Jump to content

போராட்டக்காரர்களை வடக்கிற்கு அழையுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தை திரும்பவும் ஒருமுறை நம்பச் சொல்கிறார்... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக் காரர்களை வடக்கிற்கு அழைத்து…
இராணுவ வெற்றிச் சின்னங்களை.. உடைக்கப் பண்ணுவது,
நல்ல யோசனையாக இருந்தாலும், எவ்வளவு தூரத்திற்கு சாத்தியப் படும் என்று தெரியவில்லை.
காணொளிக்கு நன்றி.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ வெற்றிக்கு தான் 60 லட்சத்துக்கு மேற்பட்ட சிங்கள மக்கள் வாக்களித்தனர். அவர்கள் இராணுவ வெற்றிச்சின்னங்களை உடைப்பார்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்கள் ஒருபோதும் இராணுவ வெற்றிச் சின்னங்களை உடைக்கப் போவதில்லை… வடக்கிற்கு வந்து தமிழர்களுக்கு உதவப்போவதுமில்லை….

வெளிநாட்டிலிருக்குக்கும் அரசியல் ஆய்வாளர்களின் உசிப்பேத்தல்களுக்கு ஊரில் உள்ளவர்கள் இனியும் ஆடப்போவதில்லை..

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

போராட்டக் காரர்களை வடக்கிற்கு அழைத்து…
இராணுவ வெற்றிச் சின்னங்களை.. உடைக்கப் பண்ணுவது,
நல்ல யோசனையாக இருந்தாலும், எவ்வளவு தூரத்திற்கு சாத்தியப் படும் என்று தெரியவில்லை.
காணொளிக்கு நன்றி.

சிறியர், 

ஆசைக்கும் ஓர் அளவு வேண்டாமா ? எதுக்கும் ஒருமுறை அந்தக் காணொளி வெளியிடப்பட்ட திகதியைப் பாருங்கள். அனேகமாக April 01 ஆக இருக்கும்  🤣

Edited by Kapithan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சிங்களத்தை திரும்பவும் ஒருமுறை நம்பச் சொல்கிறார்... 🤣

சொல்பவருக்கு யூடியூப் லைக்ஸ் அள்ளணும்னா, எருமை மாடு எரோப்பிளேன் ஓட்டுமாம்🤪

58 minutes ago, MEERA said:

போராட்டக்காரர்கள் ஒருபோதும் இராணுவ வெற்றிச் சின்னங்களை உடைக்கப் போவதில்லை… வடக்கிற்கு வந்து தமிழர்களுக்கு உதவப்போவதுமில்லை….

வெளிநாட்டிலிருக்குக்கும் அரசியல் ஆய்வாளர்களின் உசிப்பேத்தல்களுக்கு ஊரில் உள்ளவர்கள் இனியும் ஆடப்போவதில்லை..

 

6 minutes ago, Kapithan said:

அனேகமாக April 01 ஆக இருக்கும்  🤣

பழனிக்கே பஞ்சாமிர்தமா🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

போராட்டக் காரர்களை வடக்கிற்கு அழைத்து…
இராணுவ வெற்றிச் சின்னங்களை.. உடைக்கப் பண்ணுவது,
நல்ல யோசனையாக இருந்தாலும், எவ்வளவு தூரத்திற்கு சாத்தியப் படும் என்று தெரியவில்லை.
காணொளிக்கு நன்றி.

நானும் இதைத்தான் யோசித்தேன். அவர்களைக் கொண்டே இவற்றை அழித்தால் என்னவென்று. ஆனால், அவர்களை இதற்கு உடன்பட வைப்பது சாத்தியமா என்பதுதான் கேள்வி. இன்று அரசுக்கெதிராகவும், ராணுவத்திற்கெதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இருக்கும் வெறுப்பை நாம் பயன்படுத்தி இதைச் செய்ய முயல வேண்டும். நாட்செல்லச் செல்ல, இந்த வெறுப்பு அடங்கிவிடும். 

தமிழர்கள் தற்போதைய புரட்சிக் காரர்களை நம்புகிறார்கள் எனும் மாயையினை ஏற்படுத்தியே அவர்களை இதற்குள் இழுத்துவிடவேண்டும். எமது தேவை அடிமைச் சின்னங்கள் அழிக்கப்படுதலே. அதை யார் செய்தால் என்ன? 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தன் வருமான வீடியோவை பதிவிடுபவருக்கு நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலிட நேரம் இல்லை

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

இங்கு தன் வருமான வீடியோவை பதிவிடுபவருக்கு நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலிட நேரம் இல்லை

உண்மைதான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

நானும் இதைத்தான் யோசித்தேன். அவர்களைக் கொண்டே இவற்றை அழித்தால் என்னவென்று. ஆனால், அவர்களை இதற்கு உடன்பட வைப்பது சாத்தியமா என்பதுதான் கேள்வி. இன்று அரசுக்கெதிராகவும், ராணுவத்திற்கெதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இருக்கும் வெறுப்பை நாம் பயன்படுத்தி இதைச் செய்ய முயல வேண்டும். நாட்செல்லச் செல்ல, இந்த வெறுப்பு அடங்கிவிடும். 

தமிழர்கள் தற்போதைய புரட்சிக் காரர்களை நம்புகிறார்கள் எனும் மாயையினை ஏற்படுத்தியே அவர்களை இதற்குள் இழுத்துவிடவேண்டும். எமது தேவை அடிமைச் சின்னங்கள் அழிக்கப்படுதலே. அதை யார் செய்தால் என்ன? 

ஆனாலும் நீங்கள் சிங்கள இனத்தை ஆகத்தான் பேயன் எண்டு நினைக்கிறியள்.

ஏதோ பசி காதை அடைப்பதால் ராஜபக்சவை தூக்கி எறிகிறார்கள் - அதுதான் தமது மீட்சிக்கு வழி என்பதால்.

வடக்குக்கு எல்லாம் போக வேண்டாம் இலங்கை ஆமியினதை கூட வேண்டாம்.

இந்திய படை சகல இலங்கையரையும் கொன்றது. அதற்கான தெற்கில் இருக்கும் தூபிக்கு ஒரு கல் எறிய சொல்லுங்கள் பார்ப்போம்.

9 hours ago, நந்தன் said:

இங்கு தன் வருமான வீடியோவை பதிவிடுபவருக்கு நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலிட நேரம் இல்லை

👆👇 

தத்துவாசிரியர் 2.0 என்ற மிதப்பில் இருப்பவர் அவர்😆.

உங்களுக்கெல்லாம் பதில் சொல்லி மினகெடமாட்டார்.

19 minutes ago, குமாரசாமி said:

உண்மைதான்....

 

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

1583299117638.png

இங்கு குணா கவியழகன் அவர்களின் கருத்துக்கான பின்னூட்டங்கள், நம்பிக்கையை இழந்த சோர்வின் அடிப்படையில் எழுந்தவைபோல் தோன்றுகிறது. ஒருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், அவரது கருத்தை மேவிய, நிறைவேறக்கூடிய, நல்ல சிந்தனைகளை வெளியிட்டுப் பதிவதே, சோர்வின்றி வெற்றியை நோக்கிப் பிறரும் நகர்வதற்கு வழிவகுக்கும்.🙏 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Paanch said:

1583299117638.png

இங்கு குணா கவியழகன் அவர்களின் கருத்துக்கான பின்னூட்டங்கள், நம்பிக்கையை இழந்த சோர்வின் அடிப்படையில் எழுந்தவைபோல் தோன்றுகிறது. ஒருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், அவரது கருத்தை மேவிய, நிறைவேறக்கூடிய, நல்ல சிந்தனைகளை வெளியிட்டுப் பதிவதே, சோர்வின்றி வெற்றியை நோக்கிப் பிறரும் நகர்வதற்கு வழிவகுக்கும்.🙏 

ஏப்ரல் 01 க்கு ஒரு புளுடா விட்டால் அதற்கெல்லாம் கருத்து கூற முடியுமா ? 

அந்த நகைச்சுவைக்குக் கூட  பலர் ஏற்கனவே கருத்து கூறிவிட்டனர்.  

அதுவும் போதாதென்றால் நீங்கள் ஆரம்பியுங்க்ள் , நாங்கள் தொடருவோம்..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

நானும் இதைத்தான் யோசித்தேன். அவர்களைக் கொண்டே இவற்றை அழித்தால் என்னவென்று. ஆனால், அவர்களை இதற்கு உடன்பட வைப்பது சாத்தியமா என்பதுதான் கேள்வி. இன்று அரசுக்கெதிராகவும், ராணுவத்திற்கெதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இருக்கும் வெறுப்பை நாம் பயன்படுத்தி இதைச் செய்ய முயல வேண்டும். நாட்செல்லச் செல்ல, இந்த வெறுப்பு அடங்கிவிடும். 

தமிழர்கள் தற்போதைய புரட்சிக் காரர்களை நம்புகிறார்கள் எனும் மாயையினை ஏற்படுத்தியே அவர்களை இதற்குள் இழுத்துவிடவேண்டும். எமது தேவை அடிமைச் சின்னங்கள் அழிக்கப்படுதலே. அதை யார் செய்தால் என்ன? 

@kalyani  @Kapithan @goshan_che @ரஞ்சித்  @நந்தன்@குமாரசாமி@paanch

ரஞ்சித்... இங்கு கருத்து எழுதிய பலரும், 
சிங்களவனை நம்ப ஏலாது என்ற தொனிப்படவே எழுதியுள்ளார்கள்.
அவர்களில்... நிச்சயம் தவறு உள்ளது என்று சொல்லவில்லை.
இதுவரை.. சிங்களவன் செய்த வேலைகள், அவர்களை அந்த முடிவுக்கு வர தூண்டியுள்ளது.

ஆனால்... இப்போ வந்திருக்கின்ற  சமுதாயம்
பழைய (சிங்கள, தமிழ்) அரசியல்வாதிகள் போலல்லாது...
புதிய சிந்தனையுடன் வந்துள்ளது போல் தோன்றுகின்றது.  
அவர்களுக்கு... குறைந்தது... ஒரு வருடமாவது சந்தர்ப்பம் கொடுக்காது,
உது சரிவராது என்று... ஆருடம் சொல்வது, 
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

70 வருட சிங்கள துவேச அரசியலை... 
குறுகிய காலத்தில் மாற்றுவது இலேசானது அல்ல.
அதற்க்கு முதலில்... பாராளுமன்றத்தில் உள்ள, 
225 பாராளுமன்ற உறுப்பினர்களையும்  வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
அவை எல்லாம்... படிப்படியாக செய்ய, மாற்றம் உருவாகும் என நினைக்கின்றேன்.
அதற்கு... போராட்டக் காரர்களுக்கு, சந்தர்ப்பம் கொடுப்பதுதான் முறையான செயல். 🙂

  • Like 2
Link to comment
Share on other sites

10 minutes ago, Kapithan said:

ஏப்ரல் 01 க்கு ஒரு புளுடா விட்டால் அதற்கெல்லாம் கருத்து கூற முடியுமா ? 

அந்த நகைச்சுவைக்குக் கூட  பலர் ஏற்கனவே கருத்து கூறிவிட்டனர்.  

அதுவும் போதாதென்றால் நீங்கள் ஆரம்பியுங்க்ள் , நாங்கள் தொடருவோம்..👍

 

நல்லது! உங்களாலும் நல்ல கருத்தைத் தெரிவிக்க முடியவில்லையே.🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

@kalyani  @Kapithan @goshan_che @ரஞ்சித்  @நந்தன்@குமாரசாமி@paanch

ரஞ்சித்... இங்கு கருத்து எழுதிய பலரும், 
சிங்களவனை நம்ப ஏலாது என்ற தொனிப்படவே எழுதியுள்ளார்கள்.
அவர்களில்... நிச்சயம் தவறு உள்ளது என்று சொல்லவில்லை.
இதுவரை.. சிங்களவன் செய்த வேலைகள், அவர்களை அந்த முடிவுக்கு வர தூண்டியுள்ளது.

ஆனால்... இப்போ வந்திருக்கின்ற  சமுதாயம்
பழைய (சிங்கள, தமிழ்) அரசியல்வாதிகள் போலல்லாது...
புதிய சிந்தனையுடன் வந்துள்ளது போல் தோன்றுகின்றது.  
அவர்களுக்கு... குறைந்தது... ஒரு வருடமாவது சந்தர்ப்பம் கொடுக்காது,
உது சரிவராது என்று... ஆருடம் சொல்வது, 
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

70 வருட சிங்கள துவேச அரசியலை... 
குறுகிய காலத்தில் மாற்றுவது இலேசானது அல்ல.
அதற்க்கு முதலில்... பாராளுமன்றத்தில் உள்ள, 
225 பாராளுமன்ற உறுப்பினர்களையும்  வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
அவை எல்லாம்... படிப்படியாக செய்ய, மாற்றம் உருவாகும் என நினைக்கின்றேன்.
அதற்கு... போராட்டக் காரர்களுக்கு, சந்தர்ப்பம் கொடுப்பதுதான் முறையான செயல். 🙂

"70 வருட சிங்கள துவேச அரசியலை... 
குறுகிய காலத்தில் மாற்றுவது இலேசானது அல்ல."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

நல்லது! உங்களாலும் நல்ல கருத்தைத் தெரிவிக்க முடியவில்லையே.🤔

அய்யா,

உவர் என்ன கூறியிருக்கிறார்? போராட்டக்காறர்களைக்கொண்டு கல்லெறியச் சொல்கிறார். நடக்கிற காரியமா இது ? 

இன்றைய இலங்கைப் பிரச்சனையின் அடிப்படையே இனப்பிரச்சனைதான் என்பதுகூட இதுவரை  ஒரு சிங்களமும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. நிலைமை அப்படி இருக்கையில் இவர்களை வடக்கிற்கு அழைப்பித்து கல்லெறியச் சொன்னால் நடக்கிற் காரியமா ? 

இவ்வளவு பிரச்சனைக்குள்ளேயும் எமது அரசியல்வாதிகளும் மக்களும் எந்த ஒரு பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லையென்றால் அதனைப் புரிந்துகொள்ள வேண்டாமா ? 

மனதளவில் நாங்கள் பிரிந்து போனோம். இதுதான்  உண்மை. 

இதனைப் புரிந்துகொள்ளாத ஒருவர் எப்படி ஆய்வாளராக முடியும்?

தன்னை ஆய்வாளராக கூறிக்கொள்வது அவரது உரிமை. ஆனால் அவரது ஆய்வுகளில் கொஞ்சமேனும் யதார்த்தத்தை புரிந்துகொண்டதாக காட்ட வேண்டாமா ? அதுவும் இல்லையென்றால் அதுக்கு மினெக்கெட்டு பதில் எழுத முடியுமா ? 

உவர் சொல்லுறத வடக்கில போய்ச் சொன்னால், சொல்லுறவனுக்குத்தான் சனம் முதலில் கல்லெறியும். 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நந்தன் said:

இங்கு தன் வருமான வீடியோவை பதிவிடுபவருக்கு நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலிட நேரம் இல்லை

 

பாவம்  குணா

அவர்  யாழ் இணையத்தை  இன்னும் கண்டறியவில்லை😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விசுகு said:

 

பாவம்  குணா

அவர்  யாழ் இணையத்தை  இன்னும் கண்டறியவில்லை😭

அவரது PA யாராவது இங்கே இணைக்கிறார்கள் போல 🤣

1 hour ago, Paanch said:

நல்லது! உங்களாலும் நல்ல கருத்தைத் தெரிவிக்க முடியவில்லையே.🤔

""நாட்டின், பொருளாதாரநெருக்கடிகளுக்கு.. கொரோனாவே காரணம் – சபாநாயகர்.

ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பதவி விலகிய ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளிநாடுட்டு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.""
 
உது இந்த so called ஆய்வாளருக்குத் தெரியுமோ? 
 
Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

 

ஆனால்... இப்போ வந்திருக்கின்ற  சமுதாயம்
பழைய (சிங்கள, தமிழ்) அரசியல்வாதிகள் போலல்லாது...
புதிய சிந்தனையுடன் வந்துள்ளது போல் தோன்றுகின்றது.  
 

 

பாணினதும் பருப்பினதும் விலை குறைந்து பெற்றொல் தாரளமாக வாங்கக் கூடிய விலைக்கு வரும் போது இந்த நல்ல சிந்தனையின் இடத்தை மகாவம்ச சிந்தனை நிரப்பிக் கொள்ளும். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

@kalyani  @Kapithan @goshan_che @ரஞ்சித்  @நந்தன்@குமாரசாமி@paanch

ரஞ்சித்... இங்கு கருத்து எழுதிய பலரும், 
சிங்களவனை நம்ப ஏலாது என்ற தொனிப்படவே எழுதியுள்ளார்கள்.
அவர்களில்... நிச்சயம் தவறு உள்ளது என்று சொல்லவில்லை.
இதுவரை.. சிங்களவன் செய்த வேலைகள், அவர்களை அந்த முடிவுக்கு வர தூண்டியுள்ளது.

ஆனால்... இப்போ வந்திருக்கின்ற  சமுதாயம்
பழைய (சிங்கள, தமிழ்) அரசியல்வாதிகள் போலல்லாது...
புதிய சிந்தனையுடன் வந்துள்ளது போல் தோன்றுகின்றது.  
அவர்களுக்கு... குறைந்தது... ஒரு வருடமாவது சந்தர்ப்பம் கொடுக்காது,
உது சரிவராது என்று... ஆருடம் சொல்வது, 
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.


அதற்கு... போராட்டக் காரர்களுக்கு, சந்தர்ப்பம் கொடுப்பதுதான் முறையான செயல். 🙂

எல்லாள சோழன்…… பொன்னம்பலம் இராமநாதன் …எஸ் ஜே வி செல்வநாயகம்…..தமிழ் சிறி என்று பட்டியல் தொடர வேண்டும் என்பதுதான் விதி போலும்😆

1 hour ago, தமிழ் சிறி said:

70 வருட சிங்கள துவேச அரசியலை... 
குறுகிய காலத்தில் மாற்றுவது இலேசானது அல்ல.

2500 வருட 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அவரின் கருத்து,இந்த போராட்டத்தை எங்களுக்கு சார்பாக திருப்ப ஏதாவது வழிகள் இருக்கின்றனவா என அனுபவம் உள்ளவர்களும் கருத்துரைக்கலாம். முடியாதது என்ற ஒன்றில்லை.

  • Like 2
Link to comment
Share on other sites

7 hours ago, Kapithan said:

உவர் சொல்லுறத வடக்கில போய்ச் சொன்னால், சொல்லுறவனுக்குத்தான் சனம் முதலில் கல்லெறியும்.

கபிதன் அவர்களே அவர் சொல்வதை ஏற்றுக்கொள்பவர்களும் உள்ளார்கள், விமர்ச்சிப்பவர்களும் உள்ளார்கள். ஆகவே அவர் கருத்துக்கள் முற்றிலுமே தவறானவை என்று எழுந்தமானமாகக் கூற முடியாது. சிந்திக்க வேண்டியவற்றை உள்வாங்கி ஏனையவற்றைப் புறம்தள்ளிவிடலாம்.

வடக்குச் சனம் வாக்களித்துத் தெரிவுசெய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே இன்று விமர்ச்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதில் முக்கியமாக டக்ளசு தேவானந்தா, அங்கயன், சுமந்திரன் போன்றோரைத் தெரிவுசெய்த சனமும் அங்கிருக்கையில் எவர் முன்வந்து கல்லெறிவார்கள்.?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

கபிதன் அவர்களே அவர் சொல்வதை ஏற்றுக்கொள்பவர்களும் உள்ளார்கள், விமர்ச்சிப்பவர்களும் உள்ளார்கள். ஆகவே அவர் கருத்துக்கள் முற்றிலுமே தவறானவை என்று எழுந்தமானமாகக் கூற முடியாது. சிந்திக்க வேண்டியவற்றை உள்வாங்கி ஏனையவற்றைப் புறம்தள்ளிவிடலாம்.

வடக்குச் சனம் வாக்களித்துத் தெரிவுசெய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே இன்று விமர்ச்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதில் முக்கியமாக டக்ளசு தேவானந்தா, அங்கயன், சுமந்திரன் போன்றோரைத் தெரிவுசெய்த சனமும் அங்கிருக்கையில் எவர் முன்வந்து கல்லெறிவார்கள்.?? 

பாஞ், 

சாதா காக்கைக்கும் அண்டங்காக்கைக்கும் வேற்பாடு உள்ளதல்லவா ? 

பொதுசனம் எதுவும் எப்படியும் கதைக்கலாம். பின்விளைவுகள் பெரிதாக ஏதும் இராது. ஆனால் தன்னை ஆய்வாளர் என்று சொல்பவர் பாமரர் மட்டத்திற்கு கீழிறங்கி கருத்துரைக்க முடியாது. 

தமிழர் சிங்களவர் பிரச்சனை எத்தனை நூற்றாண்டு காலத்தினை வரலாறாகக் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியும். அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நம்பிக்கையீனமே இன்றைய இனப்பிரச்சனைக்கான அடிப்படை.  ஒரிரவில் இதனைத் தீர்க்க முடியுமா ? அப்படி ஒரு தீர்வை முன்வைத்தாலும் அது நின்று நிலைக்குமா ? 

இத்தனை அழிவுகள் ஆகுதிகளைக் கண்ட பின்னரும் இந்தப் பிரச்சனையை இத்தனை இலகுவாகக் கையாளலாம் என சிந்திக்கும் வஞ்சகத்தனத்தை என்ன சொல்வது ? 

யாராவது குணா கவியழகனுக்குச் " உந்த ஆர்ப்பாட்டக்காறரை ஒருக்க யாழ்ப்பாணப் பக்கம் கொண்டுவந்த என்ன ? " என்று சொல்லியிருப்பினம். அதைக் கேட்டுவிட்டு ஒரு வீடியோ போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். 

டக்கி, அங்கஜனின் தெரிவு என்பது மிகவும் சுதந்திரமான சூழலில் தேர்தல் இடம்பெற்றால் திரும்பவும் இடம்பெறாது என்பது எனது திடமான நம்பிக்கை. 

 

பறட்டைக் காட்டுக்கு கறட்டை ஓணான் ராசா என்பது தமிழர் வழக்கிலுள்ள சொல்லடை. அது இவருக்கு மிகவும் நன்றாகவே பொருந்தும். 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

இப்போ வந்திருக்கின்ற  சமுதாயம்
பழைய (சிங்கள, தமிழ்) அரசியல்வாதிகள் போலல்லாது...
புதிய சிந்தனையுடன் வந்துள்ளது போல் தோன்றுகின்றது.  
அவர்களுக்கு... குறைந்தது... ஒரு வருடமாவது சந்தர்ப்பம் கொடுக்காது,
உது சரிவராது என்று... ஆருடம் சொல்வது, 
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

70 வருட சிங்கள துவேச அரசியலை... 
குறுகிய காலத்தில் மாற்றுவது இலேசானது அல்ல.
அதற்க்கு முதலில்... பாராளுமன்றத்தில் உள்ள, 
225 பாராளுமன்ற உறுப்பினர்களையும்  வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
அவை எல்லாம்... படிப்படியாக செய்ய, மாற்றம் உருவாகும் என நினைக்கின்றேன்.
அதற்கு... போராட்டக் காரர்களுக்கு, சந்தர்ப்பம் கொடுப்பதுதான் முறையான செயல்.

புலம்பெயர்ந்து சனநாயக நாடுகளில் சம உரிமையுடன் வாழும் சிங்களவர்களே இனவாதத்தை கைவிட தயாரில்லை. தமிழர்களுக்கு உரிமை வழங்க சிபாரிசு செய்கிறார்கள் இல்லை. நிலைமை இப்படியிருக்கும் போது  பஞ்சத்தினால் போராட வெளிக்கிட்டவர்களிடம் எப்படி மாற்று அரசியலை எதிர்பார்க்க முடியும்?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.