Jump to content

சர்ச்சையில் சிக்கிய ஜனாதிபதிகள் மன்னிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பதவிக்கு வந்தபின்னர், தூக்குத்தண்டனைக்கு காத்திருந்த பலர் ஜனாதிபதி மன்னிப்பினை பெற்று தூக்கில் இருந்து தப்பியது மட்டுமல்ல, சிறைக்கு வெளியேயும் வந்தனர்.

7 வயது சிறுமி உள்பட 8 பேரை கழுத்தினை ஆடு அறுப்பது போல சீவி கொலை செய்த, சார்ஜெண்ட் ரத்னாயக்கா வெளியே வந்து, தனது 9 வயது மகளை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார்.

அதுபோல வெளியே வந்த இன்னும் ஒருவரான துமிந்த சில்வா, அமைதியாக போக விடாமல், தனது மமதையினை காட்டும் கோத்தாவின் முட்டாள் தனத்தினால், வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

நீதித்துறைக்கு, நடுவிரல், தூக்கி காட்டும் ஒரு அபத்தமாகவே தெரிந்தது அந்த நியமனம். மேலும், அரசசேவையில் உள்ள பலருக்கும் அது ஒரு கரப்பான் பூச்சி, படுக்கை அறைக்குள் நுழைந்தது போன்ற ஒரு உணர்வையும் கொடுத்திருந்தது.

இந்நிலையில், மரண தண்டனை பெற்று, சிறையில் இருந்தவாறே எம்பியாக ஜெயித்திருந்த, இன்னும் ஒருவரோ, மேன்முறையீடு செய்த போது, சட்ட மா அதிபர் அலுவலகம், வழக்கினை வேண்டுமென்றே சொதப்ப, அவரும் நீதி மன்றால் விடுவிக்கப்பட்டார்.

துமிந்த மன்னிப்பு, தொடர்பில், கோத்தா முறையான வழிமுறைகளை பின்பற்றி இருக்க வில்லை என்ற ரீதியில் உச்ச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில், அவரது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் சிறை சென்றுள்ளார். இலங்கையில் வழக்கம் போன்றே, சிறை செல்லும் நிலை வந்தால், அரசியல் வாதிகளுக்கு, திடீர் சுகயீனம் வந்துவிடும். அவ்வகையில், துமிந்த, ஸ்ரீ ஜெயவர்தனபுர ஆஸ்பத்திரியில் படுத்து விட்டார்.

இதனிடையே, மைத்திரி வழங்கிய இரு மன்னிப்பு தொடர்பில் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது. ஒன்று ஞான சார தேரர்.

அடுத்தவர், ஒரு பெரும் பணக்கார குடும்ப வாரிசு. இவர் சிறையில் இருக்கும் போதே, உயர் கல்வி படித்து, மாஸ்டர் டிகிரி எடுத்து இருந்தார். தனது பெண் நண்பியை மாடியில் இருந்து தள்ளி விழுத்தி, கொலைக்கு காரணமாக இருந்தார் என்று மரண தண்டனை விதிக்கப்பட்டவர்.

இவரது மன்னிப்பு தொடர்பில், தம்மை வந்து எம்பி இரத்தின தேரர் சந்தித்தார் என்றும், முதலில் அதனை பொருட்படுத்தவில்லை என்றாலும், பின்னர் அவரது தாய், தந்தையுடன் வந்து சந்தித்த போதே, தான் அது குறித்து, கவனிக்க முடிவு செய்ததாகவும் மைத்திரி சொல்கிறார்.

Athuraliye-Rathana-and-Maithripala-.jpg?resize=300%2C222&ssl=1

அதே மைத்திரி, இரத்தின தேரர், பல கோடிக்கணக்கான பணத்தினை, அந்த தாய், தந்தையிடம் வாங்கித்தான் தன்னிடம் அழைத்து வந்தார் என்று, இப்பொது தெரிந்து கொண்டுள்ளதாக, டிவி நிகழ்வு ஒன்றில் கூறி உள்ளார்.

ஆனால்,  இரத்தின தேரர் சும்மா இருப்பாரோ? தாய், தந்தையினரை சந்தித்த பின்னர் தான் அவர்கள், மைத்திரியின் தூரத்து உறவினர் என்பதை, மைத்திரி தெரிந்து கொண்டார் என்றும் அதனாலேயே, அவர் மன்னிக்கும் முடிவை எடுத்திருப்பார் என்று தான் நம்புவதாகவும் சொல்லி விட்டார்.

ஆக... காசுக்கு.... மன்னிப்பு விலைப்பட்டிருக்கிறது என்பது நியம் தான். துமிந்த ஒரு தூள் வியாபாரி. அந்த வகையில், கோத்தாவுக்கு பல பண உதவிகளை, ஆரம்பத்தில் செய்திருந்ததால், ஆரம்பத்தில், அவர் மேலே நடவடிக்கை இருக்கவில்லை. ஹிருணிக்காவின் அயராத, உயிருக்கு பயம் இருந்த நிலையில் செய்த முயல்வுகளால் அவருக்கு தண்டனை கிடைத்த பின்னர், கோத்தர் ஜனாதிபதி ஆகி மன்னிப்பு வழங்கி இருந்தார்.

ஆனாலும், தண்டனை விதித்த நீதிபதியின் கருத்து, சிறைத்துறையின் கருத்து கேட்டு தான் மன்னிப்பு கொடுக்க வேண்டும் என்பது சட்டம். அட, ஒரு போன் கோலில் அது ஒழுங்கா வந்திருக்கும். அதெல்லாம் தேவையில்லை என்று, கோத்தா மமதையில் நினைத்தது, இன்று ஆப்பாக வந்துள்ளது.

இன்று உள்ள நாட்டு நிலையில், கோத்தா மீண்டும் அதில் கவனம் செலுத்தும் நிலை இல்லை என்பதால், வீடமைப்பு அதிகார சபை தலைவர்.... இனி உள்ள தான்.

source: colombotelegraph

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நாதம்ஸ்.......கோத்தா இருக்கும்வரை அவர்கள் உல்லாச வாழ்க்கைதான் வாழ்வார்கள்.......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சிறிலங்காவில் எத்தனை உயிர்களை கழுத்தறுக்கின்றார்களோ அவ்வளவிற்கு புனிதர்களாகவும் வீரர்களாகவும் புகழப்படுவார்கள்.

நன்றி நாதம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.