Jump to content

உபத்திரவ நாய்:  மரநாய்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உபத்திரவ நாய்:  மரநாய்.

காட்டு நாய் பார்த்திருப்பீர்கள். இது மரநாய். Weasels

File:Mustela nivalis -British Wildlife Centre-4.jpg

மிக மோசமான ஒரு உபத்திரவ விலங்கு. மிகவும் துணிச்சல் மிக்கது. தன்னிலும் பார்க்க மிகவும் பெரிய விலங்குகளையே உண்டு, இல்லை என்று பண்ணி விடும். சாப்பிட முடியுமோ இல்லையோ, கொல்ல முடியுமோ இல்லையோ, அரியண்டம் கொடுப்பதில் கில்லாடி.

கோழிக்கூட்டினுள் புகுந்து, முட்டையினை அலேக்காக தூக்கிக் கொண்டு ஓடுகிறது. பாம்பினை கூட பொறுத்த இடத்தில் பிடித்து, அலற வைக்கிறது. பெரும்பாலும், கழுத்தை குறி வைத்து கவ்விக் கொள்வதால், பாதிக்கப்படும் விலங்குகள், ஒன்றுமே செய்ய முடியாமல், தடுமாறி, அங்கும் இங்கும் ஓடும். உருளும், புரளும். 😯

இந்த வீடியோவில், தாய் பறவை இல்லாத நேரத்தில், ஒரு மரப்பொந்தினுள் புகுந்து, குஞ்சுகளை தூக்கி வெளியே வீசுகிறது. ஏன் அவ்வாறு செய்கிறது என்று அதுக்கே தெரியாது.

எலியின் வாலை பிடித்து இழுக்கிறது. தண்ணீரில் பாய்ந்து, நண்டை பிடித்துக்கொண்டோடுகிறது.

அதிலும் பார்க்க, பெரிய முயல்களை பாடாக படுத்துகிறது, சுண்டெலிக்கு விளையாட்டு, பூனைக்கு சீவன் போகுது கதை. 🤭

ஒரு மரங்கொத்திப் பறவையியினை கொலை செய்ய அதன் கழுத்து நோக்கி பாய, அது முதுகில் சுமந்தவாறே பறந்தோட, அதனை ஒருவர் கிளிக் செய்ய, அது சிறந்த புகைப்படமாகி, உலகளாவிய ரீதியில் viral ஆகியது.

மரங்கொத்திப் பறவையின் கண் சொன்ன திகில்.... உலகளாவிய ரீதியில் பேசப்பட்டது. அதன் பின்பே, இந்த மிருகம் குறித்து உலகமே தெரிந்து கொண்டது.

Incredible photo captures weasel riding on the back of a flying woodpecker  - Telegraph

 

 

Edited by Nathamuni
addition
  • Like 4
  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

பல பிராணிகளை மிரட்டிய… மரநாய், பூனையிடம் மாட்டுப் பட்டுப் போனார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Nathamuni said:

உபத்திரவ நாய்:  மரநாய்.

காட்டு நாய் பார்த்திருப்பீர்கள். இது மரநாய். Weasels

File:Mustela nivalis -British Wildlife Centre-4.jpg

அட இவரே ஆள்! எங்கடை ஊரிலை மரநாய் கோழியளை புடிச்சுக்கொண்டு போட்டுது எண்டுவினம். ஆனால் இதுவரைக்கும் மரநாயை கண்ணாலை கண்டதில்லை 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

அட இவரே ஆள்! எங்கடை ஊரிலை மரநாய் கோழியளை புடிச்சுக்கொண்டு போட்டுது எண்டுவினம். ஆனால் இதுவரைக்கும் மரநாயை கண்ணாலை கண்டதில்லை 😁

ஊரில் உள்ள மரநாய்…. இரவில் மட்டுமே நடமாடும்.
இது… பகலிலும், ஓடித் திரியுது. அத்துடன் மிகச் சிறியதாகவும் இருக்கின்றது.
சில வேளை இது… கீரி வகையை, சேர்ந்ததோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

ஊரில் உள்ள மரநாய்…. இரவில் மட்டுமே நடமாடும்.
இது… பகலிலும், ஓடித் திரியுது. அத்துடன் மிகச் சிறியதாகவும் இருக்கின்றது.
சில வேளை இது… கீரி வகையை, சேர்ந்ததோ தெரியவில்லை.

Mustela.erminea.jpg

 

உதுதானே இஞ்சை ஜேர்மனியிலை  கார் மோட்டருக்குள்ளை உள்ளட்டு வயர்களை கடிச்சு நாசமறுக்கிறது?

Marder.

Hochspannung und Ultraschall: Hyundai wehrt die Marder ab - S & T  Autogalerie Bremerhaven

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

Mustela.erminea.jpg

 

உதுதானே இஞ்சை ஜேர்மனியிலை  கார் மோட்டருக்குள்ளை உள்ளட்டு வயர்களை கடிச்சு நாசமறுக்கிறது?

Marder.

Hochspannung und Ultraschall: Hyundai wehrt die Marder ab - S & T  Autogalerie Bremerhaven

அதே தான். இது, ஜேர்மனியில் காருக்கு விளைவிக்கும் சேதம் பல மில்லியனை தாண்டும்.
இதற்கென்று காப்புறுதி கூட உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

அதே தான். இது, ஜேர்மனியில் காருக்கு விளைவிக்கும் சேதம் பல மில்லியனை தாண்டும்.
இதற்கென்று காப்புறுதி கூட உள்ளது. 

 

11 minutes ago, குமாரசாமி said:

Mustela.erminea.jpg

 

உதுதானே இஞ்சை ஜேர்மனியிலை  கார் மோட்டருக்குள்ளை உள்ளட்டு வயர்களை கடிச்சு நாசமறுக்கிறது?

Marder.

Hochspannung und Ultraschall: Hyundai wehrt die Marder ab - S & T  Autogalerie Bremerhaven

அடேங்ப்பா, கெட்டாரில் கெட்ட நாய்..... காருக்கும் குடைச்சல் குடுக்குது....😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

அடேங்ப்பா, கெட்டாரில் கெட்ட நாய்..... காருக்கும் குடைச்சல் குடுக்குது....😍

ஓடிய கார்… எஞ்சின் சூட்டுக்கு, இதமாக இருக்க… உள்ளே குடியிருக்க ஆரம்பிக்கும்.
அதிலும் ஒரு முறை இருந்த காரைத்தான் தேடி வரும். அடிக்கடி மாத்தாது.
உள்ளுக்கு இருக்கிற நேரத்தில்…. பொழுது போவதற்காக,
கண்ணிலை காணுற வயர், பிளாஸ்ரிக் உதிரிப்பாகங்கள் எல்லாத்தையும் கடித்து விடும்.
வயல், தோட்டங்களை அண்டிய பகுதியில்…. இதன் பாதிப்பு அதிகம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துக் காலங்களில்… இந்த மர நாய்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது! ஒரு ஆசிரியரின் பட்டப் பெயரும் மர நாய் என்று இருந்தது! 

வகுப்பறைகளின் சீலிங்குகள் கிடுகினால் ஆணவ! மர நாய் இரவுகளில் மூத்திரம் பேய்ந்திருக்கும்! மணம் அந்த மாதிரி. சில தடவைகள் இவற்றைக் கண்டுமிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலும் இந்த மரநாய்  செய்யும் சேதம் அதிகம் சில நேரம்களில் ஆடுகளை கூட விட்டு வைக்காது கோழிக்கூட்டினுள் புகுந்தால் அங்கு இருக்கும் கோழிகளை அனைத்தையும் கொன்றபின்தான் சிங்கன் வெளியேறுவார் சாப்பிட மாட்டார் . நாய்கள் ஒருவிதமாக அழுகை குரைப்புடன்  சத்தமிட்டால் சிங்கன் ஏரியாவுக்குள் எண்டர்  பண்ணிவிட்டார் என்று அர்த்தம் சிலர் இதை சருகு புலி என்பார்கள் அது வேறு இதுவேறு சொல்லி புரியவைக்க முடியாது . நம்ம தொடக்கம் எட்டாம் கட்டை செம்மலை வீதிக்கு அடுத்த பக்கம் உள்ள கராச்சி காடுகள் முழு நேர வசிப்பிடம் பகலில் அங்குதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நானும் ஊரிலை கேள்விப்பட்டிருக்கிறன். ஆனால் இண்டைக்குத்தான் முதற்தடவையாக் காணுறன்...

நான் இவ்வளவுநாளும் ஏதோ ஓநாய் வடிவிலை இருக்குமென்டுதான் நினைச்சனான். ... என்ன உவர் சுண்டெலி மாதிரி இருக்கிறார்?😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெட்ட சாமான் இது.

சின்ன வயசில் என் முதலாவது பிசினஸ் முயற்சியான கோழி பண்ணையை அடியோடு சாய்த்த வில்லன்😡.

இரவில் கண்ணை மட்டும் கண்டுள்ளேன்.

87 க்கு முந்திய ஒரு கறுத்த ஏரியா பொறுப்பாளரை அவரின் ஊரை சொல்லி மரநாய் என இயக்கத்தில் அழைப்பார்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.abc.net.au/news/rural/2021-09-07/rambo-the-fox-escapes-capture-again/100436276

2 hours ago, நன்னிச் சோழன் said:

நானும் ஊரிலை கேள்விப்பட்டிருக்கிறன். ஆனால் இண்டைக்குத்தான் முதற்தடவையாக் காணுறன்...

நான் இவ்வளவுநாளும் ஏதோ ஓநாய் வடிவிலை இருக்குமென்டுதான் நினைச்சனான். ... என்ன உவர் சுண்டெலி மாதிரி இருக்கிறார்?😆

நான் நரியைதான் இப்படி சொல்லுகிறார்கள் என்று நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
5 minutes ago, vasee said:

https://www.abc.net.au/news/rural/2021-09-07/rambo-the-fox-escapes-capture-again/100436276

நான் நரியைதான் இப்படி சொல்லுகிறார்கள் என்று நினைத்தேன்.

அவர் ஏமாத்துககாரன்; கொஞ்சம் பெரிய ஆள்...

உவர் சுண்டெலியர்; சின்னச்சாமான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ratgeber: Die besten Tipps gegen Marderschäden | Augsburger Allgemeine

இந்த மரநாய்,   ஜேர்மனியில்...  ஒவ்வொரு வருடமும், 
சராசரியாக 200,000 வாகனங்களை சேதமாக்கி, 
65 மில்லியன் ஐரோ பணத்திற்கு நட்டம் ஏற்படுத்துகின்றது.

எனது காரின்... குளிர்சாதன குழாய் ஒன்றை கடித்த பின்,
அது காருக்கு கிட்ட  வராமல் இருக்க... 
மனிதருக்கு கேட்காத, அதி கூடிய ஒலி எழுப்பும்...  
ஒரு  சென்சார்  கருவியை பொருத்திய பின் ஒரு சம்பவமும் நடக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றிலும் பல வகைகள் இருக்கிறது என்று நினைக்கிறன். வெப்பவலயத்தில் இருப்பவை கருமை நிறமும், சற்று பெரிய தோற்றம் உள்ளது.    

இதை போன்றதே தேன் கரடி. honey  badger. ஆனால், தேன் கரடிக்கு பாம்பிடம் கடி வாங்கி, மயங்கி,  விடமுறித்து, மீண்டும் எழும் தன்மை இருக்கிறது.    

அனால், இந்த குடும்பம் (rodents; அணில், முயல் போன்றவையும் ) போறவற்றின் பற்கள் எப்போதும் வளருபவை (எலி போல, open rooted) போல இருக்கிறது.

அதனால் எலி போல கடித்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறே அவை பற்களை தேய்த்து அரிக்கின்றன .


மற்றது அநேகமாக எல்லா rodents உம், metabolism மிக கூடியவை. இதுவும் ஓர் காரணம் இவை எப்போதும் எதாவது உண்ணவும் அல்லது வேட்டையாடவும்.

காட்டுப் பன்றியும் இந்த எப்போதும் வளரும் (open rooted) தந்தம் உள்ளது. காட்டுப் பன்றி அவற்றிடையே சண்டை (இனப்பெருக்க காலத்தில்) அல்லது மரங்களில் தேய்த்து இந்த வளர்ச்சியை கட்டுக்குள் வைத்து இருக்கும்.   

வளர்ப்பு பண்றியிலும் இருக்கலாம். வளர்ப்பு என்றபடியால், தகுந்த நேரத்தில் அவை அகற்றப்படும் என்று நினைக்கிறன். 

மரையின் கொம்புகள் (இது சரியான பதம் அல்ல என்று ன் நினைக்கிறேன்)  மீண்டும் வளரும். 

மானின் கொம்புகள்  வளருமா என்பது தெரியவில்லை.   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அட இவரே ஆள்! எங்கடை ஊரிலை மரநாய் கோழியளை புடிச்சுக்கொண்டு போட்டுது எண்டுவினம். ஆனால் இதுவரைக்கும் மரநாயை கண்ணாலை கண்டதில்லை 😁

ஊரில பழந்திண்டு கொட்டை போட்ட நாங்க என்று சொல்லுவீங்க மரநாயை காணல என்று சொல்லுறீங்க🙄🙄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஊரில பழந்திண்டு கொட்டை போட்ட நாங்க என்று சொல்லுவீங்க மரநாயை காணல என்று சொல்லுறீங்க🙄🙄

நானும் ஊரிலை காணவில்லை தான். காரணம் இரவில் திரியும் ஒரு விலங்கு என்று நினைக்கிறேன். அடுத்து, விளக்கு வைத்த பிறகு, வெளியாலை போறதில்லை எண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்..... (நாங்கள் எல்லாம், அப்பவே பேப்படிப்புகாரர் என்று ஊரை, பேக்காட்டிக்கொண்டு திரிஞ்ச ஆக்கள் எல்லோ) 😜

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1975 வாக்கிலே எல்லாம் யாழ் நகரத்துக்குள் எல்லாம் மரநாய் பாம்பு எல்லாம் நிறைய இருந்தன.......கோழிகளுக்கு எல்லாம் கூடுகள் இல்லை......பூவரசு மரங்களில்தான் இரவில் அவை படுத்திருக்கும்......இந்த மரநாய் மாதத்துக்கு ஒரு கோழியாவது கொண்டுபேய்விடும் ......வீட்டில் பூனை நாய் இருப்பதால் கொஞ்சம் கட்டுப்படும்.......இப்ப எல்லா வீடுகளும் கட்டிட காடுகளாய் மாறி இருப்பதால் பாம்பும் இல்லை, மரநாயும் இல்லை.....!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஊரில பழந்திண்டு கொட்டை போட்ட நாங்க என்று சொல்லுவீங்க மரநாயை காணல என்று சொல்லுறீங்க🙄🙄

நாங்கள் இருவரும் (மரநாயும் நானும்) நடுச்சாமத்தில் உலாவுபவர்கள் தான். இருந்தாலும் இருவரும் நேருக்கு நேர் சந்திக்காதது அவர் அதிஷ்டம். என் துரதிஷ்டம் 😁

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நானும் ஊரிலை காணவில்லை தான்.

 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மரநாயை காணல என்று சொல்லுறீங்க

 

1 hour ago, குமாரசாமி said:

நடுச்சாமத்தில் உலாவுபவர்கள் தான்

 

முயல், மீன் வளர்ப்பது என்று தொடங்கியதால்., இரண்டு தரம் எனது உறவுகளும் நானும் பொறிவைத்து பிடித்தோம். அதில் இருந்து தான் அவை கருமை  நிறம் என்பதும், சற்று பெரிது என்பதும் தெரியும்.

ஆனால்ல், எனக்கு நன்கு நினைவு உள்ளது, அங்கு வெளிச்சத்துக்கு அது முகத்தை காட்டவில்லை.  பொறியானது  வலை பெட்டி  ஆகையால் நாங்கள் எல்லோரும் சுற்றி பார்க்க கூடியதாக இருந்தது. 

முயலில் இருந்து தொடக்கி அறிந்ததே  அவற்றின் மற்றும் எலி, அணிலின் பற்கள் எப்போதும் வளரும் என்று.

காட்டுப் பன்றி பற்றி hunting என்று ஈர்ப்பு வந்ததால் பின்பே அறிந்தது.

honey badger பற்றி சென்ற வருடத்தில் அறிந்தேன்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நாங்கள் இருவரும் (மரநாயும் நானும்) நடுச்சாமத்தில் உலாவுபவர்கள் தான். இருந்தாலும் இருவரும் நேருக்கு நேர் சந்திக்காதது அவர் அதிஷ்டம். என் துரதிஷ்டம் 😁

இருவரும் நைட் டியூட்டி. எண்டாலும் வேற வேற செக்சன்.

ஒருவர் மரம் பாயுறது.

மற்றவர் வேலி பாயுறது🤣

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

இருவரும் நைட் டியூட்டி. எண்டாலும் வேற வேற செக்சன்.

ஒருவர் மரம் பாயுறது.

மற்றவர் வேலி பாயுறது🤣

அதுகும்…. கருக்கு மட்டை வேலி. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

இருவரும் நைட் டியூட்டி. எண்டாலும் வேற வேற செக்சன்.

ஒருவர் மரம் பாயுறது.

மற்றவர் வேலி பாயுறது🤣

நான் கேட்கலாம் நினைச்சன் நீங்க கேட்டு விட்டீங்க நம்ம இனம் நீங்க பதுங்கல் சிங்கம் சாமியார்

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.