Jump to content

சூசி - Sushi செய்வது இத்தனை இலகுவானதா ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

படத்தில் இருப்பது Maki அல்லவா ?
Sushi யில் மீன் துண்டு சோறுக்கு மேல் இருக்கும்.

What is sushi vs maki?
 
 
Both sushi and maki have gained much popularity that one can come across this Japanese dish in many countries. Sushi is a Japanese dish made from rice, and maki is just a variety of sushi. Sushi is a rice dish garnished with fermented fish and other seafood and flavored with vinegar.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

Sushi யில் மீன் துண்டு சோறுக்கு மேல் இருக்கும்.

பொதுவாக வைப்பது, மீனின் சினை, அளவில் பெரிய முட்டை. இது salmon சினையின் முட்டைகள் பெரிது. பொதுவாக பயன்படுத்துவது.

ஆனால் , sea urchin உம் ஜப்பானியர்களால் அதிகம் விரும்பப்படுவது.

1 hour ago, இணையவன் said:

Sushi யில் மீன் துண்டு சோறுக்கு மேல் இருக்கும்.

பொதுவாக வைப்பது, மீனின் சினை, அளவில் பெரிய முட்டை. இது salmon சினையின் முட்டைகள் பெரிது. பொதுவாக பயன்படுத்துவது.

ஆனால் , sea urchin உம் ஜப்பானியர்களால் அதிகம் விரும்பப்படுவது.

1 hour ago, இணையவன் said:

Sushi யில் மீன் துண்டு சோறுக்கு மேல் இருக்கும்.

பொதுவாக வைப்பது, மீனின் சினை, அளவில் பெரிய முட்டை. இது salmon சினையின் முட்டைகள் பெரிது. பொதுவாக பயன்படுத்துவது.

ஆனால் , sea urchin உம் ஜப்பானியர்களால் அதிகம் விரும்பப்படுவது.

1 hour ago, இணையவன் said:

Sushi யில் மீன் துண்டு சோறுக்கு மேல் இருக்கும்.

பொதுவாக வைப்பது, மீனின் சினை, அளவில் பெரிய முட்டை. இது salmon சினையின் முட்டைகள் பெரிது. பொதுவாக பயன்படுத்துவது.

ஆனால் , sea urchin உம் ஜப்பானியர்களால் அதிகம் விரும்பப்படுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா  கடைஞ்சா ...எங்களுக்கு கேட்க்கிறது அதற்காக நான்கு   தடவைகள் சொல்ல வேண்டுமா ?😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

 

நம்ம பங்கர் முந்தியும் இரண்டு பிளேட் சோறு, ஆட்டு இறைச்சியோடை அடித்து விட்டு வந்திருக்கிறேன் என்று... சொன்னவர்.

ஆள் ஆட்டுகறிச்சோத்துப் பிரியர் போலை கிடக்குது.... 😁

பாத்தி கட்டி சோத்தை அமுக்காமல் சுசி போல நல்ல சத்தான சாப்பாட்டை சாப்பிட சொல்லுங்கோ. பின்னடிக்கு சுகர் வருத்தம் எட்டிப்பாக்க சந்தர்பம் நிறைய இருக்கு...😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2022 at 06:01, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

எனக்கு  🥑 sushi பிடித்த ஒன்று.. teriyaki chickenம் பரவாயில்லை.

இலகுவான செய்முறைதான் ஆனாலும் வீட்டில் செய்யும் அளவிற்கு பிடித்த உணவாக இது இல்லை.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2022 at 21:50, suvy said:

லேற்றா வந்தாலும் ஒரு லேற்றஸ்ட்  செய்முறையுடன் வந்திருக்கிறீர்கள்......!  👍

நல்லா இருக்கு நன்றி......!   

நன்றி அண்ணா

On 4/7/2022 at 21:57, ஈழப்பிரியன் said:

பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.பச்சை மீனாக இருப்பதால் எனக்கு பிடிப்பதில்லை.

கட்டாயம் மீன்தான் வைக்கவேண்டும் என்றில்லை. தனிய மரக்கறிக்கூட வைக்கலாம் அண்ணா. ஸோஸ் சரியானதாக இருந்தால் சரி.

On 4/7/2022 at 22:14, Kadancha said:

sushi என்பது செய்யும் முறை.

smoked  salmon, இறால், கணவாய், roasted meats, பக்குவமாக அரியப்பட்ட சீவல்கள் என்று, sushi க்கு கற்பனையே  எல்லை.

உண்மைதான். விதவிதமாய் வைத்து உண்ணலாம். 

On 4/7/2022 at 22:21, குமாரசாமி said:

நான் இவ்வளவுநாளும் கடையிலைதான் வாங்கி சாப்பிட்டு இருக்கிறன். பாப்பம் நேரமிருந்தால் செய்து பாக்கத்தான் இருக்கு...
செய்முறைக்கு நன்றி👍🏾

கட்டாயம் செய்து பாருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2022 at 22:47, Nathamuni said:

ம்..ம்ம்... சூசியத்தை தான் ஸ்டைலா சூசி எண்டு சொல்லுறியள் எண்டு ஓடி வந்து பார்த்தேன்.

ஜப்பானிய சுசி என்று தலைப்பைப்போடிருக்கலாமே...

சரி... உந்த சுசி ஒரு வில்லங்கம் பிடிச்ச சாமான். பச்சை மீன், பிடிப்பதில்லை.

ஜப்பான்காரர், கற்பனையே  எல்லை என்று கடஞ்ச சொன்ன மாதிரி, உத மாதிரி கண அயிட்டம் செய்து, ஒரு கன்வேயர் பெல்டில சுத்த வைச்சு, பரவசப்படுத்தி, கூடின காசுக்கு வித்துப்போடுவினம்.

நான் மீனை கொஞ்சம் வேக வைத்து ட்ரை பண்ணப்போறன். செய்முறைக்கு நன்றி. 🙏

இது ஒரு tray £10, £12 என்று விக்கிறாங்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால் அவ்வளவு வராது போல இருக்குது. இந்த பொருட்களை எங்கே வாங்கலாம். பாசி என்று நீங்கள் சொல்வது, seaweed என்பதா ?

****

அது சரி அத்தார் சரியான கசவாராம் போலை கிடக்குது.

இப்படி தேடி, தேடி, சமைச்சு கொடுக்கிற உங்களுக்கு, இன்னும் ஆறு விரலில மோதிரத்தை போட்டிருக்கலாமே, சா... என்ன அத்தார்...? 😭

கொடுமை என்ன  என்றால் வீட்டில் அத்தாருக்கு மட்டும் இது பிடிக்காது. வேப்பெண்ணை குடிக்கக் கொடுத்ததுபோல் வேண்டா வெறுப்பாய் உண்ணும் மனிசன் ஒரு மோதிரமே போடார். இதுக்குள்ள எல்லா வீரலுக்குமா.. 

On 4/7/2022 at 23:02, குமாரசாமி said:

சத்தியமாய் நானும் யோசிச்சனான்.பிறகு எனக்கு இப்ப காலம் கூடாது எண்டு யோசிச்சுப்போட்டு பேசாமல் இருந்திட்டன்.பத்து விரலுக்கு மோதிரமும் இரண்டு கைக்கும் நாலு சோடி காப்பும் கிலுங்கியிருக்க வேணும் 😂

கருவாடு வைச்சு சுத்திப்பாருங்கோ. அந்த மாதிரி இருக்குமெண்டு நினைக்கிறன்.🤔

கருவாயாட்டைப் பொரித்துப்போட்டு வைத்தால் அதுவும் நன்றாகத்தான் இருக்கும்.

On 5/7/2022 at 00:00, நிலாமதி said:

 செய்முறைக்கு நன்றி

எங்கள் வீட்டிலும்  மக்களுக்கு பிறந்த நாள் என்றால் வாங்குவது. நான் பச்சை மீன் இறைச்சி சாப்பிடமாட்டேன். இதோடு ஒரு பச்சை நிறத்தில் பச்சை சட்னி போல ஒன்று ..ச் .சா பேர் வருகுதில்லை. அதை சோயா சாஸ் உடன் கலந்து  தொட்டு சாப்பிடடால் உச்சியில் அடிக்கும்.  என்னை தவிர மற்றவர்கள் சாப்பிடுவார்கள்  நான் வெஜி   மட்டும் சாப்பிடுவேன்.  ஆ ..நினைவு ..வந்திட்டுது  வஸாபி ..wasabi

அவர்களின் உணவுகள் எல்லாம் சத்தானது. நாங்கள் தான் அவிச்சு சக்கையை உண்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2022 at 00:16, Nathamuni said:

இதன் சுவை என்ன?

உறைப்பு இல்லை. ஆனாலும் நீங்கள் சொன்னது போல, உச்சியில் அடிக்கும்..... மனம் தொடாதே என்று சொல்லும், நா ஒரு சிறு துண்டை சுவை என்று சொல்லும்.

உச்சியில் உதறும் அந்த கணத்தில், ஏன்டா வாயில் வைத்தோம் என்று இருக்கும்... சிறிது நேரத்தில், இன்னோரு முறை ட்ரை பண்ணினால் என்ன என்று இருக்கும்?

293016377_10218431652216201_132493807196

இந்தக் கிழங்கில் தான் அரைப்பது.

On 5/7/2022 at 10:49, குமாரசாமி said:

இப்ப நான் என்ரை ஆளுட்டை சுசி எண்ட சாப்பாட்டை இண்டைக்கு செய்து சாப்பிடுவமோ எண்டு கேட்டன்....
அதுக்கான பதில்...
பசுமதியை நல்லாய் குழைய விடுறன்
நல்லாய் ஆற விடுறன்
நாலு கரட் துண்டை கீலம் கீலமாய் வெட்டி போடுறன்
அவக்கோடாவையும் கீலம் கீலமாய் வெட்டி போடுறன்
ரின் மீனை அப்பிடியே தூவி விடுறன்
திரணை திரணையாய் உருட்டி வைக்கிறன்......
பருப்புக்கறியை தண்ணியாய் வைக்கிறன்(சோயா சோஸ்க்கு பதிலாய்) 
மத்தியான சாப்பாடு இதுதான்.


எங்கடை சாம்பார் புத்தி எப்பதான் மாறுமோ என மனதுக்குள் புறுபுறுத்தபடி குமாரசாமி வேலைக்கு நடந்தே சென்றார் 🚶🏾‍♂️:cool:

பசுமதியைக் குழைய விட்டாலும் அந்தச் சோற்றின் சுவை வருமா என்று தெரியவில்லை. செய்து பாக்கிறதில நாட்டமா என்ன

நீங்கள் செய்து மனிசிக்குக் குடுக்கிறதை விட்டு உப்பிடிக்க கேட்டால்

😀😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2022 at 13:05, goshan_che said:

புழுங்கல் அரிசி சோறு...

ஆட்டுக்கறி...

கீரி மீன் பொரியல்...

# சூசி எல்லாம் கால் தூசி

சூசியை எப்பவாவது உண்ணலாமே தவிர எங்கள் உணவின் சுவை தனிதான். நாங்கள் ஆட்டையும் மீனையும் கலப்பதில்லை. 

On 5/7/2022 at 16:17, இணையவன் said:

படத்தில் இருப்பது Maki அல்லவா ?
Sushi யில் மீன் துண்டு சோறுக்கு மேல் இருக்கும்.

Maki என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள்?? சுவைக்காக விடும் சோசயா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2022 at 03:41, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கு  🥑 sushi பிடித்த ஒன்று.. teriyaki chickenம் பரவாயில்லை.

இலகுவான செய்முறைதான் ஆனாலும் வீட்டில் செய்யும் அளவிற்கு பிடித்த உணவாக இது இல்லை.. 

இதை செய்து ஃபிரிஜ் இல் வைத்து ஒருவாரம் வரை  உண்ண முடியும். அதற்காக முழு உணவாக அல்ல. உண்ணும்போதுதான் ஸோஸ் அல்லது ரைஸ் வினிகர் விட்டு உண்ண வேண்டும்

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.