Jump to content

தமிழ் பைபிள்: காணாமல் போன 300 ஆண்டுகள் பழைய தமிழின் முதல் பைபிள்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பைபிள்: காணாமல் போன 300 ஆண்டுகள் பழைய தமிழின் முதல் பைபிள்.!

IMG-20220702-080812.jpg

சென்னை: 2005ல் காணாமல் போன 300 ஆண்டுகள் பழமையான தமிழின் முதல் பைபிளை தமிழ்நாடு சிபிசிஐடி பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பதுதான் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிற்கு கிறிஸ்துவம் வந்த 1700ம் ஆண்டுகளில் பைபிள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. பைபிள் படிக்க வேண்டும் என்றால் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற நிலையும் இருந்தது.

இதனால் இந்தியாவில் கிறிஸ்துவத்தை பரப்பும் நோக்கத்தோடு வந்த கிறித்துவ துறவிகளுக்கு அது பெரிய சிக்கலான விஷயமாக மாறியது. அப்போதுதான் 1714ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி இந்தியாவில் முதல் பைபிள் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மொழி பெயர்ப்பு

tranquebar_3-1200x675.jpg

           தரங்கம்பாடி கோட்டை 

இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் மொழி பெயர்க்காமல் உலகின் பழமையான மொழியான தமிழில் அந்த பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது. அதன்பின்பே மற்ற மொழிகளுக்கு பைபிள் சென்றது. ஜெர்மனியில் இருந்து பார்தோலோமாஸ் செய்ங்கெங்பால்க்தான் இந்தியாவிற்கு கிறித்துவத்தை பரப்ப வந்த முதல் கிறிஸ்துவ துறவி ஆவார். 1706ம் ஆண்டு வாட்ச் இவர் தரங்கேபார் என்று தமிழ்நாட்டு பகுதிக்கு வந்தார். அதுதான் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி ஆகும். இங்கு வந்தவருக்கு பெரிதாக வரவேற்பு அளிக்கப்படவில்லை.

இந்துக்கள் அச்சம்

இந்துக்கள் இடையே இவரின் வருகை கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. அதுவும் இவரின் ஆங்கில மொழி, இவர் பைபிளை ஆங்கிலத்திலும், ஜெர்மனியிலும் படித்து பரப்ப நினைத்தது பெரும் விமர்சனங்களை சந்தித்து. இதன் காரணமாக உடனே இவர் தமிழ் படிக்கும் முடிவை எடுத்தார். சில ஆண்டுகள் தமிழ் படித்தவர், அதில் புலமையும் பெற்று, ஜான் எர்னஸ்ட் என்பவர் உதவியுடன் புதிய ஏற்பாடு பைபிளை அவர் மொழி பெயர்த்தார்.

எப்படி செய்தார்?

Palm-leaf_manuscript.jpg

பனை ஓலையில், ஆணிகள் மூலம் இந்த பைபிள் எழுதப்பட்டது. அதன்பின் பிரிண்ட் முறை மூலம் இது பிரிண்ட் புத்தமாக வெளியிடப்பட்டது. இதற்காக ஜெர்மனியில் இருந்து இவர் பிரிண்டர்களை தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்ததும் குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு போராட்டத்திற்கு பின் 1711ல் பைபிள் முழுமையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் மூலம் இந்திய மொழியில் பெயர்க்கப்பட்ட முதல் பைபிளாக தமிழ் புதிய ஏற்பாடு பைபிள் மாறியது.

lithography-printing-press.jpg

எங்கு இருந்தது?

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பல ஆண்டுகளாக இந்த பைபிள் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் கடந்த 2005ம் ஆண்டு சரஸ்வதி நூலகத்தில் இருந்து பைபிள் காணாமல் போனது. அந்த பைபிள் எங்கே போனது என்ற கேள்வி மக்கள் இடையே எழுந்தது. போலீசாரும் இதை பற்றி விசாரித்து வந்தனர். ஆனால் எந்த க்ளுவும் கிடைக்கவில்லை. அதன்பின் அப்படியே இந்த பைபிள் குறித்த செய்தி எதுவும் கிடைக்காமல்.. தேடலும் நின்று போனது. இந்த நிலையில்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது இந்த பைபிள் புத்தகம் கிடைத்துள்ளது.

Thanjavur.png

லண்டன் போனது

தமிழ்நாடு சிஐடி போலீசின் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு வந்த தகவலின் அடிப்படையில் இந்த பைபிள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லண்டலில் இருக்கும் மன்னர் குடும்ப சொத்துக்களில் இந்த பைபிள் உள்ளது. இதை விரைவில் மீட்க சிஐடி பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த பைபிள் லண்டன் சென்றது எப்படி? இதை திருடி சென்றது யார்? என்று சிஐடி பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

https://tamil.oneindia.com/news/chennai/how-did-300-years-old-tamil-first-bible-go-missing-how-did-cbcid-find-it-out-464580.html

டிஸ்கி

தமிழ்நாட்டில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு போகாமல் இருந்தால்தான் அதிசயம்..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

லண்டன் போனது

தமிழ்நாடு சிஐடி போலீசின் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு வந்த தகவலின் அடிப்படையில் இந்த பைபிள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லண்டலில் இருக்கும் மன்னர் குடும்ப சொத்துக்களில் இந்த பைபிள் உள்ளது. 

பெ.பி.க்கு.... காணுற எல்லாத்தையும், ஆட்டையை போட வேணும் என்று.. ஆசை. 😂
கோட்டு, சூட்டு...  போட்டாலும்,  களவெடுக்கிற குணம் மட்டும் போகவில்லை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

பெ.பி.க்கு.... காணுற எல்லாத்தையும், ஆட்டையை போட வேணும் என்று.. ஆசை. 😂
கோட்டு, சூட்டு...  போட்டாலும்,  களவெடுக்கிற குணம் மட்டும் போகவில்லை. 🤣

DNA யில் உள்ளதை மாத்த ஏலுமே..😉

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2022 at 05:50, தமிழ் சிறி said:

பெ.பி.க்கு.... காணுற எல்லாத்தையும், ஆட்டையை போட வேணும் என்று.. ஆசை. 😂
கோட்டு, சூட்டு...  போட்டாலும்,  களவெடுக்கிற குணம் மட்டும் போகவில்லை. 🤣

எதுக்கும் எப்படி இலண்டன் போனது எண்ட விசாரணை முடியும் வரைக்கும் பொறுப்பது நல்லம்.

தமிழ்நாட்டில் இருந்து களவு போனதில் நிச்சயம் தமிழரின் பங்கு இல்லாமல் இருக்க முடியாது.

பிறகு இப்ப எழுதியதை எடிட் பண்ணவும் முடியாது🤣.

On 2/7/2022 at 05:57, Kapithan said:

DNA யில் உள்ளதை மாத்த ஏலுமே..😉

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

எதுக்கும் எப்படி இலண்டன் போனது எண்ட விசாரணை முடியும் வரைக்கும் பொறுப்பது நல்லம்.

தமிழ்நாட்டில் இருந்து களவு போனதில் நிச்சயம் தமிழரின் பங்கு இல்லாமல் இருக்க முடியாது.

பிறகு இப்ப எழுதியதை எடிட் பண்ணவும் முடியாது🤣.

 

ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில்….
ஆட்டையை போட்டுக் கொண்டு போன பொருட்களுக்கும்
தமிழன் காரணம் என்று.. நீங்கள் சொல்லாத வரைக்கும் சந்தோசம். 😂

உங்களுக்கு… நிறைய வெள்ளை பெயின்ற் வாளி, தேவைப்படும் போல இருக்கே…. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசை காட்டினால், தோலிருக்க, சுளை புடுங்கிகள் இருக்கும் போது, சீனாக்காரன், கம்பந்தோட்டைக்கு வந்துட்டான் என்று இந்தியர்கள் அரற்றுவதில் என்ன பயன்? 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

காசை காட்டினால், தோலிருக்க, சுளை புடுங்கிகள் இருக்கும் போது, சீனாக்காரன், கம்பந்தோட்டைக்கு வந்துட்டான் என்று இந்தியர்கள் அரற்றுவதில் என்ன பயன்? 🤪

கிந்தியன் தன்ர வீரத்த யாழ்பாணத்தில தான் காட்டேலும்......ஏலுமெண்டால் காந்தி சிலைய ஹபறணவில வைக்கட்டும் பாப்பம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

கிந்தியன் தன்ர வீரத்த யாழ்பாணத்தில தான் காட்டேலும்......ஏலுமெண்டால் காந்தி சிலைய ஹபறணவில வைக்கட்டும் பாப்பம்?

காந்தி மைண்ட் வாய்ஸ்: சும்மா… சிவனே எண்டு இருக்கிற என்னை, ஏன்(டா) வம்பிலை மாட்டி விடுறீங்க. 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

காந்தி மைண்ட் வாய்ஸ்: சும்மா… சிவனே எண்டு இருக்கிற என்னை, ஏன்(டா) வம்பிலை மாட்டி விடுறீங்க. 😂

ஹிந்தியன்களுக்கு மண்டையிலை துவக்கு சோங்கால போட்டும் ரோஷம் வரேல்லை. காந்தி  சிலைக்கு ஏதாவது செய்தாலாவது ரோசம் மானம் வருதோ எண்டு பாக்கிறன் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஹிந்தியன்களுக்கு மண்டையிலை துவக்கு சோங்கால போட்டும் ரோஷம் வரேல்லை. காந்தி  சிலைக்கு ஏதாவது செய்தாலாவது ரோசம் மானம் வருதோ எண்டு பாக்கிறன் 😁

இவரும் காந்தி, அவரும் காந்தி…. 😁
அப்ப ஏன், இவருக்கு  துவக்காலை அடிக்கும் போது… ரோசம் வரவில்லை. 😂
சம் திங்… றோங். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

இவரும் காந்தி, அவரும் காந்தி…. 😁
அப்ப ஏன், இவருக்கு  துவக்காலை அடிக்கும் போது… ரோசம் வரவில்லை. 😂
சம் திங்… றோங். 🤣

டூப்ளிக்கற் காந்திக்கு ரோஷ நரம்பை இறைவன் படைக்கவில்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில்….
ஆட்டையை போட்டுக் கொண்டு போன பொருட்களுக்கும்
தமிழன் காரணம் என்று.. நீங்கள் சொல்லாத வரைக்கும் சந்தோசம். 😂

உங்களுக்கு… நிறைய வெள்ளை பெயின்ற் வாளி, தேவைப்படும் போல இருக்கே…. 🤣

களவெண்டால் அதில் சம்பந்த பட்ட எல்லாரும் கள்ளர்தான்.

கடைசியில் பொருளை அடைபவன், களவெடுக்க சொன்னவன் கள்ளந்தான். ஆனால் அவன் மட்டும் அல்ல,  தனது நாட்டில் இருந்து பொருளை லவட்டுபவனும் கள்ளனே.

கோவிலில் வெள்ளைகாரன் கோட்டு சூட்டுடனா வந்து சிலை திருடுகிறான். இல்லை நாம் திருடி அவனுக்கு கொடுக்கிறோம்.

ஆகவே டி என் ஏ பழுது எம்மிடமும் உண்டு.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.