Jump to content

பில் கேட்ஸ் ரெஸ்யூம் பார்த்திருக்கீங்களா.. டிரெண்டாகும் போட்டோ.. அசந்துபோன நெட்டிசன்கள்..!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பில் கேட்ஸ் ரெஸ்யூம் பார்த்திருக்கீங்களா.. டிரெண்டாகும் போட்டோ.. அசந்துபோன நெட்டிசன்கள்..!!

Bill-Gates-Business-2.jpg

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது பழைய ரெஸ்யூம் ஒன்றை பகிர்ந்துள்ள நிலையில் அது தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவர்களது ரெஸ்யூம் என்பது மிகவும் முக்கியமானது. அவர்களது தகுதிகள், அனுபவம் மற்றும் திறமைகளை குறிக்கும் ஒரு பிரதிபலிப்பாகவே ரெஸ்யூம் கருதப்படுகிறது.

ரெஸ்யூம்

இன்றைய நெருக்கடியான வேலைவாய்ப்பு துறையில் ரெஸ்யூம் என்பது ஒரு திறமையானவரை கண்டறிவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ரெஸ்யூம் என்பது வெறும் ஆவணம் அல்ல, அது வாழ்க்கையை மாற்றும் ஒரு அங்கமாககூட இருக்கலாம். பல ஆண்டுகளாக படித்த படிப்பு, பெற்ற அனுபவம் மற்றும் திறமைகள் ஆகியவை அந்த ரெஸ்யூம் குறிப்பிடப்பட்டு இருக்கும் என்பதும் ஒரு ரெஸ்யூமை பார்த்தவுடனே அந்த நபருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை அந்த ரெஸ்யூம் உருவாக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்கேட்ஸ் ரெஸ்யூம்

IMG-20220702-075114.jpg

அந்த வகையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் 48 ஆண்டுகளுக்கு முன்னர் தான் தயாரித்த ரெஸ்யூமை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அந்த ரெஸ்யூம் மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. 66 வயதான பில்கேட்ஸ் தனது 18 ஆவது வயதில் இந்த ரெஸ்யூமை வடிவமைத்துள்ளார். அந்த ரெஸ்யூம் மிகச்சிறந்ததாக கருதப்பட்டு பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கல்வித்தகுதி-அனுபவம்

IMG-20220702-075114.jpg

பில்கேட்ஸ் தனது ரெஸ்யூமில் வில்லியம் எச் கேட்ஸ் என்ற பெயரில் அமைத்துள்ளார். அவர் இந்த ரெஸ்யூமை ஹார்வர்ட் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போது உருவாக்கப்பட்டதாக அதில் அவர் தெரிவித்துளார். மேலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைப்பு, டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட், கம்பைலர் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற படிப்புகளை படித்ததாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்யூட்டர் மொழிகள்

மேலும் FORTRAN, COBOL, ALGOL, BASIC, போன்ற அனைத்து முக்கிய கம்ப்யூட்டர் மொழிகளிலும் தனக்கு அனுபவம் இருப்பதாக பில்கேட்ஸ் தனது ரெஸ்யூமில் கூறியுள்ளார். மேலும் கடந்த 1973ஆம் ஆண்டு TRW சிஸ்டம்ஸ் குழுமத்தில் கணினி புரோகிராமராக இருந்த அனுபவத்தையும் அவர் கூறியுள்ளார். பில்கேட்ஸ் 1972ஆம் ஆண்டு சியாட்டிலில் உள்ள லேக்சைட் பள்ளியில் இணைத் தலைவர் மற்றும் இணை பங்குதாரராக இருந்த தனது பணியையும் பகிர்ந்து கொண்டார்.

இனிமையான அனுபவம்

bill_gates_01.jpg

தற்போது இந்த ரெஸ்யூம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் பில்கேஸ் இந்த ரெஸ்யூமை பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி என்றும் ஒரு அருமையான ரெஸ்யூமை பார்க்கும் அனுபவம் கிடைத்தது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாம் வாழ்க்கையில் எவ்வளவோ சாதித்து இருந்தாலும், நமது பழைய ரெஸ்யூமை பார்க்கும் மலரும் நினைவுகளால் கிடைக்கும் இனிமையான அனுபவமே தனி தான் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://tamil.goodreturns.in/news/bill-gates-shares-his-r-sum-from-1974-in-his-18th-age-029432.html

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
    • ஆமாம் .....40 ஆயிரமாகத் தான் இருக்கும்   ஆனால் இது மிகவும் குறைவு   கொஞ்சம் கூட கேட்டிருக்கணும் 🤣🤣🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.