Jump to content

முதல் பார்வை | மாமனிதன் - டைட்டிலின் ஆன்மாவுக்கு நியாயம் சேர்க்க ‘விரும்பிய’ படைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வை | மாமனிதன் - டைட்டிலின் ஆன்மாவுக்கு நியாயம் சேர்க்க ‘விரும்பிய’ படைப்பு

817850.jpg  

தன் குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் ஒரு சராசரி தந்தையின் வாழ்க்கையில் நிகழும் சிக்கல்களும், போராட்டமுமே படத்தின் ஒன்லைன்.

தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன் (விஜய் சேதுபதி), அதே ஊரைச் சேர்ந்த சாவித்ரி (காயத்ரி) திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அரசுப் பள்ளியில் படிக்கும் தன் குழந்தைகளை, எப்படியாவது தனியார் பள்ளியில் சேர்ந்து நன்கு படிக்க வைத்துவிட வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ராதாகிருஷ்ணனுக்கு ரியல் எஸ்டேட் மூலமாக அதிக பணம் ஈட்டும் ஒரு வாய்ப்பு கிட்டுகிறது. அந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் ராதாகிரஷ்ணன், மாதவன் (ஷாஜி சென்) என்பவரால் ஏமாற்றப்படுகிறார்.

ஊர்க்காரர்களின் பணத்தையெல்லாம் சுருட்டிக்கொண்டு மாதவன் தலைமறைவாக, ஊராரின் கோபம் ராதாகிருஷ்ணனை நோக்கி திரும்புகிறது. இந்த பிரச்சினைகளை அவர் எப்படி சமாளித்தார்? அந்த ஊர் மக்களிடமிருந்து எப்படி தப்பித்தார்? குழந்தைகளை படிக்கவைத்தாரா இல்லையா? இறுதியில் என்ன ஆனது? - இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது 'மாமனிதன்' படத்தின் திரைக்கதை.

16560396693078.jpg

 

ராதாகிருஷ்ணனாக விஜய் சேதுபதி. ஒரு சராசரி குடும்பத்தலைவனுக்கான கதாபாத்திரத்தில் பொருந்திப்போகிறார். அவருடைய கதாபாத்திரம் எழுதியிருக்கும் விதமும், அதற்காக நடிப்பின் மூலம் அவர் சேர்த்திருக்கும் நியாயமும் படத்திற்கு பலம்.

அம்பிகாவாக நடித்திருக்கும் காயத்ரி, நடுத்தர குடும்பங்களிலிருக்கும் வழக்கமான மனைவியாகவும், குழந்தைகளை எண்ணி வருந்தும் டெம்ளேட் தாயாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். நடிப்பில் அவர் குறைவைக்கவில்லை என்றாலும், கதாபாத்திர வடிவமைப்பில் குறை தெரிகிறது.

இஸ்லாமியராக வரும் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு படத்திற்கு பக்கபலம். அண்மைக்கால சினிமாவில் இஸ்லாமியர் ஒருவரை அடர்த்தியான கதாபாத்திரத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ஆறுதல். படம் முடிந்த பிறகு யோசித்தாலும், கஞ்சா கருப்பு கதாபாத்திரத்தின் தேவையை மட்டும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஷாஜி சென் குறைந்த காட்சிகளில் வந்தாலும் நடிப்பில் நிறைவைத் தருகிறார்.

'தர்மதுரை' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சீனுராமசாமியும் விஜய் சேதுபதியும் இணைந்துள்ள படம். ஒருவனின் வாழ்க்கையைப் பற்றி பேசும் இப்படம் சிறுகதை போல திரையில் விரிகிறது. படத்தின் முதல் பாதி, விஜய் சேதுபதி எனும் மனிதனையும், அவன் வாழ்ந்து வரும் வாழ்க்கை குறித்தும் கட்டமைக்கும் காட்சிகளிலேயே நகர்கிறது. அதில் சுவாரஸ்யமான காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும், சில இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் அந்தக் காட்சிகள் பெரிய அளவில் அயற்சியைத் தரவில்லை. கஞ்சா கருப்பு கதாபாத்திரத்தின் வழியாக வலிந்து திணிக்க முயற்சித்திருக்கும் காட்சிகள்தான் சோதிக்கிறது.

16560396893078.jpg

ராதாகிருஷ்ணன் என்பவனையும், அவரது குடும்பத்தையும் முதல் பாதியில் அறிமுகப்படுத்திய இயக்குநர் இரண்டாம் பாதியில் என்ன செய்யப்போகிறார் என்ற ஆவலுடன் இடைவேளைக்குப் பிறகு அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கு தொடக்க காட்சிகள் ஈர்க்கிறது. காட்சிகள் நகர, நகர விஜய் சேதுபதியை நல்லவராக ஐ மீன் 'மாமனிதன்' ஆக காட்ட முற்படும் காட்சிகளுக்கான எழுத்து கதையோடு ஒட்டாமல் ஓடிவிடுகிறது. அது ஒரு நாயக பிம்பத்தை கட்டி எழுப்ப திணிக்க வேண்டிய எழுத்தாக மாறியிருப்பது ஒரு காரணம். அதில் தப்பித்து சில எமோஷனல் காட்சிகள் நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்வது ஆறுதல்.

தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு கேமராவை கொண்டு சென்று, ஆன்மிகத்தில் கதையை கலக்கச் செய்திருப்பது ஏதோ ஒரு வகையில் நாயகனை மாமனிதனாக்கிட வேண்டும் என்ற இயக்குநரின் கஷ்டம் புரிகிறது. ஆனால், அதற்காக ஓவர் ஹைப் வேண்டாமே!

குரு சோமசுந்தரத்தின் முஸ்லிம் கதாபாத்திரமும், கேரளாவில் கிறிஸ்துவ பின்னணி கொண்ட கதாபாத்திரங்களையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் தற்கால அரசியல் சூழலில் கவனம் பெறுகிறது. அதேபோல வாரணாசியில் இந்து கோயிலில் முஸ்லிம் ஒருவர் தொழுகை நடத்தும் காட்சிகள் மிகையாக இருந்தாலும், ரசிக்கவே வைக்கிறது. மதசகிப்பத்தன்மை குறித்த காட்சிகளுக்காக இயக்குநரை நிச்சயம் பாராட்டலாம்.

தவிர, காலங்கள் வேகமாக ஓடுவதை காட்டிய விதம் உள்ளிட்ட பல லாஜிக் சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக, படம் முழுக்க ஆணை சார்ந்து தான் பெண் காதபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

16560398493078.png

விஜய் சேதுபதியைச் சார்ந்தோ அவர் போன பிறகு, அவரது நண்பரைச் சார்ந்தோ, வளர்ந்த பிறகு மகனைச் சார்ந்தோ தான் காயத்ரி இருக்கிறாரே தவிர, அவருக்கான எந்த முக்கியத்துவமோ, அவர் சம்பாதித்து குடும்பத்தை முன்னேற்றும் வகையிலான காட்சிகள் இல்லை. மாறாக, அழுது கொண்டு, பயந்து கொண்டிருக்கும் பெண், இறுதியில் தன் கணவனிடமே சென்று காலில் விழுவது அபத்தம்.

அதேபோல அவர்களின் மகன் இன்ஜினியரிங் படித்து முன்னேறுகிறான். ஆனால், பெண்? என்ன படிக்கிறாள் என்பது குறித்தோ எந்த விவரமும் இல்லை. 'மகள் பெரிய மனுஷி ஆயிட்டா' என சொல்வதற்கு மட்டும் தான் அந்த மகள் கதாபாத்திரம் இருக்கிறதோ என தோன்றுகிறது. காரணம், 'தர்மதுரை' படத்தில் கணவரில்லாமல் வாழும் தமன்னா சுயமாக சம்பாதித்து யாரை சார்ந்திருக்க மாட்டார். ஆனால், மாமனிதனில் பெண் கதாபாத்திரங்கள் எழுதியிருக்கும் விதம் பலவீனம்.

தவிர, 'போய்வாடா என் பொலிகாட்டு ராசா' என்ற பாடலின் உணர்வைத் தருகிறது 'நெனைச்சதொன்னு நடந்ததொன்னு என் ராசா' பாடல். கிராமத்து வாசனையை தூவியிருக்கும் இளையராஜா - யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை ஈர்க்கிறது. தேனி, கேரளா, உ.பி என அந்த ஊருக்கு அழைத்துச் சென்று ஒளிப்பதிவில் திரைவிருந்து படைத்திருக்கிறார் சுகுமார். ஸ்ரீகர் பிரசாத்தின் கட்டிங் கச்சிதம்.

மொத்தத்தில் 'மாமனிதன்' டைட்டிலுக்காக ஒரு மாமனிதனை கட்டமைக்கும் கட்டாயத்தில் எழுதப்பட்டிருக்கும் படைப்பாக மாறியிருக்கிறது. கதை எழுதிய பிறகு அதையொட்டி டைட்டிலை வைத்திருக்கலாமோ?

வீடியோ வடிவில் விமர்சனத்தைக் காண :
 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/817850-maamanithan-movie-review-5.html

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
    • திங்கள் முதல் நானும் கவனித்தேன். எண்ணை விலை வீழ்ந்துகொண்டே போகிறது. பிட்காயின்ஸ் விலை வீழ்ச்சியோடு தொடர்பிருக்குமோ தெரியவில்லை.
    • 5 ஓ…. 8 ஓ…. 10 ஓ….. சும்மா வாய்க்கு வந்தபடி அண்ணைனை ஏசுவதில் எனக்கும் உடன்பாடில்லை. அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்…… முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.