Jump to content

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டது

July 2, 2022
 

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவையினை இன்று (01) முதல் மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும் குறித்த விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு நம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவைகள் 2020 ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில், COVID தொற்று காரணமாக மீண்டும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

இதனிடையே, யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவிற்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க பல்வேறு தரப்பினரும் முயற்சித்து வந்த நிலையில், உள்ளூர் , வௌியூர் விமான சேவை நிறுவனங்களும் தமிழக விமான சேவைக்கான கோரிக்கையினை சமர்ப்பித்திருந்தன.

இந்த நிலையில், யாழ். பலாலி விமான நிலையத்திலிருந்து இன்று முதல் தமிழகத்திற்கான விமான சேவையினை ஆரம்பிக்க துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அத்துடன், கடந்த மாதம் 15 ஆம் திகதி பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியிருந்தார்.

ஜூன் 18 ஆம் திகதி யாழ். பலாலி விமான நிலையத்திற்கு விஜயம் செய்த சிவில் விமான சேவைகள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஜூலை முதலாம் திகதி பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுமென தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்திய தரப்பில் உள்ள எரிபொருள் பிரச்சினை மற்றும் சட்டச்சிக்கல்கள் காரணமாக இன்று மீள ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவைகள்    பிற்போட நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/flight-service-from-balali-to-tamil-nadu-has-been-delayed-again/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

இந்திய தரப்பில் உள்ள எரிபொருள் பிரச்சினை மற்றும் சட்டச்சிக்கல்கள் காரணமாக இன்று மீள ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவைகள்    பிற்போட நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் விமான நிலையத்தில்... எரிபொருள் இல்லாவிடில்,
எந்த விமான நிறுவனம்தான்... பயணிகளின் உயிரை அடகு வைத்து சேவையை நடத்தும்.

அரசியல்வாதிகள்... எந்த வித, முன் ஏற்பாடுகளும் இல்லாமல்,
அவசர கதியில்... அறிக்கை விடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

காங்கேசன் துறை... கப்பல் சேவைக்கும், அறிக்கை விளையாட்டுத்தான் நடந்தது. 
எந்த அடிப்படை அறிவும் இல்லாதவர்கள், 
அரசியலுக்கு வந்தால்... இவற்றை அனுபவிக்கத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தரப்பில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை.

ஒருவேளை இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்கு இலவசமாக பெட்றோல் நிரப்பிக்கொள்ளும் வசதியை எதிர்பார்க்கிறதோ?

விமான சேவையை இயக்கப்போவது இந்திய நிறுவனங்கள் தானே? இதில் என்ன முன்பேதும் இல்லாத சட்ட சிக்கல்கள் இப்பொழுது எழுகிறது?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

விமான சேவையை இயக்கப்போவது இந்திய நிறுவனங்கள் தானே? இதில் என்ன முன்பேதும் இல்லாத சட்ட சிக்கல்கள் இப்பொழுது எழுகிறது?

இனவாத சிக்கலாகத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

இந்திய தரப்பில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை.

ஒருவேளை இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்கு இலவசமாக பெட்றோல் நிரப்பிக்கொள்ளும் வசதியை எதிர்பார்க்கிறதோ?

விமான சேவையை இயக்கப்போவது இந்திய நிறுவனங்கள் தானே? இதில் என்ன முன்பேதும் இல்லாத சட்ட சிக்கல்கள் இப்பொழுது எழுகிறது?

 

8 minutes ago, சுவைப்பிரியன் said:

இனவாத சிக்கலாகத்தான் இருக்கும்.

இலங்கை விமான நிலையத்திலாவது அவசர தேவைக்கு என்று...
விமான எரி பொருள் இருக்க வேண்டும். அது... பலாலியில் இல்லை என நினைக்கின்றேன்.

இயங்கிக் கொண்டிருந்த விமான நிலையத்தை...
இனவாத வயித்தெரிச்சலால் மூடினால்...
மீண்டும் திறக்கும் போது... புதிதாக ஆரம்பிப்பதை போன்ற சிக்கல் எழும்.
ஒன்றை அழிப்பது எளிது. ஆக்குவது கடினம் என்று... இவர்களுக்கு தெரியாதா?

துவேசம் உள்ள நாட்டில், இவற்றை பார்க்க... சலிப்புத்தான் ஏற்படும். 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ராசவன்னியன் said:

இந்திய தரப்பில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை.

ஒருவேளை இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்கு இலவசமாக பெட்றோல் நிரப்பிக்கொள்ளும் வசதியை எதிர்பார்க்கிறதோ?

விமான சேவையை இயக்கப்போவது இந்திய நிறுவனங்கள் தானே? இதில் என்ன முன்பேதும் இல்லாத சட்ட சிக்கல்கள் இப்பொழுது எழுகிறது?

பிரச்சணை அதுவல்ல.....

அதிகாரிகள், ஊழியர்கள் வேலைக்கு சமூகமளிக்க, நாட்டின் பல பகுதிகளில் இருந்து, மாட்டு வண்டி, சைக்கிள்ள கிளம்பி இருக்கிறார்கள்.

பத்திரமா வந்து சேர்ந்ததும், உடனே ஆரம்பிப்பார்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இந்திய தரப்பில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை.

ஒருவேளை இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்கு இலவசமாக பெட்றோல் நிரப்பிக்கொள்ளும் வசதியை எதிர்பார்க்கிறதோ?

விமான சேவையை இயக்கப்போவது இந்திய நிறுவனங்கள் தானே? இதில் என்ன முன்பேதும் இல்லாத சட்ட சிக்கல்கள் இப்பொழுது எழுகிறது?

இதெல்லாம் முதலே எதிர்பார்த்தது தான்.

இனவாத சிங்களத்திற்கு பலாலி விமான நிலையம் மீது கரிசனை இருந்திருந்தால்  அண்மையில் புனருத்தாரணம்  செய்தலிருந்தே இயங்கியிருக்கும்.
சிங்களத்திற்கு இப்போது இனவாதத்தை விட தமிழர்கள் மீதான பயம்தான் அதிகம்.எனெனில் புலம்பெயர் தமிழர்களின் வலிமை அவர்களுக்குத்தான் தெரியும்.
எந்தவொரு நாட்டின் உதவியும் இல்லாமலே தனியரசை அமைத்து வாழ்ந்து காட்டியவர்கள் அல்லவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இருந்து பலாலி வருவதற்கு அரை மணித்தியாலம் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழகத்தில் ஒரு முறை பெற்றோல் நிரப்பினால்  அது இருவழிப்பயணத்திற்கு போதுமானதாக இருக்கும் என்றே நினை;கிறேன். (விமானத்தின் அளவைப் பொறுத்து மாறுபடலாம்.)( புஆகவே எரி பொருள் பிர்சினை பெரிய பிரச்சினையாக இருக்காது. பலாலி விமானநிலையம் >காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி அடைவது இனவாத ப் போக்கில் சிறலங்கா அரசுக்குப் பிடிக்கவில்லை  என்பதுதான் உண்மையான காரணமாகும்.புலிகளின்  விமானங்கள் கொழும்புவரை சென்று கண்டு போட்டு விட்டு வன்னிக்குத் திரும்பியிருக்கின்றன. பயணிகள் விமானத்திற்கு  சிறிது அதிகளவு தேவைப்படவலாம்)

Link to comment
Share on other sites

11 hours ago, தமிழ் சிறி said:

அரசியல்வாதிகள்... எந்த வித, முன் ஏற்பாடுகளும் இல்லாமல்,
அவசர கதியில்... அறிக்கை விடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

பலாலி விமான நிலையத்தில் பணிபுரிந்தவர்கள் நீண்டகாலம் பணியின்றி இருந்ததால் எல்லாவற்றையும் மறந்திருப்பார்கள். அவர்கள் மீண்டும் பயிற்சி எடுத்து வருவதற்குக் காலதாமதமாகலாம் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இரண்டு அரசியல் வாதிகளும் அவசர கதியில் அறிக்கை விட்டுள்ளனர். 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

தமிழகத்தில் இருந்து பலாலி வருவதற்கு அரை மணித்தியாலம் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழகத்தில் ஒரு முறை பெற்றோல் நிரப்பினால்  அது இருவழிப்பயணத்திற்கு போதுமானதாக இருக்கும் என்றே நினை;கிறேன். (விமானத்தின் அளவைப் பொறுத்து மாறுபடலாம்.)( புஆகவே எரி பொருள் பிர்சினை பெரிய பிரச்சினையாக இருக்காது. பலாலி விமானநிலையம் >காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி அடைவது இனவாத ப் போக்கில் சிறலங்கா அரசுக்குப் பிடிக்கவில்லை  என்பதுதான் உண்மையான காரணமாகும்.புலிகளின்  விமானங்கள் கொழும்புவரை சென்று கண்டு போட்டு விட்டு வன்னிக்குத் திரும்பியிருக்கின்றன. பயணிகள் விமானத்திற்கு  சிறிது அதிகளவு தேவைப்படவலாம்)

போட்ட கண்டு கொழும்பில் வளருகிறதா புலவர். 😂😂😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள எரிபொருள் பிரச்சனை உட்பட பல பிரச்சனைக்கு அரசியல் (பதவியாசை.. ஊழல்.. கமிசன் அரசியல்) மற்றும் இனவாத முடிவுகளே தான் காரணம். 

பொருண்மியப் பிரச்சனை என்றால்.. இந்திய அல்லது பன்னாட்டு தனியார் கம்பனிகளூடான முதலீடுகள் மூலம்.. பிரச்சனைகளை எப்பவோ தீர்த்திருக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களாக மூடப்பட்டிருந்த யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறந்து இயங்க வைப்பதில் பல நடைமுறை சிக்கல்களுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படலாம். JAF என்ற குறியீட்டுடன் சர்வதேச விமான நிலையமாக அழைக்கப்படுவதால் அதற்கென சில கெடுபிடிகள் உண்டு. உதாரணமாக  பயணிகளுக்கான குடிவரவு குடியகல்வு கண்காணிப்பு, அவர்களுக்கு வேண்டிய இதர வசதிகள், பயணிகள் பாதுகாப்பு என்பனவற்றுடன் விமான நிலைய தொழில்நுட்ப பணியாளர்கள், விமானங்களுக்கு 4-5 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்புக்கு உத்தரவாதம் என்பனவும் அடங்கும்.

இருப்பினும் சிறிய தொலைவுகளுக்கு பறக்கும் விமானங்கள் தாம் செல்லும் இடங்களில் எரிபொருளை நிரப்புவதை தவிர்க்க வேண்டுமாயின் (உதாரணமாக எரிபொருள் தட்டுப்பாடு, விநியோக தடங்கல், வேலை நிறுத்தம், அதிக விலை காரணமாக)  புறப்படும் இடத்திலிருந்தே மேலதிக எரிபொருளை ஏற்றிக்கொண்டு(fuel tankering) புறப்படவேண்டும்.  இதன் காரணமாக விமானங்கள் மேலதிக எடையுடன் பறந்து செல்லும்போது வழமையிலும் பார்க்க அதிகமான எரிபொருளை பயணத்தின்போது பயன்படுத்தவேண்டி ஏற்படும்.

நிர்வாக செலவீனத்தில் 25-40% வரை எரிபொருளுக்கே செலவாகின்றது என கணிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் fuel tankering செய்வதால் இச்செலவு மேலும் அதிகரிக்கும். தேவையில்லாத பாரத்தை ஏற்றிக்கொண்டு புறப்படும் விமானம் அதிக சுமை காரணமாக இன்னும் அதிக எரிபொருளை எரித்து வளிமண்டலத்தை அசுத்தம் செய்ய காரணமாக அமையும். இதனால் ஏற்படும் மேலதிக CO2 வெளியேற்றம் பல தொன் நிறைக்கு செல்ல வாய்ப்புண்டு.

சர்வதேச விமான கம்பனிகள் கடந்த காலங்களில் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தமது விமானங்களில் தேவையற்ற மேலதிக சுமைகளை அனுமதிப்பதில்லை. இந்த விதிகளை மீறும் கம்பனிகள் சர்வதேச மட்டத்தில் மதிப்பை இழக்க நேரிடலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.