Jump to content

கையிலிருந்த அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கையிலிருந்த அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு நேரப்படி நேற்று  வியாழக்கிழமை (23.06.2022) இடம்பெற்ற தொழிற்றுறை நிறைவேற்றதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அவர் எங்கு  நிற்க வேண்டும்,  என்ன செய்ய வேண்டும் என்பன தொடர்பில் அவருக்கு ஞாபகப்படுத்தும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடதாசிக் குறிப்பை  அவர் தவறுதலாக புகைப்படக்கருவிகளுக்கு காண்பித்து அந்தக் குறிப்பிலுள்ளவற்றை அம்பலப்படுத்தியுள்ளார். 

biden1.jpg

அந்த துண்டுக் குறிப்பில் நீங்கள் வெள்ளை மாளிகையிலுள்ள ரூஸ்வெல்ட் அறையில்  பிரவேசித்து  கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு  வந்தனம் கூறுங்கள், உங்கள் ஆசனத்தில் அமருங்கள், ஊடகவியலாளர்கள் பிரவேசம், சுருக்கமான விமர்சனம், ஊடகவியலாளர்கள் வெளியேறுதல்,  அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் குறிப்பிட்ட  நிறுவனத் தலைவரிடம் கேள்வியொன்றைக் கேளுங்கள், புறப்படுவதற்கு முன்னர் நன்றி கூறுங்கள் போன்ற அறிவுறுத்தல்கள்  அச்சிடப்பட்டிருந்தன.

biden2.jpg

இவ்வாறு  ஜோ பைடன் (79 வயது)  தனக்கு வழங்கப்பட்ட துண்டுக் குறிப்பை  புகைப்படக் கருவிகளுக்கு காண்பித்து பரிகசிப்புக்குள்ளாவது  இது முதல் தடவையல்ல.  இந்த வருட ஆரம்பத்தில்  உக்ரேன் தொடர்பில் ஆற்றிய உரையின் போது ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையில் அவர் தன்வசம் வைத்திருந்த  அறிவுறுத்தல் துண்டுக்குறிப்பை தவறுதலாகக் காண்பித்திருந்தார்.  

Last_year_picture.jpg

அத்துடன் அவர்  கடந்த வருடம் ஜூலை மாதம் இணையத்தள நேரடி  ஒளிபரப்புக் கூட்டமொன்றில் கலந்துகொண்ட போது அவரது நாடியில் ஏதோ ஒட்டியிருப்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் அவரது  உதவியாளரால் வழங்கப்பட்ட துண்டுக் குறிப்பை புகைப்படக்கருவிகளுக்கு காண்பித்திருந்தார். அத்துடன் அவர் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இடம்பெற்ற கூட்டத்திலும்  தனது உத்தியோகபூர்வ முதலாவது ஊடகவியலாளர் கூட்டத்திலும் தனது கையிலிருந்த குறிப்புகளை தவறுதலாகப்  புகைப்படக்கருவிகளுக்குக் காண்பித்திருந்தார். 

biden11q.jpg

அவரது மேற்படி செயற்பாடுகளானது  80 வயதை நெருங்கும் அவரது  உடல் நலன் மற்றும் மன ஆரோக்கிய நிலை குறித்துக் கவலையைத் தோற்றுவிப்பதாக உள்ளதாக  ஊடகங்கள் விமர்சித்துள்ளன. ஆனால் வெள்ளை மாளிகை மேற்படி விமர்சனங்களுக்கு நிராகரிப்பை வெளியிட்டு வருகிறது.

 

 

https://www.virakesari.lk/article/130145

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில எல்லா வேலைக்கும் ஓய்வுநிலை வயதெல்லை உண்டு. கறுமம் சனநாயக நாட்டில் கூட அரசியல்வியாதிகளுக்கு ஓய்வுநிலை வயதெல்லை இல்லை. அரசியலுக்கும் ஓய்வுநிலை வயதெல்லை வரையறுக்கப்பட்டால்.. இந்த வயதான காலத்தில் இப்படி அவஸ்தைப்படுவதோடு.. மக்களையும் அவஸ்தைப்படுத்துவதை தடுக்கலாம். 

அரசியலுக்கான அது உச்ச வயதெல்லை.. உலகம் பூராவும் 65 வயசென்றாகனும். 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

 

துவிச்சக்கர வண்டியில் இருந்து விழுந்தெழுந்த  போது........

 

ஒரு முறை விமான படிக்கட்டில் இருந்தும்,
சர்ரென்று… சறுக்கிக் கொண்டு விழுந்ததை பார்த்தேன்.
ஆளுக்கு பென்சன் எடுக்கிற நேரம் வந்திட்டுது போலை…
வருங்கால அமெரிக்க தமிழ் ஜனாதிபதி கமலா அக்கா… வாழ்க. 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

உலகத்தில எல்லா வேலைக்கும் ஓய்வுநிலை வயதெல்லை உண்டு. கறுமம் சனநாயக நாட்டில் கூட அரசியல்வியாதிகளுக்கு ஓய்வுநிலை வயதெல்லை இல்லை. அரசியலுக்கும் ஓய்வுநிலை வயதெல்லை வரையறுக்கப்பட்டால்.. இந்த வயதான காலத்தில் இப்படி அவஸ்தைப்படுவதோடு.. மக்களையும் அவஸ்தைப்படுத்துவதை தடுக்கலாம். 

அரசியலுக்கான அது உச்ச வயதெல்லை.. உலகம் பூராவும் 65 வயசென்றாகனும். 

உண்மை. நீங்கள் கூறியுள்ளதைக் கட்டாய நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். எப்படி வேலைக்கான வரையறுக்கப்பட்ட ஆண்டுகள் உள்ளனபோன்று, அரசியலுக்கும் வயதெல்லை கொண்டுவந்தால் நிறைய நாடுகள் நன்மையடைய வாய்ப்புண்டாகும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.