினைத்தேன். அது இன்னும் பெண்களைப் பற்றிக் கவலைப்படும்" என்று மருத்துவமனைக்கு வெளியே நிற்கும் ஹெட் எஸ்கார்ட்ஸ்கரென் கூறுகிறார்.

இதேவேளை, கருக்கலைப்புக்கு எதிரான போராட்டங்கள் கிளினிக்கிற்கு வெளியே நடந்தன. கருக்கலைப்பு கிளினிக்கிற்கு வெளியே தங்கள் கார்களை நிறுத்த வந்தவர்களை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டனர். 'நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள்,' என்று போராட்டக்காரர்கள் குரல் கொடுத்தனர்.

 

கருக்கலைப்பு சட்டம்

பட மூலாதாரம்,EPA

அதிபர் கவலை

தீர்ப்புக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில், கருக்கலைப்புக்காகப் பெண்கள் பயணம் செய்வதை மாகாண மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய முயற்சிப்பதாகக் கூறினார். நாட்டின் சுகாதாரத்துறை, கருக்கலைப்பு மாத்திரைகள் முழுமையான அளவில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் பைடன் தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் தமது நிலைப்பாட்டை பகிர்ந்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

"அமெரிக்காவில் இன்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் உடல்நலம் மற்றும் கருக்கலைப்பு மருத்துவ வசதியைப் பெற முடியாமல் இன்றிரவு படுக்கைக்கு செல்வர். அமெரிக்க மக்களின் அரசியலமைப்பு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன," என்று கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

இதற்கிடையில், கருக்கலைப்பு உரிமை வழங்கிய ரோ மற்றும் வேட் இடையிலான தீர்ப்பை நீண்ட காலமாக எதிர்த்து வருபவரான முன்னாள் அதிபர் மைக் பென்ஸ், வாழ்வின் புனிதத்தை ஒவ்வொரு மாகாணமும் ஏற்றுக்கொள்ளும் வரை ஒவ்வொரு மாகாணத்திலும் கருக்கலைப்பு எதிர்ப்பு பிரசாரத்தை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

கருக்கலைப்பு சட்டம்

பட மூலாதாரம்,REUTERS

 

લાઇન

அமெரிக்காவில் கருக்கலைப்பு பற்றிய சர்ச்சை ஏன்?

 

લાઇન

  • 1971ஆம் ஆண்டு அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்யத் தவறிய பெண்ணின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது ரோ வெர்சஸ் வேட் வழக்கு என்று அழைக்கப்பட்டது.
  • கர்ப்பம் மற்றும் கருக்கலைப்பு பற்றிய முடிவு பெண்ணின் முடிவாக இருக்க வேண்டும், அரசாங்கம் அல்ல என்று அந்த தீர்ப்பு கூறியது.
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1973இல், நீதிமன்றம் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கியது. அரசியலமைப்புச் சட்டம் கர்ப்பிணிக்கு முடிவெடுக்கும் உரிமையை வழங்குகிறது என்று அந்த தீர்ப்பு கூறியது.
  • இதற்குப் பிறகு, மருத்துவமனைகளில் பெண்களுக்கு கருக்கலைப்பு வசதிகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
  • இந்த முடிவு அமெரிக்க பெண்களுக்கு கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டபூர்வ உரிமையை வழங்கியது. இருப்பினும், இரண்டாவது மூன்று மாதங்களில் அதாவது நான்காவது முதல் ஆறாவது மாதம் வரை கருக்கலைப்பு தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
  • ஆனால் அமெரிக்காவில் உள்ள மதக் குழுக்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது, ஏனெனில் அவர்கள் கருவில் உள்ள சிசிவுக்கும் உயிர் வாழும் உரிமை உண்டு என்று நம்பினர்.
  • இந்த பிரச்னையில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் கருத்துக்கள் வேறுபட்டன. 1980வாக்கில், இது மதப்பிரச்னையாக மாறத் தொடங்கியது.
  • இதற்குப் பிறகு, பல மாகாணங்கள் கருக்கலைப்பைத் தடை செய்யும் விதிகளை அமல்படுத்தின, சில மாகாணங்கள் கருக்கலைப்பு உரிமையை பெண்களுக்கு தொடர்ந்து அளித்தன.
 

લાઇન

 

கருக்கலைப்பு சட்டம்

பட மூலாதாரம்,THINKSTOCK

 

கருக்கலைப்பு சட்டம்

இந்தியாவில் சட்டம் என்ன சொல்கிறது?

இந்தியாவில், கருக்கலைப்பு தொடர்பான சட்டம் கடந்த ஆண்டு திருத்தப்பட்டது, அதன் பிறகு கருக்கலைப்புக்கான 'செல்லுபடியாகும் காலம்' 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது.

இந்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2021ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி, இந்தியாவில் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு (திருத்தம்) சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பிட்ட வகை பெண்களுக்கு கருக்கலைப்புக்கான 'செல்லுபடியாகும் காலம்' நீட்டிக்கப்பட்டுள்ளது, எம்டிபி விதிகளில் திருத்தம் செய்யப்படுவதன் மூலம் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்களுடன் பாலியல் தொடர்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய பெண்கள் (ஊனமுற்ற பெண்கள், மைனர் வயதுடைய சிறுமிகள் இந்த வகையில் சேருவர்.

முன்னதாக, இந்தியாவில் 1971ஆம் ஆண்டு மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டம் இருந்தது. அதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.அந்த சட்டத்தின்படி, ஒரு பெண் 12 வாரங்கள் கர்ப்பமாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கருக்கலைப்பு செய்யலாம் என்று இருந்தது. அதே நேரத்தில், 12-20 வாரங்களாக இருந்தால் அவர் இரண்டு மருத்துவர்களின் ஆலோசனை பெறவது கட்டாயமானது. 20-24 வாரங்களில் கருக்கலைப்பு செய்ய பெண் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் திருத்தப்பட்ட மசோதாவில் 12 வாரங்களிலும் 12 முதல் 20 வாரங்களிலும் கருக்கலைப்பு செய்து கொள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகிறது.

இது தவிர, 20-24 வாரங்களாக கரு இருந்தால், சில வகை பெண்கள் இரண்டு மருத்துவர்களை அணுக வேண்டும், மேலும் 24 வாரங்களுக்கு மேல் வளர்ந்த கருவாக இருந்தால், மருத்துவ ஆலோசனைக்குப் பின்னரே கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.

https://www.bbc.com/tamil/india-61941362

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 வருட கால உரிமையை மாற்ற தனியே மத நம்பிக்கை மட்டும் காரணமாக இருக்காது என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.