Jump to content

நியமன எம்பிக்களாக தென்னிந்தியர்களை தேர்வு செய்த பாஜக அரசு - 'மிஷன் சௌத் இந்தியா'வின் ஒரு பகுதியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நியமன எம்பிக்களாக தென்னிந்தியர்களை தேர்வு செய்த பாஜக அரசு - 'மிஷன் சௌத் இந்தியா'வின் ஒரு பகுதியா?

  • நந்தினி வெள்ளைச்சாமி
  • பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம்,@NARENDRAMODI/TWITTER

தென்னிந்தியாவின் நான்கு பிரபலமான ஆளுமைகள், குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டு நியமிக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா, விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா (கேரளா), பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத் (ஆந்திர பிரதேசம்), கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக தேர்வாகின்றனர்.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நால்வருக்கும் தன் ட்விட்டர் பக்கத்தில் தனித்தனியாக வாழ்த்துகளை பகிர்ந்திருந்தார். அவற்றில், நான்கு பேருடைய தனிச்சிறப்புகளை குறிப்பிட்ட மோதி, இளையராஜா குறித்த பதிவில், "எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர்" என குறிப்பிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

நியமன எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் நால்வரும் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பது அவர்களின் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமா அல்லது அம்மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்த அக்கட்சி கையிலெடுத்த உத்தியா என்ற கேள்வி பல்வேறு தரப்புகளிலிருந்தும் எழுந்துள்ளது. கர்நாடகா தவிர்த்த மற்ற 4 தென்னிந்திய மாநிலங்களில் பாஜக தன் இருப்பை விரிவுபடுத்தவும் ஆட்சியில் அமரவும் பல்வேறு உத்திகளை கையாண்டு வரும் நிலையில், தென்மாநில ஆளுமைகளை முன்னிறுத்துவது அதில் ஒரு பகுதியா என்றும் கேள்வி எழுகிறது.

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஜூலை 2, 3 ஆகிய தேதிகளில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்த சில தினங்களில் நியமன எம்.பிக்கள் குறித்த அறிவிப்பு வந்திருக்கிறது. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், இந்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தேசிய செயற்குழு கூட்டத்தில் ஜூலை 3 அன்று உரையாற்றிய பிரதமர் மோதி, தெலங்கானா மாநிலத்தை முன்னிறுத்தி பேசினார். மாநிலத்தின் வளர்ச்சியை குறிப்பிட்டு பேசிய அவர், "சப்கா சாத் சப்கா விகாஸ் (அனைவரும் இணைந்து அனைவருக்குமான முன்னேற்றம்) என்ற கொள்கை அடிப்படையில் தெலங்கானாவின் வளர்ச்சிக்காக பாஜக பணியாற்றுவதாக" குறிப்பிட்டார். மேலும், 'வாரிசு அரசியல்' குறித்தும் விமர்சனம் செய்திருந்தார். தென் மாநிலங்களுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்யும் மோதி, 'வாரிசு அரசியல்' விமர்சனத்தை முன்வைத்துவருகிறார்.

2023ஆம் ஆண்டில் தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முன்கூட்டியே தேர்தல் வேலைகளைத் தொடங்கியுள்ளதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

இளையராஜா

பட மூலாதாரம்,@NARENDRAMODI/TWITTER

"பாஜகவின் திட்டம் தெளிவாக இருக்கிறது"

தேசிய செயற்குழு கூட்டத்தை ஐதராபாத்தில் நடத்தியது, 4 நியமன எம்.பிக்களை தென்மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுத்தது அனைத்தும், பாஜகவின் பரந்த உத்தியின் ஒரு பகுதியே என, மூத்த பத்திரிகையாளர் பல்லவி கோஷ் தெரிவிக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தன்னுடைய கணக்கை இன்னும் தொடங்காத, அமைப்பு ரீதியாக பலமில்லாத தென்மாநிலங்களில் கவனம் செலுத்துவதுதான் 2024-க்கான (நாடாளுமன்ற தேர்தலுக்கான) பாஜகவின் திட்டம் என்பது தெளிவாக இருக்கிறது. தற்போது பிரதமர் மோதியின் உத்தி எளிதானதாக இருக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் 'தென்மாநிலங்களை நோக்கிச் செல்லுங்கள்" என்பதுதான் பிரதமர் மோதியின் குரலாக இருந்தது. அதனால் தான் அக்கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது.

தென்மாநிலங்கள் எப்போதும் பாஜகவுக்குக் கடினமானதாகவே இருந்திருக்கிறது. தென்னிந்திய மாநிலங்கள் பாஜகவுக்கு முக்கியம் என்பதையே இந்த நியமன எம்.பிக்களின் தேர்வு காட்டுகிறது. பிரதமர் மோதி தொடர்ச்சியாக தென்னிந்திய மாநிலங்களுக்குப் பயணம் செய்கிறார், திட்டங்களை தொடங்கிவைக்கிறார். 2024ஆம் ஆண்டுக்கான பாஜகவின் பரந்த உத்தியின் சமீபத்திய உதாரணம்தான் தென்மாநிலங்களிலிருந்து எம்.பிக்களை நியமித்தது" என்றார்.

"பிம்ப அரசியல் செய்கிறது பாஜக"

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், "தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக இருக்கிறார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருக்கின்றனர். பிறபடுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த மோதி பிரதமராக இருக்கிறார். இப்படி 'பிம்ப' அரசியலைத்தான் பாஜக செய்கிறது.

நியமன எம்.பிக்கள் தேர்வில் தென்மாநிலங்களுக்கு அளித்திருக்கும் முக்கியத்துவம், அடுத்தத் தேர்தலுக்கான வேலைகளை பாஜக இப்போதே தொடங்கிவிட்டதாகக் கருதலாம்" என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிக்கான பாஜக பொறுப்பாளராக, இந்திய நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

"2023 டிசம்பர் மாதத்தில் தெலங்கானாவில் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், இப்போதே தொடர் வேலைகளை பாஜகவினர் ஆரம்பித்துவிட்டனர். தமிழ்நாட்டிலும் 4 மக்களவை தொகுதிகளுக்கு பொறுப்பாளராக வி.கே.சிங்கை நியமித்திருப்பதும் முன்கூட்டிய வேலையாகத்தான் இருக்கிறது" என்றார் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

மேலும், "தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற அளவில்தான் இன்னும் அரசியல் விவாதம் தொடர்கிறது. ஆனால், அதிமுகவின் இடம் வெற்றிடமானால் அந்த இடத்திற்கு பாஜக வரும்" என்றார், அவர்.

தென்னிந்திய மாநிலங்களிலிருந்து நியமன எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது பாஜகவின் தேர்தல் உத்தியா என, பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவிடம் பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.

 

குஷ்பு

பட மூலாதாரம்,@KHUSHSUNDAR/TWITTER

இதற்கு பதில் அளித்த அவர், "பாஜகவின் எல்லா நடவடிக்கைகளிலும் ஏன் அர்த்தம் கற்பிக்கப்படுகிறது? தகுதியானவர்களுக்குத்தானே வழங்கப்படுகின்றது. உத்தியாக ஏன் பார்க்க வேண்டும்? நால்வருக்கும் கொடுக்கக்கூடாதா? திறமையின் அடிப்படையில் தான் வழங்கியிருக்கிறோம். பத்ம விருதுகளும் அவ்வாறே வழங்கப்படுகின்றது.

'பிம்ப' அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் பாஜகவுக்கு இல்லை. நாட்டிலேயே பெரிய கட்சியாக பாஜக இருக்கிறது. திறமையானவர்களுக்கு தங்களால் தகுந்த அங்கீகாரம் வழங்க முடியவில்லை என்கிற ஆதங்கத்தில்தான் எதிர்க்கட்சிகள் பேசுகின்றன" என தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-62075668

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவை தலித் (என்பதால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்) என்பதாக மத்திய அரசால்  வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டதால் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

இளையராஜாவை தலித் (என்பதால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்) என்பதாக மத்திய அரசால்  வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டதால் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. 

இளையராஜவின் இசைக்கு கொடுக்காத கௌரவத்தை…
தலித் என்ற சாதிக்கு கொடுத்துள்ளார்கள்.
அந்தப் பதவியை… திருப்பிக் கொடுப்பதே, இளையராஜாவுக்கு பெருமையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

30 minutes ago, Kapithan said:

இளையராஜாவை தலித் (என்பதால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்) என்பதாக மத்திய அரசால்  வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டதால் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. 

தான் ஒரு தலித் என்பதை மற்றவர்கள் மறக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாடுபடுபவர் இளையராஜா. அவரை அந்தணர் என்று மற்றவர்கள் கருத வேண்டும் என்பதற்காக ஆன்மீகவாதியாக தன்னை வெளிக்காட்டுபவர். ஆதி திராவிடர் சாதியை தான் சார்ந்தவர் என்பதை ஒரு மேடையில் வைத்தே மறுத்தவர். 

எல்லாத் தரப்பு மக்களின் மனங்களில் இசையால் சிம்மாசனம் இட்டு இருக்கும் இளையராஜாவின் சின்னத்தனமான எண்ணங்களில் தன் சாதியை தானே மறுத்தலும் அடங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

இளையராஜவின் இசைக்கு கொடுக்காத கௌரவத்தை…
தலித் என்ற சாதிக்கு கொடுத்துள்ளார்கள்.
அந்தப் பதவியை… திருப்பிக் கொடுப்பதே, இளையராஜாவுக்கு பெருமையாக இருக்கும்.

தன்னை தலித் என்று குறிப்பிட்டதால், குறிப்பிட்டவருக்கெதிராக இளையராசா நீதிமன்றம் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (BBCயில்)

Link to comment
Share on other sites

26 minutes ago, தமிழ் சிறி said:

இளையராஜவின் இசைக்கு கொடுக்காத கௌரவத்தை…
தலித் என்ற சாதிக்கு கொடுத்துள்ளார்கள்.
அந்தப் பதவியை… திருப்பிக் கொடுப்பதே, இளையராஜாவுக்கு பெருமையாக இருக்கும்.

ஆறுமாதத்துக்கு முன்னர் ஒரு புத்தகத்துக்கான முன்னுரையில் (அல்லது பின்னுரையில்) மோடியை அம்பேத்கர் என்று புகழ்ந்து எழுதியதற்கான கூலி இந்த பதவி.

ஒருவர் வாழ்வில் தன் திறமையால் எவ்வளவு உச்சத்துக்கு போனாலும், பணிவும், அதிகாரத்துக்கு பணிந்து போகாமல் மனசாட்சிக்கு ஏற்றமாதிரி வாழ்தலும் தான் அவரை நல்ல மனிதராக உலகுக்கு காட்டும். ஆனால் இளையராஜாவுக்கு பணிவு என்ற சொல்லின் அர்த்தம், அவரது இரத்தத்திலேயே இல்லை என்பதை அடிக்கடி காட்டிக் கொள்பவர். இன்று தான் பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர் என்றும் காட்டி விட்டார்.

அவரது இசையை கொண்டாடுவோம், இசையை மட்டும் கொண்டாடுவோம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

தான் ஒரு தலித் என்பதை மற்றவர்கள் மறக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாடுபடுபவர் இளையராஜா. அவரை அந்தணர் என்று மற்றவர்கள் கருத வேண்டும் என்பதற்காக ஆன்மீகவாதியாக தன்னை வெளிக்காட்டுபவர். ஆதி திராவிடர் சாதியை தான் சார்ந்தவர் என்பதை ஒரு மேடையில் வைத்தே மறுத்தவர். 

எல்லாத் தரப்பு மக்களின் மனங்களில் இசையால் சிம்மாசனம் இட்டு இருக்கும் இளையராஜாவின் சின்னத்தனமான எண்ணங்களில் தன் சாதியை தானே மறுத்தலும் அடங்கும். 

தன்னம்பிக்கைக் குறைபாடாக அல்லது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக இருக்கும் என நினைக்கிறேன்.

(ஆனால் இந்த ஜாம்பவானை நான் இப்படிக் குறிப்பிடுதல் தகுதியான செயலும் அல்ல. ஆனாலும் அப்படிக் குறிப்பிடவேண்டி இருப்பது துரதிஸ்ரவசமானது)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

தான் ஒரு தலித் என்பதை மற்றவர்கள் மறக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாடுபடுபவர் இளையராஜா. அவரை அந்தணர் என்று மற்றவர்கள் கருத வேண்டும் என்பதற்காக ஆன்மீகவாதியாக தன்னை வெளிக்காட்டுபவர். ஆதி திராவிடர் சாதியை தான் சார்ந்தவர் என்பதை ஒரு மேடையில் வைத்தே மறுத்தவர். 

எல்லாத் தரப்பு மக்களின் மனங்களில் இசையால் சிம்மாசனம் இட்டு இருக்கும் இளையராஜாவின் சின்னத்தனமான எண்ணங்களில் தன் சாதியை தானே மறுத்தலும் அடங்கும். 

இளையராஜா கூட…. பெரும்பாலானோர் கூடியிருக்கும் அரங்கில்,
மேடையில் வைத்தே.. பலரை அவமானப் படுத்துவதும், அவருக்கு அழகல்ல.
புகழ் வரும் போது…பணிவு வர வேண்டும். அகம்பாவம் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் எல்லாம் இருக்காது.

இசை திறமைக்கு நிகராக, தன் சுயத்தை மறுதலிக்கும் insecurity, அடிமைபுத்தி, அதிகாரத்துக்கு சலாம் போடும் நக்கும் புத்தி, எடுத்தெறிந்து பேசும் சின்னப்புத்தி எல்லாமும் மண்டி கிடக்கிறது இந்த பழைய ராசாவில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையமைப்பாளர் இளையராஜா எம்பியாக நியமனம் - | lanka4.com | லங்கா4.கொம்

இசையமைக்க... தமிழை விட, சிறந்த மொழி... இந்தி தான்.  - இளையராஜா.- 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இசையமைப்பாளர் இளையராஜா எம்பியாக நியமனம் - | lanka4.com | லங்கா4.கொம்

இசையமைக்க... தமிழை விட, சிறந்த மொழி... இந்தி தான்.  - இளையராஜா.- 

அப்போதுதான் Oscar award கிடைக்கும் என்று நினைக்கிறாரோ என்னவோ ? (கிந்தி ஆர்மோனியப் பெட்டியில் கட்டைகள் குறைவு போல 🤣)

எனக்கென்னவோ ஊமைப் பாசைதான் இசையமைக்க சிறந்த மொழி என்று நினைக்கிறேன். 

😏

Edited by Kapithan
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.