Jump to content

உக்ரைனுக்கு... கூடுதலாக "ஒரு பில்லியன்" பவுண்டுகள்... இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு!

உக்ரைனுக்கு... கூடுதலாக "ஒரு பில்லியன்" பவுண்டுகள்... இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு!

உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

இது ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கான அதன் ஆதரவை இரட்டிப்பாக்குகிறது. அத்துடன் புதிய புதிய நிதியுதவி உக்ரைனுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவியை 2.3 பில்லியன் பவுண்டுகளாக உயர்த்துகின்றது.

மேலும், பிரித்தானியா மனிதாபிமான மற்றும் பொருளாதார ஆதரவிற்காக 1.5 பில்லியன் பவுண்டுகளை உக்ரைனுக்கு செலவிட்டுள்ளது.

புதிய பிரித்தானிய உதவியானது, அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆளில்லா விமானங்கள், எலக்ட்ரானிக் போர் உபகரணங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான முக்கிய கிட்களுக்கு பணம் செலுத்துவதை நோக்கி செல்லும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு மேலும் உதவுமாறு நேட்டோ தலைவர்களை ஜனாதிபதி வோலோடிமர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியதை அடுத்து இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உக்ரைனுக்கான மாதாந்திர பாதுகாப்புச் செலவு சுமார் 5 பில்லியன் டொலர்கள் (4.12 பில்லியன் பவுண்டுகள்) என ஸெலென்ஸ்கி நேட்டோ தலைவர்களிடம் கூறினார்.

உக்ரைனுக்கான இராணுவ உதவியின் அடிப்படையில் பிரித்தானியா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா சமீபத்தில் 40 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆதரவுப் பொதிக்கு ஒப்புதல் அளித்தது.

https://athavannews.com/2022/1289035

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைனுக்கு... கூடுதலாக "ஒரு பில்லியன்" பவுண்டுகள்... இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு!

உங்களுக்கென்ன 100,200 வருசமாய் ஆசியா ஆபிரிக்கா நாடுகளிலை களவெடுத்து வைச்சிருக்கிறியள்.சந்தோசமாய் குடுக்கிறியள். நாமள் அப்பிடியா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போருக்கு ஒரு பில்லியன் பவுண். 

ஆனால் கொமண் வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இருக்கும் இலங்கையின் நெருக்கடிக்கு ? 

🤣

Link to comment
Share on other sites

 

220427_FINAL_ukaine_aid_gfx.png

இவ்வளவையும் புலிகளிடம் கொடுத்து இருந்தால் சிறிலங்கா இராணுவத்தை கொழும்பில் கொண்டுவந்து விட்டிருப்பார்கள்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

 

220427_FINAL_ukaine_aid_gfx.png

இவ்வளவையும் புலிகளிடம் கொடுத்து இருந்தால் சிறிலங்கா இராணுவத்தை கொழும்பில் கொண்டுவந்து விட்டிருப்பார்கள்.

 

இதில் எதுக்கு கஞ்சத்தனம்??🤣

கடலால  இறக்கி

விஐயன் இருந்து வந்த  இடத்துக்கு  கொண்டு போய்  விட்டிருப்பார்கள்

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

 

இதில் எதுக்கு கஞ்சத்தனம்??🤣

கடலால  இறக்கி

விஐயன் இருந்து வந்த  இடத்துக்கு  கொண்டு போய்  விட்டிருப்பார்கள்

அவர்கள் அந்தளவிற்கு ஈவு இரக்கம் இல்லாதவர்கள் இல்லை. ஆனால் சிங்களவனுக்கு அந்தப்பயம் இன்றும் உள்ளது.😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

4 minutes ago, விசுகு said:

 

இதில் எதுக்கு கஞ்சத்தனம்??🤣

கடலால  இறக்கி

விஐயன் இருந்து வந்த  இடத்துக்கு  கொண்டு போய்  விட்டிருப்பார்கள்

செய்வது அவர்களுக்கு பெரிய விடயம் அல்ல அண்ணா. அவர்களும் வாழ்ந்து விட்டு போகட்டுமே என்ற கருணையும் அவர்களிடம் உள்ளதே.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

அவர்கள் அந்தளவிற்கு ஈவு இரக்கம் இல்லாதவர்கள் இல்லை. ஆனால் சிங்களவனுக்கு அந்தப்பயம் இன்றும் உள்ளது.😂

 

வாழு  வாழவிடு என்பது  மட்டுமே  இலட்சியம்  அண்ணா

 

9 minutes ago, nunavilan said:

செய்வது அவர்களுக்கு பெரிய விடயம் அல்ல அண்ணா. அவர்களும் வாழ்ந்து விட்டு போகட்டுமே என்ற கருணையும் அவர்களிடம் உள்ளதே.

சிங்களவரின்  ஒரு அடி  நிலத்தைக்கூட அவர்கள்  கைப்பற்ற நினைத்ததில்லை 

நான் சும்மா  தமாசுக்கு  எழுதினேன்  தம்பி

Edited by விசுகு
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கென்ன 100,200 வருசமாய் ஆசியா ஆபிரிக்கா நாடுகளிலை களவெடுத்து வைச்சிருக்கிறியள்.சந்தோசமாய் குடுக்கிறியள். நாமள் அப்பிடியா? 😂

இரெண்டு உலக போரில் களவெடுத்து கொழுத்த ஜேர்மன் கம்பெனிலள்தானே வோல்க்ஸ்வேகனும், போர்சேயும் இன்னும் பலதும். 

கொடுக்கலாம்🤣

2 hours ago, nunavilan said:

 

220427_FINAL_ukaine_aid_gfx.png

இவ்வளவையும் புலிகளிடம் கொடுத்து இருந்தால் சிறிலங்கா இராணுவத்தை கொழும்பில் கொண்டுவந்து விட்டிருப்பார்கள்.

தாறமாரி நாங்களும் நடக்கேல்ல,

வாங்கிறமாரி அவங்களும் நடக்கேல்ல.

2 hours ago, விசுகு said:

 

இதில் எதுக்கு கஞ்சத்தனம்??🤣

கடலால  இறக்கி

விஐயன் இருந்து வந்த  இடத்துக்கு  கொண்டு போய்  விட்டிருப்பார்கள்

பகிடியாகவே என்றாலும் இந்த பயம் நியாயமற்றது. தம் நிலத்தை தவிர அவர்கள் மேலே எதையும் கோரவுமில்லை எடுக்கவும் இல்லை. ஆனால் இலங்கையை விட, எங்கே தம்மை விந்திய மலைக்கு மேலே அனுப்பி விடுவார்கள் என்ற பயம் இந்தியாவின் 3% க்கு இன்னும் இருக்கிறது🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

இரெண்டு உலக போரில் களவெடுத்து கொழுத்த ஜேர்மன் கம்பெனிலள்தானே வோல்க்ஸ்வேகனும், போர்சேயும் இன்னும் பலதும். 

கொடுக்கலாம்🤣

தாறமாரி நாங்களும் நடக்கேல்ல,

வாங்கிறமாரி அவங்களும் நடக்கேல்ல.

பகிடியாகவே என்றாலும் இந்த பயம் நியாயமற்றது. தம் நிலத்தை தவிர அவர்கள் மேலே எதையும் கோரவுமில்லை எடுக்கவும் இல்லை. ஆனால் இலங்கையை விட, எங்கே தம்மை விந்திய மலைக்கு மேலே அனுப்பி விடுவார்கள் என்ற பயம் இந்தியாவின் 3% க்கு இன்னும் இருக்கிறது🤣.

இந்தப்பயங்கள்  தான்  எம்மை  அழிக்க தூண்டியவை

ஆனால் பயம்  மட்டுமே

Link to comment
Share on other sites

Quote

 

தாறமாரி நாங்களும் நடக்கேல்ல,

வாங்கிறமாரி அவங்களும் நடக்கேல்ல.

 

நாங்கள் எந்த ஒரு வெளிநாட்டவரையும் கொல்லவில்லை. யூக்ரேன் மாதிரி எங்களையும் நடத்த  அவர்களுக்கு எங்களின் நிறம் தடையாக இருந்திருக்குமோ?? அல்லது எங்களுக்கு உதவி  இந்தியாவின் பகையை ஏன் வாங்க வேண்டாம் என யோசித்தார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இரெண்டு உலக போரில் களவெடுத்து கொழுத்த ஜேர்மன் கம்பெனிலள்தானே வோல்க்ஸ்வேகனும், போர்சேயும் இன்னும் பலதும். 

கொடுக்கலாம்🤣

தாறமாரி நாங்களும் நடக்கேல்ல,

வாங்கிறமாரி அவங்களும் நடக்கேல்ல.

பகிடியாகவே என்றாலும் இந்த பயம் நியாயமற்றது. தம் நிலத்தை தவிர அவர்கள் மேலே எதையும் கோரவுமில்லை எடுக்கவும் இல்லை. ஆனால் இலங்கையை விட, எங்கே தம்மை விந்திய மலைக்கு மேலே அனுப்பி விடுவார்கள் என்ற பயம் இந்தியாவின் 3% க்கு இன்னும் இருக்கிறது🤣.

பிரிட்டன் இந்தியாவிடம் களவெடுத்ததே ரிலியனில் வருமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

நாங்கள் எந்த ஒரு வெளிநாட்டவரையும் கொல்லவில்லை. யூக்ரேன் மாதிரி எங்களையும் நடத்த  அவர்களுக்கு எங்களின் நிறம் தடையாக இருந்திருக்குமோ?? அல்லது எங்களுக்கு உதவி  இந்தியாவின் பகையை ஏன் வாங்க வேண்டாம் என யோசித்தார்களா? 

ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் என நினைக்கிறேன்.

1. நிறம்

2. இந்தியா

3. தேவையின்மை

4. நாங்கள் சொல் படி நடக்க மாட்டோம் என்ற கணிப்பு

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

நாங்கள் எந்த ஒரு வெளிநாட்டவரையும் கொல்லவில்லை. யூக்ரேன் மாதிரி எங்களையும் நடத்த  அவர்களுக்கு எங்களின் நிறம் தடையாக இருந்திருக்குமோ?? அல்லது எங்களுக்கு உதவி  இந்தியாவின் பகையை ஏன் வாங்க வேண்டாம் என யோசித்தார்களா? 

தனிய பிராந்திய அரசியல் மட்டுமே தவிர வேறேதுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, kalyani said:

பிரிட்டன் இந்தியாவிடம் களவெடுத்ததே ரிலியனில் வருமாம்.

நிச்சயமாக.

இவர்களோடு சண்டையிடும் போது திப்பு சுல்தானின் நாடுதான் உலகின் செல்வ வளம் மிக்க நாடாக இருந்தது.

ஆனால் என்ன கல்வி, ரயில்வே, ஜனநாயகம், உடன்கட்டை போன்ற மூட பழக்க வழக்க ஒழிப்பு என 80 வீதம் கொள்ளை அடித்தாலும் 20 வீதம் நல்லதையும் செய்து சென்றது பிரிடிஸ் சாம்ராஜ்யம். இதை தமது நன்மைக்கே செய்தாலும், கல்வி மூலம் காந்தி, மண்டேலாக்களை உருவாக்கி - தந்ததும் இதுவே.

அதே போல் யாழ்பாணத்தில் தாழ்தப்பட்ட மக்களுக்கு அடிமை வாழ்வை, ஏலவே இருந்த தாழ்தபட்ட நிலையை போத்துகீச, டச்சு சட்டங்கள் அப்படியே பேண, ஆங்கில சட்டமே அதை உடைத்தது.

இப்போ மலைப்பாக இருக்கும். ஆனால் யாழ்பாணத்தில் ஆதிக்க சாதி, குடிமை சாதி, அடிமை சாதி என 3 பெரும் பிரிப்புகள் இருந்தன.

இதில் குறித்த ஓர் சாதியினர் அடிமைகளாகவே இருந்தனர். வெள்ளைகாரர் தாம் அடிமை முறையை ஒழித்த போது இதையும் ஒழித்தனர்.

முடி திருத்துபவர் எனக்கு வீட்டில் வந்து சவரம் செய்தே ஆக வேண்டும் - அப்படி அவர் செய்வது சட்டம். என வழகெல்லாம் போட்டுள்ளனர் உயர் குல திலகங்கள்🤣.

அப்படி ஒரு சாதி அடிப்படையிலான கடமையும் இல்லை - இது வெறும் contract மட்டுமே என சாதியத்துக்கு குட்டு வைத்தது வெள்ளைகாரனின் சட்டமே.

இவ்வளவு ஏன் பிரிடிஸ்காரர் வந்திராவிட்டால் தலித் அம்பேத்கர் பரிஸ்டர் ஆகி இருக்க முடியுமா?

அருகில் இருக்கவே, தெருவில் நடக்கவே அனுமதியாதவர்ஜள் அவரை நாட்டின் அரசியல் அமைப்பை வரைய அனுமதித்திருப்பாத்களா?

ஆகவே எதையும் குறுகிய ஒற்றை பார்வையில் பார்த்தல் ஆகாது.

ஆனால் ஜேர்மன் நாடு/இனம்  இதுவரை தம் ஆளுகைக்குள் கொண்டு வந்த எந்தவொருநாட்டையும் சுரண்டி நாசம் செய்ததை தவிர வேறு ஏதும் செய்யவில்லை.

சாம்ராஜ்யம்களின் அடிப்படையே சுரண்டல்தான்.

ஆனால் இதை சுட்டி காட்டும் அருகதை  மொங்கோலிய, கிரேக்க, ரோம,  சீன, ஜப்பான், ரஸ்ய, சோசியத், ஜேர்மனிய நாடுகளுக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் ஒரு நாடு ரஷ்யா ஒரு நாடு   இலங்கை ஒரு நாடு இவை மூன்றும் இறைமையுள்ள நாடுகள் என்று சர்வதேசத்தால் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது  நாங்கள் இலங்கை உள்ளே தான் இருக்கிறோம்   எங்களுக்கு ஒரு நாடு இன்னும் இந்த உலகில்…………… கிடைக்கவில்லை நிலைமை அப்படி இருக்கையில் எப்படி எங்களை உக்ரேன் உடன் ஓப்பிடுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

உக்ரேன் ஒரு நாடு ரஷ்யா ஒரு நாடு   இலங்கை ஒரு நாடு இவை மூன்றும் இறைமையுள்ள நாடுகள் என்று சர்வதேசத்தால் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது  நாங்கள் இலங்கை உள்ளே தான் இருக்கிறோம்   எங்களுக்கு ஒரு நாடு இன்னும் இந்த உலகில்…………… கிடைக்கவில்லை நிலைமை அப்படி இருக்கையில் எப்படி எங்களை உக்ரேன் உடன் ஓப்பிடுகிறீர்கள்?

இது அவர்கள் கொடுக்கும் தியரி விளக்கம்.

தமக்கு தேவை எண்டால் இறைமையாவது, எச் ராஜாவாவது என்பதே நடைமுறை🤣.

இலங்கையில் இறைமைகாக்கும் அமெரிக்கா சேர்பியாவை பிரித்தது.

சிரியாவில் இறைமை பேணிய எஅஸ்யா உக்ரேன், ஜோர்ஜியாவ்நி பிரித்தது.

இதில் ஒருவரும் ஒருவருக்கும் சளைத்தவர் அல்ல.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.