Jump to content

"குழந்தைத் திருமணங்களை வன்முறையாக சமூகம் கருதவில்லை" - சமீபத்திய ஆய்வு சொல்வது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"குழந்தைத் திருமணங்களை வன்முறையாக சமூகம் கருதவில்லை" - சமீபத்திய ஆய்வு சொல்வது என்ன?

  • நந்தினி வெள்ளைச்சாமி
  • பிபிசி தமிழ்
40 நிமிடங்களுக்கு முன்னர்
 

குழந்தைத் திருமணம்

பட மூலாதாரம்,EYESWIDEOPEN

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலையின் முதலாம் ஆண்டில் பள்ளி செல்லும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் குறைந்தது 511 பேருக்குத் திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது என்கிறது, சமக்ரா சிக்‌ஷா அபியானின் சமீபத்திய புள்ளிவிவரம். சமக்ரா சிக்‌ஷா அபியான் என்பது பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்காக மாநில அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

ஆகஸ்ட் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை எடுக்கப்பட்ட இந்த 'அவுட் ஆஃப் ஸ்கூல் சில்ட்ரன்' புள்ளிவிவரம் (Out of School Children), நீண்டகாலமாக பள்ளிக்கு வராத பெண் குழந்தைகளை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இவர்களுள் பெரும்பாலானோர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுவிட்டனர் என இந்த ஆய்வு கூறுகிறது.

திருமணம் செய்துவைக்கப்பட்ட பள்ளி மாணவிகளில் 11ஆம் வகுப்பு மாணவிகள் 417, பத்தாம் வகுப்பில் 45 பேர், ஒன்பதாம் வகுப்பில் 37 பேர் , எட்டாம் வகுப்பு மாணவிகளில் 10 பேரும் அடக்கம்.

இந்த ஆய்வு விவரங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை, சமக்ரா சிக்‌ஷா அபியான் தரப்பிலிருந்து அதிகாரிகள் கருத்துக் கூற முன்வரவில்லை.

குழந்தை திருமண தடைச் சட்டம் 2006இன்படி, திருமணம் நடைபெற ஒரு பெண் 18 வயது பூர்த்தி செய்தவராகவும், ஆண் 21 வயதை பூர்த்தி செய்தவராகவும் இருக்க வேண்டும். இந்திய அரசின் ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின்படி (NFHS 5), தமிழ்நாட்டில் 12.8% குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. குழந்தைத் திருமணங்களின் தேசிய சராசரி 23.3 சதவீதமாக இருக்கிறது.

அதேபோன்று, 2019ஆம் ஆண்டில் 2,209 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக, தமிழ்நாடு சமூக நலத்துறையிடமிருந்து பெறப்பட்ட ஆர்டிஐ தகவல் கூறுகிறது. இதே எண்ணிக்கை பெருந்தொற்று காலத்தில் 2020ஆம் ஆண்டில், 3,208 ஆக உயர்ந்துள்ளது.

"குழந்தைத் திருமணங்களை வன்முறையாக சமூகம் கருதவில்லை"

தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட குழந்தைத் திருமணங்கள் குறைவாக இருந்தாலும், பல்வேறு துறைகளில் வளர்ந்துள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஏன் குழந்தைத் திருமணங்கள் இன்றளவும் நடைபெறுகின்றன என்பது குறித்து குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் 'தோழமை' அமைப்பின் இயக்குநர் தேவநேயன் பிபிசி தமிழிடம் பேசினார்.

"குழந்தைத் திருமணம் என்பது தமிழ்நாட்டின் பிரச்னை மட்டும் அல்ல. உலகளாவிய பிரச்னை. குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்கின்றன என பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக்கொண்டதே வரவேற்கத்தக்கது. இதற்கான தீர்வு கல்வித்துறையோ, சமூக நலத்துறையிடமோ மட்டும் அல்ல. குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதற்கான முதன்மை காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்கும்போது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என பொதுச் சமூகம் நினைக்கிறது. ஆனால், குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தச் சென்றால் எங்களை விரட்டிக்கொண்டு வருவார்கள். குழந்தைத் திருமணங்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என சமூகம் நினைக்கவில்லை.

 

தேவநேயன்

சில பழங்குடி இனங்களில் பெண்கள் பூப்பெய்திய உடனேயே அவருக்குத் திருமணம் செய்து வைப்பது வழக்கமாக இருக்கிறது. சாதி மறுப்புத் திருமணங்கள், காதல் திருமணங்கள் நடக்கக்கூடாது என்பதற்காக குழந்தைத் திருமணம் செய்து வைக்கின்றனர்" என்றார் தேவநேயன்.

பெற்றோர்கள் குழந்தைத் திருமணங்கள் செய்துவைக்கும் நிலையில், சமீப காலமாக வளரிளம் பெண்கள் தாங்களாகவே விரும்பி திருமணம் செய்வது அதிகரித்துவருவதாக தேவநேயன் கூறுகிறார்.

"வளரிளம் பெண்களுக்கு வாழ்க்கை திறன் கல்வி நடத்தப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமை செய்தவரையே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் உள்ளனர். அப்படி தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை திருமணம் செய்த 17 வயது சிறுமி ஒருவர், 'எனக்கு கன்னி கழிஞ்சிடுச்சு, அதனால் திருமணம் செய்துகொண்டதாக' என்னிடம் கூறினார். இம்மாதிரியான விஷயங்களில் பெண் குழந்தைதான் தவறு செய்துவிட்டாள் என பேசுவார்கள்.

18 வயதுக்குள்ளான ஆண் - பெண் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிகழ்வுகளும் உள்ளன. இதுவும் மிக ஆபத்தான போக்கு" என தெரிவித்தார் தேவநேயன்.

"குழந்தைத் திருமணங்களை தடுத்தால் எங்களை விரோதியாக நினைக்கிறார்கள்"

குழந்தைத் திருமணங்களை தடுக்கச் செல்லும்போது, தானே சம்மதித்துத்தான் திருமணம் நடைபெறுவதாக, தங்கள் பெற்றோருக்காக சிறுமிகள் மாற்றிப் பேசுவார்கள் என, 'தோழமை' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கூறுகிறார்.

"கொரோனா காலத்தில் பெரும்பாலும் வளரிளம் பெண்கள் தாங்கள் விரும்பியவருடன் இணைந்து கர்ப்பமான சம்பவங்கள் உள்ளன. அதனை மறைப்பதற்காக பெற்றோர்கள் திருமணம் செய்துவைத்தனர்.

கொரோனா காலத்தில் வீட்டோடு திருமணம் செய்துவைக்கலாம், வரதட்சணை வேண்டாம் என மாப்பிள்ளை வீட்டார் கூறியதால் பொருட்செலவுகளை குறைப்பதற்காகவும் 18 வயதுக்குக் கீழான பெண்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இம்மாதிரியான குழந்தைகளை மீட்கும்போது அவர்களின் பெற்றோர் தன் மகள் 18 வயதுக்குக் கீழானவர் என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். இதுதவிர, 'நானே சம்மதித்துத்தான் திருமணம் நடைபெற்றது' என அந்த பெண் குழந்தைகளும் விடாப்பிடியாக கூறுவார்கள். பெற்றோர்களுக்காக மாற்றி சொல்வார்கள்.

குழந்தைகளை மீட்கச் சென்றால், ஒரு கிராமமே எங்களை விரோதி போன்று பார்க்கும். அந்த பகுதிகளில் குழந்தைகளுக்கென எந்தவொரு விழிப்புணர்வு திட்டத்தையும் செயல்படுத்தவிட மாட்டார்கள்" என தெரிவித்தார்.

"திறன் வளர்ப்பு கல்வி அவசியம்"

கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு திறன் வளர்ப்பு மையங்களை ஏற்படுத்துவது, வளரிளம் பெண்கள் தாங்களாகவே விரும்பி 18 வயதுக்குக் கீழ் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கும் என்கிறார், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார்.

 

சரண்யா ஜெயக்குமார்

பட மூலாதாரம்,SARANYA JAIKUMAR/FACEBOOK

"கட்டாய கல்விச் சட்டம் 14 வயதுவரைதான் உள்ளது. அதன்பிறகு ஒரு மாணவர் படிக்கவில்லையென்றால் வேலைக்கு சென்றுவிடுவார். ஆனால், பெண் பிள்ளைகளை பொறுத்தவரையில் கல்வியை தொடர முடியாமல் போனால், அவர்கள் வேறு யாரையும் காதல் திருமணம் செய்துவிடக் கூடாது என்பதற்காக பெற்றோர்கள் திருமணம் செய்துவைத்து விடுகின்றனர். கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு முன்கூட்டியே திருமணம் செய்துவைக்கின்றனர். முழுநேர பள்ளிக்கு மாற்றாக திறன் வளர்ப்பு மையங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எங்கும் இல்லை. அவற்றை ஏற்படுத்தி அவர்கள் தொழில் முனைவோராக ஆவதற்கான திறன்களை கற்றுக்கொடுக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் ஆசிரியர்களே ஏற்படுத்த வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

இன்னும், 18 வயது பூர்த்தியாவதற்கு முன்னரே திருமண ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்துவிட்டு, 18 வயதானவுடனேயே திருமணம் செய்துவைக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அப்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 12ஆம் வகுப்பை தற்போது முடித்துள்ள 17 வயது மாணவி ஒருவருக்கு ஜூன் 30 அன்றுதான் 18 வயது தொடங்க உள்ளது. ஆனால், அதற்கு முன்னரே அவருக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தனக்கு செப்டம்பர் 1 திருமணம் நடைபெற உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் கூறினார். குழந்தைத் திருமண தடைச் சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாக இது பார்க்கப்படுகிறது.

அம்மாணவி கூறுகையில், "தனியார் பள்ளியொன்றில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே வீட்டில் திருமண பேச்சை எடுத்துவிட்டனர். உறவினர் ஒருவரை திருமணம் செய்துவைக்க உள்ளனர். 12ஆம் வகுப்பில் 398 மதிப்பெண்கள் பெற்றேன். தேர்வு சமயத்திலேயே திருமண பேச்சை எடுத்ததால், என்னால் ஒழுங்காக படிக்க முடியவில்லை. திருமணம். எனக்கு 17 வயது நடந்துகொண்டிருக்கும்போதே கடந்த 17ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனக்கு வழக்கறிஞராக வேண்டும் என்பது விருப்பம். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அப்பா மீதுள்ள அன்பை வைத்து 'எமோஷனல் பிளாக்மெயில்' செய்கின்றனர். திருமணத்தின்போது எனக்கு 18 வயதாகிவிடும் என்பதாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதாலும் இவ்வாறு செய்கின்றனர்" என்றார்.

"பாலின நீதியை கற்றுத்தர வேண்டும்"

தமிழ்நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறும் குழந்தைத் திருமணங்களை தடுப்பது குறித்துப் பேசிய தேவநேயன், "ஒரு பெண் குழந்தை 5 நாட்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றால் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கணினியிலேயே 'பாப் அப்' ஆகும் முயற்சி பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் முறையாக நடைமுறைப்படுத்தினால், குழந்தைத் திருமணங்கள் குறையும்.

ஆண் குழந்தைகளுக்கு பாலின சமத்துவம், பாலின நீதி குறித்து கற்றுத்தர வேண்டும். போக்சோ சட்டம் குறித்து சொல்லித்தர வேண்டும்.

'தாலிக்குத் தங்கம்' என்பதே அரசாங்கம் வரதட்சணை கொடுப்பது போன்றுதான். அதற்கு பதிலாக, இப்போது மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 கொடுப்பது மாற்றங்களை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதும் தீர்வாக இருக்க முடியாது. 18-21 வயது வரையிலான இடைப்பட்ட காலத்தில் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதில் கேள்வி எழுகிறது. இதனால் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கவே செய்யும்.

குழந்தைத் திருமணங்களால் நடைபெறும் பாதிப்புகள், பதின் பருவத்தில் கர்ப்பமாகுதலின் பாதிப்புகளை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்வது குறைந்துவிட்டது. இதுகுறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்" என்றார், தேவநேயன்.

https://www.bbc.com/tamil/india-61965501

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
    • மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள். 
    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.