Jump to content

எதிர்கால திட்டத்தை... மக்களிடம் முன்வைத்த, போராட்டக்காரர்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=1327290944463188 👈

போராட்டக்காரர்கள்,  ஜனாதிபதி மாளிகையில் இருந்து கொண்டு.... 
நாட்டு மக்களுக்கு  தமது எதிர்கால திட்டத்தை அறிவித்தார்கள்.

Newsfirst.lk Tamil

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை கொஞ்சம் உரமாத்தான் இருக்கிறாங்கள் அரகள காராயோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி யாரும் பொப்பேற்க்க முன் ஆயிரம் தடவை யோசிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி இனவாதத்தை தூண்டி ஆட்சியை பிடிக்க முடியாது. நாட்டின் முன்னேற்றம் பற்றி பேச வேண்டும். நாமும், தமிழ்த்தேசியம் பேசி ஏமாற்றும் பேர்வழிகள் பற்றி யோசிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, satan said:

இனி இனவாதத்தை தூண்டி ஆட்சியை பிடிக்க முடியாது. நாட்டின் முன்னேற்றம் பற்றி பேச வேண்டும். நாமும், தமிழ்த்தேசியம் பேசி ஏமாற்றும் பேர்வழிகள் பற்றி யோசிக்க வேண்டும்.

இவர்கள் கொண்டு வருவாதாய் சொல்லும் புதிய அரசியல் திட்டம் நமக்கு என்ன தீர்வு தருகிறது என முதலில் பார்ப்போம்.

காணி, பொலிஸ் உட்பட்ட சமஸ்டி அதிகாரம் தந்தால்

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இவர்கள் கொண்டு வருவாதாய் சொல்லும் புதிய அரசியல் திட்டம் நமக்கு என்ன தீர்வு தருகிறது என முதலில் பார்ப்போம்.

காணி, பொலிஸ் உட்பட்ட சமஸ்டி அதிகாரம் தந்தால்

இதைத் தந்தால் சொர்க்கம்.

இனி புத்த பிக்குகள் என்னென்ன சொல்ல போகிறார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இனி புத்த பிக்குகள் என்னென்ன சொல்ல போகிறார்களோ?

இனியும் பிக்குகள் இனவாதம் பேசினால்; விகாரைகள் அகற்றப்படும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம். ஆகவே அடக்கி வாசிப்பதோடு தர்மம் போதிப்பார்கள். ஆனால் இன்றைய நிலைக்கு அவர்களும் முக்கிய காரணம். இனி விதி முடிவு செய்யும், விதி வரைந்த பாதை வழியே பயணம் தொடரும், யாரும் தடுக்க முடியாது. இது விதி முடிவு எழுதும் நேரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இதென்னடாப்பா... சிங்களவர் சோத்து வழியில்லை என்ட உடன போராட்டம் செஞ்சு சோத்து வழியை ஏற்படுத்தி - தமிழனை குசிப்படுத்துற மாதிரி கதைவிடுகிற மாதிரி விட்டவுடன இஞ்சா எல்லாரும் சிங்களவனோட சம்ஸ்டி பற்றி கதைக்கத்தொடங்கீற்றினம்... 

உங்கள் எல்லாருக்கும் சிங்களவர் என்ன கற்பூரம் ஏத்தி சத்தியம் செஞ்சே தந்தவங்கள், இனி இனவாதம் கதைக்க மாட்டமெண்டு... ? (ஏத்தின கற்பூரத்தையே விளுங்கீற்றுப் போறவன் சிங்களவன்.)

இன்னும் வேண்ட இடமுண்டு.😂🤦‍♂️

அம்பாந்தோட்டைக் கள்ளர் அவங்கள்.. நீங்கள் எல்லாரும் அவங்களை மோட்டுச் சிங்களவர் என்டு சொல்லி அடிவாங்கி ஏமாந்ததுதான் மிச்சம்!

Edited by நன்னிச் சோழன்
added a sentence
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

உங்கள் எல்லாருக்கும் சிங்களவர் என்ன கற்பூரம் ஏத்தி சத்தியம் செஞ்சே தந்தவங்கள், இனி இனவாதம் கதைக்க மாட்டமெண்டு.

இல்லை சோழா! அவர்கள் சுட்டாலும் அப்படி செய்யவோ, சொல்லவோ  மாட்டார்கள். ஆனால் காலம் தன் ஆயுதத்தை கையிலெடுத்துள்ளது, தனது நோக்கம் நிறைவேற்றாமல் தனது போராட்டத்தை நிறுத்தாது. அதன் மேல் எனக்கு நம்பிக்கையுண்டு.

1 hour ago, நன்னிச் சோழன் said:

சிங்களவர் சோத்து வழியில்லை என்ட உடன போராட்டம் செஞ்சு சோத்து வழியை ஏற்படுத்தி

இந்த நிலை வராதிருந்திருந்தால், பக்க்ஷாக்களை  துரத்த முடிந்திருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் இலங்கையில் இனவாதம் அழியபோவதில்லை.

இன்று சிங்களவர்கள் தமது பிரச்சனைக்காகவே போராடுகிறார்கள், அவர்கள் தமிழ் முஸ்லிம்களின் பிரச்சனைக்காக போராடவில்லை.

ஒரு ஆட்சி அதிகாரத்தையே விரட்டியடிக்கும் இந்த போராட்டத்தில் தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் தம்மோடு தோளோடு தோள் நிற்க சொல்லி அவர்கள் அறைகூவல் விடுத்ததாய் பெரிதாக எந்த செய்திகளிலும் இல்லை.

அதுவே இனவாதம் வேண்டாமென்று அவர்கள் சொல்லவில்லையென்பதை மறைமுகமாய் சுட்டி நிற்கிறது.

ஜேவிபி ஆயுத கிளர்ச்சி நடத்திய 80களின் இறுதிகளில் ஒப்பீட்டளவில் தமிழர்களைவிட கால அடிப்படையில் அரச பயங்கரவாதத்தால் பெரும் அழிவை சந்தித்தது அவர்கள் இயக்கமே.

இயக்க உறுப்பினர்கள், தலைவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என்று மனித நாகரிகங்களுக்கு அப்பாற்பட்டு உயிரோடு டயர் போட்டு கொளுத்தியும், தலையை கொத்து கொத்தாய் துண்டித்து களனி பாலம் தொடக்கம் மட்டக்குளி கடற்கரைவரை வீசியும், பள்ளி மாணவர்கள் தொடக்கம் இளைஞர்கள்வரை கொத்து கொத்தாய் படுகொலை செய்து புதைகுழிகளில் போட்டு மூடியும் கோர தாண்டவம் ஆடியது இலங்கை அரச இயந்திரம்.

சராசரி மனித உணர்வு கொண்டவர்கள் தாம் எதிர் கொண்டதுபோன்று பிறரும் அதே துன்பத்தை அனுபவித்தால், அழிவை எதிர்கொள்ளூம் மனித கூட்டத்துக்கு ஆதரவாக அவர்களே முதலில் குரல் கொடுத்திருப்பார்கள்.

ஆனால் இறுதி யுத்தம்வரை அரசைவிட அதி தீவிரமாய் தமிழர் போராட்டங்களை ஒடுக்குவதில் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பில் உதவி முதற்கொண்டு, தமிழர் பகுதிக்கான சுனாமி நிதி தடுப்புவரை மிக ஆவேசமாக உறுதியாக இனவாதம் கக்கி நின்றது ஜேவிபியே.

அவர்கள் தமக்குள் ஆயிரம் முரண்பாடு கொண்டு மோதி கொள்வார்கள், ஆனால் தமது இனத்தை எவனுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

இனத்தை விட்டுகொடுத்து அரச பதவிகள் சலுகைகளுக்காக ஏங்க அவர்கள் தமிழர்களா என்ன?

இன்றைய போராட்டம் ஓய்வடைந்து புதிய அரசு தோன்றினாலும், அவர்களின் தமிழர்கள் இஸ்லாமியர்களுக்கெதிரான பார்வை ஒருபோதும் மாறபோவதில்லை, அதை நாம் தொடர்ந்து பார்க்கதான் போகிறோம்.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போரட்டங்கள் இந்த எதிர்கால திட்டவரைபுகளுக்கெல்லாம் யார் பின்னணியில் இருக்கின்றார்கள்? இந்த போராட்டங்களை  பின்னணியில் நின்று நடாத்துவது யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தலைமுறை புறப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்

தமிழருக்கு தீர்வு இல்லை என்றால் இலங்கைக்கு நிலையான வாழ்வில்லை என்பதை உணர்ந்தவராகளாக இருக்க கடவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நன்னிச் சோழன் said:

இதென்னடாப்பா... சிங்களவர் சோத்து வழியில்லை என்ட உடன போராட்டம் செஞ்சு சோத்து வழியை ஏற்படுத்தி - தமிழனை குசிப்படுத்துற மாதிரி கதைவிடுகிற மாதிரி விட்டவுடன இஞ்சா எல்லாரும் சிங்களவனோட சம்ஸ்டி பற்றி கதைக்கத்தொடங்கீற்றினம்... 

உங்கள் எல்லாருக்கும் சிங்களவர் என்ன கற்பூரம் ஏத்தி சத்தியம் செஞ்சே தந்தவங்கள், இனி இனவாதம் கதைக்க மாட்டமெண்டு... ? (ஏத்தின கற்பூரத்தையே விளுங்கீற்றுப் போறவன் சிங்களவன்.)

இன்னும் வேண்ட இடமுண்டு.😂🤦‍♂️

அம்பாந்தோட்டைக் கள்ளர் அவங்கள்.. நீங்கள் எல்லாரும் அவங்களை மோட்டுச் சிங்களவர் என்டு சொல்லி அடிவாங்கி ஏமாந்ததுதான் மிச்சம்!

🤣 தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை. அதுதான்  என்ன தருகிறார்கள் என பாப்போம் என எழுதினேன்.

நிச்சயம் அவர்களாக தரபோவதில்லை. ஆனால் வெளிநாட்டு அளுத்தத்தை பயன்படுத்தி இதுவரை இருந்தவர்களை விட இவர்களை நாம் அழுத்தி தீர்வு பெறுவது இலகுவாக இருக்கலாம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இந்த போரட்டங்கள் இந்த எதிர்கால திட்டவரைபுகளுக்கெல்லாம் யார் பின்னணியில் இருக்கின்றார்கள்? இந்த போராட்டங்களை  பின்னணியில் நின்று நடாத்துவது யார்?

எனக்கும் புரியவில்லை, இதைத்தான் நானும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன், இவ்வளவு தூரம், இவ்வளவு பேரை organize பண்ணி செய்வது என்றால் பின்னணி பெரிதாக இருக்க வேண்டும். ராணுவத்தை, வன்முறையை பாவிக்கக்கூடாது என்று அமெரிக்கத்தூதுவர் போராட்டதுக்கு முன்னமே சொல்லுகிறார், இந்த அளவுக்கு நடக்க போகுதென்று முதலே அவருக்கு தெரிகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நீர்வேலியான் said:
5 hours ago, குமாரசாமி said:

இந்த போரட்டங்கள் இந்த எதிர்கால திட்டவரைபுகளுக்கெல்லாம் யார் பின்னணியில் இருக்கின்றார்கள்? இந்த போராட்டங்களை  பின்னணியில் நின்று நடாத்துவது யார்?

எனக்கும் புரியவில்லை, இதைத்தான் நானும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன், இவ்வளவு தூரம், இவ்வளவு பேரை organize பண்ணி செய்வது என்றால் பின்னணி பெரிதாக இருக்க வேண்டும். ராணுவத்தை, வன்முறையை பாவிக்கக்கூடாது என்று அமெரிக்கத்தூதுவர் போராட்டதுக்கு முன்னமே சொல்லுகிறார், இந்த அளவுக்கு நடக்க போகுதென்று முதலே அவருக்கு தெரிகிறது

அதிவிசேடமாக அனுப்பப்பட்ட அமெரிக்க ராணியல்லவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
10 hours ago, satan said:

இல்லை சோழா! அவர்கள் சுட்டாலும் அப்படி செய்யவோ, சொல்லவோ  மாட்டார்கள். ஆனால் காலம் தன் ஆயுதத்தை கையிலெடுத்துள்ளது, தனது நோக்கம் நிறைவேற்றாமல் தனது போராட்டத்தை நிறுத்தாது. அதன் மேல் எனக்கு நம்பிக்கையுண்டு.

இந்த நிலை வராதிருந்திருந்தால், பக்க்ஷாக்களை  துரத்த முடிந்திருக்குமா?

 

4 hours ago, goshan_che said:

🤣 தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை. அதுதான்  என்ன தருகிறார்கள் என பாப்போம் என எழுதினேன்.

நிச்சயம் அவர்களாக தரபோவதில்லை. ஆனால் வெளிநாட்டு அளுத்தத்தை பயன்படுத்தி இதுவரை இருந்தவர்களை விட இவர்களை நாம் அழுத்தி தீர்வு பெறுவது இலகுவாக இருக்கலாம்.

 

மகிந்த மாமாக்கள் போயிட்டினம்; அதால சிக்கல் என்னென்டால், 

இப்ப வாறவன் மேற்கிற்கு ஆதராவான சீனாவுக்கு முழு எதிர்பாளியாக இருப்பானென்டால் மேற்கும் எமக்கு உதவாதே. சேர்ந்து வாழுங்கோ என்டு போட்டுப் போயிடுவாங்கள்.  நாங்களும் மண்ணைப் புடுங்காதை அதைப் புடுங்காத இதைப் புடுங்காத என்டு மாரித்தவளையள் மாதிரி ஒடுவில் வரைக்கும் கத்தவேணுமே!

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை மக்களின் நாளாந்த வாழ்வியலை ராஜபக்ச கும்பலும் ரணில் கும்பலும் பாதிக்கச் செய்த படியால் தான்.. அரசை அவர்கள் கவிழ்த்தார்கள்.. அது நிஜம் தான்.

ஆனாலும் இன்றைய இளைய சமூகம் அது தமிழ்... சிங்கள.. முஸ்லிமாக இருந்தாலும்.. அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஒன்றை கட்டி எழுப்பின்.. அதன் மூலம்.. சாதாரண சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமையை தான் கேட்கிறார்கள்.. சிங்கள மக்களைப் போலவே அவர்களும் தமது அரசியலை தாமே தீர்மானிக்கும் உரிமையை தமது மண்ணில் ஆட்சி உரிமையை தானே கேட்கிறார்கள் என்ற புரிதலுக்கு இட்டுச் செல்ல இந்தச் சூழலை பாவிக்க முடியும்.

சென்ற அல்லது பழைய தலைமுறை சிங்களத் தலைவர்களை போல அன்றி இளைய தலைமுறை இனவாதத்திற்கு இடமளிப்பதால்.. ஏற்படும் நன்மைகளை தீமைகளை அதிகம் ஆராயவும் அதன் விளைவுகளை உணரவும் தலைப்படும் இந்த வேளையில்.. நாட்டில் உள்ள தமிழ் இளையோர் தமிழ் மக்களின் பெரும்பான்மை விருப்பை தெளிவுபடுத்துவதோடு.. ராஜபக்ச கூட்டத்தை தமிழ் மக்கள் தொடர்ந்து நிராகரித்து நின்றதையும் அவர்கள் செய்த இனவாதச் செயற்பாடுகளின் தாக்கம்.. எப்படி ஒட்டுமொத்த இலங்கையையும் பாதிக்கச் செய்தது என்பதையும் விளக்க இதுவே சரியான தருணமும் ஆகும்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். இப்போ தமிழர்களுக்கும் சேர்த்து தான் காற்று வீசுது. விதைகளை தூற்றிக் கொள்வது நல்லது. அது விளைச்சலாவதும் விடுவதும் காலத்தினதும் புரிதலினதும் தன்மையில் தங்கியுள்ளது.

சந்தர்ப்பங்களை நழுவ விடுவதிலும்.. பயன்படுத்தி பார்த்து வென்றால்.. நன்று. தோற்றால்.. தொடர்ந்து முயற்சிப்பதே.. ஓர் நாள் வெற்றிக்கு.. மனமாற்றங்களுக்கு வழி சமைக்கும். எதையும் செய்யாமல்.. வாயால் வடை சுடும் பாரம்பரிய தமிழ் அரசியல்வாதிகளின் அணுகுமுறை தமிழருக்கோ.. இலங்கைக்கோ உதவாது.

ஏனெனில்.. இந்த நெருக்கடியான காலத்தில்.. கூட தமிழ் அரசியல்வாதிகளால்.. சாதாரண சிங்கள மக்களுக்கோ ஏன் சொந்த தமிழ் மக்களுக்கோ... ஆற்றுகை படுத்தக் கூடிய ஒரு விடயத்தைக் கூட செய்ய முடியவில்லை. குறிப்பாக ஹிந்தியாவுக்கு காவடி எடுக்கும் தமிழ் கட்சி தலைவர்களால் கூட. 

Edited by nedukkalapoovan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

  

16 minutes ago, nedukkalapoovan said:

பெரும்பான்மை மக்களின் நாளாந்த வாழ்வியலை ராஜபக்ச கும்பலும் ரணில் கும்பலும் பாதிக்கச் செய்த படியால் தான்.. அரசை அவர்கள் கவிழ்த்தார்கள்.. அது நிஜம் தான்.

ஆனாலும் இன்றைய இளைய சமூகம் அது தமிழ்... சிங்கள.. முஸ்லிமாக இருந்தாலும்.. அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஒன்றை கட்டி எழுப்பின்.. அதன் மூலம்.. சாதாரண சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமையை தான் கேட்கிறார்கள்.. சிங்கள மக்களைப் போலவே அவர்களும் தமது அரசியலை தாமே தீர்மானிக்கும் உரிமையை தமது மண்ணில் ஆட்சி உரிமையை தானே கேட்கிறார்கள் என்ற புரிதலுக்கு இட்டுச் செல்ல இந்தச் சூழலை பாவிக்க முடியும்.

சென்ற அல்லது பழைய தலைமுறை சிங்களத் தலைவர்களை போல அன்றி இளைய தலைமுறை இனவாதத்திற்கு இடமளிப்பதால்.. ஏற்படும் நன்மை தீமைகளையும் அதிகம் ஆராயவும் அதன் விளைவுகளை உணரவும் தலைப்படும் இந்த வேளையில்.. நாட்டில் உள்ள தமிழ் இளையோர் தமிழ் மக்களின் பெரும்பான்மை விருப்பை தெளிவுபடுத்துவதோடு.. ராஜபக்ச கூட்டத்தை தமிழ் மக்கள் தொடர்ந்து நிராகரித்து நின்றதையும் அவர்கள் செய்த இனவாதச் செயற்பாடுகளின் தாக்கம்.. எப்படி ஒட்டுமொத்த இலங்கையையும் பாதிக்கச் செய்தது என்பதையும் விளக்க இதுவே சரியான தருணமும் ஆகும்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். இப்போ தமிழர்களுக்கும் சேர்த்து தான் காற்று வீசுது. விதைகளை தூற்றிக் கொள்வது நல்லது. அது விளைச்சலாவதும் விடுவதும் காலத்தினதும் புரிதலினதும் தன்மையில் தங்கியுள்ளது.

சந்தர்ப்பங்களை நழுவ விடுவதிலும்.. பயன்படுத்தி பார்த்து வென்றால்.. நன்று. தோற்றால்.. தொடர்ந்து முயற்சிப்பதே.. ஓர் நாள் வெற்றிக்கு.. மனமாற்றங்களுக்கு வழி சமைக்கும். எதையும் செய்யாமல்.. வாயால் வடை சுடும் பாரம்பரிய தமிழ் அரசியல்வாதிகளின் அணுகுமுறை தமிழருக்கோ.. இலங்கைக்கோ உதவாது.

ஏனெனில்.. இந்த நெருக்கடியான காலத்தில்.. கூட தமிழ் அரசியல்வாதிகளால்.. சாதாரண சிங்கள மக்களுக்கோ ஏன் சொந்த தமிழ் மக்களுக்கோ... ஆற்றுகை படுத்தக் கூடிய ஒரு விடயத்தைக் கூட செய்ய முடியவில்லை. குறிப்பாக ஹிந்தியாவுக்கு காவடி எடுக்கும் தமிழ் கட்சி தலைவர்களால் கூட. 

 

நல்ல கருத்துக்கள்... அவங்கட மொழியிலையே எங்கட சிக்கல்களை நாம் கொண்டு சென்றால் இன்னும் பயனுடையதாய், இலகுவாய், அவங்கட அடித்தட்டுவரை புரியும்படியாக கொண்டு செல்லலாம்.

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நன்னிச் சோழன் said:

  

 

நல்ல கருத்துக்கள்... அவங்கட மொழியிலையே எங்கட சிக்கல்களை நாம் கொண்டு சென்றால் இன்னும் பயனுடையதாய், இலகுவாய், அவங்கட அடித்தட்டுவரை புரியும்படியாக கொண்டு செல்லலாம்.

 

 

என்ன சோழன்,

அப்ப இனி சிங்களவன் ஏமாத்தமாட்டான் பேசி விளங்கவைக்கலாம் எண்டுறியளோ😆.

நல்லா கனவு காணலாம் சோழன் ஆனால் பாணையும், பருப்பையும் கண்டவுடன், வயிறு நிறைந்தவுடன் உள்ளதில் அதிகம் ஆர் இனவாதம் பேசினமோ அவர்கள் பின்னால் ஓடும் சிங்கள கூட்டு மகாவம்ச மனோநிலை.

இவர்களுக்கு பேசி மனமாற்றத்தை உருவாக்கி மாற்றத்தை உருவாக்கி முடிக்க முழுதீவும் சிங்கள மயமாகிவிட்டிருக்கும்.

இந்த மயிலே, மயிலே இறகு போடு கதை வேலைக்கு ஆகாது.

செய்ய கூடியது எல்லாம் இப்போ இந்த போரட்டத்தை வழிநடத்தும் மறை கரங்களை அணுகி, அழுத்தி, போராட்டகாரர் மூலமே, பசி பட்டினியில் இனவாதம் கவனம் திசை திரும்பி இருக்கும் சமயம் எமக்கான அடிப்படை உரிமைகளையாவது பெறுவதே.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடைகளைந்து அவமானம் செய்வது, உயிரோடு எரிப்பது, வீட்டை எரிப்பது, இவை வழிமுறைகள்.

1. உணவு, அத்தியாவசிய தேவை இல்லை

2. இனம் அழியும் அபாயம் சிறுபான்மையால் வருகிறது.

இவை இரெண்டும் கூட்டாக சிங்கள இனம் உணரும், கற்பனை செய்யும் ஆபத்துக்கள்.

இப்போ முதலவதான உண்மையாக இருக்கும் பயத்துடன் மேற்சொன்ன வழிமுறையை பயன்படுத்தி டீல் பண்ணுகிறார்கள்.

இந்த பயம் அகன்றதும். துட்டகாமினி காலத்தில் இருந்து கற்பிக்கபட்ட, கற்பனாவாதமான இரெண்டாம் பயம் தலைதூக்கும், தூக்க வைக்கப்படும்.

இப்போ எமக்கு கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி சாட்சிகாரரிடம் கதைத்து ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை செய்யாவிடின், 1948 இல் தமிழ் தலைவர்கள் செய்த அதே பிழையை நாமும் விட்ட்வர்கள் ஆவோம்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

இப்போ எமக்கு கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி சாட்சிகாரரிடம் கதைத்து ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை செய்யாவிடின், 1948 இல் தமிழ் தலைவர்கள் செய்த அதே பிழையை நாமும் விட்ட்வர்கள் ஆவோம்.

அப்படியான பாதுகாப்பு ஏற்பாட்டை செய்வதற்கு..
தற்போதைய தமிழ் தலைமையை நம்ப முடியாது.
இவர்கள் வழமை போல்,  போக்கு காட்டி… தமிழரை ஏமாற்றி விடுவார்கள்.

அடுத்து… வேறு எவரை நம்பி, களம் இறக்கலாம் என நினைகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

என்ன சோழன்,

அப்ப இனி சிங்களவன் ஏமாத்தமாட்டான் பேசி விளங்கவைக்கலாம் எண்டுறியளோ😆.

நல்லா கனவு காணலாம் சோழன் ஆனால் பாணையும், பருப்பையும் கண்டவுடன், வயிறு நிறைந்தவுடன் உள்ளதில் அதிகம் ஆர் இனவாதம் பேசினமோ அவர்கள் பின்னால் ஓடும் சிங்கள கூட்டு மகாவம்ச மனோநிலை.

இவர்களுக்கு பேசி மனமாற்றத்தை உருவாக்கி மாற்றத்தை உருவாக்கி முடிக்க முழுதீவும் சிங்கள மயமாகிவிட்டிருக்கும்.

இந்த மயிலே, மயிலே இறகு போடு கதை வேலைக்கு ஆகாது.

செய்ய கூடியது எல்லாம் இப்போ இந்த போரட்டத்தை வழிநடத்தும் மறை கரங்களை அணுகி, அழுத்தி, போராட்டகாரர் மூலமே, பசி பட்டினியில் இனவாதம் கவனம் திசை திரும்பி இருக்கும் சமயம் எமக்கான அடிப்படை உரிமைகளையாவது பெறுவதே.

 

எமது இலக்குகளை மாற்றாது இருக்கும் வழிமுறைகள் ஊடாக இன்றைய சூழலில் சாத்தியமானதை அடைவதும் நன்மையே

41 minutes ago, goshan_che said:

உடைகளைந்து அவமானம் செய்வது, உயிரோடு எரிப்பது, வீட்டை எரிப்பது, இவை வழிமுறைகள்.

1. உணவு, அத்தியாவசிய தேவை இல்லை

2. இனம் அழியும் அபாயம் சிறுபான்மையால் வருகிறது.

இவை இரெண்டும் கூட்டாக சிங்கள இனம் உணரும், கற்பனை செய்யும் ஆபத்துக்கள்.

இப்போ முதலவதான உண்மையாக இருக்கும் பயத்துடன் மேற்சொன்ன வழிமுறையை பயன்படுத்தி டீல் பண்ணுகிறார்கள்.

இந்த பயம் அகன்றதும். துட்டகாமினி காலத்தில் இருந்து கற்பிக்கபட்ட, கற்பனாவாதமான இரெண்டாம் பயம் தலைதூக்கும், தூக்க வைக்கப்படும்.

இப்போ எமக்கு கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி சாட்சிகாரரிடம் கதைத்து ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை செய்யாவிடின், 1948 இல் தமிழ் தலைவர்கள் செய்த அதே பிழையை நாமும் விட்ட்வர்கள் ஆவோம்.

 

அதற்கான மதிநுட்பத்தடனான தமிழ்த்ததலைமைகள் யாராவது இருக்கிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

பெரும்பான்மை மக்களின் நாளாந்த வாழ்வியலை ராஜபக்ச கும்பலும் ரணில் கும்பலும் பாதிக்கச் செய்த படியால் தான்.. அரசை அவர்கள் கவிழ்த்தார்கள்.. அது நிஜம் தான்.

ஆனாலும் இன்றைய இளைய சமூகம் அது தமிழ்... சிங்கள.. முஸ்லிமாக இருந்தாலும்.. அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஒன்றை கட்டி எழுப்பின்.. அதன் மூலம்.. சாதாரண சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமையை தான் கேட்கிறார்கள்.. சிங்கள மக்களைப் போலவே அவர்களும் தமது அரசியலை தாமே தீர்மானிக்கும் உரிமையை தமது மண்ணில் ஆட்சி உரிமையை தானே கேட்கிறார்கள் என்ற புரிதலுக்கு இட்டுச் செல்ல இந்தச் சூழலை பாவிக்க முடியும்.

சென்ற அல்லது பழைய தலைமுறை சிங்களத் தலைவர்களை போல அன்றி இளைய தலைமுறை இனவாதத்திற்கு இடமளிப்பதால்.. ஏற்படும் நன்மைகளை தீமைகளை அதிகம் ஆராயவும் அதன் விளைவுகளை உணரவும் தலைப்படும் இந்த வேளையில்.. நாட்டில் உள்ள தமிழ் இளையோர் தமிழ் மக்களின் பெரும்பான்மை விருப்பை தெளிவுபடுத்துவதோடு.. ராஜபக்ச கூட்டத்தை தமிழ் மக்கள் தொடர்ந்து நிராகரித்து நின்றதையும் அவர்கள் செய்த இனவாதச் செயற்பாடுகளின் தாக்கம்.. எப்படி ஒட்டுமொத்த இலங்கையையும் பாதிக்கச் செய்தது என்பதையும் விளக்க இதுவே சரியான தருணமும் ஆகும்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். இப்போ தமிழர்களுக்கும் சேர்த்து தான் காற்று வீசுது. விதைகளை தூற்றிக் கொள்வது நல்லது. அது விளைச்சலாவதும் விடுவதும் காலத்தினதும் புரிதலினதும் தன்மையில் தங்கியுள்ளது.

சந்தர்ப்பங்களை நழுவ விடுவதிலும்.. பயன்படுத்தி பார்த்து வென்றால்.. நன்று. தோற்றால்.. தொடர்ந்து முயற்சிப்பதே.. ஓர் நாள் வெற்றிக்கு.. மனமாற்றங்களுக்கு வழி சமைக்கும். எதையும் செய்யாமல்.. வாயால் வடை சுடும் பாரம்பரிய தமிழ் அரசியல்வாதிகளின் அணுகுமுறை தமிழருக்கோ.. இலங்கைக்கோ உதவாது.

ஏனெனில்.. இந்த நெருக்கடியான காலத்தில்.. கூட தமிழ் அரசியல்வாதிகளால்.. சாதாரண சிங்கள மக்களுக்கோ ஏன் சொந்த தமிழ் மக்களுக்கோ... ஆற்றுகை படுத்தக் கூடிய ஒரு விடயத்தைக் கூட செய்ய முடியவில்லை. குறிப்பாக ஹிந்தியாவுக்கு காவடி எடுக்கும் தமிழ் கட்சி தலைவர்களால் கூட. 

கோத்தாகோகம போராட்டக்கார அமைப்பாளர்கள் கூட…
சென்ற மாதம்…யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வந்து…
தமிழருடனான நல்லெண்ண சமிக்ஜையை… வெளிப் படுத்தியவர்கள்.
ஆகவே… எமது இளையவர்களும், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது
நல்லது என நினைக்கின்றேன்.

தப்பித் தவறிக் கூட…. தற்போது இருக்கும், எந்த அரசியல் வாதிகளையும் இனி நம்ப வேண்டாம்.
அவர்கள் இனி… ஒட்டு மொத்தமாக நிரந்தர ஓய்வு எடுக்கட்டும்.
புதிய, இளைய தலை முறை அரசியல் வாதிகளை… இனம் கண்டு களமிறக்கப் பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

என்ன சோழன்,

அப்ப இனி சிங்களவன் ஏமாத்தமாட்டான் பேசி விளங்கவைக்கலாம் எண்டுறியளோ😆.

நல்லா கனவு காணலாம் சோழன் ஆனால் பாணையும், பருப்பையும் கண்டவுடன், வயிறு நிறைந்தவுடன் உள்ளதில் அதிகம் ஆர் இனவாதம் பேசினமோ அவர்கள் பின்னால் ஓடும் சிங்கள கூட்டு மகாவம்ச மனோநிலை.

இவர்களுக்கு பேசி மனமாற்றத்தை உருவாக்கி மாற்றத்தை உருவாக்கி முடிக்க முழுதீவும் சிங்கள மயமாகிவிட்டிருக்கும்.

இந்த மயிலே, மயிலே இறகு போடு கதை வேலைக்கு ஆகாது.

 

https://www.instagram.com/mihiriw/

எ.கா: இந்த அக்காவும் இவவோட கணக்கில இருக்கிற ஆக்களும்.

எங்கேனும் ஐதாக இவையள மாதிரி எங்களுக்கு மெல்லிய ஆதரவை தரக்கூடிய சிங்களவருக்கு அவங்கட மொழியிலையே எங்கட சிக்கல்களைக் (புலம்பெயர் ஈழத்தீவருள் தமிழரை விட தம் தாய்மொழி தெரிந்த சிங்களவர் அதிகம் உண்டென நினைக்கிறேன்) கொண்டுபோய் விளங்கப்படுத்தக்கூடிய அளவிற்கு விளங்கப்படுத்தினால் எங்கட பக்கம் கொஞ்சம் ஈர்க்கலாம் அல்லவா; பாருங்கோ, இஞ்சை நான் சுட்டுறது இனவாத பிசாசுகளிடம் கொண்டுபோகச்சொல்லி அன்று, ஏற்கனவே எங்களுக்கு மென்னாதரவை வழங்குபவர்கள், தரக்கூடியவர்கள், மற்றும் எம்மீது மெய்யான கரிசனை கொண்ட சிங்கள மக்களிடம் மட்டுமே. சாத்தானுக்கு வேதமோத நானொன்டும் விசரனில்லை.😂

அவங்களுக்கு உள்ளையே திசைதிருப்பக்கூடிய அல்லது குழப்பத்தை உண்டுபண்ணக்கூடிய அளவிற்கு பரப்புரையை அவங்கட மொழியிலையே செஞ்சால் - சிங்களவன் எப்படி எங்கட மொழியிலையே எங்களுக்கு எதிராச் செஞ்சான்/செய்யிறானோ அப்படி - சின்ன அறுவடை கிடைக்கும். அதை நாம் பெரிதாக ஊதிக் காட்டினால் - "பாருங்கோ, சிங்களவரே எங்களுக்கு ஆதரவா நிற்கினம்" - பாக்கிற மற்றவங்களில ஓரிரண்டு பேர் எங்களிடம் வந்தால் அவங்கள வைச்சு முழு வீச்சிலான பரப்புரையை எங்களிலை சிங்களம் தெரிந்தோரைக் கொண்டு ஏனையவரை இலக்குவைச்சு முன்னெடுக்கலாம்.

  • எ.கா: இப்ப உந்த வேசுபுக்கு வழிய தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக
    கூவிக்கொண்டு திரியிற எம்மினப் பழசுகள். இவர்களுள் பாடையில் போகும் வயது வந்ததுகளே அதிகம். இவங்கட கதைகளைக் கேட்டு ஊரில் இருக்கின்ற இளவட்ட குடு அடிக்கிறவங்களும் சேர்ந்து இன்னமும் சொந்த இனத்திற்கு எதிராகவே கதைவளிப்படுகுதுகள்... என்ன இழி பிறவிகளோ!

அதாவது கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்றுபோட்டு சும்மா இருப்பதைக் காட்டிலும் ஏலுமான வழிகளிலை முயற்சிக்கலாம் அல்லவா. கற்ற சிங்களத்தை சும்மா செய்தித்தாளும் அவங்கட பாடல்/திரைப்படங்கள்படங்கள் பார்ப்பதற்கும், கொழும்பிலை போய் விடுமுறை கொண்டாடுவதற்கும் செலவழிப்பதைத் தவிர்த்து எங்கட இனத்திற்காக, அவ்வவையின்ட சொந்த தலைமுறைகளின்ட எதிர்காலத்திற்காக செலவழிக்கலாம் தானே? 

எதிர்பார்த்தது கிடைக்காட்டியும் வேறெதுக்கேனும் எதிர்காலத்தில் இது அறுவடை தர வல்லது. 17 ஆண்டுகளுக்கு முன்னர் த.தே.தொ. ஆல் சிங்களத்தில் வெளியிடப்பட்ட கறுப்பு சூலை நிகழ்படத்தைத்தான் இன்றளவும் பயன்படுத்துகிறோம், பரப்புரையில். இன்றுவரை அதுபோலொன்று/அத்தகையது உருவாக - வில்லை/படவில்லை.

அதுபோல ஏதாவது ...

 

//செய்ய கூடியது எல்லாம் இப்போ இந்த போரட்டத்தை வழிநடத்தும் மறை கரங்களை அணுகி, அழுத்தி, போராட்டகாரர் மூலமே, பசி பட்டினியில் இனவாதம் கவனம் திசை திரும்பி இருக்கும் சமயம் எமக்கான அடிப்படை உரிமைகளையாவது பெறுவதே.//

கண்டிப்பாக நாம் இதைச் செய்ய வேண்டும். நான் மறுக்கவில்லை. 

நான் சொன்னது ஏலுமான வழிகளிலும் முயற்சிப்போம் என்பதன் கீழ். அதாவது அண்ணக்களை மாதிரி இருகிற வளங்களைக் கொண்டு உச்ச அறுவடையைப் பெறுவது என்ற கோட்பாட்டின் படி முயற்சிக்கலாம் என்றேன்.

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

உடைகளைந்து அவமானம் செய்வது, உயிரோடு எரிப்பது, வீட்டை எரிப்பது, இவை வழிமுறைகள்.

1. உணவு, அத்தியாவசிய தேவை இல்லை

2. இனம் அழியும் அபாயம் சிறுபான்மையால் வருகிறது.

இவை இரெண்டும் கூட்டாக சிங்கள இனம் உணரும், கற்பனை செய்யும் ஆபத்துக்கள்.

இப்போ முதலவதான உண்மையாக இருக்கும் பயத்துடன் மேற்சொன்ன வழிமுறையை பயன்படுத்தி டீல் பண்ணுகிறார்கள்.

இந்த பயம் அகன்றதும். துட்டகாமினி காலத்தில் இருந்து கற்பிக்கபட்ட, கற்பனாவாதமான இரெண்டாம் பயம் தலைதூக்கும், தூக்க வைக்கப்படும்.

இப்போ எமக்கு கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி சாட்சிகாரரிடம் கதைத்து ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை செய்யாவிடின், 1948 இல் தமிழ் தலைவர்கள் செய்த அதே பிழையை நாமும் விட்ட்வர்கள் ஆவோம்.

 

ஓம் சரியே.

ஐசே, இங்ச பாருங்கோ...
நான் முற்றாக அதிலையே மூழ்கச் சொல்லவில்லை. எம்மில் சிங்களம் அறிந்தோரைக் கொண்டு ஏலுமான வழிகளிலை முயற்சிப்பம் என்டுறன். நீங்கள் கொஞ்சம் முன்னலை போய் அதையேதான் சொல்லுறீங்கள்; வழிகிடைத்தபடியால் ஏலுமானதைத் செய்வம் என்டுறியள். 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.