Jump to content

இலங்கைக்கு தேவையான... அனைத்து உதவிகளையும் செய்வதாக, மீண்டும் உறுதியளித்தது இந்தியா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

இலங்கைக்கு தேவையான... அனைத்து உதவிகளையும் செய்வதாக, மீண்டும் உறுதியளித்தது இந்தியா!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு இடையில் பெற்றோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான பல அவசர விடயங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதுடில்லியில் உள்ள வீடமைப்பு மற்றும் நகர விவகார அமைச்சில் நேற்று(திங்கட்கிழமை) மிலிந்த மொரகொட மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோலிய உற்பத்தி, விநியோகம் மற்றும் விநியோகத்தில் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய அமைச்சர் ஜூரிக்கு விளக்கமளித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசலை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு சாதகமாக பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

https://athavannews.com/2022/1288768

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதற்கு சாதகமாக பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

ஐயா பூரி , முதலில் குழந்தைகளுக்கு தேவையான பால்மா , வெதுப்பகம் மற்றும் கொத்து , பூரி செய்வதற்கு உரிய கோதுமையை கொடும் ஐயா..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசு கொடுத்த அரிசியினால் மலையக மக்கள் ஏழை மக்கள் பசியாறினாலும் கொஞ்சம் தரமானதாக இருக்கும் அரிசியை வழங்குங்கள் .

சோறு பொங்கும் போது வீட்டுக்குள் இருக்க முடியவில்லை மணம் தாங்க முடியல 🧐🧐

  • Like 1
Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

இலங்கைக்கு தேவையான... அனைத்து உதவிகளையும் செய்வதாக, மீண்டும் உறுதியளித்தது இந்தியா!

நிதியால் வீழ்ந்த இலங்கையை சதி ஏறி மிதிக்கிறது.🤫

th?id=OIP.rjqODyXFLJjKfvINgdEYWgHaEK&pid=Api&P=0&w=293&h=165

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவின் இன்றைய நிலைமை இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம்.......வாழவும் விடாது, சாகவும் விடாது.....கோமாவிலேயே வைத்திருக்கும்......தமிழரை அழிக்கிறன் சிங்களமக்களை முற்று முழுதாக பேய்காட்டிவிட்டு இன்று அந்த மக்களையே நடுத்தெருவில் கொண்டுவந்து இருத்தி விட்டிருக்கிறார்கள்.......!

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சியில் இருந்த யோக்கியமானவர்களையே சாரும்......இந்தப் பாவம் எல்லாம் இவர்களை மட்டுமல்ல இவர்களின் சந்ததிகளையே கருவறுக்கும்......!

" ஏழை அழுத்த கண்ணீர் கூறிய வாளை ஒக்கும்"....!

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

ஸ்ரீலங்காவின் இன்றைய நிலைமை இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம்.......

நான் ஊரில் உள்ளவர்களுடன் தொலைபேசியில் கதைத்த போது அவர்களும் இதையே சொன்னார்கள். இந்தியா இந்த நிலைகாகத்தான் பத்து வருடங்கள் காத்திருந்ததாக...
எல்லாம் பிராந்திய அரசியல்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்திய அரசு கொடுத்த அரிசியினால் மலையக மக்கள் ஏழை மக்கள் பசியாறினாலும் கொஞ்சம் தரமானதாக இருக்கும் அரிசியை வழங்குங்கள் .

சோறு பொங்கும் போது வீட்டுக்குள் இருக்க முடியவில்லை மணம் தாங்க முடியல 🧐🧐

எல்லாம் பேரும் புகழுக்கு மட்டும் தான்......
ரேசன் அரிசி ஒருவித மணம் மணக்கும் என்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரேசன் அரிசி அங்கு கோழிக்கு போடுவது.தானம் கொடுத்த மாட்டை பல்லை பாக்க கூடாது என்டும் சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

ரேசன் அரிசி அங்கு கோழிக்கு போடுவது.தானம் கொடுத்த மாட்டை பல்லை பாக்க கூடாது என்டும் சொல்வார்கள்.

அன்னதானம் கொடுத்தாலும் தரமானதாக கொடுக்க வேண்டும். :406:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமாக கிணறு

மலசலகூடம்  வைத்திருக்கும்  நீங்கள்

எதுக்கு தமிழீழம்  கேட்கிறீர்கள்  என்ற  தரமுள்ளவர்களிடம்

வரம்  கேட்டால்?????😭

4 hours ago, suvy said:

ஸ்ரீலங்காவின் இன்றைய நிலைமை இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம்.......வாழவும் விடாது, சாகவும் விடாது.....கோமாவிலேயே வைத்திருக்கும்......தமிழரை அழிக்கிறன் சிங்களமக்களை முற்று முழுதாக பேய்காட்டிவிட்டு இன்று அந்த மக்களையே நடுத்தெருவில் கொண்டுவந்து இருத்தி விட்டிருக்கிறார்கள்.......!

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சியில் இருந்த யோக்கியமானவர்களையே சாரும்......இந்தப் பாவம் எல்லாம் இவர்களை மட்டுமல்ல இவர்களின் சந்ததிகளையே கருவறுக்கும்......!

" ஏழை அழுத்த கண்ணீர் கூறிய வாளை ஒக்கும்"....!

 

மிகவும்  ஈசியாக தமிழருடன் பேசி நாட்டை முழுமையாக நிரந்தரமாக  காக்கும் வழியிருக்க...

குரங்கிடம்....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எல்லாம் பேரும் புகழுக்கு மட்டும் தான்......
ரேசன் அரிசி ஒருவித மணம் மணக்கும் என்பார்கள்.

ஊறல் மணம் அண்ண அரிசி ஒரு நாள் சமைத்தோம் கறி ஒட்ட வில்லை சோறில் தனித்தனி பருக்கையாக இருந்தது

அரிசியை பதுக்கல் வியாபாரிகள் பதுக்கியதால் அரிசி கிடைக்கவில்லை அதனால் அந்த இந்தியா கொடுத்த அரிசி சமைக்க நேர்ந்தது ஆனால் மகளுக்கு கொடுத்தபோது மகள் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள அந்த சோற்றை உண்டதால்.

அடுத்த அடுத்த நாள் சமைக்க எடுக்கவில்லை அந்த அரிசியை

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஊறல் மணம் அண்ண அரிசி ஒரு நாள் சமைத்தோம் கறி ஒட்ட வில்லை சோறில் தனித்தனி பருக்கையாக இருந்தது

அரிசியை பதுக்கல் வியாபாரிகள் பதுக்கியதால் அரிசி கிடைக்கவில்லை அதனால் அந்த இந்தியா கொடுத்த அரிசி சமைக்க நேர்ந்தது ஆனால் மகளுக்கு கொடுத்தபோது மகள் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள அந்த சோற்றை உண்டதால்.

அடுத்த அடுத்த நாள் சமைக்க எடுக்கவில்லை அந்த அரிசியை

என்ன செய்வது. வாசிக்கவே விசர் வருகின்றது. அனுபவிக்கும் மக்களுக்கு எப்படியிருக்கும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

ஸ்ரீலங்காவின் இன்றைய நிலைமை இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம்.......வாழவும் விடாது, சாகவும் விடாது.....கோமாவிலேயே வைத்திருக்கும்......தமிழரை அழிக்கிறன் சிங்களமக்களை முற்று முழுதாக பேய்காட்டிவிட்டு இன்று அந்த மக்களையே நடுத்தெருவில் கொண்டுவந்து இருத்தி விட்டிருக்கிறார்கள்.......!

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சியில் இருந்த யோக்கியமானவர்களையே சாரும்......இந்தப் பாவம் எல்லாம் இவர்களை மட்டுமல்ல இவர்களின் சந்ததிகளையே கருவறுக்கும்......!

" ஏழை அழுத்த கண்ணீர் கூறிய வாளை ஒக்கும்"....!

நன்றி உங்கள் கருத்துக்கு .

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஊறல் மணம் அண்ண அரிசி ஒரு நாள் சமைத்தோம் கறி ஒட்ட வில்லை சோறில் தனித்தனி பருக்கையாக இருந்தது

அரிசியை பதுக்கல் வியாபாரிகள் பதுக்கியதால் அரிசி கிடைக்கவில்லை அதனால் அந்த இந்தியா கொடுத்த அரிசி சமைக்க நேர்ந்தது ஆனால் மகளுக்கு கொடுத்தபோது மகள் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள அந்த சோற்றை உண்டதால்.

அடுத்த அடுத்த நாள் சமைக்க எடுக்கவில்லை அந்த அரிசியை

உங்கள் உடல்நலனில் கவனமாக இருங்கள் இதை சொல்வதை தவிர இப்போதைக்கு வேறுவழியில்லை .இன்று ஒரு நண்பன் கொழும்பு ஏர்  போர்ட்டில் நின்று படம் போட்டார்அவரை  தவிர இறங்கும் பகுதியில் ஒருத்தரும் இல்லை .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

சொந்தமாக கிணறு

மலசலகூடம்  வைத்திருக்கும்  நீங்கள்

எதுக்கு தமிழீழம்  கேட்கிறீர்கள்  என்ற  தரமுள்ளவர்களிடம்

வரம்  கேட்டால்?????

இந்தியன் ஆமிக்காலத்தில் எம்மக்களிடம் இந்தக்கேள்வி கேட்கப்பட்டதாக அறிந்தேன்.

12 hours ago, குமாரசாமி said:

எல்லாம் பேரும் புகழுக்கு மட்டும் தான்......
ரேசன் அரிசி ஒருவித மணம் மணக்கும் என்பார்கள்.

குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படணும்.

7 hours ago, விசுகு said:

மிகவும்  ஈசியாக தமிழருடன் பேசி நாட்டை முழுமையாக நிரந்தரமாக  காக்கும் வழியிருக்க...

குரங்கிடம்....???

ஆடி, ஓடி, களைத்து கடைசியாய் அங்கதான் வந்து நிக்கவேணும்! விடுங்கள்! சிந்திக்கத் தெரியாத முட்டாள்களை, ஓடிக்களைக்கட்டும்.

17 hours ago, தமிழ் சிறி said:

அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

ஆடு நனையுதென்று அழுததாம் ஒநாயொன்று.

சும்மா தொடுகிற மூக்கை சுத்தித்தான் தொடுவேன் என்று அலைகிறார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2022 at 03:08, குமாரசாமி said:

என்ன செய்வது. வாசிக்கவே விசர் வருகின்றது. அனுபவிக்கும் மக்களுக்கு எப்படியிருக்கும்.

அதுதான் எங்கேயாவது ஓட வேண்டும் என்ற எண்ணம் எங்க போனாலும் லைன்ல நிற்க வேணூம் எப்படி விசர் வரும் சொல்லுங்க லைன்ல 3 பணி நேரம் அல்லது 4 மணி நேரம் கால்கடுக்க நிற்க நாம் போகும் போது பொருள் முடிவடையும் அல்லது கரண்ட் போகும் பெற்றோலுக்கு லைனில் நின்று செல்ல எனது நேரம் பார்த்து கரண்டு கட்டாகும் 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதுதான் எங்கேயாவது ஓட வேண்டும் என்ற எண்ணம் எங்க போனாலும் லைன்ல நிற்க வேணூம் எப்படி விசர் வரும் சொல்லுங்க லைன்ல 3 பணி நேரம் அல்லது 4 மணி நேரம் கால்கடுக்க நிற்க நாம் போகும் போது பொருள் முடிவடையும் அல்லது கரண்ட் போகும் பெற்றோலுக்கு லைனில் நின்று செல்ல எனது நேரம் பார்த்து கரண்டு கட்டாகும் 

 உங்கள் நிலைமை புரிகின்றது. மன வருத்தமாக இருக்கின்றது. இலங்கை இவ்வளவு சீரழியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.