Jump to content

நாட்டில்... தற்போது போதியளவு மருந்து, கையிருப்பு இல்லை – அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில்... தற்போது போதியளவு மருந்து, கையிருப்பு இல்லை – அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசன்ன கொலம்பகே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், மக்கள் இந்த நேரத்தில் இயலுமான வரை பாதுகாப்பாக இருப்பது முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் போதியளவு மருந்து கையிருப்பு இல்லை என்று தெரிவித்த அவர், இருக்கும் மருந்துகளின் கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.

அலுகவலக கடமைகள், வீட்டு வேலைகள் போன்றவற்றின் போது விபத்து ஏற்பட்டால், நோயாளிகளுக்கு போக்குவரத்து வசிதிகளை வழங்குவதும், அதுபோல வைத்தியர்கள், வைத்தியாசாலை ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் பிரச்சினைகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருந்துகள் குறித்து கவனித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், இந்த நேரத்தில் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1288757

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: “போதிய மருந்து கையிருப்பு இல்லை, கவனமாக இருங்கள்” - எச்சரிக்கும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இலங்கையில் போதிய மருந்து கையிருப்பு இல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (28/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்னைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்னைகளால், மக்கள் இந்த நேரத்தில் இயலுமான வரை பாதுகாப்பாக இருப்பது முக்கியம் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் மருத்துவர் பிரசன்ன கொலம்பகே தெரிவித்தார்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க காரியாலயத்தில் நேற்று (27/06/2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டில் போதியளவு மருந்து கையிருப்பு இல்லை என்று தெரிவித்த அவர், இருக்கும் மருந்துகளின் கையிருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

அலுவலக கடமைகள், வீட்டு வேலைகள் போன்றவற்றின் போது விபத்து ஏற்பட்டால், நோயாளிகளுக்கு போக்குவரத்து வசிதிகளை வழங்குவதிலும் அதுபோல வைத்தியர்கள், வைத்தியாசாலை ஊழியர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதிலும் பிரச்னைகள் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருந்துகள் குறித்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், இந்த நேரத்தில் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் கூறியள்ளதாக குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61961996

Link to comment
Share on other sites

3 hours ago, ஏராளன் said:

அலுவலக கடமைகள், வீட்டு வேலைகள் போன்றவற்றின் போது விபத்து ஏற்பட்டால், நோயாளிகளுக்கு போக்குவரத்து வசிதிகளை வழங்குவதிலும் அதுபோல வைத்தியர்கள், வைத்தியாசாலை ஊழியர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதிலும் பிரச்னைகள் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருந்துகள் குறித்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், இந்த நேரத்தில் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் கூறியள்ளதாக குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

போராட்ட காலத்தில் நாட்டு வைத்தியர்கள் பலர் இருந்தார்கள். போராளிகளுக்கு வைத்தியம் பார்த்ததாகத் தெரிவித்து அந்த நாட்டு வைத்தியர்கள் பலரை இந்திய இராணுவமும் சுட்டுக் கொன்றது.

நாட்டு வைத்தியர்கள் தரும் மருந்து பக்க விளைவுகளையோ வேறு பாதிப்புகளையோ ஏற்படுத்தாது. குறிப்பிட்ட நோயை மட்டும் விரட்டிவிட்டு சிவனே என்று இருந்துவிடும். மருந்துகளுக்கு மூலமான மூலிகைகளையும் உள்நாட்டிலிந்தே பெற்றுவிடலாம்.

இன்று நாட்டு வைத்தியர்கள் குறைவடைந்த நிலையில் ஆங்கில மருந்துகளே ஆதிக்கம் செலுத்துகிறது. அவைகள் பக்க விளைவுகளையும் உருவாக்கி மேலதிக மருந்துத் தேவைகளையும் உருவாக்கி விடுகின்றன. அப்படி வரும் மருந்துகளும் தங்கள் பங்கிற்கு விளைவுகளை உருவாக்கி மேன்மேலும் மருந்துத் தேவைகளை ஏற்படுத்தி வருவதால், உள்நாட்டில் தயாரிக்க முடியாத ஆங்கில மருந்துகளை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யவேண்டிய நிலையில் இன்றைய சிறீலங்காவின் கோத்தபாய அரசு உள்ளது.

நிதி வங்குரோத்தை நாட்டில் ஏற்படுத்திய மகிந்த குடும்ப அரசால் வேறு என்ன செய்ய முடியும். இந்த நாட்டை ஆட்சிசெய்யத் தகுதியானவர்கள் வரும்வரையில் இப்படியான அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்க முடியும்.  

  • Like 2
Link to comment
Share on other sites

உக்ரேனுக்கு அள்ளி கொடுக்கும் நாடுகள் மருத்துவ உதவிக்காவது கிள்ளி கொடுத்து உதவலாம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.