Jump to content

மூன்று  ஆண்டுகளுக்கு பின்னர்... நல்லூர் திருவிழாவை, சிறப்பாக நடத்த ஏற்பாடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாண்டுகளுக்கு பின்னர் நல்லூர் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு!

மூன்று  ஆண்டுகளுக்கு பின்னர்... நல்லூர் திருவிழாவை, சிறப்பாக நடத்த ஏற்பாடு!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்ற நல்லூர் மஹோற்சவம் வழமைபோன்று அதாவது 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு உற்சவம் நடந்ததோ அதேபோல இம்முறை இடம்பெறுமென யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கு பின்னர் நல்லூர் ஆலயப் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மாநகர முதல்வர் மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், ”ஆகஸ்ட் 1ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.

இம்முறை திருவிழாவின் போது ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும் இவை தவிர எதிர்வரும் காலங்களில் தேவைப்படும்போது கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவோம் என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், மாநகர பிரதிமுதல்வர், நல்லூர் ஆலய பரிபாலகரின் பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

https://athavannews.com/2022/1289053

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்தர்கள் பிற ஊர்களில் இருந்து  கால்நடையாகத்தான் வரவேண்டி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

பக்தர்கள் கால்நடையாக செல்வது புதிய விடயம் இல்லையே. 

ஆனால் இந்தமுறை எல்லோரும் எல்லா  இடங்களிலிருந்தும் கால்நடையாகவல்லோ வருவினம். 

கதிர்காமத்திற்கும் பருத்தித்துறையிலிருந்தும் தெய்வேந்திர முனையிலிருந்தும் கால்நடையாக யாத்திரை செல்வவார்கள்.அதற்காக கதிர்காமம் செல்வோரெல்லாம் கால்நடையாக செல்வார்கள் என்று கொள்வதில்லையே. 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

பக்தர்கள் பிற ஊர்களில் இருந்து  கால்நடையாகத்தான் வரவேண்டி இருக்கும்.

நாங்கள் எப்போதும் நடந்தே போய் வந்தோம்.அந்த காலங்களில் தண்ணீர் பந்தல்கள் இருந்தன.நிறைய வெள்ளை மணலும் பரவியிருப்பார்கள்.தண்ணீர் பந்தல்களில் விதவிதமாக ஊற்றுவார்கள்.

இப்போது போல வாகன நெரிச்சல்களும் இல்லை.

இந்த முறையும் வாகன நெரிசல்கள் குறைவாக இருக்கும் என எண்ணுகிறேன்.

வழமையில் வெளிநாட்டிலிருந்து படையெடுப்பார்கள்.இம்முறையும் படையெடுப்பார்கள்.

பெற்றோல் இல்லாவிட்டாலும் திருவிழா பிரகாசமாக இருக்கும்.

3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பக்தர்கள் கால்நடையாக செல்வது புதிய விடயம் இல்லையே. 

 

Link to comment
Share on other sites

12 hours ago, தமிழ் சிறி said:

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும்

மேற்கு வீதிக்கும் எல்லை போடப்படுமா....?? பாவம் இளசுகள் கடலை போடமுடியாமல் கலங்கி நிற்பார்களே. 😩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நாங்கள் எப்போதும் நடந்தே போய் வந்தோம்.அந்த காலங்களில் தண்ணீர் பந்தல்கள் இருந்தன.நிறைய வெள்ளை மணலும் பரவியிருப்பார்கள்.தண்ணீர் பந்தல்களில் விதவிதமாக ஊற்றுவார்கள்.

இப்போது போல வாகன நெரிச்சல்களும் இல்லை.

இந்த முறையும் வாகன நெரிசல்கள் குறைவாக இருக்கும் என எண்ணுகிறேன்.

வழமையில் வெளிநாட்டிலிருந்து படையெடுப்பார்கள்.இம்முறையும் படையெடுப்பார்கள்.

பெற்றோல் இல்லாவிட்டாலும் திருவிழா பிரகாசமாக இருக்கும்.

 

எமது நாட்களிலும் நடைதான்.

ஆனால் என்ன, மோர்ப் பந்தல் தண்ணீர்ப் பந்தலாக மாறி, துவிச்சக்கர வண்டி நிறுத்துமிடம் சேவை என்கிற நிலையில் இருந்து வியாபாரம்  என்கின்றன நிலைக்கு வந்துவிட்டன. 

இம்முறை, இந்த நடை மிகவும் அதிகமாகவும், நீண்டதாகவும் இருக்கும், நீண்ட காலத்தின் பின்னர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

இம்முறை, இந்த நடை மிகவும் அதிகமாகவும், நீண்டதாகவும் இருக்கும், நீண்ட காலத்தின் பின்னர். 

உடம்புக்கும் நல்லது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

உடம்புக்கும் நல்லது தானே.

மிகவும் நல்ல விடயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்கால் முடிந்த கையோடு ஜாம் ஜாம் என திருவிழா கண்ட அலங்கார கந்தனுக்கு,

பெற்றோல் தட்டுப்பாடு எல்லாம் ஜுஜுபி🤣.

லண்டனில் இருந்து டிக்கெட் £1300க்கும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

மூன்று  ஆண்டுகளுக்கு பின்னர்... நல்லூர் திருவிழாவை, சிறப்பாக நடத்த ஏற்பாடு!

 இந்த முறை பொறின் சனம் நல்லூருக்கு அள்ளுப்பட்டு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

முள்ளிவாய்கால் முடிந்த கையோடு ஜாம் ஜாம் என திருவிழா கண்ட அலங்கார கந்தனுக்கு,

பெற்றோல் தட்டுப்பாடு எல்லாம் ஜுஜுபி🤣.

லண்டனில் இருந்து டிக்கெட் £1300க்கும் இல்லை.

இஞ்ச கனடாவில $3000.00

சனம் வருசையில நிக்குது. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லூரின் முதல் தாபகராகிய பெயர் அறியா சோழ (ஆரிய சக்கரவர்த்தி பெயரில்) சக்கரவர்த்தி தொடக்கம், செகராசசேகரம், சங்கிலி குமாரன் வரையும், அதன் பின்,    மறுமலர்ச்சி செய்த, முருகனடி எய்திய  மாப்பாண முதலியார்களையும் நினைவில் கொண்டு 

 

1. 1ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் - சிற்றாலய ஸ்தாபனம் - (பொ.பி 1734- 1750)

2. 2ஆம் இரகுநாத மாப்பாண முதலியார்- செங்கற் கோயிலமைப்பு - (பொ.பி 1750- 1800)

3. 1ஆம் ஆறுமுக மாப்பாண முதலியார் - விநாயகர், பைரவர் சந்நதி அமைப்பு - (1800- 1839)

4. 3ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் - மஹோத்ஸவம் ஆரம்பமாதல்- (1839- 1860)

5. கந்தையா மாப்பாண முதலியார் - (1860- 1890)

6. சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியார் - (1890- 1915)

7. 2ஆம் ஆறுமுக மாப்பாண முதலியார்- ஷண்முகர் திருவுருவம் ஸ்தாபிக்கப்பட்டமை, உள்பிரகார திருப்பணி (1915- 1921)

8. 4ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் -
முத்துக்குமார ஸ்வாமி திருவுருவ ஸ்தாபனம், ஷண்முக புஷ்கரணி திருக்குளம் அமைத்தல், (1921- 1945)

9. ஷண்முகதாஸ மாப்பாண முதலியார்- இராஜ கோபுரத்திருப்பணி, தற்போதைய தேர் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் (1946- 1964)

10. குமார தாஸ மாப்பாண முதலியார் -
வடக்கு, தெற்கு ராஜ கோபுரங்கள் நிர்மாணம், தங்க விமானம் அமைக்கப்பெறல், தங்க வாகனங்கள் உருவாக்கப்பெறல் ( 1965 - 09.10.2021)

திருவிழா சிறக்க முருகன் அருள்பாலிக்கட்டும். 

Link to comment
Share on other sites

46 minutes ago, Kadancha said:

வடக்கு, தெற்கு ராஜ கோபுரங்கள் நிர்மாணம், தங்க விமானம் அமைக்கப்பெறல், தங்க வாகனங்கள் உருவாக்கப்பெறல் ( 1965 - 09.10.2021)

தெற்கு இராச கோபுரம் இன்றைய நாடாழுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார் அவர்களுடைய தாத்தாவின் உபயம் என்று சொல்லக் கேள்விப்பட்டேன் அது உண்மையா.?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

தெற்கு இராச கோபுரம் இன்றைய நாடாழுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார் அவர்களுடைய தாத்தாவின் உபயம் என்று சொல்லக் கேள்விப்பட்டேன் அது உண்மையா.?? 

தெரியவில்லை. இருக்கலாம்.

அனால், டட்லி சேனநாயகவும் (அப்போதைய பிரதமர்), ஜி.ஜி. பொன்னம்பலமும் ஒன்றாக வந்தபோதும், மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்றப்பே அளிக்கப்பட்டது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகர் இப்பவும் அர்ச்சனைக்கு 1 ரூபா ரிக்கெட் தான் வாங்கிறார். 

என்ன இம்முறை பக்தர்கள் பழைய காலம் போல கூடார வண்டி கட்டி (மாட்டு வண்டி) வந்தால் சிறப்பு. 

தமிழ்நாட்டில் மறந்து போன மாட்டு வண்டி? இனிமேல் காட்சிபொருளாகத்தான்  காணவேண்டுமோ?சுவாரஷ்யமான தகவல்கள்?முழுவிவரம் - விண்மீன்நியூஸ் - Winmeen News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

முருகர் இப்பவும் அர்ச்சனைக்கு 1 ரூபா ரிக்கெட் தான் வாங்கிறார். 

என்ன இம்முறை பக்தர்கள் பழைய காலம் போல கூடார வண்டி கட்டி (மாட்டு வண்டி) வந்தால் சிறப்பு. 

தமிழ்நாட்டில் மறந்து போன மாட்டு வண்டி? இனிமேல் காட்சிபொருளாகத்தான்  காணவேண்டுமோ?சுவாரஷ்யமான தகவல்கள்?முழுவிவரம் - விண்மீன்நியூஸ் - Winmeen News

 

Münze 1 Rupee Sri Lanka Messing/Stahl 2005 Preis

One Rupee" Bilder – Durchsuchen 372 Archivfotos, Vektorgrafiken und Videos  | Adobe Stock

இப்பவும்... சிலோன் ஒரு ரூபாய் தான்.
விரைவில்... இந்திய ஒரு ரூபாய் ஆகலாம். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மீண்டும் அமலா காலத்துக்கு போறது தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்... சரோஜாதேவி காலத்துக்குதான் போவோம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.