Jump to content

சூர்யா, கஜோலுக்கு 'ஆஸ்கர்ஸ்' அகாடமியில் உறுப்பினராக அழைப்பு - சுவாரசிய தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சூர்யா, கஜோலுக்கு 'ஆஸ்கர்ஸ்' அகாடமியில் உறுப்பினராக அழைப்பு - சுவாரசிய தகவல்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சூர்யா

பட மூலாதாரம்,TWITTER

ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் உறுப்பினர்களாக சேர 2022ஆம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய நடிகர்கள் சூர்யா, கஜோல் ஆகியோரின் பெயர்கள் உள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த இயக்குநர் ரீமா காக்தி, ஆவணப்பட இயக்குநர்கள் சுஷ்மித் கோஷ், ரிண்டூ தாமஸ் ஆகியோரும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் 2022ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களாக சேர அழைக்கப்பட்டுள்ளனர்.

நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், சினிமா செய்தி தொடர்பாளர்கள், ஒலி வடிவமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், கதாசிரியர்கள், விஷுவல் எபெஃக்ட் கலைஞர்கள், குறும்படம் மற்றும் ஆவணப்பட இயக்குநர்கள், கௌரவ உறுப்பினர்கள் என உலகெங்கும் உள்ள 397 திரைத் துறையினர் 2022ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களாக சேர அகாடமியில் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 44% பெண்கள், 50% பேர் அமெரிக்காவுக்கு வெளியே உள்ள 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். 37% பேர் போதிய பிரதிநித்துவம் இல்லாத இனக்குழுக்களை சேர்ந்தவர்கள்

அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்?

அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் உறுப்பினர்களாக இருப்பவர்கள் சிறந்த படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் படங்களில் எவற்றுக்கு அந்த விருதை வழங்கலாம் என்று வாக்களிக்கலாம். ஒவ்வொரு துறையிலும் அதிக உறுப்பினர்களின் வாக்குகளைப் பெரும் படங்கள் அந்தந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகும்.

இது மட்டுமல்லாது அகாடமி உறுப்பினர்கள் இந்த அமைப்பின் விருது மற்றும் சினிமா சார்ந்த பிற நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியும்.

 

கஜோல்

பட மூலாதாரம்,TWITTER/ITSKAJOLD

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்

அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் என்பது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைத் துறையினரை உள்ளடக்கிய ஓர் அமைப்பு. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி திரைத்துறையினர் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழகுவதுடன் திரைத்துறையின் வளர்ச்சிக்கும் இந்த அமைப்பு உதவி வருகிறது.

இந்த அகாடமியின் ஆளுநர்கள் குழு சார்பிலும் ஆண்டுதோறும் மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் திரைத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியவர்களுக்கும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பிக்கிறது.

 

இந்த ஆண்டு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது வாங்கிய அரியானா டீ போஸ் அகாடமி உறுப்பினராவதற்கான அழைப்பைப் பெற்றுள்ளார்.

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

இந்த ஆண்டு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது வாங்கிய அரியானா டீ போஸ் அகாடமி உறுப்பினராவதற்கான அழைப்பைப் பெற்றுள்ளார்.

'Student Academy Awards' எனும் பெயரில் மாணவர்கள் எடுக்கும் படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன் படங்கள் உள்ளிட்டவற்றுக்கு 1972 முதல் விருதுகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களாக அகாடமி விருதை பெற்றவர்கள் பிற்காலத்தில், இதே அகாடமி வழங்கும் உலகப்புகழ் பெற்ற ஆஸ்கர் விருதையும் வாங்கிய நிகழ்வு 11 முறையும், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிகழ்வு 63 முறையும் நடந்துள்ளதாக அகாடமி இணையதளம் தெரிவிக்கிறது.

அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் எனும் திரைப்படத் துறை சார்ந்த அருங்காட்சியகம் ஒன்றையும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களில் பணியாற்றுபவர்கள் மட்டுமே இதில் உறுப்பினராக முடியும்.

கதாசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என வெவ்வேறு துறையினருக்கும் தனித்தனியாக இதில் மொத்தம் 17 கிளைகள் உள்ளன.

விண்ணப்பம் போட்டால் உறுப்பினராக முடியுமா?

இதில் திரை துறையைச் சார்ந்த எந்த ஒருவரும் விண்ணப்பிப்பதன் மூலம் உறுப்பினராகி விட முடியாது. ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் இரண்டு பேர் முன்மொழிவதன் மூலம் மட்டுமே இதில் உறுப்பினராக முடியும்.

ஆண்டுதோறும் இவ்வாறு முன்மொழியப்படும் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர்களில் தகுதியானவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு உறுப்பினராக சேர்வதற்கான அழைப்பு அனுப்பப்படும்.

அவ்வாறே 2022ஆம் ஆண்டுக்கான அழைப்பு உலகெங்கும் 397 பேருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அன்று அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இதில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் புதிதாக உறுப்பினராவதற்கு ஒருவரின் பெயரை மட்டுமே முன்மொழிய முடியும் என்று இந்த அமைப்பின் அலுவல்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.

அகாடமியின் 17 கிளைகளில் ஒருவர் எதில் அங்கம் வைக்கிறாரோ அதே துறையைச் சேர்ந்தவரின் பெயரை மட்டுமே முன்மொழிய முடியும்.

'மெம்பர்ஸ் அட் லார்ஜ்' என்று அழைக்கப்படும் கௌரவ உறுப்பினர்களுக்கான பெயர்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாலும் பரிந்துரை செய்யப்படலாம்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-61977558

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.