Jump to content

சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தை குழப்ப முனைவோரையும் சுகாதார சேவைகள் பணிப்பாளரை தாக்கியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம் - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தை குழப்ப முனைவோரையும் சுகாதார சேவைகள் பணிப்பாளரை தாக்கியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம் - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

(எம்.நியூட்டன்)

சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தை குழப்ப முனைவோரையும் கிளிநொச்சி மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை தாக்கியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நாடு முழுவதும் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. மக்கள் அனைவருமே எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை நாங்கள் அவதானித்து வருகின்றோம்.

இந்த நேரத்தில் உயிர் காக்கும் மிக அதி உயர் அத்தியாவசிய சேவையான சுகாதார சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் தமது கடமைகளை தொடர்ந்து மேற்கொண்டபடி எரிபொருளையும் தமது குடும்பங்களுக்கான அத்தியாவசியப்பொருட்களையும் பெற்றுக்கொள்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். 

குறிப்பாக அவர்கள் தமது கடமை நிலையங்களான வைத்தியசாலைகளுக்கும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும் ஏனைய பணிமனைகளுக்கும் கடமைக்கு வருவதற்கான தமது தனிப்பட்ட வாகனுங்களுக்கான எரிபொருளைப் பெற முடியாது மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் படிப்படியாக சுகாதார சேவை முடங்கும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில் நிரல் சுகாதார அமைச்சு சுகாதார பணியாளர்களுக்காக விசேட ஏற்பாட்டின் மூலம் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு ஒழுங்குகளை செய்தது.

அதற்காக மாவட்டம் தோறும் தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் எரிபொருள்களை விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு ஒழுங்குகளை செய்திருந்தது. நேற்று முதல் தடவையாக இந்த ஒழுங்குக்கு அமைய சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வட மாகாணத்திலும் இதற்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்க ஒழுங்குகள் செய்யப்பட்டது. இந்த வசதியை நடைமுறைப்படுத்துவதற்கு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் சுகாதார துணைக்களத்தினராகிய நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளோம்.

இதேவேளை வாரத்தில் ஒரு நாள் மட்டும் சுகாதார பணியாளர்களுக்கு என தெரிவு செய்யப்பட்ட ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இருந்து எரிபொருள் வழங்குவதற்காக செய்யப்பட்ட இந்த ஒழுங்கை பல இடங்களில் பொது நல நோக்கற்ற பொதுமக்களில் சிலர் தீவிரமாக எதிர்த்ததுடன் குழப்ப நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். மிகுந்த சிரமத்தின் மத்தியில் பொலிசாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடனேயே எரிபொருளை விநியோகிக்கக் கூடியதாக இருந்தமை மிகுந்த மன வருத்தத்துக்குரியது. 

இவை அனைத்துக்கும் மேலாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார பணியாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒருங்கிணைப்பதற்காக அம்மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ந. சரவணபவன் அவர்கள் ஈடுபட்டிருந்தார். அப்போது சில பொதுமக்கள் அங்கு வரிசையில் காத்திருந்த தாதிய உத்தியோகத்தர்கள் சிலரை நகரவிடாமல் தடைகளை ஏற்படுத்தினர். 

வைத்திய கலாநிதி சரவணபவன் அவர்களிடம் சென்று தாதிய உத்தியோகத்தர்களை முன்னோக்கி நகர அனுமதிக்குமாறு கேட்டபோது அதற்கு மறுத்து அவருடன் வாக்குவாதப்பட்டவர்களுள் ஒருவரால் அவர் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வடமாகாணத்தின் சுகாதார பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நாகரிகமற்ற, மனிதாபிமானமற்ற, செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தாக்குதலுக்குள்ளான வைத்திய கலாநிதி சரவணபவன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் தற்போது வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட நபரும் பொலிஸாரினால் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் மத்தியிலும் பணியாற்றி பல்லாயிரம் உயிர்களைக்காப்பாற்றிய மற்றும் கோவிட் பெருந்தொற்று நேரத்தில் அனைவருடம் வீடுகளில் முடங்கியிருக்க தமது உயிரைப் பணயம் வைத்து சுகாதார சேவைகளை வழங்கி  பெருமளவு உயிர்களையும் காப்பாற்றி இன்று கொவிட்டை கட்டுப்பாட்டினுள் கொண்டு வர உழைத்த வடமாகாண சுகாதார ஊழியர்களுக்கு நேற்றும் கடந்த சில நாள்களாகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் மூலம் ஏற்பட்ட அனுபவங்கள் மிகுந்த மனச்சோர்வையும் கவலையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக தமது குடும்பங்களுக்கு பொருள்களையும் ஏனைய வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்காது சேவையை தொடர்வதற்கு முன்னுரிமை வழங்கி தொடர்ச்சியாக பணியாற்றி வரும் சுகாதார ஊழியர்களுக்கு அவர்களது உயிர்காக்கும் சேவைக்காக பணியிடங்களுக்கு வருவதற்கான எரிபொருளைக்கூட முன்னுரிமை அடிப்படையில் பெறுவதற்கு தடைவிதிக்கும் மன நிலையில் பொதுமக்கள் இருப்பார்கள் என சுகாதாரத்துறையினர் இதுவரை எண்ணியிருக்கவில்லை.

போர்க்காலத்தில் இன்றிலும் விட மிகக் குறைவாக எரிபொருள் இருந்தகாலத்தில் கூட சுகாதாரத் துறையினருக்கான முன்னுரிமை எங்கும் மறுதலிக்கப்படவுமில்லை, எதிர்க்கப்படவுமில்லை என்பதையும் நாம் மறக்க முடியாது.

துரதிஷ்டவசமான இந்நிலைமை நீடிக்குமானால் வடமாகாண சுகாதார சேவைகள் முடங்கும் நிலை ஏற்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது போகும். அப்போது வைத்தியசாலை சேவைகளை முற்றாக வடமாகாண மக்கள் இழக்க வேண்டி ஏற்படலாம். அதனால் காப்பாற்றக்கூடிய பல அப்பாவிகளின் உயிர்கள் மட்டுமல்லாது இன்று குழப்பம் விளைவிப்பவர்களின் உயிர்கள் கூட பலியாக நேரிடலாம். 

களத்தில் பணியாற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய சகல சுகாதார பணியாளர்களும் கடமைகளுக்கு வருவதை தவிர்த்து எரிபொருள் வரிசைகளில் காத்திருக்கும் போது டெங்கு மர ணங்கள், தாய்-சேய் மரணங்கள் என்பவை பன்மடங்கு அதிகரிப்பதை தவிர்க்க முடியாது போகும்.

சுகாதாரத்துறை மக்கள் அனைவரதும் உயிர்காக்கும் அத்தியாவசிய சேவை என்பதை புரிந்துகொண்டு எதிர்காலத்திலாவது சுகாதார பணியாளர்கள் தடையின்றியும் தாமதமின்றியும் வேலைக்கு வருவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் முன்னுரிமைச் சேவைகளுக்கு இடையூறு செய்யாது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இவற்றுக்கு எதிராக குழப்பங்களை ஏற்படுத்துகின்ற சமூக விரோத சக்திகளுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

 

 

https://www.virakesari.lk/article/130170

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு அரசின் மீதான மக்களின் கோபம் திசை திருப்பப்படுகின்றது சில அரச திணைக்களின் மீதும் அரச அதிகாரிகள் மீதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது மக்களின் சேவையை பாதிக்காத வகையில்.. சுகாதார சேவையினருக்கு.. பவுசர்கள் மூலம்.. நேரம் குறித்து அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அண்மையில் இதனை விநியோகிக்கலாம் தானே. சுகாதார சேவையினர் என்ற முத்திரையோடு பொதுமக்களின் வசதிகளில் முன்னுரிமை அளிக்கப்படுவது இந்த அல்லோலகல்ல வேளையில் ஆத்திரமூட்டும் செயலாகவே அமையும். அதுவும் மணிக்கணக்கில் பொதுமக்கள் தமது அத்தியாவசிய தேவைக்கு எரிபொருள் நிரப்பவே சிரமப்படும் வேளையில்.. அவர்கள் புறக்கணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்க செயல் அல்ல. மாறாக பொதுமக்களைப் பாதிக்காத வகையில்.. மாற்று வேலைத்திட்டங்களை அமுலாக்கனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

பொது மக்களின் சேவையை பாதிக்காத வகையில்.. சுகாதார சேவையினருக்கு.. பவுசர்கள் மூலம்.. நேரம் குறித்து அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அண்மையில் இதனை விநியோகிக்கலாம் தானே. சுகாதார சேவையினர் என்ற முத்திரையோடு பொதுமக்களின் வசதிகளில் முன்னுரிமை அளிக்கப்படுவது இந்த அல்லோலகல்ல வேளையில் ஆத்திரமூட்டும் செயலாகவே அமையும். அதுவும் மணிக்கணக்கில் பொதுமக்கள் தமது அத்தியாவசிய தேவைக்கு எரிபொருள் நிரப்பவே சிரமப்படும் வேளையில்.. அவர்கள் புறக்கணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்க செயல் அல்ல. மாறாக பொதுமக்களைப் பாதிக்காத வகையில்.. மாற்று வேலைத்திட்டங்களை அமுலாக்கனும். 

அப்படித்தான் ஒழுங்குபடுத்தப்பட்டது. ஆனால் மக்கள் ஒருவருக்கும் முன்னுரிமையை வழங்க தயாரில்லை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.