Jump to content

ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை

ஜனாதிபதி மாளிகை முழுமையாக போராட்டகாரர்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அங்கு பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பதுங்கு குழிக்குள் இரகசிய அறை ஒன்று இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள பிரத்தியேக கட்டிடம் ஒன்றில் இந்த பதுங்கு குழி இருக்கின்றது எனவும் இந்த பதுங்கு குழிக்குள் வெவ்வேறு அலுமாரி கதவுகள் ஊடாகவே உற்பிரவேசிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த பதுங்கு குழிக்குள் பிரமாண்ட பாரம் தூக்கி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பதுங்கு குழியில் அடிப்பகுதியில் மிகவும் இரகசிய அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மிகவும் வலுவான இரும்பு கதவுகளால் திறக்க முடியாத அளவிற்கு இந்த இரகசிய அறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அந்த அறையின் கதவு இதுவரையில் திறக்க முடியவில்லை எனவும் ஏதேனும் முக்கிய அம்சங்கள் அல்லது விடயங்கள் அதில் இருக்கலாம் என போராட்டக்காரர்கள் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளனர்.

எனினும், அந்த இரகசிய அறை மிகவும் குளிரூட்டப்பட்ட அறையாக அமைக்கப்பட்டுள்ளது. அறையின் இரும்பு கதவின் அடிப்பகுதியில் இருக்கும் சிறிய இடைவெளி ஊடாக வரும் குளிர் காற்றின் ஊடாக அதனை உணர முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (a) 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதி-மாளிகையில்-பதுங்கு-குழிக்குள்-இரகசிய-அறை/175-300105

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இரகசிய அறைக்குள்தான்…. கோத்தா பதுங்கி இருக்கிறார் போலுள்ளது.
போராட்டக்காரர்கள்… எப்படிப் பட்டாவது, அந்த அறைக்கதவை உடைத்து…
கோத்தாவை வெளியே கொண்டு வரவேண்டும். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா வடிவா சோதிச்சு பாருங்கள்..

அந்த அறையை திறக்க ஏதாவது பயோமெட்ரிக்ஸ் (கை ரேகை, உள்ளங்கை, முக அமைப்பு அல்லது கண் விழிகள்) மூலம் திறக்கக்கூடிய பூட்டுகள் இருக்கக்கூடும். 😜

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

நல்லா வடிவா சோதிச்சு பாருங்கள்..

அந்த அறையை திறக்க ஏதாவது பயோமெட்ரிக்ஸ் (கை ரேகை, உள்ளங்கை, முக அமைப்பு அல்லது கண் விழிகள்) மூலம் திறக்கக்கூடிய பூட்டுகள் இருக்கக்கூடும். 😜

அப்படி எல்லாம்… மினக்கெட்டுக் கொண்டு நிற்க நேரமில்லை.
24 மனித்தியாலமாய்…. கோத்தா, அதற்குள் தண்ணீர், உணவு இல்லாமல் இருக்கிறான்.
கதவை… வெடி வைத்து தகர்ப்பதே உடனடி தீர்வு. 😂

இன்று… பொழுது சாய்வதற்குள், கதவை…. உடைத்தே ஆக வேண்டும். 👍🏽😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

அந்த இரகசிய அறைக்குள்தான்…. கோத்தா பதுங்கி இருக்கிறார் போலுள்ளது.
போராட்டக்காரர்கள்… எப்படிப் பட்டாவது, அந்த அறைக்கதவை உடைத்து…
கோத்தாவை வெளியே கொண்டு வரவேண்டும். 😎

நானும் அப்படித்தான் நினைத்தேன். அடித்து இழுத்து வரவேண்டும்! அவர் பதவியில் இல்லை என்று தெரிந்தும் இன்னும் ஏன் தேடுகிறார்கள்? தீர்க்கப்படவேண்டிய கணக்கு இன்னும் மிச்சம் உள்ளது. மகிந்தா துரத்தப்படும்போது தனக்கும் இதே நிலை வருமென எண்ணி ஆயத்தமாய் இருந்திருக்க வேண்டாமோ? அல்லது ஒரு இனக்கலவரத்தை தூண்டி தப்பிவிடலாமென நினைத்தாரோ? எங்கிருந்தாலும் இழுத்து வரப்படவேண்டும். பயத்தில உயிர் போகவேண்டும். யாரோ ஒருவர் காத்திருக்கிறார் பழி தீர்க்க! அது அவரது பாதுகாப்பு உத்தியோகத்தராக கூட இருக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

நானும் அப்படித்தான் நினைத்தேன். அடித்து இழுத்து வரவேண்டும்! அவர் பதவியில் இல்லை என்று தெரிந்தும் இன்னும் ஏன் தேடுகிறார்கள்? தீர்க்கப்படவேண்டிய கணக்கு இன்னும் மிச்சம் உள்ளது. மகிந்தா துரத்தப்படும்போது தனக்கும் இதே நிலை வருமென எண்ணி ஆயத்தமாய் இருந்திருக்க வேண்டாமோ? அல்லது ஒரு இனக்கலவரத்தை தூண்டி தப்பிவிடலாமென நினைத்தாரோ? எங்கிருந்தாலும் இழுத்து வரப்படவேண்டும். பயத்தில உயிர் போகவேண்டும். யாரோ ஒருவர் காத்திருக்கிறார் பழி தீர்க்க! அது அவரது பாதுகாப்பு உத்தியோகத்தராக கூட இருக்கலாம்.

எத்தனையோ ஆயிரம் பேரை காணாமல் ஆக்கிய ஒருவர்….
இன்று… எம் கண் முன்னாலேயே, காணாமல் போனது தான்….
காலம் செய்த விசித்திரம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எத்தனை வருடங்களாக ஒவ்வொன்றாக திட்டமிட்டு நடத்திய நாடகம், இன்று ஒரு நொடியில்,  கையில் அகப்பட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அத்தனை கொடுமைகளும் அனைவர் கண்முன்னே அவருக்கு நடத்திக்காட்டப்படும். துட்ட கைமுனுவே  வந்தாலும் காப்பாற்ற முடியாது அவரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதம மந்திரி வீட்டு சமயல் மெனு 

Image

Image

Image

Edited by Maruthankerny
spelling correction
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அப்படி எல்லாம்… மினக்கெட்டுக் கொண்டு நிற்க நேரமில்லை.
24 மனித்தியாலமாய்…. கோத்தா, அதற்குள் தண்ணீர், உணவு இல்லாமல் இருக்கிறான்.
கதவை… வெடி வைத்து தகர்ப்பதே உடனடி தீர்வு. 😂

இன்று… பொழுது சாய்வதற்குள், கதவை…. உடைத்தே ஆக வேண்டும். 👍🏽😎

அங்கே அள்ள.   அள்ள .....பணமாக வருகிறது என்று செய்திகள் சொல்கிறார்கள்    எனவே… இனி பிரச்சனை இல்லை   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kandiah57 said:

அங்கே அள்ள.   அள்ள .....பணமாக வருகிறது என்று செய்திகள் சொல்கிறார்கள்    எனவே… இனி பிரச்சனை இல்லை   😄

பதுங்கு குழி, கதவை.. உடைத்து விட்டார்களா... ?
மத்திய வங்கியிலிருந்து... காணமால் போன காசு எல்லாம்,
இவர்களிடம் தான்... இருந்திருக்கு. 🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமற்போன தங்கம் இங்கே பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆள் அல்லது பணம் தங்கம் இருக்கும் அறையை freezer போல் கதவிடுக்கால் குளிர் வரும் அளவு ஏன் குளிராக வைத்திருக்க வேண்டும்?

அதில் ஏதோ அறை வெப்ப நிலையில் விரைவாக கெட்டு போகும் பொருள் இருக்கிறது? 

4 hours ago, Maruthankerny said:

பிரதம மந்திரி வீட்டு சமயல் மெனு 

Image

Image

Image

பிரேமதாச ஆட்சியில் பதுள-கொழும்பு ரயில்லில் தினமும் நானு ஒயாவில் வைத்து பிரெஷ்சாக மரக்கறிகள், பூக்கள் ஜனாதிபதி மாளிகைக்கு செல்வதை கண்டுள்ளேன்.

அப்பவே தின செலவு 2 லட்சம் என்பார்கள்

மரக்கறி, பூவுக்கு மட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

பிரதம மந்திரி வீட்டு சமயல் மெனு 

Image

Image

Image

தமது வேலையாட்களுக்குக் கொடுக்கும் உணவைப் பார்த்தால் எவளவு பரதேசித்தனமான மனநிலை. தமக்குப் பணிசெய்வோருக்குப் பருப்பும் தேங்காய் சம்பலும்  தகரத்தலடைத்த மீனும்..... சிங்கள மகாசனங்கள் புரிந்துகொண்டால் சரி!

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.