Jump to content

  ஓய்வூதியம் - சுப. சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                    ஓய்வூதியம்

                                                                                   - சுப. சோமசுந்தரம்

திருநெல்வேலி மாவட்டம் காரியாண்டி என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி தாத்தா தமது தொண்ணூறு வயதிலும் பனையேறும் தொழில் செய்து தம்மையும் தமது மனைவியையும் காப்பாற்றிக் கொள்கிறார் எனும் தகவல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அவர் போற்றுதலுக்குரியவர்; போற்றப்பட்டார் என்பது சரிதான். காட்சித் திரையில் இதனைக் கண்ட ஒவ்வொருவரும், "நம்மிடையே வாழ்வையே சாகசமாக ஏற்று இப்படி ஒருவர் வாழ்கிறார் !" என்று பெருமிதத்தில் நெஞ்சு விம்மியது வரை கூட சரிதான். "நம்மிடையே அரைசாண் வயிற்றுக்காக ஒருவரை தள்ளாத வயதிலும் அல்லல்பட வைத்தோமே !" என்னும் குற்ற உணர்வு இச்சமுகத்தில் எவருக்கேனும் ஏற்படவில்லை எனில் அது சரிதானா? ஆரம்பக் காலத்தில் இருந்தே சோம்பேறித்தனமாய்ப் பிச்சை எடுத்து வாழ்பவர்கள் முதுமையில் அல்லலுறுவதை நாம் பேச வரவில்லை. தமது பன்னிரெண்டு வயது முதல் (அன்று குழந்தைத் தொழிலாளராய்) தொண்ணூறு வயது வரை பனையேறும் உழைப்பாளிக்கு இச்சமூகம் பனையின் உச்சியிலேயே சமாதி கட்டி விடுமோசமூக வலைத்தளங்களின் மூலமாக இவர் பற்றிய செய்தி அரசின் கவனத்தை ஈர்த்ததால் துரைப்பாண்டி தாத்தாவிற்கும் அவரது துணைவியார் வேலம்மாள் பாட்டிக்கும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்க வழி செய்யப்பட்டது ஓரளவு ஆறுதல் செய்தி. சமூகத்தில் வெளிச்சத்திற்கு வராத துரைப்பாண்டியர் எத்தனை பேரோ ?
           வாழ்வில் பெரும்பகுதி விவசாயத் தொழிலாளர்களாகவும், கட்டுமானப் பணியாளர்களாகவும், தனியார் கடை ஊழியர்களாகவும், இன்ன பிற தொழிலாளர்களாகவும் இச்சமூகத்தில் களமாடியோர் முதுமையில் எப்படி வாழ்வார்கள் என்று இச்சமூகமோ அரசுகளோ பெரிய அளவில் நினைத்துப் பார்த்ததுண்டா ? சிறிய அளவில் அவர்கள் நினைக்கப்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். "பணியாளர் வருங்கால வைப்பு நிதியகம்" (Employees Provident Fund Organization - EPFO) என்ற அரசின் அமைப்பிற்கு பணியாளரும் பணி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரும் மாதந்தோறும் பங்களிப்புச் செய்து வரும் பட்சத்தில், இருபது வருடங்களுக்குப் பிறகு சேர்ந்த தொகையுடன் மாதந்தோறும் ஒரு சிறிய ஓய்வூதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது கால அளவிற்கு ஏற்ப வளரும் தன்மையுள்ள  ஓய்வூதியம் அல்ல. இன்று மாதம் ரூபாய் ஐயாயிரம் என்று நிர்ணயிக்கப்படும் ஓய்வூதியம் பத்து வருடங்களுக்குப் பிறகும் ரூபாய் ஐயாயிரம் என்று இருப்பது எவ்வகையில் நியாயம் ? மேலும், பணிக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத்  தரத்தில் பழகியவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் ஓரளவு அத்தரத்தில் வாழ வகை செய்வதே சரியான ஓய்வூதியமாய் அமையும். பசியினால் வாடுவது மட்டும் வறுமையன்று; வாழ்க்கைத் தரம் அதல பாதாளத்திற்கு செல்வதும் வறுமைதான். நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த நோக்கில்தான் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் EPFO தரும் ஓய்வூதியமோ  ஒன்றுமில்லாததற்கு ஏதோ பரவாயில்லை (Something is better than nothing) என்ற வகையிலேயே உள்ளது. இந்நிலையை மாற்றி வாழ்வில் பெரும்பகுதி பணியாற்றியவர்களை எவரிடமும் கையேந்தாமல் வாழ வைப்பது எங்ஙனம்  என்று சிந்தித்துச் செயலாற்றுவதே ஒரு சோஷலிச ஜனநாயகமாக இருக்க முடியும். அதை விடுத்து அரசு ஊழியர்களுக்குக்  கிடைக்கிற நியாயமான ஓய்வூதியத்தையும் நிறுத்துவது சமூகத்தின், அரசுகளின் அராஜகப் போக்கு என்று தான் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் விடியலைத் தருவது தானே சமத்துவம் ? வெளிச்சத்தில் உள்ளோருக்கும் விளக்கை அணை என்பதுவா சமத்துவம் ? எல்லோரையும் ஏற்றி விடு என்றால், அதற்கு மாறாக படியில் ஏறியவர்களையும் இறக்கி விடு என்பதுவா சோஷலிசம் ?
            "பணத்திற்கு எங்கே போவது ?" என்று யாரோ ஒரு அரசியல்வாதி முதலாளியைப் போல் கர்ஜிக்கும் செய்தி வரும் அதே பக்கத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கிய பல ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தியும் வருகிறது. "அரசு வருவாயில் பெரும்பகுதி ஊழியர்களின் சம்பளத்திற்கும் ஓய்வூதியத்திற்குமே  செல்கிறது" என்று நம்பத் தகுந்த பொய்யினைச் சொல்லும் நிதி அமைச்சரே சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எந்த எதிர்ப்புமில்லாமல் (!)  உயர்த்திக் கொள்கிறார்எத்தனை முறை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் தனித்தனியே அன்னாருக்கு  ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. ஓய்வூதியத்தின் நோக்கமே ஒருவர் முதுமையில் கௌரவமாக வாழ வழி செய்வதுதானே ? அப்புறம் அதில் என்ன கௌரவம் ஒரு தரம், கௌரவம் இரண்டு தரம் என்று ஏலம் எல்லாம் ?
             இந்த முதலாளித்துவப்  பார்வையில், பலம் குறைந்த பொதுவுடமைக் கட்சிகளைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கு அல்ல. இது ஏதோ பாசிச அணுகுமுறை கொண்ட தற்காலத்து பாஜக அரசினால் கொண்டுவரப்பட்டது என்று சொல்வதற்கில்லைபொருளாதார மேதை என்று பெரிதும் கொண்டாடப்படும் மனமோகன் சிங் சார்ந்த காங்கிரஸ் அரசின் கைங்கரியம் என்று தான் சொல்ல வேண்டும். முன்னாள் நிதி அமைச்சர் .சிதம்பரம் ஏதோ பேட்டியில், மனிதர்களின் வாழ்நாள் கூடிவிட்டதை பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் (ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்குப் பெயர் 'புதிய ஓய்வூதியத் திட்டம்') கைவிடுவதற்கான ஒரு காரணமாகச் சொன்ன நினைவு. மனிதருக்கு நாகரிகமான ஒரு காரணம் அன்று கிடைக்கவில்லையோ, என்னவோ ! பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாய் இரு தேர்தல்களில் வாக்குறுதி தந்த ஜெயலலிதா இரண்டாவது ஆட்சி காலம் முடியும் தறுவாயில் அதனைப் பரிசீலிக்கக் குழு ஒன்றை அமைத்தார். திட்டத்தை நிறுத்தும் போது இல்லாத பரிசீலனைக் குழு மீண்டும் அமல்படுத்துவதற்கு மட்டும் ஏன் ? ஒரு அடிமை அரசின் முதல்வராயிருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு வாய்ப்பே இல்லை என்று எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் வெகு சாதாரணமாகப்  பேசியது மனதை விட்டு அகல்வதாய்  இல்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்காத திமுக தனது தேர்தல் வாக்குறுதியில்  மீண்டும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் சேர்த்ததும், பின்னர் ஆட்சி அமைந்ததும் தனது நிதியமைச்சரை அதற்கு எதிராகப் பேச வைத்து வேடிக்கை பார்த்ததும் கயமைக்கு ஓர் எடுத்துக்காட்டுமாநில வருவாயில் பெரும் பகுதி அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கே செல்கிறது என்பது எந்த போதி மரத்தின் கீழ் தோன்றிய ஞானோதயம்தேர்தல் வாக்குறுதியின் போது அப்போதி மரம் கண்ணில் தென்படவே இல்லையா ? .சிதம்பரமும் பழனிவேல் தியாகராஜனும் சொல்லும் போது அவர்களையும் மீறி ஒரு பண்ணையார்த்தனம் வெளிப்படுவதை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல  இயலவில்லை. வளர்ச்சித் திட்டங்கள் பற்றி வாய்ப்பு கிழியப் பேசும் இன்றைய அரசியலாளர்க்கு தனிமனித வாழ்வு மேம்பாடு வளர்ச்சித்  திட்டமாய்த் தோன்றாதது விந்தையானது.
            ஓய்வூதியத்திற்கு எதிராக முதலாளித்துவ ஜனநாயக அரசியல்வாதிகள் தான் நிற்கிறார்கள் என்றில்லை. "லஞ்ச ஊழலில் திளைக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஒரு கேடா ?" எனக் கேட்கும் வெகுசனத்திற்கும் குறைவில்லைஅத்தகையோர்க்கு நாம் கூற விரும்புவது, "மனித வரலாறு தெரிந்த நாள் முதல் தனி மனிதர்கள் பெரும்பாலும் பேராசை பெற்றவர்களாகவும், நினைத்தவற்றை அடைய சிறிய பெரிய தீவினை புரிபவர்களாகவுமே வாழ்ந்து வருகிறார்கள். இதனைக் கூறுவதால் நாம் லஞ்ச லாவண்யங்களை நியாயப்படுத்த எண்ணவில்லை. தீவினைக்கான வழிகளை அடைக்க முயல்வதே சமூகத்தில் நீதி நெறியை நிலை நாட்டுமே தவிர, ஒவ்வொரு மனிதனும் நியாய உணர்வுடன் செயல்படுவான் என்று எதிர்பார்ப்பது இருட்டறையில் இல்லாத கருப்புப்  பூனையைத் தேடுவதுவலுக்கட்டாயமாக நல்வழி கைகூடுமா எனில் கைகூடும் என்றே தோன்றுகிறது. உதாரணமாக, அக்காலத்தில் கடவுச்சீட்டு (Passport) வாங்கியதற்கும் இக்காலத்தில் பெறுவதற்கும் எவ்வளவு வேறுபாடு ? சல்லிக்காசு யாருக்கும் தராமல் கால விரயமுமின்றி இன்று எவ்வாறு கைகூடியது ? மனிதர்கள் ஒட்டுமொத்தமாகத்  திடீரென்று திருந்திட வாய்ப்பே இல்லையே !அங்கு அதனை நடைமுறைப்படுத்திய தானியங்கி (automation) முறையை ஒவ்வொரு துறையிலும் நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்களுக்கு ஒழுக்க உறுதிப்பாடு (moral conviction)  வேண்டும். அப்படிச் செய்தால் தம் வருமானமும் போய்விடுமே என்றெண்ணும்  ஆட்சியாளர்களால் நல்ல ஊழியர்களையும் குடிமக்களையும் உருவாக்க இயலாது. எனவே ஊதியம், ஓய்வூதியம் பற்றிப் பேசும்போது மட்டும் பெரும்பாலும் 'தீவினைக்கான வாய்ப்பின்மை ஒழுக்கசீலர்'க்கு நன்னெறியும் நேர்வழியும் கண்ணில் தெரிவது ஒரு வேடிக்கையான வாடிக்கை. இருப்பினும் நாம் கூறியது போல் நடைமுறைகளைச்  செப்பனிடுவது மூலமாகவும், ஊழல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்குவது மூலமாகவும் அரசு இயந்திரத்தைச் சீர் செய்வது ஊதியம், ஓய்வூதியம் இவற்றிற்கு அப்பாற்பட்டு நமக்கான சமூகக் கடமை.
             இறுதியாக தனிப்பட்ட முறையில் ஒன்றிரண்டு வார்த்தைகள். வாழ்க்கையில் பணம்தான் எல்லாம் என்றில்லை. ஆனால் பணம் இல்லாமல் எதுவும் இல்லைகுறிப்பாக முதுமைக் காலத்தில். சாகப் போகிறவனிடம் உன் கடைசி விருப்பம் என்னவென்று கேட்பார்களே ! கேட்காமலேயே நான் சொல்கிறேன் : பழைய ஓய்வூதியத் திட்டத்தினால் எனக்குக் கிடைத்த அமைதியான வாழ்க்கை உலகில் வயதான ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். ஓய்வூதியரான என் தந்தையாரின் மறைவுக்குப் பின் குடும்ப ஓய்வூதியரான என் தாய்க்குக் கிடைத்த நிம்மதியும் பெருமிதமும் இவ்வுலகில் ஒவ்வொரு தாய்க்கும் கிடைக்க வேண்டும். தாங்கிப் பிடிக்கப் பிள்ளைகள் நாங்கள் இருந்தாலும், தம் கணவர் ஊழியம் செய்த அரசினால் எனது தாயார் இவ்வுலகில் பிள்ளைகளைக்  கூட எதிர்பார்க்கும் நிலையில் இல்லை; இக்கர்வம் தரும் நிவாரணத்தை எந்த மருந்தும் தருவதில்லை என்பது என் தாய் வெளிப்படையாய்ச் சொல்லாமல் உணர்வால் தரும் செய்தி. அரசு ஊழியரோ தனியார் ஊழியரோ "யாம் பெற்ற அமைதியினை வாழ்விலும் சாவிலும் பெறுக !" என்பதே செல்லாக் காசு எனத் தெரிந்தும் நான் எழுத விரும்பும் உயில்

  • Like 5
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப.சோமசுந்தரம் அவர்களே…. 
சமூக நலன் சார்ந்த… அருமையான கட்டுரைக்கு நன்றி. 

இதனை….   அரசியல்வாதிகள், அதிகாரிகள் வாசித்து 
விளிம்பு நிலையில் வாழ்கின்ற மூத்த குடி மக்களின்,
இறுதிக் கால வாழ்வை… நிம்மதியாக கழிக்க உதவ வேண்டும்.
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசியமான கட்டுரை ஐயா.  ஓய்வூதியத்தை நிறுத்த முயற்சிப்து அராஜகம்.

On 2/7/2022 at 10:51, சுப.சோமசுந்தரம் said:

ஓய்வூதியத்திற்கு எதிராக முதலாளித்துவ ஜனநாயக அரசியல்வாதிகள் தான் நிற்கிறார்கள் என்றில்லை. "லஞ்ச ஊழலில் திளைக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஒரு கேடா ?" எனக் கேட்கும் வெகுசனத்திற்கும் குறைவில்லை

இந்தியா போன்ற நாடுகளில் அரச ஊழியர்கள் லங்சம் வாங்கி அநீதி செய்வார்கள் என்று அறிந்துள்ளேன். அவர்கள் செய்யும் இலஞ்ச ஊழல் குற்றங்களுக்கு அவர்கள் தண்டிக்கபட வேண்டுமே தவிர  ஓய்வூதியத்திற்கு எதிராக வெகுசனங்கள் செயல்படுவது தவறு.

முதலாளித்துவ ஜனநாயகமாக மேற்கு நாடுகளில் ஓய்வூதிய திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தபடுகின்றது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா 
பனை தென்னை ஏறுபவர்கள் என்றில்லாமல் கூலி வேலை செய்பவர்கள் எவராயினும் ஒரு வயதுக்கு பின் கட்டாய உதவித் தொகை வழங்க வேண்டும்.

எத்தனையோ பேர் வயது போனபின் உழைப்பில்லாமல் சேமிப்பில்லாமல் ரொம்பவும் கஸ்டப்படுகிறார்கள்.

அந்தந்த அரசுகள் இவர்களை கவனிக்க ஏதாவது செய்தே ஆகணும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2022 at 02:45, ஈழப்பிரியன் said:

பனை தென்னை ஏறுபவர்கள் என்றில்லாமல் கூலி வேலை செய்பவர்கள் எவராயினும் ஒரு வயதுக்கு பின் கட்டாய உதவித் தொகை வழங்க வேண்டும்.

எத்தனையோ பேர் வயது போனபின் உழைப்பில்லாமல் சேமிப்பில்லாமல் ரொம்பவும் கஸ்டப்படுகிறார்கள்.

அந்தந்த அரசுகள் இவர்களை கவனிக்க ஏதாவது செய்தே ஆகணும்.

நன்றாக சொன்னீர்கள். அந்த நாடுகளில்  அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்களோ அரசியல்வாதிகளோ  இதைபற்றி சிறிதும் அக்கறை கொள்ளவில்லையே 😞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2022 at 10:51, சுப.சோமசுந்தரம் said:

இறுதியாக தனிப்பட்ட முறையில் ஒன்றிரண்டு வார்த்தைகள். வாழ்க்கையில் பணம்தான் எல்லாம் என்றில்லை. ஆனால் பணம் இல்லாமல் எதுவும் இல்லைகுறிப்பாக முதுமைக் காலத்தில். சாகப் போகிறவனிடம் உன் கடைசி விருப்பம் என்னவென்று கேட்பார்களே ! கேட்காமலேயே நான் சொல்கிறேன் : பழைய ஓய்வூதியத் திட்டத்தினால் எனக்குக் கிடைத்த அமைதியான வாழ்க்கை உலகில் வயதான ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். ஓய்வூதியரான என் தந்தையாரின் மறைவுக்குப் பின் குடும்ப ஓய்வூதியரான என் தாய்க்குக் கிடைத்த நிம்மதியும் பெருமிதமும் இவ்வுலகில் ஒவ்வொரு தாய்க்கும் கிடைக்க வேண்டும். தாங்கிப் பிடிக்கப் பிள்ளைகள் நாங்கள் இருந்தாலும், தம் கணவர் ஊழியம் செய்த அரசினால் எனது தாயார் இவ்வுலகில் பிள்ளைகளைக்  கூட எதிர்பார்க்கும் நிலையில் இல்லை; இக்கர்வம் தரும் நிவாரணத்தை எந்த மருந்தும் தருவதில்லை என்பது என் தாய் வெளிப்படையாய்ச் சொல்லாமல் உணர்வால் தரும் செய்தி. அரசு ஊழியரோ தனியார் ஊழியரோ "யாம் பெற்ற அமைதியினை வாழ்விலும் சாவிலும் பெறுக !" என்பதே செல்லாக் காசு எனத் தெரிந்தும் நான் எழுத விரும்பும் உயில்

நல்லதொரு வாழ்வியல் சிந்தனை ஐயா 🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2022 at 02:45, ஈழப்பிரியன் said:

ஐயா 
பனை தென்னை ஏறுபவர்கள் என்றில்லாமல் கூலி வேலை செய்பவர்கள் எவராயினும் ஒரு வயதுக்கு பின் கட்டாய உதவித் தொகை வழங்க வேண்டும்.

எத்தனையோ பேர் வயது போனபின் உழைப்பில்லாமல் சேமிப்பில்லாமல் ரொம்பவும் கஸ்டப்படுகிறார்கள்.

அந்தந்த அரசுகள் இவர்களை கவனிக்க ஏதாவது செய்தே ஆகணும்.

கட்டாய மருத்துவ காப்புறுதியும் கட்டாய ஓய்வூதிய காப்புறுதியும் சட்டமாக கொண்டு வந்தாலே பாதி பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும்.அத்துடன் இலவசங்களுக்கு எல்லை வைத்திருக்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.