Jump to content

வன்னிக்கு போய் வாழப் போறேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக்கு போய் வாழப் போறேன். 
படடனத்து வாழ்கை பகடடான  வாழ்க்கையென 
பள்ளியில் படிக்கையில் இங்கிலீசு பாடத்துக்கு 
இரண்டு டுஷன்  விட்டு படிக்க வைத்தார் அப்பா 

ஓ  எல்பரீடசையில பாசான சேதி கேட்டு 
மூன்று பெணகள் கொண்ட முறைமாமன்
தந்திரமாய் அழைக்கையிலே 
நானும்  கொழும்புக்கு மேற்படிப்புக்கு  போனேனடி 

கிரிபாத்தும்  பொல் சாம்பலும் 
தந்து ஊட்டி வளர்த்த தாய் மாமன்  
வங்கி   வேலை கிடைத்தும் 
வளைத்துப்போடக் கதை விடடார். 

மூத்த மச்சாளும்   மூலைக்குள் நின்று 
முழு நிலவாய்  தெரிகையிலே 
பாவி மனம் பாசமாய் அலை பாய்ந்தது. 
காலம் குடியும் குடும்பமுமாக போகையிலே 
 

2022 பிறந்தது . சமைக்க  காஸ்  இல்லை 
மோடடார்  சைக்கிள் ஓட பெட்ரோல்   இல்லை
பிரபாகன் காலத்தில் வந்த குப்பி விளக்குக்கு 
 கொஞ்சமேனும் எண்ணையில்லை
பொறுத்து பார்த்தது போதும் என் 
பொன்னான பொக்கிஷமே 
வெளிக்கிடடி வன்னிக்கு . .

அம்மம்மாவின்  வீடு வளவு அழியாமல் கிடக்கு  
நாலு மாடு வளர்த்து பார்த்தால் பாலுக்குபஞ்சமில்லை. 
பின் வளவுக்குள் நாலு வெண்டி கத்தரி மிளகாய்  வைத்தால் 
மரக்கறிக்கு பஞ்சமில்லை . கிணற்றடி வாழைக் குலையும் 
நெடிய மரத்து தேங்காயும்  பிட்டும்  காலை நேர பசியாற்றும் . 
முது பனையில் இரண்டு மரம் அறுத்து துலா போடடால்
 கிணற்று தண்ணி துலாவில் தானாக மேலே வரும்.
 மாட்டு ஆட்டு  பசளையெல்லாம்  சேர்த்து வைத்தால் 
 மண்ணுக்கு பசளை வரும் சமையலுக்கு காஸ் வரும்.

நாலு பிள்ளைகளையும்   கூடிக் கொண்டு 
நீ வருவாயோ இல்லையோ 
நான் வாழப் போறேன்  வன்னிக்கு 
பகட்டும் வேண்டாம் படடணமும்   வேண்டாம் 
 பாவப்படட மனிதரை பசியால் வாட விடட 
பாதகர்கள், நாட்டை ஆளத்தெரியாத  ராட்ஷதர்கள்
என் வம்சம் தழைக்க வெளிக்கிடடி வன்னிக்கு  . 
 
   

  • Like 8
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிலாமதி said:

நாலு பிள்ளைகளையும்   கூடிக் கொண்டு 
நீ வருவாயோ இல்லையோ 
நான் வாழப் போறேன்  வன்னிக்கு 
பகட்டும் வேண்டாம் படடணமும்   வேண்டாம் 
 பாவப்படட மனிதரை பசியால் வாட விடட 
பாதகர்கள், நாட்டை ஆளத்தெரியாத  ராட்ஷதர்கள்
என் வம்சம் தழைக்க வெளிக்கிடடி வன்னிக்கு  . 

ம் 
உங்கடை பிள்ளைகளையும் எந்தெந்த மாமாக்கள் கொண்டுபோய் வளர்க்க போகிறார்களோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

வன்னிக்கு போய் வாழப் போறேன். 
படடனத்து வாழ்கை பகடடான  வாழ்க்கையென 
பள்ளியில் படிக்கையில் இங்கிலீசு பாடத்துக்கு 
இரண்டு டுஷன்  விட்டு படிக்க வைத்தார் அப்பா 

ஓ  எல்பரீடசையில பாசான சேதி கேட்டு 
மூன்று பெணகள் கொண்ட முறைமாமன்
தந்திரமாய் அழைக்கையிலே 
நானும்  கொழும்புக்கு மேற்படிப்புக்கு  போனேனடி 

கிரிபாத்தும்  பொல் சாம்பலும் 
தந்து ஊட்டி வளர்த்த தாய் மாமன்  
வங்கி   வேலை கிடைத்தும் 
வளைத்துப்போடக் கதை விடடார். 

மூத்த மச்சாளும்   மூலைக்குள் நின்று 
முழு நிலவாய்  தெரிகையிலே 
பாவி மனம் பாசமாய் அலை பாய்ந்தது. 
காலம் குடியும் குடும்பமுமாக போகையிலே 
 

2022 பிறந்தது . சமைக்க  காஸ்  இல்லை 
மோடடார்  சைக்கிள் ஓட பெட்ரோல்   இல்லை
பிரபாகன் காலத்தில் வந்த குப்பி விளக்குக்கு 
 கொஞ்சமேனும் எண்ணையில்லை
பொறுத்து பார்த்தது போதும் என் 
பொன்னான பொக்கிஷமே 
வெளிக்கிடடி வன்னிக்கு . .

அம்மம்மாவின்  வீடு வளவு அழியாமல் கிடக்கு  
நாலு மாடு வளர்த்து பார்த்தால் பாலுக்குபஞ்சமில்லை. 
பின் வளவுக்குள் நாலு வெண்டி கத்தரி மிளகாய்  வைத்தால் 
மரக்கறிக்கு பஞ்சமில்லை . கிணற்றடி வாழைக் குலையும் 
நெடிய மரத்து தேங்காயும்  பிட்டும்  காலை நேர பசியாற்றும் . 
முது பனையில் இரண்டு மரம் அறுத்து துலா போடடால்
 கிணற்று தண்ணி துலாவில் தானாக மேலே வரும்.
 மாட்டு ஆட்டு  பசளையெல்லாம்  சேர்த்து வைத்தால் 
 மண்ணுக்கு பசளை வரும் சமையலுக்கு காஸ் வரும்.

நாலு பிள்ளைகளையும்   கூடிக் கொண்டு 
நீ வருவாயோ இல்லையோ 
நான் வாழப் போறேன்  வன்னிக்கு 
பகட்டும் வேண்டாம் படடணமும்   வேண்டாம் 
 பாவப்படட மனிதரை பசியால் வாட விடட 
பாதகர்கள், நாட்டை ஆளத்தெரியாத  ராட்ஷதர்கள்
என் வம்சம் தழைக்க வெளிக்கிடடி வன்னிக்கு  . 
 
   

பகிர்வதற்கு நன்றிகள் சகோதரி.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழத் தெரிந்தவன்.பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழத்தெரிந்தவன் வன்னிக்கு கிளம்பி விட்டான் .......!  👍

நல்ல கவிதை.......நன்றி சகோதரி......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை தோசை அப்பளம் வடை 😡

ஆசையைப் பார், ஆசையை.. 😔

நான் திரும்பி நாட்டுக்குப் போகப் போகிறேன் என்றால் அதற்கு முதல் தடை எங்கிருந்து வரும் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் பதிவை படித்து   பாராட்டுப் புள்ளிகள் அளித்த   Somebody    களுக்கு என் மனமார்ந்த  நன்றி 

Just now, Kapithan said:

ஆசை தோசை அப்பளம் வடை 😡

ஆசையைப் பார், ஆசையை.. 😔

நான் திரும்பி நாட்டுக்குப் போகப் போகிறேன் என்றால் அதற்கு முதல் தடை எங்கிருந்து வரும் ? 

நானும்  கொழும்புக்கு மேற்படிப்புக்கு  போனேனடி 

வெளி நாட்டில் இருந்து அல்ல. படடணத்திலிருந்து ( கொழும்பு ) வன்னிக்கு(  கிராமத்துவாழ்க்கை ) வாழப்   போறேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/6/2022 at 22:45, நிலாமதி said:

வன்னிக்கு போய் வாழப் போறேன். 
படடனத்து வாழ்கை பகடடான  வாழ்க்கையென 
பள்ளியில் படிக்கையில் இங்கிலீசு பாடத்துக்கு 
இரண்டு டுஷன்  விட்டு படிக்க வைத்தார் அப்பா 

ஓ  எல்பரீடசையில பாசான சேதி கேட்டு 
மூன்று பெணகள் கொண்ட முறைமாமன்
தந்திரமாய் அழைக்கையிலே 
நானும்  கொழும்புக்கு மேற்படிப்புக்கு  போனேனடி 

கிரிபாத்தும்  பொல் சாம்பலும் 
தந்து ஊட்டி வளர்த்த தாய் மாமன்  
வங்கி   வேலை கிடைத்தும் 
வளைத்துப்போடக் கதை விடடார். 

மூத்த மச்சாளும்   மூலைக்குள் நின்று 
முழு நிலவாய்  தெரிகையிலே 
பாவி மனம் பாசமாய் அலை பாய்ந்தது. 
காலம் குடியும் குடும்பமுமாக போகையிலே 
 

2022 பிறந்தது . சமைக்க  காஸ்  இல்லை 
மோடடார்  சைக்கிள் ஓட பெட்ரோல்   இல்லை
பிரபாகன் காலத்தில் வந்த குப்பி விளக்குக்கு 
 கொஞ்சமேனும் எண்ணையில்லை
பொறுத்து பார்த்தது போதும் என் 
பொன்னான பொக்கிஷமே 
வெளிக்கிடடி வன்னிக்கு . .

அம்மம்மாவின்  வீடு வளவு அழியாமல் கிடக்கு  
நாலு மாடு வளர்த்து பார்த்தால் பாலுக்குபஞ்சமில்லை. 
பின் வளவுக்குள் நாலு வெண்டி கத்தரி மிளகாய்  வைத்தால் 
மரக்கறிக்கு பஞ்சமில்லை . கிணற்றடி வாழைக் குலையும் 
நெடிய மரத்து தேங்காயும்  பிட்டும்  காலை நேர பசியாற்றும் . 
முது பனையில் இரண்டு மரம் அறுத்து துலா போடடால்
 கிணற்று தண்ணி துலாவில் தானாக மேலே வரும்.
 மாட்டு ஆட்டு  பசளையெல்லாம்  சேர்த்து வைத்தால் 
 மண்ணுக்கு பசளை வரும் சமையலுக்கு காஸ் வரும்.

நாலு பிள்ளைகளையும்   கூடிக் கொண்டு 
நீ வருவாயோ இல்லையோ 
நான் வாழப் போறேன்  வன்னிக்கு 
பகட்டும் வேண்டாம் படடணமும்   வேண்டாம் 
 பாவப்படட மனிதரை பசியால் வாட விடட 
பாதகர்கள், நாட்டை ஆளத்தெரியாத  ராட்ஷதர்கள்
என் வம்சம் தழைக்க வெளிக்கிடடி வன்னிக்கு  . 
   

கவிதைக்கு... நன்றி, நிலாமதி அக்கா. 🙂

On 25/6/2022 at 15:48, Kapithan said:

நான் திரும்பி நாட்டுக்குப் போகப் போகிறேன் என்றால் அதற்கு முதல் தடை எங்கிருந்து வரும் ? 

முதல் தடை... மனிசியிடமிருந்து வரும்.  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

முதல் தடை... மனிசியிடமிருந்து வரும்.  😂

உங்களுக்குமா 🤣

On 25/6/2022 at 09:49, நிலாமதி said:

என் பதிவை படித்து   பாராட்டுப் புள்ளிகள் அளித்த   Somebody    களுக்கு என் மனமார்ந்த  நன்றி 

நானும்  கொழும்புக்கு மேற்படிப்புக்கு  போனேனடி 

வெளி நாட்டில் இருந்து அல்ல. படடணத்திலிருந்து ( கொழும்பு ) வன்னிக்கு(  கிராமத்துவாழ்க்கை ) வாழப்   போறேன். 

வாழ்த்துக்கள். 

யாம் பெற்ற, பெற இருக்கும் இன்பம், பெறுக இவ் வையகம். 👍

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை.👍🏾

தோட்டம் துரவுடன் யாழ்ப்பாண பக்கத்திலும் செழிப்புடன் வாழலாம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.