Jump to content

இந்தியாவிடமிருந்து... பெறப்படும்  "40 மில்லியன் அமெரிக்க டொலர்" கடனில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் – நிமல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடமிருந்து பெறப்படும் கடனில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் – நிமல்

இந்தியாவிடமிருந்து... பெறப்படும்  "40 மில்லியன் அமெரிக்க டொலர்" கடனில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் – நிமல்.

இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபை பூர்வாங்க வேலைகளைச் செய்துள்ளதாகவும், எக்ஸிம் வங்கி வழங்கும் நிதி வசதியைப் பயன்படுத்தி எஞ்சிய பணிகளை மேற்கொள்வதாகவும் அவர் ஆங்கில ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து ஆராய இந்திய தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகரின் அறிக்கை கிடைத்தவுடன் இலங்கையின் வடமுனையில் அமைந்துள்ள துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பணியை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறிய கப்பல்கள் மட்டுமே நிறுத்த முடியும் என்றும் பெரிய கப்பல்கள் தங்கும் வகையில் இதை உருவாக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையிலான சரக்கு போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1289170

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகமிக தாமதமாக, மூக்குப்போனாலும் எதிரிக்கு சகுணப் பிழையா இருக்கவேணும்  என்று இருந்த மரமண்டையலுக்கு, இந்திய பெரும் சநதைக்கான திறவுகோல், வடக்குக்கிழக்கே என்று புரிய வைக்கப்பட்டுள்து.

அரைக்காசுக்குப் பெறுமதியில்லா, அம்பாந்தோட்டத்துறைமுகம், மத்தல விமான நிலையம் ராஜபக்சேக்கள் முட்டாள்தனத்தை பறைசாற்றும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

மிகமிக தாமதமாக, மூக்குப்போனாலும் எதிரிக்கு சகுணப் பிழையா இருக்கவேணும்  என்று இருந்த மரமண்டையலுக்கு, இந்திய பெரும் சநதைக்கான திறவுகோல், வடக்குக்கிழக்கே என்று புரிய வைக்கப்பட்டுள்து.

அரைக்காசுக்குப் பெறுமதியில்லா, அம்பாந்தோட்டத்துறைமுகம், மத்தல விமான நிலையம் ராஜபக்சேக்கள் முட்டாள்தனத்தை பறைசாற்றும்.

உண்மையில் அம்பாந்தோட்டையில் விமான நிலையமும் துறைமுகமும் கட்டுதட போதே சிங்களவர்கள் ராஜபட்சக்களின் முட்டாள் தனத்தை புரிஞ்சிருக்க வேணும்.இனவாதம் கண்ணை மறைச்சுது.இப்ப பசி கண்ணை மறைக்குது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மையில் அம்பாந்தோட்டையில் விமான நிலையமும் துறைமுகமும் கட்டுதட போதே சிங்களவர்கள் ராஜபட்சக்களின் முட்டாள் தனத்தை புரிஞ்சிருக்க வேணும்.இனவாதம் கண்ணை மறைச்சுது.இப்ப பசி கண்ணை மறைக்குது.

 

இப்பவும் இந்தி  இனவாதம் தான்  நடத்துது??

நமக்கும்  சிங்களத்துக்கும் அது  புரியும்போது.....???

இலங்கை முழுங்கப்பட்டிருக்கும்

Edited by விசுகு
Link to comment
Share on other sites

 

8 hours ago, தமிழ் சிறி said:

இந்த விடயம் குறித்து ஆராய இந்திய தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகரின் அறிக்கை கிடைத்தவுடன் இலங்கையின் வடமுனையில் அமைந்துள்ள துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பணியை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறிய கப்பல்கள் மட்டுமே நிறுத்த முடியும் என்றும் பெரிய கப்பல்கள் தங்கும் வகையில் இதை உருவாக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்று மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தாலும், தமிழ்மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டு வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன், வட கிழக்கில் பெரும் தொழிற்சாலைகளை நிறுவிய திரு. யீ.யீ.பொன்னம்பலம் வர்கள், யாழ் காங்கேசன்துறையிலும் சீமேந்து தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். சீமேந்து உற்பத்திக்கு தேவையான கற்கள் அங்கு ஏராளமாக இருப்பதைக் காரணம் காட்டி அன்றைய அரசை அதற்குச் சம்மதிக்கவும் வைத்தார்.

தொழிற்சாலைக்குப் பெருமளவில் கற்களைத் தோண்டி எடுப்பதால் ஏற்படும் மாபெரும் பள்ளத்தாக்குகளில், அருகே உள்ள கடல்நீர் ஏதாவது காரணத்தால் உட்புக வாய்ப்புள்ளது, அப்படி உட்புகுந்தால், நகரமே தண்ணீரில் மூழ்கி அழிந்துவிடும் என்று அதுபற்றி அந்த நகரத்தில் உள்ளவர்கள் கவலை தெரிவித்தபோது, கவலை வேண்டாம், கடல்நீர் உட்புகுந்தாலும் அதனை எமக்குச் சாதகமாக்கிக் கொள்ளலாம். காங்கேசன்துறை நகரத்தையே பெரும் துறைமுகமாக்கிப் பயனடையலாம் என்று காங்கிரசு கட்சிக் கூட்டத்தில் ஒரு பேச்சாளர் திரு. யீ.யீ.பொன்னம்பலம் அவர்கள்பற்றிக் குறிப்பிட்டுப் பேசியது இன்றும் நினைவில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது இந்தியா நாணயத்தை இலங்கையில் பாவிக்க தொடங்குவது ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

மிகமிக தாமதமாக, மூக்குப்போனாலும் எதிரிக்கு சகுணப் பிழையா இருக்கவேணும்  என்று இருந்த மரமண்டையலுக்கு, இந்திய பெரும் சநதைக்கான திறவுகோல், வடக்குக்கிழக்கே என்று புரிய வைக்கப்பட்டுள்து.

அரைக்காசுக்குப் பெறுமதியில்லா, அம்பாந்தோட்டத்துறைமுகம், மத்தல விமான நிலையம் ராஜபக்சேக்கள் முட்டாள்தனத்தை பறைசாற்றும்.

May be an image of road and text that says 'Expenditure Development projects Mattala MATTALA RAJAPAKSA IN TERNATIONAL International oneword A Airport Srilankan Airlines 2010 US$ million Hambantota Port 1320 US$ million Lotus Tower 103.4 US$ million Sooriyawewa Stadium 500 Million Rupees Matara- Mattala Expressway Central Expressway 242 Billion Rupees Kahatuduwa Pelmadulla Expressway 275 Billion Rupees 160.8 Billion Rupees Panbt'

ராஜபக்ச குடும்பத்தினராலும் , அவர்களின் அடிவருடிகளாலும்... 
மக்களின் வரிப்பணம், முற்றிலுமாக... வீணடிக்கப்பட்ட சம்பவங்கள்.

RAJAPAKSHA - development! in a nut shell. what a waste of tax payers' money!
extract from daily mirror - an article by Pargeeth Sampath Karunatileke. https://www.dailymirror.lk/.../Spotlight-on.../231-239978

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.