Jump to content

மத்திய வங்கியிலிருந்த... தங்கம்,  எவ்வாறு காணாமல் போனது? – விசாரணை வேண்டும் என்கின்றார் பேராயர் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1613635237-1613629837-Cardinal_L-650x375.jpg

மத்திய வங்கியிலிருந்த... தங்கம்,  எவ்வாறு காணாமல் போனது? – விசாரணை வேண்டும் என்கின்றார் பேராயர் !

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

றாகம பகுதியில் ஊடகண்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக இந்த நாட்டின் வளங்களை வீணடிக்கும் செயல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.

7, 8 பில்லியன் என்ற பாரிய கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது என்றும்... மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது என்றும் கேள்வியெழுப்பினார்.

இந்த முட்டாள்தனமாக தீர்மானத்தை எடுத்து இந்தப் பணத்தை வீணடித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

எனவே, 2, 3 ஆண்டுகளில் நாட்டை முழுமையாக கையேந்தும் நிலைக்கு கொண்டுசென்றவர்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அத்தோடு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அவற்றை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமாயின் மீளப்பெற வேண்டும் என்றும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1288561

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அவற்றை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமாயின் மீளப்பெற வேண்டும்

மயிலே மயிலே இறகு போடு! என்றால் போடுமா? பிடிச்சு இணுங்கி எடுக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

மயிலே மயிலே இறகு போடு! என்றால் போடுமா? பிடிச்சு இணுங்கி எடுக்க வேண்டும். 

மத்திய வங்கியிலிருந்த பல பில்லியன் பணம் காணாமல் போனது மட்டுமல்ல,
பல தொன்... தங்கமும் காணாமல் போயுள்ளது.

ஏதோ... ஒரு இரவில், வீட்டை உடைத்து கள்வர்  திருடிய மாதிரியான..  திருட்டு அல்ல இது.
அதி உச்ச  பலத்த பாதுகாப்பில் இருந்த பொருட்கள்.
கண்காணிப்பு கமெரா, இராணுவம், பொலிஸ், வங்கியின் பாதுகாப்பு அதிகாரிகள் என்று,
பலரை தாண்டி...  லொறியில் ஏற்றுமளவுக்கு, இந்தப் பொருட்கள் காணாமல் போயுள்ளது.

அது சம்பந்தமாக... எவரும் கைது செய்யப் படவோ, 
விசாரணை வளையத்துக்குள் கூட..  எவரும் வரவில்லை என்றால்,
இந்தக் கள்ள அரசியல் வாதிகளை, என்ன சொல்வது.

சுனாமி வந்த போது... தமிழருக்கு, வெளிநாடுகள் தந்த பணத்தையே,   
களவெடுக்க ஆரம்பித்த ஆசை... 
நாட்டையே.. வழித்து, துடைக்கும் அளவுக்கு... கொண்டு வந்து விட்டிருக்கு. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கள்! இந்தக்குடும்பம் வழிச்சு துடைச்சு எடுக்கப்படும். சும்மா அங்கும் இங்கும் போக்கு காட்டி தப்பித்து விடலாம் என கனவு காண்கிறார்கள். போராடும் மக்கள் இன்னும் வீரியம் காட்ட தொடங்கவில்லை, தொடங்கும்போது இவர்கள் காணாமற் போய்விடுவார்கள். மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப்பாயும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

மத்திய வங்கியிலிருந்த பல பில்லியன் பணம் காணாமல் போனது மட்டுமல்ல,
பல தொன்... தங்கமும் காணாமல் போயுள்ளது.

ஏதோ... ஒரு இரவில் வீட்டை உடைத்து கள்வர்  திருடிய மாதிரியான  திருட்டு அல்ல இது.
அதி உச்ச  பலத்த பாதுகாப்பில் இருந்த பொருட்கள்.
கண்காணிப்பு கமெரா, இராணுவம், பொலிஸ், வங்கியின் பாதுகாப்பு அதிகாரிகள் என்று,
பலரை தாண்டி...  லொறியில் ஏற்றுமளவுக்கு, இந்தப் பொருட்கள் காணாமல் போயுள்ளது.

அது சம்பந்தமாக... எவரும் கைது செய்யப் படவோ, 
விசாரணை வளையத்துக்குள் கூட  எவரும் வரவில்லை என்றால்...
இந்தக் கள்ள அரசியல் வாதிகளை என்ன சொல்வது.

சுனாமி வந்த போது... தமிழருக்கு, வெளிநாடுகள் தந்த பணத்தையே,   
களவெடுக்க ஆரம்பித்த ஆசை... 
நாட்டை.. வழித்து, துடைக்கும் அளவுக்கு... பேராசை பிடித்திருக்கு. 

என்னத்தப் பெரிசா எடுத்துப்புட்டோம் எண்டு இந்த மாதிரி காட்டுக்கத்துக் கத்திறியள்....

ரணில் கோஸ்டி பாங்கை கொள்ளை அடிச்சுது....

இது முன்னமே தெரிஞ்சு தான், எதுக்கும் பாதுகாப்பா இருக்கட்டுமன் எண்டு.... தங்கம், வெள்ளிய வெளில எடுத்து..... ஒளிச்சு வைச்சிருக்கிறம்.

நா.... நாட்.... நாட்டுப்பிரச்சனை, அதுதான் காசுப்பிரச்சணை தீர்ந்தப் பிறகு.... கொண்டாந்து இருந்த இடத்தில வைப்பம்....

ஒருத்தரையும் நம்ப ஏலாது பாருங்க.....

எப்படி நசிஞ்சு, நெலிஞ்சு.... ரணில்.... உள்ள வந்திட்டார் எண்டு பார்த்தியள் தானே...

அதால.... சும்மா..... அப்பாவியளா..... கத்தாதீங்க...

🤑

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலவு காத்த கிளி போல் காத்திருக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கியில் பூந்து ஒரு சாமானியன் தங்கத்தை எடுத்தால்.. அது கொள்ளை.. தலைப்புச் செய்தி. அதையே அரசுக் கட்டில் இருக்கிறவன் செய்தால்... அமுக்கம். நாட்டுக்கான மீட்சி..!

புலிகளின் தங்கம் என்று தமிழர்களின் தங்கத்தையே வாரிச் சுருட்டினதுகளுக்கு.. இதெல்லாம் யுயுபி. அதை கண்டுகொள்ளாதவர்கள்.. இப்போ கத்துகிறார்கள்.. சொந்தத் தங்கம் போயிட்டுதோ என்னவோ. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

மத்திய வங்கியிலிருந்த பல பில்லியன் பணம் காணாமல் போனது மட்டுமல்ல,
பல தொன்... தங்கமும் காணாமல் போயுள்ளது.

சிறிலங்காவுக்கு உதவியாய் வாறதையும் சுருட்டினது மட்டுமில்லாமல்  அடிமடியிலையும் கை வைச்சிட்டாங்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனோர் தொடர்பாகவோ அல்லது யுத்த அழிப்பு தொடர்பாகவோ ஒரு வார்த்தை கூறாத பேராயர், தங்கம் பற்றி பேசுKறார். 

அவர் மத்திய வங்கியில் வேலை செய்த Ms. தங்கம் பற்றி பேசுகொறார் போல...😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

காணாமல் போனோர் தொடர்பாகவோ அல்லது யுத்த அழிப்பு தொடர்பாகவோ ஒரு வார்த்தை கூறாத பேராயர், தங்கம் பற்றி பேசுKறார். 

அவர் சிங்கள மொழிபேசும் கத்தோலிக்கர்களின் பேராயர்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.