Jump to content

தெற்காசியாவின் லெபனானாக இலங்கை மாறுவதை மேற்குலகம் தடுக்க வேண்டும்


Recommended Posts

தெற்காசியாவின் லெபனானாக இலங்கை மாறுவதை மேற்குலகம் தடுக்க வேண்டும்

 

 

 

மட் கொட்வின்,

இலங்கைக்கு தேவைப்படுவது பொறுப்புமிக்க அரசாங்கமும் நிலையான சர்வதேச முதலீடுமாகும். ஒரு காலத்தில் இலங்கையின் மிக முக்கியமான இருதரப்பு பங்காளியாக இருந்த பிரிட்டன் , அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய “குவாட் நாடுகளுடன்” இணைந்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கும், சீனாவின் மீதான முதலீட்டு சார்புக்கு ஒரு ஒத்திசைவான போட்டியான மாற்று வழியை வழங்குவதற்கும் அவசர இடையீட்டு நிதியை வழங்க வேண்டும்.

00000000000000

இலங்கையில் உணவு, எரிபொருள் விலைகள் வானுயர அதிகரித்துச் செல்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியிலிருந்தும் மாற்றத்தை கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் . அரசாங்கம் அதன் பொருளாதா ரநிலைவரம் தொடர்பாக தத்தளித்து வரும் நிலையில், உள்நாட்டு சவால்கள் துரிதமாக உலகளாவிய ரீதியாக செல்லும் வரலாற்றைக் கொண்ட இலங்கையை ஸ்திரப்படுத்த உதவுவதற்கு சர்வதேச சமூகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை விளிம்பு நிலையில் உள்ளது. கடந்த மாதம், இரண்டு தசாப்தங்களாக கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தவறிய தெற்காசியாவில்முதல் நாடென்ற நிலைமைக்கு இலங்கை வந் திருந்தது . 50 பில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடன்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது . இந் நிலையில், 1 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணியைக் கூட கொண்டிருப்பது கடினம் என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. ஏப்ரலில் பணவீக்கம் 30 சதவீதமாக உயர்ந்தது. இது ஆசியாவிலேயே மிக அதிகமாக உள்ளது-உணவு, எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அடிப்படைப் பொருட்களுக்கான விநியோகம் குறைந்து வருவதால் விலைகள் உயர்ந்துள்ளன . பொருளாதார நெருக்கடி இப்போது பொது சுகாதார பேரிடராக உள்ளது. குறைந்து வரும் மருந்துப்பொருட்கள் மற்றும் பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பல குடும்பங்கள் தடுமாறுகின்றன .இதனால் இதயத்தைப் பிழியும் தேர்வுகளை மேற்கொள்வதற்கான நிர்ப்பந்தம் மருத்துவர்களுக்கு ஏற்படுகிறது . அடுத்த சிங்கப்பூராக இருக்க ஆசைப்பட்ட ஒரு நாடு இப்போது லெபனான் பாணியில் வீழ்ச்சியை எதிர்நோக்குகிறது.இலங்கை ரூபா உலகின் மிக மோசமான நாணயமாக[ பெறுமதிகுறைந்த] செயற் படுகிறது.
பல நாடுகளைப் போலவே, இலங்கையும் இன்னும் கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட அதிர்ச்சியை குறிப்பாக அதன் வரலாற்று ரீதியாக துடிப்பான சுற்றுலாத் துறை மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட பணவீக்கம் என்பனவற்றை அனுபவித்து வருகிறது, எவ்வாறாயினும், இந்த நிகழ்வுகளுக்கும் இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கும் , பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதாரக் கொள்கை, பேரழிவு தரும் விவசாயரீ தியான முடிவுகளை எடுத்தல் மற்றும் சீன உள்கட்டமைப்பு செலவினங்களை அதிகமாக நம்பியதன் விளைவே காரணமாக கூறப்படுகிறது .

பல ஆண்டுகளாக நீடித்து நிலைக்க முடியாத வகையில் வரிகளை குறைத்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வருமானத்திற்காக மார்க்கமில்லாமல் உள்ளது. அத்துடன்  அதன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டு, சர்வதேச கடன் சந்தைகளில் இருந்து நாடு  துண்டிக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் மொத்தக் கடன் 2018 இல் வருடாந்த மொத்த தேசிய உற்பத்தியில் 91 வீதத்தில் இருந்து 2019 இல் 119 வீதமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. விட யங்களை மோசமாக்கும் வகையில், ரஷ்ய படையெடுப்பிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இலங்கைதனக்குத்  தானே ஏற்படுத்திய உணவு ப்பொருள் விநியோக நெருக்கடியை எதிர்கொண்டது. அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக  உர இறக்குமதிக்கு செலவிடப்படும்  பணத்தை மிச்சப்படுத்தியது. இது பயிர் விளைச்சலைக் குறைத்தது. பயிர் விளைச்சல் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கைக்கான அரிசி இறக்குமதி 368 வீதம் அதிகரித்துள்ளதாக ஐநா அபிவிருத்தி திட்டம்   தெரிவித்துள்ளது. இறுதியாக, அதிகளவு இலாபகரமான சீனக் கடன்கள் அரசாங்கத்தில் ஊழல் கலாசாரத்தைத் தூண்டின. இப்போது, ஒரேமண்டலம்  ஒரேபாதை முன்முயற்சி (பிஆர்ஐ)  அதிக வட்டி வீ தத்திலான  3.5 பில்லியன்டொ லர்கள் வரையிலான  உள்சார் கட்டமைப்புக் கடன்கள் வருமானத்தை வழங்கத் தவறியதால், சீனாவுடனான இலங்கையின் விரிவான உறவுகளில் தாக்கம்  வருகிறது.

 

ஊழல் மற்றும் பொருளாதார  ரீதியான  தவறான நிர்வாகத்திற்கு எதிராக மத்திய கிழக்கில் இடம்பெற்றிருந்த  சமீபத்திய ஆர்ப்பாட்டங்கள் போலல்லாமல், இந்த சரியான எதிர்ப்புக்கு பதிலளிக்கும் விதமாக இலங்கையில் பல் தேசிய  வெளிப்பாடுகள் வரலாற்று ரீதியாக கூர்மையாக பிளவுபட்ட சமூகத்தின் பரந்த  பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அரசியலில்  சுயாதீனமானவர்கள் , மாணவர்கள் மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் இலங்கையில் மாற்றத்திற்கான அழைப்பை முன்னெடுத்து வருகின்றனர். திடீர் பல்கலைக்கழகங்கள் மற்றும் சமூக உணவு மையங்களை ஒழுங்கமைத்தல், வரலாற்று ரீதியாக இன மற்றும் மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட மக்களை  ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக ஒன்றிணைக்கும்என்ற  நம்பிக்கைக்கு இடமுள்ளது.

 

லெபனானின் சமீபத்திய தேர்தல்களில், சுயேச் சைஉறுப்பினர்கள்  பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர். அதேபோன்று, இலங்கையிலும்  மக்கள் இயக்கங்கள் நடைமுறை ரீதியில்  முற்போக்காளர்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆற்றலை மரபு ரீதியான  அரசியலுக்குள் செலுத்த வேண்டும். அமைதியின்மையானது   அடுத்த 50 ஆண்டுகளுக்கு இலங்கை அதன் எதிர்காலத்தை மீட்டமைத்து பாதுகாப்பதற்கான வாய்ப்பாக அமையக்கூடும் .

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும், . ஏனைய  நாடுகளைப் போலவே, இலங்கையும் சீனாவின் முதலீட்டை நம்பியிருப்பதால்அது பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது .சீனா மூலோபாய நிதியப் பலனைப் பிரயோகிக்கும் ஒரேயொரு வளர்ந்து வரும்நாடென்பதிலிருந்து  இலங்கை வெகு தொலைவில் உள்ளது. தனியார் பிணைமுறிப் பத்திரம் வைத்திருப்பவர்களும் சீனாவும் வறியநாடுகள் மத்தி யில்  2006 இல் 5 சதவீதமாக இருந்த  கடனை   29 சதவீதத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். சீனாவின் கடன் பொறி இராஜதந்திரத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளை புறக்கணிப்பதை விட, வளர்ந்து வரும் நாடுகளில் சீனாவின் பங்கு பற்றிய வளர்ந்து வரும் சந்தேகத்தை மேற்குலகு  இலங்கை போன்ற நாடுகளில் மீண்டும் முதலீடு செய்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்.

 

இலங்கைக்கு தேவைப்படுவது  பொறுப்புமிக்க அரசாங்கமும்  நிலையான சர்வதேச முதலீடுமாகும். ஒரு காலத்தில் இலங்கையின் மிக முக்கியமான இருதரப்பு பங்காளியாக இருந்த பிரிட்டன் , அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய “குவாட் நாடுகளுடன்” இணைந்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கும், சீனாவின் மீதான முதலீட்டு சார்புக்கு ஒரு ஒத்திசைவான போட்டியான  மாற்று வழியை வழங்குவதற்கும் அவசர இடையீட்டு  நிதியை வழங்க வேண்டும்.

https://thinakkural.lk/article/186769

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.