Jump to content

எரிபொருள், உணவுப் பொருட்கள், பேருந்து கட்டணம்.... அனைத்தின் விலைகளும் அதிகரிப்பு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்!

இன்று, அதிகாலை முதல்... எரிபொருள் விலை அதிகரிப்பு !

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 470 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அத்துடன், 95 ஒக்டேன் பெட்ரோல் விலை 100 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் லீற்றர் ஒன்றின் புதிய விலை 550 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஓட்டோ டீசல் 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 460 ரூபாவாகும், சூப்பர் டீசல் 75 ரூபாயினால் உயர்ந்து 520 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ள விலை அதிகரிப்புக்கு நிகராக ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் 470 ரூபாயாகவும் 95 ஒக்டேன் பெட்ரோல் 550 ரூபாயாகவும் டீசல் 460 ரூபாயாகவும் சூப்பர் டீசல் 520 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.

https://athavannews.com/2022/1288579

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத எரிபொருளுக்கு விலையேற்றம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

இல்லாத எரிபொருளுக்கு விலையேற்றம்?

இலங்கையை சுற்றி..... நாலு  எண்ணை கப்பல் நிற்குதாம்.
அவங்க... டாலர் தந்தால் தான், 
எண்ணையை இறக்குவோம்... என்று அடம் பிடிக்கிறார்களாம். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு, ஏதிலிகளாய் அலையும் மக்கள் டொலருக்கு எங்கே போவார்கள்? எனக்கெதற்கு வம்பு? தட்டு வைத்து அழைத்தவர்கள் முடிவு எடுக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையர்களின் போஷாக்கு மட்டம் குறித்து ஆய்வு!

உணவுப் பொருட்களின்... விலைகளும், அதிகரித்தது !

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று (26) முதல் சிறிய உணவுகள், கொத்து மற்றும் மதிய உணவுப் பொட்டலங்கள் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் கூறியுள்ளது.

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர் மீண்டும் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1288594

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரட்சகர்கள் என்று நினைத்து ராஜபக்சக்களுக்கு வாக்குப் போட்டு கெட்டுது ஒரு கூட்டமுன்னா.. நரி ரணிலின் பேச்சைக் கேட்டு நாசமறுகுது இன்னொரு கூட்டம்.

தகுந்த அரசியல் மாற்றமின்றி.. இலங்கை என்ற நிறுவனத்தை.. இந்த நெருக்கடியில் இருந்து மீட்கவே முடியாது. ஒரு நிறுவத்தின் இக்கட்டில் கூட அதன் சி ஈ ஒ வை தான் தூக்கி எறிவார்கள் முதலில். ஆனால் சொறீலங்காவில் அந்த நிலையில்லை. சனாதிபதி பதவியே கதியென்று கிடக்கிறார். நாடோ மக்களின் நலனோ அவருக்கு ஒரு பொருட்டல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக முடங்கும் அபாயம்

நாளை (27) முதல்... பேருந்து கட்டணத்தை, 35 வீதத்தால்... அதிகரிக்க முடிவு !

நாளை (27) முதல் பேருந்து கட்டணத்தை 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது.

இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to எரிபொருள், உணவுப் பொருட்கள், பேருந்து கட்டணம்.... அனைத்தின் விலைகளும் அதிகரிப்பு !
  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருளுக்கான விலையேற்றம் காணாது. அரசு மீண்டும் எரிபொருள் மானியம் என்று சுழல்கிறது.

இறக்குமதி செய்யும் முழுவிலையில் விற்க்கப்பட ஆரம்பிக்கும் போதே பதுக்கல் நின்று போகும்.

பெற்றோல் கள்ளச் சந்தையில் ஒரு லீற்றர் 1,400/= போகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலையை கூட்டினாப் போல.. டொலர் எப்படி பெருகும்.. பண வீக்கம் தான் பெருகும்... நாட்டில நிதி.. பொருண்மியம் படிச்சாக்கள் இல்லையோ..??! இல்ல கோத்தா கூட்டத்துக்கு பயந்துகிடக்கினமோ..?!

1 hour ago, MEERA said:

எரிபொருளுக்கான விலையேற்றம் காணாது. அரசு மீண்டும் எரிபொருள் மானியம் என்று சுழல்கிறது.

இறக்குமதி செய்யும் முழுவிலையில் விற்க்கப்பட ஆரம்பிக்கும் போதே பதுக்கல் நின்று போகும்.

பெற்றோல் கள்ளச் சந்தையில் ஒரு லீற்றர் 1,400/= போகிறது 

யாழ்ப்பாணத்தில் 1800 ஆம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

சனாதிபதி பதவியே கதியென்று கிடக்கிறார். நாடோ மக்களின் நலனோ அவருக்கு ஒரு பொருட்டல்ல. 

கப்புட்டாஸ்  தனது அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்யவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவர்களுக்கு இதைவிட பாதுகாப்பு இல்லை. நாட்டில் எது நடந்தாலும் அவர்கள் பதவியிலிருந்து விலக மாட்டார்கள். அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தாங்கள் செய்த ஊழலுக்கு மக்கள் என்ன தண்டனை அளிப்பார்கள் என்பது. ஆகவே இந்த பாதுகாப்பை இழக்க விரும்ப மாட்டார்கள், மக்கள் உடப்புகுந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளும்வரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

!யாழ்ப்பாணத்தில் 1800 ஆம். 

ஆ…. இப்படியே போனால் 3,000/= ஆகிவிடும் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people

லொறியை கொண்டு வந்து... எங்கு, பெற்றோல் அடிக்கிறார்கள் என்று பாருங்கள்.
இப்பிடி போனால்... ஆயிரம் கப்பல் வந்தாலும், சாமானியனுக்கு பெற்றோல்  கிடையாது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.