Jump to content

இலங்கைக்கு, உதவத் தயார் – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு உதவத் தயார் – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

இலங்கைக்கு, உதவத் தயார் – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவது குறித்துக் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்தது.

இவர்கள், நாட்டில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் அவசியமான கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த விஜயம் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவினால் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டாலும் பணவீக்கம் தொடர்ந்து மிக உயர்வான மட்டத்தில் அதிகரித்துச்செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மிகவும் குறைந்தளவிலான வெளிநாட்டுக்கையிருப்பு அத்தியாவசியப்பொருட்களை இறக்குமதி செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர்கள், இலங்கைக்கான விஜயத்தின்போது அங்குள்ள மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளை அவதானிக்க முடிந்தததாகவும் இந்த நெருக்கடியினால் வறிய மற்றும் பின்தங்கிய மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி அளித்தல் செயற்திட்டத்துடன் ஒன்றிணைந்த பொருளாதாரக்கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புக்கள் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் செயற்திறனான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர்மட்ட இணக்கப்பாட்டை எட்டுவதை முன்னிறுத்திய கலந்துரையாடல்கள் நிகழ்நிலையில் முன்னெடுக்கப்படும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைக்கான விஜயத்தின்போது இடம்பெற்ற கலந்துரையாடல்கள் நுண்பாகப் பொருளாதார சமநிலையின்மையை சீரமைத்தல், பொதுக்கடன்களின் நிலைபேறானதன்மையை உறுதிப்படுத்தல், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இயலுமையை இனங்காணல் என்பவற்றை அடைந்துகொள்ளக்கூடிய செயற்திறன்மிக்க பொருளாதார செயற்திட்டமொன்றைத் தயாரிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல், தீவிரமடைந்துள்ள வெளிநாட்டுக்கையிருப்பு பற்றாக்குறையை உரியவாறு கையாள்தல், ஊழல்மோசடிகளைக் குறைத்தல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டத்தை உருவாக்குவதில் இலங்கை அதிகாரிகள் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தைக் காண்பித்திருக்கும் நிலையில், அவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1289137

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இலங்கைக்கு, உதவத் தயார் – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

குடுக்கிற ஒரு ரூபாய்க்கும் கணக்கு கேட்பினமே? 🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

குடுக்கிற ஒரு ரூபாய்க்கும் கணக்கு கேட்பினமே? 🧐

கணக்கு சொல்லுவோமே இப்படி......புலி பயங்கரவாதிகள் சர்வதேச நாணய நிதியத்தை தாக்குவதற்கு தயாராக இருக்கின்றார்கள் அவர்களை அழிக்க இந்த பணம் செலவாகிவிட்டது  என 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

கணக்கு சொல்லுவோமே இப்படி......புலி பயங்கரவாதிகள் சர்வதேச நாணய நிதியத்தை தாக்குவதற்கு தயாராக இருக்கின்றார்கள் அவர்களை அழிக்க இந்த பணம் செலவாகிவிட்டது  என 

ஒரு காலத்திலை அவிச்சவை தான். ஆனால் இனி உந்த அவியல் எல்லாம் சரிவராது 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

அவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்டும் அவசரம் இல்லை நிதானமாக உங்கள் நேரத்தை எடுத்து கொள்ளுங்கோ..👍

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.