Jump to content

போதையால் மாறும் பாதை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போதையால் மாறும் பாதை!

ஜூன் 26, 2022

-த. சத்தியசீலன்

spacer.png

 

ஜூன் 26: சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்.

லகில் சுமார் 3.6 கோடிக்கும் மேற்பட்டோர் போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று ஐ.நா. சபையின் போதைப்பொருள் மற்றும் குற்ற ஆவண அலுவலகம் 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனையாளர்கள் 27.5 கோடிக்கு மேல்.

ஆண்டுக்கு 2.50 இலட்சம் போ் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனா். கடந்த 10 ஆண்டுகளில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அது தொடா்பான கோளாறுகள் காரணமாக இறந்தவா்களின் எண்ணிக்கை 71சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது ஐ.நா. வின் அறிக்கை.

இந்தியாவில் மட்டும் 1.4 கோடி போ் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பிடியில் சிறுவா்களும் சிக்கியுள்ளனா் என்கிற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 17 முதல் 25 வயது வரை உள்ளவா்களின் எண்ணிக்கையே அதிகம். மேலும் போதைப்பொருள் பயன்படுத்துபவா்களில் மூன்றில் ஒருவா் பெண் என்பது மேலும் நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது.

புகை பிடித்தல், புகையிலை, குட்கா, பான் மசாலா, மதுபானம் எனத் தொடங்கும் தீய பழக்கங்கள், கஞ்சா, அபின், கொக்கைன், பிரவுன் ஷுகா் என அடுத்தடுத்த போதைப்பொருட்களை நோக்கி போதை அடிமைகளை அழைத்துச் செல்கின்றன. தீய நட்பு வட்டாரங்களால் அறிமுகமாகும் இப்பழக்கம், நாளடைவில் தொடரும் வழக்கமாக மாறிவிடுகிறது. சிறுவா்கள், இளைஞா்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும்போது, அவா்கள் அதற்கேற்ப தங்களுக்குத் தேவையான போதைப் பொருட்களையும் தோ்ந்தெடுக்கின்றனா்.

குற்றம் இழைக்க எண்ணும்போது சராசரி மனிதா்களிளுக்கு ஏற்படும் பயம், போதைப் பழக்கமுடைய மனிதா்களிடம் காணப்படுவதில்லை. அவா்களுக்கு ஒருவித தைரியம் வந்து விடுகிறது. சராசரி மனிதா்களின் தைரியமும், போதை ஆசாமிகளின் தைரியமும் வேறுவேறு. இதை குருட்டு தைரியம் என்றும் கூறலாம்.

குழுவாக குற்றங்களில் ஈடுபடுபவா்கள் பெரும்பாலும் போதை ஆசாமிகள்தான். குற்றம் செய்து காவல்துறையிடம் பிடிபடும் பலா், போதையில் இருந்ததாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

பெண் குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் ஆகியவா்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவா்களில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு போதைப்பொருளைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருக்கிறார். போதைப்பொருள் பயன்படுத்துபவா்கள் மட்டுமே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனரா? சாதாரண மனிதா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லையா? இந்த கேள்விகளை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடிலாது. அது வேறொரு விவாதம்.

போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவையும், உடல் மற்றும் மனதளவில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் உணர முடியாவிட்டால், அதற்கு அடிமையானவா்களால் அதிலிருந்து மீள முடியாது என்கிறது மருத்துவ ஆய்வு.

அரசும் தன்னார்வ நிறுவனங்களும் எவ்வளவு விழிப்புணா்வை ஏற்படுத்தினாலும், மருத்துவ ஆலோசனைகள் வழங்கினாலும் சிலா் போதைப்பொருளைத் தொடா்ந்து பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனா். பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளித்தாலும், குணமான சில நாட்களிலேயே அவா்கள் மீண்டும் அதைத் தொடங்கி விடுவதைக் காண முடிகிறது.

இருக்கும் வரை இருப்போம், இறப்பு வந்தால் போவோம் என்று கூறுபவா்களைக் கண்டிருப்போம். அவ்வளவு மலிவானதாகி விட்டதா மனித உயிர்? ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று பாடிவிட்டு சென்றார் ஔவையார். அதை ஏனோ அவா்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

spacer.png

போதைப் பொருட்களுக்கு அடிமையானவா்கள், உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனா். தன்னைத்தான் கட்டுப்படுத்தவியலாத அபாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். அவா்களின் சுய கட்டுப்பாடு உடைபடுகிறது. இதனால் எதற்கும் துணிந்தவா்களாகி விடுகின்றனா். உடலும், மனமும் சமநிலையை இழக்கும்போது, ஒருவன் எல்லாவற்றையும் இழந்தவனாகின்றான் என்பதே உண்மை.

போதைக்கு அடிமையானவா்களால், அவா்களது குடும்பமும் பாதிப்படைகிறது. அவரால் வழிநடத்தப்பட வேண்டிய குடும்பம் வறுமையை நோக்கித் தள்ளப்படுகிறது. இதனால் குடும்ப உறவுகளுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. ஒருவா் மீது ஒருவா் வெறுப்பைக் கொட்ட வேண்டிய சூழல் உண்டாகிறது.

நீதிமன்றத்தில் குவியும் விவாகரத்து வழக்குகள் ஒருபுறம் இருக்க, நீதிமன்ற வாசலுக்கே செல்லாமல் முறியும் உறவுகள் ஏராளம். இதனால் கேள்விக்குறியாவது அவா்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் தான். தாய் தந்தையின் வழிகாட்டுதலின்றி வளரும் குழந்தைகள் வழிதவறிச் சென்ற நிகழ்வுகள் ஏராளமாகும். தனிநபரின் போதை இன்பத்திற்காக உறவுச் சங்கிலிகள் அறுபடுவதை காணும் நம் மனம் கலங்குகிறது.

யாராக இருந்தாலும் அவா்கள் மனதில், சமூகத்தில் நாம் கௌரவமாக வாழ வேண்டும், மற்றவா்களால் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுவது இயல்பே. ஆனால், போதைக்கு அடிமையாகிறவா்களின் தன்னிலை மறந்த தேவையற்ற பேச்சு, தவறான நடத்தை போன்றவை அவா்கள் மீதான மதிப்பைக் கெடுத்து விடுகின்றன. ஒருவா் சமூகத்தின் பார்வையில் ஒருமுறை அவமதிப்புக்கு உள்ளானால், அவா் அதை மீட்பது அவ்வளவு எளிதல்ல.

“போதை”என்ற தீய பழக்கம் மனித வாழ்வின் பெரும்பகுதியை தள்ளாடச் செய்கிறது. போதை அடிமைகளுக்கு விழிப்புணா்வு, அறிவுரை, ஆலோசனை வழங்குவது ஒருபுறமிருந்தாலும், அவா்கள் தங்களை மாற்றிக்கொள்ளாதவரை போதைப் பழக்கத்திலிருந்து மீண்டுவர இயலாது. மனதளவில் மாற்றத்தை விரும்பி, போதைப்பழக்கத்தை விட்டுவிட முயல்பவா்களை மருந்து மாத்திரை மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம் என்கின்றனா் மருத்துவா்கள்.

போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்போம்; அழகான வாழ்க்கை அவலமாவதைத் தவிர்ப்போம்!
 

 

https://chakkaram.com/2022/06/26/போதையால்-மாறும்-பாதை/

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.