Jump to content

ஒன்டாரியோவில்... தமிழ் இனப் படுகொலை வாரத்தை, பிரகடனப்படுத்துவதற்கு... தடை கோரிய, சிங்கள – கனேடிய குழுக்களின்  மனு நிராகரிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் நடைபெறுவதற்கு அதிக சாத்தியம் காணப்படுகின்றது – பயண ஆலோசனையில் கனடா எச்சரிக்கை

ஒன்டாரியோவில்... தமிழ் இனப் படுகொலை வாரத்தை, பிரகடனப்படுத்துவதற்கு... தடை கோரிய, சிங்கள – கனேடிய குழுக்களின்  மனு நிராகரிப்பு!

கனடாவின் ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழு நாட்களை தமிழ் இனப்படுகொலை வாரமாக குறிப்பிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்து பல சிங்கள – கனேடிய குழுக்கள் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்கள் தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர்.

எனினும் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கனேடிய நீதிமன்றம், மனுவினை நிராகரித்துள்ளது.

https://athavannews.com/2022/1289069

Link to comment
Share on other sites

தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் சட்டமூலத்தினை  மீள் உறுதி செய்த ஒன்ராறியோ நீதிமன்றம் 
தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் (TGEWA - BILL 04) ற்கு எதிராக ஸ்ரீ லங்கா ஆதரவினால் கொண்டுவரப்பட்ட வழக்கை நீதிமன்றம் நீராகரித்து தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் சரி என தீர்ப்பு வழங்கி உள்ளது. ஒன்ராரியோ பாராளுமன்றம் நிறைவேற்றிய அரசியலமைப்புச் சட்டத்தை நீதிபதி மீள் உறுதி செய்துள்ளார் என்ற சிறந்த செய்தியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இச்சட்டத்தைக் கொண்டு வந்த விஜய் தணிகாசலம் அதைக் காக்க கடுமையாக எம்முடன் உழைத்த ஒண்டாரியோ அரச சட்டவாளர்கள் எம்மால் நியமிக்கப்பட்ட சட்டவாளர்கள், சாட்சிகள், ஆதரவளித்த ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள்  அனைவருக்கும் எமது நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம் . - NCCT

“Very happy to let you all know that the court application challenging the TGEW Act has been dismissed. The judge did not make any findings of fact and dealt with the coonstitutionality of the Act. This is a big victory for Tamil people. Tamil Genocide Education Week will continue in Ontario”

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுக்குள்ள அடுத்த தெரிவு என்ன?

தமிழகத்தில இருந்து பிச்சை வாங்கி திண்டாலும், சிங்களவர் பொறுமைக்கு எல்லை உண்டு எண்ட வாய்சவடால் விட்ட சரத் வீரசேகராவுக்கு, நீ சொன்னது உண்மைதான் என்று, நடுரோட்டில, நடுவிரலைக்காட்டி, பெண் ஒருவர் புரிய வைத்தார்.

அதேபோல, கோத்தா போன்ற கள்ளகோஸ்டிகளை வைத்துக்கொண்டு, இப்படி வழக்குப் பேசுவது முதலுக்கே மோசம் எண்டு, இந்த கனடா சிங்களவருக்கும் புரிந்திருக்கும் .

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் திருந்த வாய்ப்பே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை இடம்பெற்றதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும் - ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்

(நா.தனுஜா)

இனப்படுகொலையொன்று இடம்பெற்றது என்பதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும். எனவே நாம் தமிழினப்படுகொலை தொடர்பான கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம்.

இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் அறிவூட்டுதல் மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்கவும், எமது சமூகம் இந்த துன்பத்திலிருந்து மீள்வதற்குப் பங்களிப்புச்செய்யவும் முடியும் என்று கனடாவின் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

Vijay_Thanikachalam.jpg

கனடாவின் ஒன்றாரியோ மாகாணப்பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி இலங்கை - கனேடிய செயற்பாட்டு ஒன்றிணைவு உள்ளிட்ட சில அமைப்புக்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவைக் கடந்த செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்த ஒன்ராரியோ உயர்நீதிமன்றம், இந்தச்சட்டமூலம் உலகமகாயுத்தம் மற்றும் ஏனைய சர்வதேச மட்டத்திலான போராட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் வகுக்கப்பட்டிருக்கும் மாகாணக்கல்விக்கொள்கையை ஒத்தது என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஒன்றாரியோ உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஒன்றாரியோ மாகாணப்பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றாரியோ உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதுடன், அது அரசியலமைப்பிற்கு அமைவானது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 60 இற்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புக்கள் நீதிமன்றத்தில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தன.

குறிப்பாக இவ்வழக்கின் நீதிபதி 'தமிழினப்படுகொலை தொடர்பிலும், ஏனைய படுகொலைகள் தொடர்பிலும் பொதுமக்களுக்கு அறிவூட்டுவதன் மூலம் எதிர்வருங்காலங்களில் அத்தகைய வன்முறைகளும் அத்துமீறல்களும் இடம்பெறுவதைத் தவிர்த்துக்கொள்ளமுடியும்' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இனப்படுகொலையொன்று இடம்பெற்றது என்பதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும் என்று நாம் கடந்தகால வரலாறுகளின் ஊடாக அறிந்துகொண்டிருக்கின்றோம். எனவே நாம் தமிழினப்படுகொலை தொடர்பான கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம்.

தமிழ்மக்களுக்கு நேர்ந்தது என்னவென்பது குறித்து நாம் ஏனையோருக்கு அறிவூட்டுவோம். இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் அறிவூட்டுதல் மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்கவும், எமது சமூகம் இந்த துன்பத்திலிருந்து மீள்வதற்குப் பங்களிப்புச்செய்யவும் முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

 

https://www.virakesari.lk/article/130511

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.