Jump to content

கனடாவில்... குழந்தைகளை மிக மோசமாக தாக்கிய, தமிழ் பெண் - நீதிமன்றம் கொடுத்த தண்டனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் குழந்தைகளை மிக மோசமாக தாக்கிய தமிழ் பெண் - நீதிமன்றம் கொடுத்த தண்டனை | Tamil Lady Pleading Guilty To Assaulting Children

கனடாவில்... குழந்தைகளை மிக மோசமாக தாக்கிய, தமிழ் பெண் - நீதிமன்றம் கொடுத்த தண்டனை

கனடாவில் ஐந்து குழந்தைகளை அறைந்து, மண்டியிட்ட செய்து, இழுத்துச் சென்றதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் GTA தினப்பராமரிப்பு ஊழியருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படவில்லை.

தற்போது 52 வயதாகும் மாக்டலீன் வசந்தகுமார், மேப்பிள் அவென்யூவில் உள்ள பிரைட்பாத் மேப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஒன்ட், மில்டனில் உள்ள BrightPath Early Learning Centre மற்றும் குழந்தை பராமரிப்புக்கு சொந்தமான இரண்டு இடங்களில் ஒன்று.

மாக்டலீன் வசந்தகுமார் குழந்தைகளை அறைவது, மண்டியிட செய்வது, அவர்களின் தலைமுடியை இழுப்பது, காதுகளை முறுக்குவது மற்றும் தரையில் இழுத்துச் செல்வது போன்றவற்ற குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காணொளிகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. வியாழன் அன்று மில்டன் நீதிமன்றத்தில் ஐந்து தாக்குதல் வழக்குகளில் மாக்டலீன் வசந்தகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

15 மாத நிபந்தனையுடன் கூடிய தண்டனை 

இதனையடுத்து குற்றவாளிக்கு சமூகத்தில் அனுபவிக்க 15 மாத நிபந்தனையுடன் கூடிய தண்டனையை நீதிபதி வழங்கினார், முதல் ஏழு மாதங்கள் வீட்டுக் காவலில் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த பெண்ணுக்கு போதுமான தண்டனை வழங்கப்படவில்லையென பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் தாயார் தெரிவித்துள்ளார். "இது நியாயமில்லை. நான் தேடிக்கொண்டிருந்த நீதி இதுவல்ல என்று உணர்கிறேன் - இவர்கள் குழந்தைகள்," என்று அவர் கூறினார்.

குறித்த பெண் நிச்சயம் சிறைக்குச் செல்லத் தகுதியானவள். ஒவ்வொரு குழந்தைக்கும், பெற்றோராகிய எங்களுக்கும் அவள் ஏற்படுத்திய வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நாம் எப்படி வேதனைப் பட்டோமோ அப்படியே அந்த பெண்ணும் கஷ்டப்பட வேண்டும்." கடந்த ஆண்டு நவம்பரில், இரண்டு முன்னாள் ஊழியர்கள் மையத்தில் தனது குழந்தையைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்ட பின்னர் இரண்டு குழந்தைகளின் தாய் பேசினார்.

அப்போது ஏறக்குறைய இரண்டு வயதாக இருந்த தனது மகனை உதைத்து, தாக்கி, மண்டியிட செய்து, இழுத்துச் செல்லும் காணொளிகளை காவல் நிலையத்தில் பார்த்ததாக அவர் கூறுகிறார்.

கனடாவில் குழந்தைகளை மிக மோசமாக தாக்கிய தமிழ் பெண் - நீதிமன்றம் கொடுத்த தண்டனை | Tamil Lady Pleading Guilty To Assaulting Children

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 

ஹால்டன் பிராந்திய பொலிஸ் சேவையின் விசாரணையின் பின்னர் இரு தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. வசந்தகுமாரின் குற்றங்கள் அனைத்தும் 2020 இல் நடந்தன. அவர் மீது செப்டம்பர் 29, 2021 அன்று குற்றம் சாட்டப்பட்டது.

6 தாக்குதல்களை எதிர்கொண்ட 22 வயது பெண் மீதான வழக்கு இன்னும் நீதிமன்றங்களில் இருக்கின்றது.

குற்றச்சாட்டுகளின் போது, பிரைட்பாத் கிட்ஸ், ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகவும், குழந்தைகள் உதவி சங்கம் (CAS) மற்றும் ஹால்டன் பொலிஸாரின் விசாரணைகளை ஆதரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளிடம் தவறாக நடத்துதல் அல்லது இரக்கமற்ற நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எங்கள் எந்த மையத்திலும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்படாது என்று நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

https://tamilwin.com/article/tamil-lady-pleading-guilty-to-assaulting-children-1657138453

Link to comment
Share on other sites

அவரின் உரிமம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.’
இத்தொழிலுக்கு இவர் பொருத்தமற்றவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/7/2022 at 13:30, nunavilan said:

அவரின் உரிமம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.’
இத்தொழிலுக்கு இவர் பொருத்தமற்றவர்.

இங்கே ஒரு சீனப்பெண், விஸ்கி போத்தல் மூடியில், விஸ்கி ஊத்திக் கொடுத்து, குழந்தைகளை, உபத்திரவம் தராமல் தூங்க வைக்கும் வேலை செய்து, பிடிபட்டார். சிறையும் சென்றார்....

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இங்கே ஒரு சீனப்பெண், விஸ்கி போத்தல் மூடியில், விஸ்கி ஊத்திக் கொடுத்து, குழந்தைகளை, உபத்திரவம் தராமல் தூங்க வைக்கும் வேலை செய்து, பிடிபட்டார். சிறையும் சென்றார்....

எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது. தொழில் முனைவோருக்கு மேலதிக வழிகாட்டல்கள் தேவை. குழந்தைகளைப் பராமரிக்கும் தொழிலுக்கான தகுதித் தேர்வுகளில் வெறுமனே சான்றிதழ்களோடு நிற்காது  மூன்றிலிருந்து  ஆறுமாதத்திற்குள்ளான  உளவியற் பரிசோதனை அறிக்கை போன்றவற்றையும் கோரவேண்டும். அவசர உலகில் பணத்துக்காக மட்டுமே தொழில். இதில் குழந்தையாவது மனிதராவது என்பதே நிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2022 at 05:33, தமிழ் சிறி said:

 

அப்போது ஏறக்குறைய இரண்டு வயதாக இருந்த தனது மகனை உதைத்து, தாக்கி, மண்டியிட செய்து, இழுத்துச் செல்லும் காணொளிகளை காவல் நிலையத்தில் பார்த்ததாக அவர் கூறுகிறார்.

கனடாவில் குழந்தைகளை மிக மோசமாக தாக்கிய தமிழ் பெண் - நீதிமன்றம் கொடுத்த தண்டனை | Tamil Lady Pleading Guilty To Assaulting Children

 

குடும்பப்பெயர் தமிழாக இருந்தால் இவர் தமிழரா?🤔

முதற்பெயர் மாக்டலீன் என்றும் படத்தில் உள்ளவரின் தோல் நிறமும் தமிழர்தான் என்பதை சந்தேகப்படவைக்கின்றது. 

எனினும் யாராக இருந்தாலும் குழந்தைகளை அடித்து மண்டியிடச் செய்பவருக்கு இன்னும் அதிக தண்டனை கொடுத்திருக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

குடும்பப்பெயர் தமிழாக இருந்தால் இவர் தமிழரா?🤔

முதற்பெயர் மாக்டலீன் என்றும் படத்தில் உள்ளவரின் தோல் நிறமும் தமிழர்தான் என்பதை சந்தேகப்படவைக்கின்றது. 

முகம் காட்டாவிடில், யாருடைய உடலையும் காட்டலாம் என்பதால்..... உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

முகம் காட்டாவிடில், யாருடைய உடலையும் காட்டலாம் என்பதால்..... உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை.

எனினும் அவர் தமிழ்ப்பெண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வசந்தகுமார் என்பவர் வேற்றினப்பெண்ணை மணந்து தமிழரின் அடிபோடும் கலாச்சாரத்தை ஊட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கு🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

எனினும் அவர் தமிழ்ப்பெண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வசந்தகுமார் என்பவர் வேற்றினப்பெண்ணை மணந்து தமிழரின் அடிபோடும் கலாச்சாரத்தை ஊட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கு🤭

அப்படி சொல்ல முடியாது, ஆக்கினேசு, மரியா மடலின், பிங்கி டயானா, டயானி என்று பல கிறிஸ்தவ பெயர்களை ஊரில் கேட்டிருக்கிறேன். ஜே ஆர் மனைவி பெயர் எலினா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கிருபன் said:

குடும்பப்பெயர் தமிழாக இருந்தால் இவர் தமிழரா?🤔

முதற்பெயர் மாக்டலீன் என்றும் படத்தில் உள்ளவரின் தோல் நிறமும் தமிழர்தான் என்பதை சந்தேகப்படவைக்கின்றது. 

எனினும் யாராக இருந்தாலும் குழந்தைகளை அடித்து மண்டியிடச் செய்பவருக்கு இன்னும் அதிக தண்டனை கொடுத்திருக்கலாம்.

பெயர் வசந்தகுமார் என வந்திருப்பதையொட்டி  தமிழர் என tamilwin தலையங்கமிட்டிருக்கிறதென யூகிக்கிறேன். 

இனத்தைக் குறிப்பிட்டு செய்தி வெளியிடும் நிலையில் பெரும்பாலான  கனடா ஊடகங்கள் இல்லை. இது அவர்களுக்கே பிரச்சனையாக முடியலாம். 

தMழ்வின் செய்திகளை நம்பி கருத்திரைப்பதில் அவதா தேவை. 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.