Jump to content

அதிரடி காட்டும் உக்ரைன் - 35 ஆயிரம் ரஷ்ய படை வீரர்கள் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி காட்டும் உக்ரைன் - 35 ஆயிரம் ரஷ்ய படை வீரர்கள் பலி

போர் தொடங்கியதில் இருந்து இதுவரையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும், உக்ரேனிய ஆயுதப் படைகள் உக்ரைனுடனான போரில் உயிரிழந்த ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையின் மதிப்பீட்டைப் பகிர்ந்து கொள்கின்றன.

இதன்படி, பெப்ரவரி 24 முதல் குறைந்தது 35,750 பேர் கொல்லப்பட்டதாக இப்போது உக்ரைன் அறிவித்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய மதிப்பீடுகள் ரஷ்யா மற்றும் மேற்கத்திய முகவரங்கள் வெளியிடப்பட்டதை விட தொடர்ந்து அதிகமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி காட்டும் உக்ரைன் - 35 ஆயிரம் ரஷ்ய படை வீரர்கள் பலி | 35000 Russian Troops Killed At War

குழந்தை உட்பட குறைந்தது 21 பேர் பலி

இதனிடையே, உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில் ஒரே இரவில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Serhiyivka கிராமத்தில் நடந்த ஏவுகணை தாக்குதலில் ஒன்பது மாடி கட்டிடத்தில் 16 பேர் கொல்லப்பட்டதாக மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது. கிராமத்தில் உள்ள விடுமுறை விடுதியில் நடந்த தனித்தனி தாக்குதலில் குழந்தை உட்பட மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த சில நாட்களில் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா டஜன் கணக்கான ஏவுகணைகளை வீசியுள்ளது. வெள்ளிக்கிழமை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ரஷ்யா குடிமக்களின் இலக்குகளைத் தாக்குகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.

ரஷ்யாவின் இந்த செயலை பயங்கரவாதச் செயல் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். "இது இலக்கு வைக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதல், ரஷ்யா செய்த பயங்கரவாத செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி காட்டும் உக்ரைன் - 35 ஆயிரம் ரஷ்ய படை வீரர்கள் பலி | 35000 Russian Troops Killed At War

 

https://tamilwin.com/article/35000-russian-troops-killed-at-war-1656699786

 

 

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடக்கட்டும்… உக்ரேன் விட ரஷ்யா 30 மடங்குகள் பெரிய நாடு  உந்த இழப்புகள் 30 ஆல் பெருக்கி கணக்கு பார்க்க வேண்டும்.....அப்படி பார்த்தால் ரஷ்யா எற்கனவே..தோல்வி அடைந்து விட்டது 😂🤣.     

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kandiah57 said:

நல்லது நடக்கட்டும்… உக்ரேன் விட ரஷ்யா 30 மடங்குகள் பெரிய நாடு  உந்த இழப்புகள் 30 ஆல் பெருக்கி கணக்கு பார்க்க வேண்டும்.....அப்படி பார்த்தால் ரஷ்யா எற்கனவே..தோல்வி அடைந்து விட்டது 😂🤣.     

தைரியமிருந்தால் மொஸ்கோவில இரண்டு குண்டு உக்ரேனை போடச்சொல்லுங்கோ பாப்பம் 😂

Link to comment
Share on other sites

1 hour ago, Kandiah57 said:

நல்லது நடக்கட்டும்… உக்ரேன் விட ரஷ்யா 30 மடங்குகள் பெரிய நாடு  உந்த இழப்புகள் 30 ஆல் பெருக்கி கணக்கு பார்க்க வேண்டும்.....அப்படி பார்த்தால் ரஷ்யா எற்கனவே..தோல்வி அடைந்து விட்டது 😂🤣.     

30% யுக்ரேன் இப்போ ரஸ்யா கட்டுப்பாட்டில் உள்ளது. 40நாடுகள் ஆயுதங்களை வழங்கியும் யுக்ரேனால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. நாளுக்கு 200 யுக்ரேனியர் இறப்பதாக  ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகமயமான இந்த பொருளாதாரத்தில் எவ்வளவோ தடைகளையும் மீறி இரஸ்சியாவின் ரூபிளின் பெறுமதி உக்கிரேன் சண்டைக்கு முன்னர் இருந்ததை விட அதிகரித்துள்ளது, ஆனால் உலகெங்கும் இந்த போரினால் ஏற்படுகின்ற பாதிப்பினால் உலக மக்கள் அவலப்படுகிறார்கள்.

இங்கு வேலையிடத்தில் ஆரம்பத்தில் உக்கிரேனிற்கு ஆதரவளித்து நிறுவனமூடாகவே நிதியுதவி வழங்கல் என இருந்த நிலமை மாறி முட்டாள்தனமான போர் என சலித்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

உக்கிரேன் தனது இராணுவ வெற்றியினை அரசியல் வெற்றியாக்க முன்வராவிட்டால் உக்கிரேன் கைவிடப்படும் நிலை ஏற்படலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

மேற்கு நாடுகளின் பொருளாதார நிலையில்(தற்போது) நீண்டகால போக்கில் இராணுவ உதவிகளை யூக்ரேனுக்கு வழங்க முடியுமா தெரியவில்லை. இப்போதே ஸ்பெயின், சுவீடன் போன்ற நாடுகளில் அரசுக்கு எதிராக போராட்டங்களை தொடங்கி உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

மேற்கு நாடுகளின் பொருளாதார நிலையில்(தற்போது) நீண்டகால போக்கில் இராணுவ உதவிகளை யூக்ரேனுக்கு வழங்க முடியுமா தெரியவில்லை. இப்போதே ஸ்பெயின், சுவீடன் போன்ற நாடுகளில் அரசுக்கு எதிராக போராட்டங்களை தொடங்கி உள்ளார்கள்.

உண்மைதான், பைடன் ஆட்சிக்கு வந்தவுடன் அப்கானிஸ்தானை கைவிட்டமாதிரி உக்கிரேனிற்கும் நிலை வரலாம். எப்படி அமெரிக்கா அப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கியவுடன் நேச நாடுகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டார்களோ அதே நிலமை வரலாம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

நல்லது நடக்கட்டும்… உக்ரேன் விட ரஷ்யா 30 மடங்குகள் பெரிய நாடு  உந்த இழப்புகள் 30 ஆல் பெருக்கி கணக்கு பார்க்க வேண்டும்.....அப்படி பார்த்தால் ரஷ்யா எற்கனவே..தோல்வி அடைந்து விட்டது 😂🤣.     

போராட்ட காலத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து புளகாங்கிதம் அடைந்தவர்கள் அல்லவோ நாங்கள். 

எங்களுக்கு score தானே முக்கியம். ☹️

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

உக்கிரேன் தனது இராணுவ வெற்றியினை அரசியல் வெற்றியாக்க முன்வராவிட்டால் உக்கிரேன் கைவிடப்படும் நிலை ஏற்படலாம்.

பின்லாந்தும், சுவீடனும் நேட்டோவில் இணையும் process முடிந்தவுடன், டொன்பாசை ரஸ்யாவுக்கு விட்டு கொடுத்து, எஞ்சும்  உக்ரேனுக்கு ஈஈயூ உறுப்புரிமை, நேட்டோ, கையொப்பம் இட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் என ஏதோ ஒன்ஐ கொடுத்து போர் முடிவுக்கு வரலாம் என நினைக்கிறேன்.

ஆனால் ஐரோப்பாவிற்கு ரஸ்யா எரிசக்தியில் தங்கி இருப்பதற்கு சாவு மணி அடித்தது அடித்ததுதான்.

ஒரு 5-10 வருடத்தில் உக்காந்து யோசிக்கும்போது இந்த போரில் வென்றது யார் என்பது புட்டினுக்கு விளங்க தொடங்கும். 

38 minutes ago, Kapithan said:

போராட்ட காலத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து புளகாங்கிதம் அடைந்தவர்கள் அல்லவோ நாங்கள். 

எங்களுக்கு score தானே முக்கியம். ☹️

சும்மா score மட்டும் அல்ல. நாம் விரும்பியது போல இருக்கவேணும் score.

இல்லாவிட்டால் அது மேற்கின் ஊடக பரப்புரை 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

உண்மைதான், பைடன் ஆட்சிக்கு வந்தவுடன் அப்கானிஸ்தானை கைவிட்டமாதிரி உக்கிரேனிற்கும் நிலை வரலாம். எப்படி அமெரிக்கா அப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கியவுடன் நேச நாடுகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டார்களோ அதே நிலமை வரலாம்

பைடன் ஒபாமாவிடம் துணை ஜனாதிபதியாக இருந்த போதே ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டும் என கூறியவர்.

அதே போல் வெளியேறும் ஒப்பந்தத்தை தலிபானுடன் போட்டது, நாள் குறித்தது பைடன் அல்ல. டிரம்ப்.

அமெரிக்கா தன் தேவை முடிந்த பின்பே கைவிடும்.

ரஸ்யா ஒரு அணு சக்கியாக இருக்கும் வரை, ஐரோப்பாவில் அந்த அமெரிக்காவின் தேவை ஒரு போதும் முடியாது.

ஆகவே உக்ரேனை இப்படி கைவிட சாத்தியம் குறைவு.

ஆனால் பின்லாந்து, சுவீடன் இணைந்த பின், போலந்தில் 5th army ஐ இறக்கிய பின், ஜேர்மனிக்கும் ராச்யாவுக்கும் இடையான வர்தகர்கள் நிரந்தரமாக துண்டித்த பின், ரஸ்ய எரி சக்தியை ஐரோப்பிய சந்தையில் இருந்து அகற்றிய பின் - குறித்த பகுதியை ரஸ்யாவுக்கு விட்டு கொடுக்கும்படி அமெருக்கா உக்ரேனை அழுத்தும். அதற்கு விலையாக உக்ரேனுக்கு ஈயூ உறுப்புரிமை கொடுக்கப்படலாம்.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

உலகமயமான இந்த பொருளாதாரத்தில் எவ்வளவோ தடைகளையும் மீறி இரஸ்சியாவின் ரூபிளின் பெறுமதி உக்கிரேன் சண்டைக்கு முன்னர் இருந்ததை விட அதிகரித்துள்ளது, ஆனால் உலகெங்கும் இந்த போரினால் ஏற்படுகின்ற பாதிப்பினால் உலக மக்கள் அவலப்படுகிறார்கள்.

இங்கு வேலையிடத்தில் ஆரம்பத்தில் உக்கிரேனிற்கு ஆதரவளித்து நிறுவனமூடாகவே நிதியுதவி வழங்கல் என இருந்த நிலமை மாறி முட்டாள்தனமான போர் என சலித்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

உக்கிரேன் தனது இராணுவ வெற்றியினை அரசியல் வெற்றியாக்க முன்வராவிட்டால் உக்கிரேன் கைவிடப்படும் நிலை ஏற்படலாம்.

உக்ரைன் ஐரோப்பாவுக்குள்  இருக்கு என்பதையும்
உக்ரோனை  கைவிடுவது  ஐரோப்பாவை  கைவிடுவதற்கு  சமன்  
என்பதையும்  மறந்து  விடுகிறோம்
 

Edited by விசுகு
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

30% யுக்ரேன் இப்போ ரஸ்யா கட்டுப்பாட்டில் உள்ளது. 40நாடுகள் ஆயுதங்களை வழங்கியும் யுக்ரேனால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. நாளுக்கு 200 யுக்ரேனியர் இறப்பதாக  ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

1/5 -20% என நினைக்கிறேன்.

ஆனால் புலிகள் புத்தளத்தை கைவிட்டது போல - 100% யும் இழக்காமல், 20% அதுவும் அதிகம் ரஸ்ய பெரும்பான்மை பகுதிகளை இழக்கலாம் என் உக்ரேன் நினைக்ககூடும். 

1 minute ago, விசுகு said:

உக்ரைன் ஐரோப்பாவுக்குள்  இருக்கு என்பதையும்
உக்ரோனை  கைவிடுவது  ஐரோப்பாவை  கைவிடுவதற்கு  சமன்  
என்பதையும்  மறந்து  விடுகிறோம்
 

👍🏿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

சும்மா score மட்டும் அல்ல. நாம் விரும்பியது போல இருக்கவேணும் score.

இல்லாவிட்டால் அது மேற்கின் ஊடக பரப்புரை 🤣.

பழைய கோசான் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகிறார் ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

போராட்ட காலத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து புளகாங்கிதம் அடைந்தவர்கள் அல்லவோ நாங்கள். 

எங்களுக்கு score தானே முக்கியம். ☹️

கபிதன்  உங்களுக்கு யாழ் கள உறுப்பினர்களை தாக்கமால் ......கருத்துகளைத் தாக்கி கருத்து எழுதத்தெரியாத?  அல்லது உங்களிடம் தலையங்கத்துக்கு கீழ் செல்லப்பட்ட விடயத்துக்கு கருத்துகள் இல்லையா? இந்த சண்டையை பார்த்தால் யானை எலியை தாக்குவது போலுள்ளது  ...யானை போக முடியாத இடமெல்லாம் எலி போகும்… என்பதையும் யானைக்கு இல்லாத திறமைகள் எலியிடம் உண்டியென்பதையும்  யானை விரைவில் புரிந்து கொள்ளும் காலம் வரும் உக்ரேன் மேற்குநாடுகளிடமிருந்தும்  ..அமெரிக்காவிலிருந்தும். ஆயுதங்களைப்பெறறுக்கொள்கிறது.  ஏன் வேண்டாம் என்று  கூறவில்லை......? ரஷ்யா சரியாக நடத்திருந்தால்.  உக்ரேன் ஒருபோதும் மற்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெற்றிருக்காது. இது ரஷ்யாவின் முதலாவது தோல்வி      சும்மா இருந்த சுவீடனும்  பின்லாந்தும  நோட்டோவில் சேர்க்கப்பட்டது இரண்டாவது தோல்வி   எதிர்காலத்தில் எரிவாயு எரிபொருள் விற்பனைக்கு வடிக்கையாளர்களைஇழந்தது மூன்றாவது தோலவி .....அதுவும் ஜேர்மனி யை இழப்பது பாரிய தோல்வி.....

இனி தொடர்ந்தும் ரஷ்யாவுக்கு தோல்வி தான்   இது என்னுடைய உறுதியான கருத்துகள்    மாறாக மேற்க்குயான பரப்புரை இல்லை.  🤣

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

இது ரஷ்யாவின் முதலாவது தோல்வி      சும்மா இருந்த சுவீடனும்  பின்லாந்தும  நோட்டோவில் சேர்க்கப்பட்டது இரண்டாவது தோல்வி   எதிர்காலத்தில் எரிவாயு எரிபொருள் விற்பனைக்கு வடிக்கையாளர்களைஇழந்தது மூன்றாவது தோலவி .....அதுவும் ஜேர்மனி யை இழப்பது பாரிய தோல்வி....

இவ்வளவும் புட்டின் இருக்கும் மட்டும் தான். அதன் பின் சகலதும் சுபம். பழைய குருடி கதவை திறவடி கதைதான்.....:cool:

அடி வாங்கின உக்ரேன் வாய வாயை  அண்ணார்ந்து பாக்க வேண்டியதுதான்.😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தைரியமிருந்தால் மொஸ்கோவில இரண்டு குண்டு உக்ரேனை போடச்சொல்லுங்கோ பாப்பம் 😂

இந்த போர் நிடீக்குமானால் உக்ரேன் படைகள் பலமடையும் வாய்ப்பு நிறையவே உண்டு”     ரஷ்யா பலவீனமான நிலை அடையும் போது அதன் நண்பர்கள் விலகுவர்’.....இப்படி ஒரு நிலை வரும் என்று நான் நினைக்கவில்லை......வந்தால்    உக்ரேன் மொக்கோவில் குண்டுகள் போடும்😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

இந்த போர் நிடீக்குமானால் உக்ரேன் படைகள் பலமடையும் வாய்ப்பு நிறையவே உண்டு”     ரஷ்யா பலவீனமான நிலை அடையும் போது அதன் நண்பர்கள் விலகுவர்’.....இப்படி ஒரு நிலை வரும் என்று நான் நினைக்கவில்லை......வந்தால்    உக்ரேன் மொக்கோவில் குண்டுகள் போடும்😂

 

அண்ணை

உங்கடவாய்க்கு  ஒரு  கிலோ  சக்கரை போடலாம்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

அண்ணை

உங்கடவாய்க்கு  ஒரு  கிலோ  சக்கரை போடலாம்😂

ஏன்…. உக்ரேன், மொக்கோவில் குண்டு போடும் எண்டதுக்கா… 🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பின்லாந்தும், சுவீடனும் நேட்டோவில் இணையும் process முடிந்தவுடன், டொன்பாசை ரஸ்யாவுக்கு விட்டு கொடுத்து, எஞ்சும்  உக்ரேனுக்கு ஈஈயூ உறுப்புரிமை, நேட்டோ, கையொப்பம் இட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் என ஏதோ ஒன்ஐ கொடுத்து போர் முடிவுக்கு வரலாம் என நினைக்கிறேன்.

ஆனால் ஐரோப்பாவிற்கு ரஸ்யா எரிசக்தியில் தங்கி இருப்பதற்கு சாவு மணி அடித்தது அடித்ததுதான்.

ஒரு 5-10 வருடத்தில் உக்காந்து யோசிக்கும்போது இந்த போரில் வென்றது யார் என்பது புட்டினுக்கு விளங்க தொடங்கும். 

சும்மா score மட்டும் அல்ல. நாம் விரும்பியது போல இருக்கவேணும் score.

இல்லாவிட்டால் அது மேற்கின் ஊடக பரப்புரை 🤣.

மன்னிகவும் கற்ப்ஸ். சும்மா பகிடிக்கு சொன்னேன்🙏🏾.

1 hour ago, குமாரசாமி said:

இவ்வளவும் புட்டின் இருக்கும் மட்டும் தான். அதன் பின் சகலதும் சுபம். பழைய குருடி கதவை திறவடி கதைதான்.....

அதாகப்பட்டது…புட்டின் என்ற தனி மனிதன் இல்லாவிட்டால் போர் வந்திராது?

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஏன்…. உக்ரேன், மொக்கோவில் குண்டு போடும் எண்டதுக்கா… 🤣

எனது  இலக்கு உக்ரேன் என்கிற உரோமம்  கிடையாது

ரசியா என்கின்ற  மலை??🤣

அந்த  நாள்???🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

எனது  இலக்கு உக்ரேன் என்கிற உரோமம்  கிடையாது

ரசியா என்கின்ற  மலை??🤣

அந்த  நாள்???🤣

விசுகர்,
கந்தையா அண்ணை... உக்ரேனை, பப்பா மரத்திலை ஏத்தி...
மொஸ்க்கோவுக்கு.. குண்டு போட வைச்சு,
ரசியாவிட்டை... "செம அடி" வாங்கிக் குடுக்க, பிளான் போடுறார். 🤣

சிலோன்காரனை நம்பி... போருக்குப்  போனால், 
இருக்கிற கோவணமும் காணாமல் போகும்.
செலென்ஸ்கிக்கு இது பிடிபட கனநாள் எடுக்கும். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

விசுகர்,
கந்தையா அண்ணை... உக்ரேனை, பப்பா மரத்திலை ஏத்தி...
மொஸ்க்கோவுக்கு.. குண்டு போட வைச்சு,
ரசியாவிட்டை... "செம அடி" வாங்கிக் குடுக்க, பிளான் போடுறார். 🤣

சிலோன்காரனை நம்பி... போருக்குப்  போனால், 
இருக்கிற கோவணமும் காணாமல் போகும்.
செலென்ஸ்கிக்கு இது பிடிபட கனநாள் எடுக்கும். 😂

எனக்கு எவன்  கண்  போனாலும் சந்தோசமே???

நாசமறுப்பார்

எங்களை  வேடிக்கை மட்டுமா  பார்த்தார்கள்  அள்ளி  அள்ளி  கொடுத்துக்கொண்டு

முட்டுக்கட்டையும்  போட்டவங்களல்லே??😭

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எனக்கு எவன்  கண்  போனாலும் சந்தோசமே???

நாசமறுப்பார்

எங்களை  வேடிக்கை மட்டுமா  பார்த்தார்கள்  அள்ளி  அள்ளி  கொடுத்துக்கொண்டு

முட்டுக்கட்டையும்  போட்டவங்களல்லே??😭

உண்மை. 😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

கபிதன்  உங்களுக்கு யாழ் கள உறுப்பினர்களை தாக்கமால் ......கருத்துகளைத் தாக்கி கருத்து எழுதத்தெரியாத?  அல்லது உங்களிடம் தலையங்கத்துக்கு கீழ் செல்லப்பட்ட விடயத்துக்கு கருத்துகள் இல்லையா? இந்த சண்டையை பார்த்தால் யானை எலியை தாக்குவது போலுள்ளது  ...யானை போக முடியாத இடமெல்லாம் எலி போகும்… என்பதையும் யானைக்கு இல்லாத திறமைகள் எலியிடம் உண்டியென்பதையும்  யானை விரைவில் புரிந்து கொள்ளும் காலம் வரும் உக்ரேன் மேற்குநாடுகளிடமிருந்தும்  ..அமெரிக்காவிலிருந்தும். ஆயுதங்களைப்பெறறுக்கொள்கிறது.  ஏன் வேண்டாம் என்று  கூறவில்லை......? ரஷ்யா சரியாக நடத்திருந்தால்.  உக்ரேன் ஒருபோதும் மற்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெற்றிருக்காது. இது ரஷ்யாவின் முதலாவது தோல்வி      சும்மா இருந்த சுவீடனும்  பின்லாந்தும  நோட்டோவில் சேர்க்கப்பட்டது இரண்டாவது தோல்வி   எதிர்காலத்தில் எரிவாயு எரிபொருள் விற்பனைக்கு வடிக்கையாளர்களைஇழந்தது மூன்றாவது தோலவி .....அதுவும் ஜேர்மனி யை இழப்பது பாரிய தோல்வி.....

இனி தொடர்ந்தும் ரஷ்யாவுக்கு தோல்வி தான்   இது என்னுடைய உறுதியான கருத்துகள்    மாறாக மேற்க்குயான பரப்புரை இல்லை.  🤣

கந்தையர், 

என்னால் எழுதப்பட்டதை திரும்பவும் ஒருமுறை வாசியுங்கள். எந்த இடத்தில் உங்களைக் குறிப்பிட்டு எழுதியுள்ளேன் ? காட்டுங்கள்? 

####நல்லது நடக்கட்டும்… உக்ரேன் விட ரஷ்யா 30 மடங்குகள் பெரிய நாடு  உந்த இழப்புகள் 30 ஆல் பெருக்கி கணக்கு பார்க்க வேண்டும்.....அப்படி பார்த்தால் ரஷ்யாஎற்கனவே..தோல்வி அடைந்து விட்டது 😂🤣. #####

என்று எழுதியது நீங்கள். அதிலும்   laughing emoji போட்டது நீங்கள். எந்த உயிரினதும் மரணத்தையிட்டி நான் மகிழ்ச்சி கொள்வதில்லை. 

சிலவேளை நான் எழுதியது உங்களுக்குச் சுட்டிருக்கலாம். அதற்கு நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும் ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

பின்லாந்தும், சுவீடனும் நேட்டோவில் இணையும் process முடிந்தவுடன், டொன்பாசை ரஸ்யாவுக்கு விட்டு கொடுத்து, எஞ்சும்  உக்ரேனுக்கு ஈஈயூ உறுப்புரிமை, நேட்டோ, கையொப்பம் இட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் என ஏதோ ஒன்ஐ கொடுத்து போர் முடிவுக்கு வரலாம் என நினைக்கிறேன்.

ஆனால் ஐரோப்பாவிற்கு ரஸ்யா எரிசக்தியில் தங்கி இருப்பதற்கு சாவு மணி அடித்தது அடித்ததுதான்.

ஒரு 5-10 வருடத்தில் உக்காந்து யோசிக்கும்போது இந்த போரில் வென்றது யார் என்பது புட்டினுக்கு விளங்க தொடங்கும். 

சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகள் தவிர்த்து அனைவரும் போருக்கு முடிவு வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், புரியாத புதிர் இவ்வளவு தடைகளுக்கும் மத்தியில் எவ்வாறு இரஸ்சிய பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்பதுதான்.

15 hours ago, விசுகு said:

உக்ரைன் ஐரோப்பாவுக்குள்  இருக்கு என்பதையும்
உக்ரோனை  கைவிடுவது  ஐரோப்பாவை  கைவிடுவதற்கு  சமன்  
என்பதையும்  மறந்து  விடுகிறோம்
 

உக்கிரேன் மற்றவர்களில் தங்கியிருப்பது அவர்களுக்குதான் ஆபத்தாகலாம். 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.