Jump to content

இந்தியா - இலங்கை இடையே புதியதோர் ஒப்பந்தமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - இலங்கை இடையே புதியதோர் ஒப்பந்தமா?

லோகன் பரமசாமி

 

தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி உள்ள இலங்கை அரசு பொருளாதார வலிமையை முற்றாக இழக்கும் நிலையை அடைந்துள்ளது. இந்தநிலையானது, இலங்கை, இந்திய இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியலில் தாக்கத்தை விளைவிககுமா? இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் புதியதொரு மாற்றத்தை  உருவாகுமா? என்ற ஆழமான கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.   

Logan_Top_02.jpg

தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய, இலங்கை ஒப்பந்தமானது இலங்கைத் தீவில் அமெரிக்காவின் தலையீட்டைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றியது. அத்துடன், இந்தியாவின் தெற்காசிய பிராந்தியப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் இருந்தது. அத்தோடு, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் முதன்மைத் தானத்தைப்  தக்கவைப்பதற்கும் பெரும்பங்காற்றியது.

இந்திய, இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்ட காலப்பகுதியை எடுத்து நோக்கினால் ஜெயவர்த்தன அரசாங்கம் வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கவும், அதற்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல்களை முன்னெடுத்தமையால்   அரசாங்கம் செய்வதறியாது திகைத்திருந்த நிலைமையே காணப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது கரும்புலிதாக்குதல் ஜுலை மாதம் 5ஆம் திகதி இடம்பெற்றமையும், வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்பட்ட சூழலையும் தனக்கு சதகமாகப் பயன்படுத்திய இந்திய அரசு, நாடுகளுக்கிடையிலான  இறையாண்மையை மீறி, வடக்கு, கிழக்கு பகுதியில் விமானம் மூலம்  உணவுப் பொதிகளை வீசியது. 

அத்துடன் தனது படைகளையும் இலங்கைக்கு அனுப்பியது. இவ்வாறான சூழலில் இலங்கை அரசு, இந்தியாவிடம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை கையாளும் வகையிலான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. குறித்த ஒப்பந்தம் 13ஆம் திருத்த சட்டமாக பரிணமித்து தற்போது வரையில் அரசியலமைப்பில் நீடித்துக்கொண்டிருக்கினறது. 

ஓப்பந்தத்தின் பிரகாரம், வடக்கும், கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் என்று காணப்படுகின்றபோதும்,  பௌத்த சிங்கள பேரினவாத அரசியல் வடக்கையும் கிழக்கையும்  நீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்தி இரு கூறுகளாக பிரித்துவிட்டது. 

இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 35ஆண்டுகளாகின்ற நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகப்பெரும் இடைவெளிகள் தற்போது காணப்படுகின்றன. 

இவற்றில் முக்கியமாக இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படைகளின் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவையாகின்றன. 2019ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டிற்குள் இலங்கைக் கடற்படையினர் 284இந்திய மீனவர்களை கடல் எல்லையை மீறினார்கள் என்ற குற்றசாட்டின் பேரில் கைது செய்துள்ளனர். அதேவேளை 53இந்திய மீனவப் படகுகளையும் பறித்தெடுத்துள்ளனர். 

இந்தியாவும், ஜப்பானும் கூட்டிணைந்து மேற்கொண்ட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய ஒப்பந்தத்தினை இலங்கை அரசு மீளப்பெற்றுக் கொண்டது. இறுதியில் இந்தியாவைச் சமாளிப்பதற்காக மேற்கு முனையத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது இலங்கை அரசாங்கம். 

இவற்றைவிடவும், சீன சார்பு நிலையால் இந்தியாவின் கடுமையான எதிர்ப்பை இலங்கை சம்பாதித்துக் கொண்டது.  இலங்கையில் பொருளாதார ரீதியாக சீனா தனது கால் தடங்களை ஆழமாப் பதித்து வருகிறது. இது இந்திய இலங்கை உறவில் பெரும் தாக்கத்தை விளைவித்துள்ளது. 

2010ஆம் அண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை இலங்கையில், சீனா 23.6சதவீத நேரடி முதலீட்டாளராகவும் இந்தியா 10.4 சதவீத நேரடி முதலீட்டாளராகவுமே இருந்துள்ளன. 

இதற்கு அப்பால், அம்பாந்தோட்டை துறைமுகத்தை  சீனாவுக்கு 99வருட குத்தகைக்கு கொடுத்தமை, கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுக்கு வெகுவான அதிருப்திகள் உள்ளன. 

ஏற்கனவே அமெரிக்க தலையீட்டை தவிர்க்கும் வகையில் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட நிலையில் சீன தலையீடு இந்தியாவின் மிகவும் கரிசனைக்குரிய விடயமாக காணப்படுகின்றது. அதேவேளை இலங்கையில் தற்போது, நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவிகளை வழங்கும் அதேநேரம் அச்சூழலை எவ்வாறு தனக்குச் சாதகமாக பயன்படுத்தலாம் என்ற சிந்தனையும் இந்தியாவுக்குள்ளது.

புதிய உலக ஒழுங்கின் அடிப்படையில் ரஷ்யா, உக்ரேன் மீது தனது இறையாண்மையை பயன்படுத்த முடியுமாயின் அயல்நாடான இலங்கை மீது இந்தியா ஏன் இறையாண்மையை பயன்படுத்த முடியாது என்ற தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச அளவில் தாக்கம் விளைவிக்கும் என்ற கணிப்பைச் செய்துள்ள அரசியல் அவதானிகள் சீனா, தனது ஆக்கிரமிப்பை தாய்வான் மீது செலுத்தலாம் என்றும் உறுதியாகக் கூறியுள்ளனர். ஆனால் அவ்விதமான ஆக்கிரமிப்பை  இந்தியா ஏன் இலங்கை மீது, செலுத்த முடியாது என்ற கேள்விக்கு அவர்கள் விடையைக் கண்டிருக்கவில்லை. 

இந்தியாவுக்கு அவ்விதமான ஆக்கிரமிப்பைச் செலுத்துவதற்கு சாதகமான நிலையானது தற்போதைய காலத்தை தவிர, எதிர்காலத்தில் எப்பொழுதும் ஏற்படப் போவதில்லை. கடந்த காலங்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்பட்ட நம்பிக்கைத் தளர்வு இறுக்கமான உறுவுகளை ஏற்று கொள்ள முடியாத சூழலை இரு நாடுகளுக்கும் ஏற்படுத்தியிருந்தன.  

ஆனால் தற்பொழுது, பாரிய கடன்கள், மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக எழுந்துள்ள பற்றாகுறையும் உலக வங்கி சர்வதேச நாணய நிதியம், என்பது உள்ளிட்ட பல்வேறு  நிதி நிறுவனங்களிடத்தலும் உதவிகளைக் கோர வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையின் காரணமாக இலங்கை அனைத்துவிதமான மாற்றுக் கொள்கைகளையும் கைவிட்டு  பிராந்திய வல்லரசான இந்தியாவிடம் சரணாகதி அடையும் நிலைக்கு வந்துவிட்டது.  அத்துடன், இந்தியாவிடத்தில் அண்மைய காலத்தில் பொருளாதார பலம் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையை எவ்வாறு பயன்படுத்தப்போகின்றது என்பது தான் பிரதான கேள்வியாகின்றது.  

2009ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தெற்காசியாவிலேயே  அரசில் ரீதியாக மிகுந்த விலிமை உடைய நாடாக தன்னை காட்டிக்கொண்டது.  பிராந்தியத்திலேயே மிகவும் திறமையாக பயிற்சி பெற்ற இராணுவ குழுக்களை கொண்ட அரசாங்கமாகவும் கருதப்பட்டது. சீனாவையும், இந்தியா, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தினையும் இராஜதந்திர ரீதியாக கையாளும் பலவானாகவும் இலங்கை அரசு கருதப்பட்டது. 

Logan_Top_01.jpg

ஆனால் தற்பொழுது, அவை அனைத்தையும் இழக்கப்பட்டு, அன்றாட வாழ்கைக்கைக்கே உதவிகளை கோரும் நிலையில் இலங்கை அரசு இருக்கின்றது. இந்தநிலையில் இந்திய ஊடகங்களில் இலங்கை பிரதமர் ரணிலின் கூற்றை மையமாக வைத்து வெளியான கட்டுரைகளில் இலங்கையும், கேரளாவும், தமிழ்நாடும் மிக இலகுவாக ஒன்றுடன் ஒன்று இசைவடைந்து விடக்கூடியன என்ற விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளன. 

இந்தியாவில் தென்பிராந்திய மாநிலங்களின் மொத்த உற்பத்தியும் இலங்கையின் மொத்த உற்பத்தியையும் இணைத்தால் 500 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும். அவ்விதமான ஒருமித்த உற்பத்தியானது, தெற்காசிய உற்பத்தி பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகின்றது. 

இதனால், இந்தியாவின் துணைப் பிராந்தியமாக இலங்கையும் இணைந்து கொள்வது பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் என்ற நோக்குகளும் வெகுவாக உள்ளன.  இன்னும் சில இந்திய சிவில் சேவை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில்  மன்னாரின் ஊடாக இராமேஸ்வரத்தையும் திருகோணமலையும் இணைத்து மிக பாரிய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அத்துடன் சீன செல்வாக்கையும் கையாள்வதும் இலகுவடைந்து விடும். அது இந்தியாவின் நலன்களுக்கு மிகவும் சிறந்தது என்ற பார்வையும் உள்ளது.

ஆக தற்போது, உக்ரேன் மீதான ரஷ்ய படை எடுப்புடன் எழுந்துள்ள  உலக ஒழுங்கின் அடிப்படையிலும் யதார்த்த ரீதியான இந்திய, இலங்கை நிலைமையையும் எடுத்த நோக்கினால் புதியதோர் இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாகுமா என்ற கேள்வி இயல்பாக எழுகின்றது. அவ்வாறு உருவாகும் ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பது தான் அடுத்துள்ள பிரதான விடயமாகும். 

 

 

https://www.virakesari.lk/article/130211

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

 

ஆக தற்போது, உக்ரேன் மீதான ரஷ்ய படை எடுப்புடன் எழுந்துள்ள  உலக ஒழுங்கின் அடிப்படையிலும் யதார்த்த ரீதியான இந்திய, இலங்கை நிலைமையையும் எடுத்த நோக்கினால் புதியதோர் இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாகுமா என்ற கேள்வி இயல்பாக எழுகின்றது. அவ்வாறு உருவாகும் ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பது தான் அடுத்துள்ள பிரதான விடயமாகும். 

ஒன்று மட்டும் உறுதியாச் சொல்லலாம், தமிழர்களுடைய அபிலாஷை நிறைவேறாது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொழுதுபோக்குக்கு கிறுக்குவதையெல்லாம் கட்டுரையாக பிரசுரிக்கும் நிலைக்கு வீரகேசரியும் அதனை வாசிக்கும் நிலைக்கு  அதன் வாசகர்களும் வந்துவிட்டனர்..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

ஒன்று மட்டும் உறுதியாச் சொல்லலாம், தமிழர்களுடைய அபிலாஷை நிறைவேறாது.

ரஸ்யா செய்வது பாதுகாப்பு மூலோபாய நகர்வாயின்; ஏன் இந்தியாவுக்கு அந்த உரிமை இல்லையா? சீனாவால் இந்தியாவின் பாதுகாப்பு விழுங்கப்படுவதை நீண்டகாலத்திற்கு அனுமதிக்க முடியுமா?

இந்தியாவிற்கு இரு தெரிவுகள் உள்ளன.
1. தமிழரது சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்துத் தமிழரை அரவணைத்தல்
2. முழு இலங்கைத் தீவையும் இந்தியத் துணைப் பிராந்தியமாக்குதல், ஆனால் நெருக்கடியொன்று தோன்றுமாயின் அது இரண்டாவதையே இந்தியா கைக்கொள்ளும்.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

ரஸ்யா செய்வது பாதுகாப்பு மூலோபாய நகர்வாயின்; ஏன் இந்தியாவுக்கு அந்த உரிமை இல்லையா? சீனாவால் இந்தியாவின் பாதுகாப்பு விழுங்கப்படுவதை நீண்டகாலத்திற்கு அனுமதிக்க முடியுமா?

இந்தியாவிற்கு இரு தெரிவுகள் உள்ளன.
1. தமிழரது சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்துத் தமிழரை அரவணைத்தல்
2. முழு இலங்கைத் தீவையும் இந்தியத் துணைப் பிராந்தியமாக்குதல், ஆனால் நெருக்கடியொன்று தோன்றுமாயின் அது இரண்டாவதையே இந்தியா கைக்கொள்ளும்.


 

1) அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் தரப்பை டெல்லியில் ந்திரா கன்டி சந்தித்தபோது அவரால் தனித் தமிழ் ஈழத்தை ஒருபோதும் ஆதரிக்க முடியாது எனத் தெழிவாகவே கூறப்பட்டது. ஆனாலும் அமிர் தலைமையிலான தவிகூ ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது. 

2) அண்மையில் ஒரு தரப்பு இந்திய கொழ்கை வகுப்பாளர்களை சந்தித்தபோது அவர்கள் இலங்கை எமது பீரங்கி வீச்செல்லைக்குள்ளேயே இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். 

 

☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

1) அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் தரப்பை டெல்லியில் ந்திரா கன்டி சந்தித்தபோது அவரால் தனித் தமிழ் ஈழத்தை ஒருபோதும் ஆதரிக்க முடியாது எனத் தெழிவாகவே கூறப்பட்டது. ஆனாலும் அமிர் தலைமையிலான தவிகூ ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது. 

வட்டு கோட்டை, இரத்த பொட்டு எல்லாம் முடிச்சு, ஆயுத போராட்டத்தை ஆரபித்து வைத்த பிந்தான் டெல்லியில் வைத்து இப்படி கூறப்பட்டது.

வரலாறு முக்கியம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வட்டு கோட்டை, இரத்த பொட்டு எல்லாம் முடிச்சு, ஆயுத போராட்டத்தை ஆரபித்து வைத்த பிந்தான் டெல்லியில் வைத்து இப்படி கூறப்பட்டது.

வரலாறு முக்கியம்.

ந்ன்றி கோசான். 

நான் சொல்ல விரும்பிய விடயம், நாங்கள் கனவுலகில் வாழ முடியாது. நிஜ உலகில் வாழ்வதற்கு உண்மை தெரிய வேண்டும். அப்போதுதான் தெளிவான / சரியான முடிவுகள் எடுக்க முடியும். 

இல்லையென்றால் இன்னும் பல முள்ளிவாய்க்காக்கள்தான் பரிசாகக் கிடைக்கும். 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.