Jump to content

புலம்பெயர் தமிழர்களுக்கு தென்னிலங்கையில் இருந்து ஓர் அழைப்பு! ஆனால் வடக்கு - கிழக்கை கேட்காதீர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாட்டு மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு  ஆதரவான ஒரு சிறு பகுதியினர் இருக்கலாம். எனினும் இவர்கள் வந்து இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கு-  கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள்  முன்னேற்ற செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

புலம்பெயர் தமிழர்களுக்கு தென்னிலங்கையில் இருந்து ஓர் அழைப்பு! ஆனால் வடக்கு - கிழக்கை கேட்காதீர்

இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு! சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் 

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 

எனது காலத்திலேயே யாழ்ப்பாணத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டது. எனது காலத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டது.

சுன்னாகத்தில் இருந்து வவுனியாவுக்கு ஒரு தொகுதியை அமைத்தோம். முல்லைத்தீவு மன்னார் போன்ற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கினோம்.

பிரபாகரன் உயிரிழந்த பின்னர் மூன்று மாதங்களில் புதுமாத்தளன் பகுதிக்கு மின்சாரம் வழங்கினோம். தற்போதுள்ள பிரச்சனை ‍டொலர் இன்மையால் டீசலை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாகும்.

அதனால் டீசலில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரம் போதுமானதாக இல்லை. எனவே நாம் தற்போது புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கு செல்ல வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களுக்கு தென்னிலங்கையில் இருந்து ஓர் அழைப்பு! ஆனால் வடக்கு - கிழக்கை கேட்காதீர்

சூரிய ஒளியில் மின்சாரம் 

இலங்கையில் மிக அதிகமாக புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றல் காங்கேசன்துறை பூநகரி மன்னார் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி திட்டத்தை நானே கொண்டு வந்தேன்.

அதனை இலங்கை முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/economic-crisis-another-special-gazette-release-1656103345

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் என்றால் மாங்காய் மடையர் என்கிற நினைப்பு இவருக்கு. நேற்றுதான் நம் தலைவரைப்பற்றி இவர் சொன்னது வெளிவந்திருந்தது, அதற்கிடையில் சுருதியை மாற்றி விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒண்டும் புடுங்கித் தர தேவையில்லை...

தானே விழும்....

வரலாறில் இணைந்து நீண்டகாலம் இருந்ததில்லை. 1834ல் பிரிட்டிஷ் காரர் இணைத்தது. அது ஒரு ஓட்டுதல்... ஒட்டு விலகும்... காரணம் மதம்....

இந்தியாவில்.... மதம் தூக்கிப் பிடிக்கப்படுவதால்... இந்த ஒட்டு விலகும் நிலை தூரத்தில் தென் படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு அழைப்பொன்றினை இலங்கை அரசு விடுத்தால் நாம் அதற்குத் தயாரா?

எங்கள் நிபந்தனைகள் என்ன ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும், வடக்கு-  கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள்  முன்னேற்ற செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

தமிழ் மக்களை அடக்கி அடிக்கும்போது வடக்கு கிழக்குக்கு அடிக்க வேண்டும் .
இப்பொது அபிவிருத்திக்கு  தமிழர் வேண்டும்.  முழு நாட்டுக்கும் . எவனை நம்பினாலும் மத வெறியும் இன வெறியும் கொண்ட சிங்க(கள )  இனத்தை  நம்ப முடியாது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இப்படி ஒரு அழைப்பொன்றினை இலங்கை அரசு விடுத்தால் நாம் அதற்குத் தயாரா?

எங்கள் நிபந்தனைகள் என்ன ? 

இல்லை.
இல்லை என்ற பின் நிபந்தனைகளும் இல்லைத் தானே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சுவைப்பிரியன் said:

இல்லை.
இல்லை என்ற பின் நிபந்தனைகளும் இல்லைத் தானே.

நீங்கள் தெளிவாக கூறினால் புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும். 

இல்லை என்றால் என்ன இல்லை ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

நீங்கள் தெளிவாக கூறினால் புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும். 

இல்லை என்றால் என்ன இல்லை ? 

உங்கள் கேள்வி.. .இப்படி ஒரு அழைப்பொன்றினை இலங்கை அரசு விடுத்தால் நாம் அதற்குத் தயாரா?
அதற்க்கு பதில் தான் நாம் தயார் இல்லை என்றேன்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, சுவைப்பிரியன் said:

உங்கள் கேள்வி.. .இப்படி ஒரு அழைப்பொன்றினை இலங்கை அரசு விடுத்தால் நாம் அதற்குத் தயாரா?
அதற்க்கு பதில் தான் நாம் தயார் இல்லை என்றேன்.😄

நன்றி பிரியன்.

அப்படியானால, நாம் தயாராக இருக்க வேண்டுமா இல்லையா  ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இப்படி ஒரு அழைப்பொன்றினை இலங்கை அரசு விடுத்தால் நாம் அதற்குத் தயாரா?

எங்கள் நிபந்தனைகள் என்ன ? 

அவரது  நிபந்தனை எதுக்கு???

அவரே  நிபந்தனையுடன் தான் ஆட்டத்தை  ஆட  விரும்புகிறார்??

இன்னும் கொஞ்சம் பசிக்கட்டும்

நிபந்தனை  மாறலாம்??

இப்ப  மௌனம்  தொடர்வதே சிறந்தது??

வடக்கு-  கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள்  முன்னேற்ற செய்யலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

அவரது  நிபந்தனை எதுக்கு???

அவரே  நிபந்தனையுடன் தான் ஆட்டத்தை  ஆட  விரும்புகிறார்??

இன்னும் கொஞ்சம் பசிக்கட்டும்

நிபந்தனை  மாறலாம்??

இப்ப  மௌனம்  தொடர்வதே சிறந்தது??

வடக்கு-  கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள்  முன்னேற்ற செய்யலாம்

ஆமாம். நாங்கள் அவசரப்பட முடியாது. 

ஆனால், ******எல்லாவிதமான சூழ்நிலைகளுக்கும் ******ஆயத்தமாக இருக்க வேண்டும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இப்படி ஒரு அழைப்பொன்றினை இலங்கை அரசு விடுத்தால் நாம் அதற்குத் தயாரா?

எங்கள் நிபந்தனைகள் என்ன ? 

தமிழ்மக்களின் ...தமிழ் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் சிங்கள அரசினால்....[அது எந்தக் கட்சி அரசு என்றாலும் ] வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்றை வரைத்து அமுல் செய்ய முடியுமா...?அல்லது இல்லையா?.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

வடக்கு-  கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள்  முன்னேற்ற செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

என்னது! முழு நாடும் புலம்பெயர் தமிழர்களதா? நம்பவே முடியவில்லை. இதே தமிழர் வறிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியபொழுது தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தது, இப்போ தனக்கு பசி எடுத்தவுடன் முழுநாட்டுக்கும் அழைப்பு. பறித்தவற்றை திருப்பி தர முடியாது, அழைப்பு விடுத்துக்கொண்டே, தமிழர் நிலங்களில் அடாவடி பண்ணிக்கொண்டு, அதை நிஞாயப்படுத்திக்கொண்டு, உதவுங்கள் என்று கேட்பதில் இருந்து தெரிவது என்னவென்றால்; மீண்டும் தமிழரின் முதுகில் சவாரி செய்யா தயார். அவ்வளவும்  திமிர். வயிறு காய அடங்குமது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுவைப்பிரியன் said:

இல்லை.
இல்லை என்ற பின் நிபந்தனைகளும் இல்லைத் தானே.

எங்களிடம் இருந்து பறித்ததெல்லாம் திருப்பித்தரவேண்டும், எங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சிங்களப்படை வெளியேறவேண்டும், எங்கள் நிலங்களில் முளைத்துள்ள விகாரைகள் அகற்றப்படவேண்டும், சிறைகளில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் விடுவிக்கப்படவேண்டும், எங்களை நாங்களே ஆளும் சம உரிமை வேண்டும், எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்கப்படவேண்டும், இன்னொரு தடவை இவ்வாறு நடவாதென உறுதி தந்து யாப்பாக்க வேண்டும். தயாரா?  எந்த இணக்கமும் இல்லாம மந்திரத்தால் மாங்காய் பிடுங்க புலம்பெயர் தமிழர் இணங்கக்கூடாது.நிபந்தையை முதலிடுவோர் வைத்து தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.