Jump to content

மத்தியப் பிரதேசம்: 8 வயது அண்ணனின் மடியில் தம்பியின் சடலம் - நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியப் பிரதேசம்: 8 வயது அண்ணனின் மடியில் தம்பியின் சடலம் - நடந்தது என்ன?

  • சுரையா நியாசி
  • போபாலில் இருந்து பிபிசி இந்திக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

வைரல் படம்.

பட மூலாதாரம்,சுரையா நியாசி

 

படக்குறிப்பு,

மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில், மடியில் தம்பியின் உடலுடன் அமர்ந்திருக்கும் சிறுவன்.

மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில், எட்டு வயது சிறுவன் தனது தம்பியின் சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காட்டும் புகைப்படம் வைரலாகி மக்கள் உள்ளத்தை உருக்கியது. அவனது தந்தை குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல குறைவான கட்டணத்தில் வண்டி கிடைக்குமா என்று தேடி அலைந்துகொண்டிருந்தார்.

இந்த காட்சியின் வீடியோ வைரலாகப் பரவியதும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியை மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது.

இது குறித்து முதல்வர் சிவராஜ் சிங் செளஹானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றபோது அவர் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். ஆனால் மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பின்னணி என்ன?

தம்பியின் உடலுடன் அண்ணன்

எட்டு வயது சிறுவன் ஒருவன் , தனது தம்பியின் சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

உயிரிழந்த குழந்தையின் வயது 2. அவனது உடல் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டிருந்தது. தந்தை தனது குழந்தையின் உடலை தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்காக வண்டி தேடிச் சென்றிருந்தார்.

பூஜாராம் ஜாதவ், மகனின் உடலை மருத்துவமனையில் இருந்து தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல வண்டி கேட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் வண்டி இல்லை என்றும், வெளியே ஏற்பாடு செய்துகொள்ளுமாறும் கூறிவிட்டனர் என்றார் பூஜாராம்.

வெளியில் நின்றிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் பூஜாராம் பேசியபோது அவர்கள் 1500 ரூபாய் வரை பணம் கேட்டுள்ளனர்.

 

பூஜாராம் ஜாதவ்

பட மூலாதாரம்,சுரையா நியாசி

 

படக்குறிப்பு,

பூஜாராம் ஜாதவ்

அதன் பிறகு மகனின் சடலத்துடன் வெளியே வந்த அவர் மருத்துவமனைக்கு வெளியே வண்டி கிடைக்காததால், நேரு பூங்கா அருகே இளைய மகனின் உடலை மூத்த மகனிடம் பார்த்துக்கொள்ளுமாறு கூறி, அங்கிருந்து சென்றார்.

 

நரோத்தம் மிஸ்ரா அறிக்கை

குல்ஷன் தனது தம்பி உடலை மடியில் வைத்தவாறு அமர்ந்திருக்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா திங்கள்கிழமை தெரிவித்தார்.

"ஊரிலிருந்து வந்தபோது பூஜாராமின் குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்ததும், குழந்தையின் உடலை மூத்த மகனிடம் ஒப்படைத்துவிட்டு அவர் உறவினர் வீட்டிற்கு சென்றார். இதை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி இது குறித்து விசாரணை நடத்துவார். மாலைக்குள் விசாரணையை முடிக்கும்படி அவரிடம் கூறப்பட்டுள்ளது," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், சிவில் சர்ஜனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் அந்த குடும்பத்திற்கு அரசு சில உதவிகளை செய்துள்ளது.

"சந்தையில் வண்டிகளுக்கு பஞ்சர் ஒட்டி பிழைப்பு நடத்துகிறேன். குழந்தையின் உடல்நிலை எப்படி மோசமடைந்தது என்று தெரியவில்லை. முதலில் அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டினேன். ஆனால் பலனில்லை. பின்னர் இங்கே அழைத்து வந்தேன்,"என்று தந்தை பூஜாராம் ஜாதவ் கூறினார்.

பூஜாராம் ஜாதவ் குடும்பம்

ஜாதவ் குடும்பத்தை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஆம்புலன்ஸ், அவர்களை விட்டுவிட்டுத் திரும்பிச்சென்றுவிட்டது.

பூஜாராம் ஜாதவுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு மகளும் உள்ளனர். அவர் மனைவி அவரைப் பிரிந்து சில காலமாக தாய் வீட்டில் வசிக்கிறார். பூஜாராம்தான் இந்த குழந்தைகளை கவனித்து வந்தார். சரியான உணவு கிடைக்காத காரணத்தினால் குழந்தையின் உடல் நிலை மோசமடைந்து அதுவே இறப்பிற்கு காரணமாக அமைந்தது என அக்கம்பக்கத்தினர் கருதுகின்றனர்.

குல்ஷன் தனது தம்பியின் உடலை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் செய்தி நகரின் கோத்வாலி காவல் நிலைய டவுன் இன்ஸ்பெக்டர் யோகேந்திர சிங் ஜாதோனுக்கு தெரியவந்தது. அவர் அந்த இடத்திற்குச் சென்று, இருவரையும் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அதன் பிறகு, ஆம்புலன்ஸ் ஏற்பாடுசெய்து குடும்பத்தை கிராமத்துக்கு அனுப்பி வைத்தார்.

அதே நேரத்தில், "இந்த விஷயம் எங்களுக்குத் தெரிந்ததும், நாங்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அவரை அவரது கிராமத்திற்கு அனுப்பினோம்."என்று தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (CMHO) டாக்டர் ராகேஷ் ஷர்மா கூறுகிறார்.

பாஜக-காங்கிரஸ் மோதல்

இந்த சம்பவம் காரணமாக காங்கிரசும், பாஜகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன.

இந்த விஷயத்தில் அரசை கடுமையாக சாடிய முன்னாள் முதல்வர் கமல்நாத், கிராமப்புறங்களில் சுகாதாரம் மற்றும் ஆம்புலன்ஸ் பிரச்னைகள் குறித்து பல ட்வீட்களை பதிவுசெய்தார்.

இந்த விவகாரத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பதிலளிக்கவில்லை.

"மொரேனா விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர். ஆனால் பதில் சொல்லாமல் அவர் ஒடிவிட்டார். சிவராஜ் அவர்களே, நீங்கள் எவ்வளவு ஓடுவீர்கள், எங்கு ஓடுவீர்கள், மக்கள் எல்லா இடங்களிலும் நிற்கிறார்கள்."என்று சிவராஜ் சிங் சௌஹானைப் பற்றி கமல்நாத் கூறினார்.

"சவால்களை எதிர்கொள்ளாமல் தப்பித்து உண்மையை மறுக்கும் நீங்களும் உங்கள் அரசும் மேற்கொள்ளும் இந்தப்போக்கு, மாநிலத்தின் ஒட்டுமொத்த மருத்துவ முறையையும் வெறுமையாகவும் உணர்வற்றதாகவும் ஆக்குகிறது," என்று அவர் ட்வீட் மூலம் தெரிவித்திருந்தார்.

 

முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.

இதற்குப் பிறகுதான் அரசு நடவடிக்கையில் இறங்கியது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவியும் வழங்கப்பட்டது.

3,400 பேருக்கு ஒரு மருத்துவர்

இந்த மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.

மாநிலத்தில் 77 ஆயிரம் மருத்துவர்கள் தேவை. ஆனால் 22 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். அதாவது 3,400 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார் என்று எம்.பி மருத்துவக் கல்லூரி கவுன்சிலின் அறிக்கை தெரிவிக்கிறது.

மாநிலத்தில் உள்ள மருத்துவர்களின் சரியான எண்ணிக்கையை அறிய கவுன்சில் இந்த ஆண்டு மறுபதிவு செய்வதற்கான உத்தரவை அரசு வழங்கியது. கடைசி தேதி வரை, 22,000 டாக்டர்கள் மட்டுமே தங்களை பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இதற்கு முன்பு இருந்த ஆவணங்களின்படி 59,000 மருத்துவர்கள், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

3,278 சிறப்பு மருத்துவர் பணியிடங்களில் 1,029 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், 1,677 மருத்துவ அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் மாநில சுகாதாரத் துறையின் நிலையை படம்பிடித்துக்காட்டுகின்றன.

https://www.bbc.com/tamil/india-62133583

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

மத்தியப் பிரதேசம்: 8 வயது அண்ணனின் மடியில் தம்பியின் சடலம் - நடந்தது என்ன?

  • சுரையா நியாசி
  • போபாலில் இருந்து பிபிசி இந்திக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

வைரல் படம்.

பட மூலாதாரம்,சுரையா நியாசி

 

படக்குறிப்பு,

மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில், மடியில் தம்பியின் உடலுடன் அமர்ந்திருக்கும் சிறுவன்.

மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில், எட்டு வயது சிறுவன் தனது தம்பியின் சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காட்டும் புகைப்படம் வைரலாகி மக்கள் உள்ளத்தை உருக்கியது. அவனது தந்தை குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல குறைவான கட்டணத்தில் வண்டி கிடைக்குமா என்று தேடி அலைந்துகொண்டிருந்தார்.

இந்த காட்சியின் வீடியோ வைரலாகப் பரவியதும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியை மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது.

இது குறித்து முதல்வர் சிவராஜ் சிங் செளஹானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றபோது அவர் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். ஆனால் மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பின்னணி என்ன?

தம்பியின் உடலுடன் அண்ணன்

எட்டு வயது சிறுவன் ஒருவன் , தனது தம்பியின் சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

உயிரிழந்த குழந்தையின் வயது 2. அவனது உடல் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டிருந்தது. தந்தை தனது குழந்தையின் உடலை தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்காக வண்டி தேடிச் சென்றிருந்தார்.

பூஜாராம் ஜாதவ், மகனின் உடலை மருத்துவமனையில் இருந்து தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல வண்டி கேட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் வண்டி இல்லை என்றும், வெளியே ஏற்பாடு செய்துகொள்ளுமாறும் கூறிவிட்டனர் என்றார் பூஜாராம்.

வெளியில் நின்றிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் பூஜாராம் பேசியபோது அவர்கள் 1500 ரூபாய் வரை பணம் கேட்டுள்ளனர்.

 

பூஜாராம் ஜாதவ்

பட மூலாதாரம்,சுரையா நியாசி

 

படக்குறிப்பு,

பூஜாராம் ஜாதவ்

அதன் பிறகு மகனின் சடலத்துடன் வெளியே வந்த அவர் மருத்துவமனைக்கு வெளியே வண்டி கிடைக்காததால், நேரு பூங்கா அருகே இளைய மகனின் உடலை மூத்த மகனிடம் பார்த்துக்கொள்ளுமாறு கூறி, அங்கிருந்து சென்றார்.

 

நரோத்தம் மிஸ்ரா அறிக்கை

குல்ஷன் தனது தம்பி உடலை மடியில் வைத்தவாறு அமர்ந்திருக்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா திங்கள்கிழமை தெரிவித்தார்.

"ஊரிலிருந்து வந்தபோது பூஜாராமின் குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்ததும், குழந்தையின் உடலை மூத்த மகனிடம் ஒப்படைத்துவிட்டு அவர் உறவினர் வீட்டிற்கு சென்றார். இதை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி இது குறித்து விசாரணை நடத்துவார். மாலைக்குள் விசாரணையை முடிக்கும்படி அவரிடம் கூறப்பட்டுள்ளது," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், சிவில் சர்ஜனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் அந்த குடும்பத்திற்கு அரசு சில உதவிகளை செய்துள்ளது.

"சந்தையில் வண்டிகளுக்கு பஞ்சர் ஒட்டி பிழைப்பு நடத்துகிறேன். குழந்தையின் உடல்நிலை எப்படி மோசமடைந்தது என்று தெரியவில்லை. முதலில் அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டினேன். ஆனால் பலனில்லை. பின்னர் இங்கே அழைத்து வந்தேன்,"என்று தந்தை பூஜாராம் ஜாதவ் கூறினார்.

பூஜாராம் ஜாதவ் குடும்பம்

ஜாதவ் குடும்பத்தை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஆம்புலன்ஸ், அவர்களை விட்டுவிட்டுத் திரும்பிச்சென்றுவிட்டது.

பூஜாராம் ஜாதவுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு மகளும் உள்ளனர். அவர் மனைவி அவரைப் பிரிந்து சில காலமாக தாய் வீட்டில் வசிக்கிறார். பூஜாராம்தான் இந்த குழந்தைகளை கவனித்து வந்தார். சரியான உணவு கிடைக்காத காரணத்தினால் குழந்தையின் உடல் நிலை மோசமடைந்து அதுவே இறப்பிற்கு காரணமாக அமைந்தது என அக்கம்பக்கத்தினர் கருதுகின்றனர்.

குல்ஷன் தனது தம்பியின் உடலை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் செய்தி நகரின் கோத்வாலி காவல் நிலைய டவுன் இன்ஸ்பெக்டர் யோகேந்திர சிங் ஜாதோனுக்கு தெரியவந்தது. அவர் அந்த இடத்திற்குச் சென்று, இருவரையும் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அதன் பிறகு, ஆம்புலன்ஸ் ஏற்பாடுசெய்து குடும்பத்தை கிராமத்துக்கு அனுப்பி வைத்தார்.

அதே நேரத்தில், "இந்த விஷயம் எங்களுக்குத் தெரிந்ததும், நாங்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அவரை அவரது கிராமத்திற்கு அனுப்பினோம்."என்று தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (CMHO) டாக்டர் ராகேஷ் ஷர்மா கூறுகிறார்.

பாஜக-காங்கிரஸ் மோதல்

இந்த சம்பவம் காரணமாக காங்கிரசும், பாஜகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன.

இந்த விஷயத்தில் அரசை கடுமையாக சாடிய முன்னாள் முதல்வர் கமல்நாத், கிராமப்புறங்களில் சுகாதாரம் மற்றும் ஆம்புலன்ஸ் பிரச்னைகள் குறித்து பல ட்வீட்களை பதிவுசெய்தார்.

இந்த விவகாரத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பதிலளிக்கவில்லை.

"மொரேனா விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர். ஆனால் பதில் சொல்லாமல் அவர் ஒடிவிட்டார். சிவராஜ் அவர்களே, நீங்கள் எவ்வளவு ஓடுவீர்கள், எங்கு ஓடுவீர்கள், மக்கள் எல்லா இடங்களிலும் நிற்கிறார்கள்."என்று சிவராஜ் சிங் சௌஹானைப் பற்றி கமல்நாத் கூறினார்.

"சவால்களை எதிர்கொள்ளாமல் தப்பித்து உண்மையை மறுக்கும் நீங்களும் உங்கள் அரசும் மேற்கொள்ளும் இந்தப்போக்கு, மாநிலத்தின் ஒட்டுமொத்த மருத்துவ முறையையும் வெறுமையாகவும் உணர்வற்றதாகவும் ஆக்குகிறது," என்று அவர் ட்வீட் மூலம் தெரிவித்திருந்தார்.

 

முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.

இதற்குப் பிறகுதான் அரசு நடவடிக்கையில் இறங்கியது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவியும் வழங்கப்பட்டது.

3,400 பேருக்கு ஒரு மருத்துவர்

இந்த மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.

மாநிலத்தில் 77 ஆயிரம் மருத்துவர்கள் தேவை. ஆனால் 22 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். அதாவது 3,400 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார் என்று எம்.பி மருத்துவக் கல்லூரி கவுன்சிலின் அறிக்கை தெரிவிக்கிறது.

மாநிலத்தில் உள்ள மருத்துவர்களின் சரியான எண்ணிக்கையை அறிய கவுன்சில் இந்த ஆண்டு மறுபதிவு செய்வதற்கான உத்தரவை அரசு வழங்கியது. கடைசி தேதி வரை, 22,000 டாக்டர்கள் மட்டுமே தங்களை பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இதற்கு முன்பு இருந்த ஆவணங்களின்படி 59,000 மருத்துவர்கள், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

3,278 சிறப்பு மருத்துவர் பணியிடங்களில் 1,029 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், 1,677 மருத்துவ அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் மாநில சுகாதாரத் துறையின் நிலையை படம்பிடித்துக்காட்டுகின்றன.

https://www.bbc.com/tamil/india-62133583


வட மாநிலங்களில், இப்படி அடிக்கடி நடைபெறும்.
சென்ற வருடம் ஒருவர்… தனது மகளுடன், இறந்த தனது மனைவியை
தோளில் வைத்துக் கொண்டு… 12 கிலோ மீற்றர் நடந்து வந்திருகிறார்கள்.
மாட்டுக்கு… அம்புலன்ஸ் சேவை நடத்தும் மாநிலத்தில், மனிதனின் மதிப்பு இதுதான்.

  • Like 1
  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஆட்சியும் இடங்களில் எல்லாம் பிரச்சனை, முறைகேடுகள். இந்த லட்சனத்தில் உலகத்தின் தலைவராக இந்தியா வரும் என கதை வேற.. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இவர்கள் ஆட்சியும் இடங்களில் எல்லாம் பிரச்சனை, முறைகேடுகள். இந்த லட்சனத்தில் உலகத்தின் தலைவராக இந்தியா வரும் என கதை வேற.. 

பாரதீய ஜனதா தலைமையில், இந்தியா எனும் உலகின் முதலாவது மக்கள் தொகை கொண்ட நாடு, இந்துத்துவா நோக்கி மிக வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. 

தனது இந்துமத அடிப்படைவாதக் கொள்கைகளுக்காக இந்திய மிகவும் பாரதூரமான விலையினைச் செலுத்தப் போகிறது. இன்று இலங்கையில் நடப்பதுபோல, மிக விரைவில் இந்திய முஸ்லீம்கள் இந்து மத அடிப்படைவாதிகளுக்கெதிராக கிளர்ந்தெழச் சந்தர்ப்பம் இருக்கிறது. பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரஞ்சித் said:

பாரதீய ஜனதா தலைமையில், இந்தியா எனும் உலகின் முதலாவது மக்கள் தொகை கொண்ட நாடு, இந்துத்துவா நோக்கி மிக வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. 

தனது இந்துமத அடிப்படைவாதக் கொள்கைகளுக்காக இந்திய மிகவும் பாரதூரமான விலையினைச் செலுத்தப் போகிறது. இன்று இலங்கையில் நடப்பதுபோல, மிக விரைவில் இந்திய முஸ்லீம்கள் இந்து மத அடிப்படைவாதிகளுக்கெதிராக கிளர்ந்தெழச் சந்தர்ப்பம் இருக்கிறது. பார்க்கலாம். 

உலக முஸ்லீம்களுக்கு மதத்தை முதன்மைப்படுத்தி பல நாடுகள் இருக்கும் போது இந்துக்கள் தங்கள் மதத்தை  முன்னிலைப்படுத்தி ஒரு நாட்டை வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கின்றது?

பல முஸ்லீம் நாடுகளில் இந்து தெய்வ சிலைகளை அழகுக்கு கூட வைத்திருக்க முடியவில்லை.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இவர்கள் ஆட்சியும் இடங்களில் எல்லாம் பிரச்சனை, முறைகேடுகள். இந்த லட்சனத்தில் உலகத்தின் தலைவராக இந்தியா வரும் என கதை வேற.. 

அது அமெரிக்கனுக்கு தெளிவாக புரிந்தபடியால்தான் இவர்களையிட்டி பெரிதாக அலட்டிக்கொள்வதில்ல. 

2 hours ago, குமாரசாமி said:

உலக முஸ்லீம்களுக்கு மதத்தை முதன்மைப்படுத்தி பல நாடுகள் இருக்கும் போது இந்துக்கள் தங்கள் மதத்தை  முன்னிலைப்படுத்தி ஒரு நாட்டை வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கின்றது?

பல முஸ்லீம் நாடுகளில் இந்து தெய்வ சிலைகளை அழகுக்கு கூட வைத்திருக்க முடியவில்லை.

இந்துக்கெளுக்கென்று ஒரு நாடென்ன ஒன்பது நாடுகள் இருக்கலாம். அதில் பிரச்சனையே இல்லை. ஆனால் இவர்கள் இந்துத்துவம் என்கின்ற பெயரில் வர்ணாசிரம தர்மத்தையல்லோ நிறுவ முயற்சிக்கிறார்கள். 

ஆனால் இவர்கள் தங்களைச் சூழ உள்ளவர்களை நிம்மதியாக வாழ விடுவார்களா? 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவிற்கு மனிதனை மோசமான நிலையில் வைத்திருக்கும் இந்தியா உலகத்தின் தலைவராக  வரும் என்பது முடியாத ஒன்று.இந்தியாவில் மனிதனுக்கு மதிப்பு இல்லை. அது இந்த கட்சி  இப்போது ஆளும்போது என்று இல்லை முன்பு தொடக்கம் இந்தியா அப்படி தானே இருந்து வருகிறது.
அமைதி மதமான முஸ்லிம் மதத்தவர்கள் கிளர்ந்து எழும்ப போகின்றார்கள் என்று ரஞ்சித் அண்ணா சொல்கிறார்.அவர்கள் Kafir களுக்கு எதிரான போரை எப்போதே தொடங்கிவிட்டனரே.அவர்கள் கிளர்ந்து எழுந்து பிறந்தது தானே மேற்க்கு பாக்கிஸ்தான் கிழக்கு பாக்கிஸ்தான்.

9 hours ago, குமாரசாமி said:

பல முஸ்லீம் நாடுகளில் இந்து தெய்வ சிலைகளை அழகுக்கு கூட வைத்திருக்க முடியவில்லை.

சூட்கேசுக்குள் கடவுள் படத்தை ஒளித்து வைத்து வணங்கும் நிலைமை சில முஸ்லிம் நாடுகளில் இருப்பதாக கேள்விபட்டேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இந்துக்கெளுக்கென்று ஒரு நாடென்ன ஒன்பது நாடுகள் இருக்கலாம். அதில் பிரச்சனையே இல்லை. ஆனால் இவர்கள் இந்துத்துவம் என்கின்ற பெயரில் வர்ணாசிரம தர்மத்தையல்லோ நிறுவ முயற்சிக்கிறார்கள். 

ஆனால் இவர்கள் தங்களைச் சூழ உள்ளவர்களை நிம்மதியாக வாழ விடுவார்களா? 

மேற்குலகமும் மதத்தை அடிப்படையாக வைத்து தான்  போர்களை நடத்தியது.நடத்துகின்றது.


அந்நியர்கள்  ஆசிய நாடுகள் மீதான  படையெடுப்பின் பின்னர் நடந்த மத அட்டூளியங்கள் பற்றியும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

1) மேற்குலகமும் மதத்தை அடிப்படையாக வைத்து தான்  போர்களை நடத்தியது.நடத்துகின்றது.


2) அந்நியர்கள்  ஆசிய நாடுகள் மீதான  படையெடுப்பின் பின்னர் நடந்த மத அட்டூளியங்கள் பற்றியும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

1)இப்போதும் மதத்தை அடிப்படையாக வைத்துத்தானா போர்களை நடாத்துகிறார்கள் ? இல்லை என்பது என் அபிப்பிராயம்.

2) என்ன சொல்ல வருகிறீர்கள் ? அவர்கள் அட்டூழியம் புரிந்தார்கள். அதனால் நாமும் புரியலாம். இரண்டும் சரிசமமாக ஆகிவிடும் என்கிறீர்களா ? 

இல்லை, மற்றவர்கள் விட்ட பிழைகளில் இருந்து நாம் பாடம் படிப்போம் என்கிறீர்களா? 

புரியவில்லை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்த மதவாதிகளாலேயே இலங்கையில் தமிழ்மக்கள் ஒரு இன அழிவைச் சந்தித்தார்கள். இலங்கை சிங்கள - பெளத்த நாடு எனும் கொள்கையினாலேயே மற்றைய இனங்களையும் மதங்களையும் அழிக்கலாம் என்கிற எண்ணக்கரு அவர்களுக்குப் பிறந்தது. தொடர்ந்தும் அந்த எண்ணக்கருவில் பயணிப்பதாலேயே மற்றைய இனங்கள் மீதும் மதங்கள் மீதும் சகிப்புத் தன்மையின்றி கற்காலத்து மிருகங்கள் போல வாழ அவர்களால் முடிகிறது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல இலங்கையின் பெளத்தம்.

மதவாதம் தலைக்கேறுவதால்த்தான் நாகரீகம் காணாமற்போகிறது.

இந்தியாவில் நடப்பதும் இதுதான். இந்துமதத்திற்கும், அதன் குருக்களும் கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் ஏனைய மதங்கள் மீது இவர்களால் மிக இலகுவாக ஆக்கிரமிப்பையும், அக்கிரமங்களையும் செய்ய ஏதுவாகி விடுகிறது.

இந்துக்களுக்கென்று தனியான நாடு தேவை என்று நாம் நினைத்தால், பெளத்தர்களுக்கென்றும் தனியான நாடு ஒன்று தேவை என்று சிங்கள பெளத்தர்கள் கூறுவதை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். 

நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்குலகு கிறீஸ்த்தவ மதத்தினை முன்னிறுத்தியே அக்கிரமிப்புக்களைச் செய்தது, போர்களை நடத்தியதென்பதை நான் மறுக்கவில்லை. உண்மையும் அதுதான். சிலுவை யுத்தம் கிறீஸ்த்தவர்களால் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்டதும் வரலாறு. 

ஆனால், இன்றைய போர்கள் மதத்தினால் தூண்டப்பட்டவையல்ல. பொருளாதார, அரசியல்க் காரணங்களுக்காகவே இன்றைய போர்கள் நடக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் போரிட்டவர்களில் ஜப்பானியர்களைத் தவிர மற்றைய எல்லோரும் கிறீஸ்த்தவர்களே. உக்ரேனும் ரஸ்ஸியாவும் ஒரே மதத்தையே பின்பற்றுகின்றன. 

மதத்தினைத் தூக்கிப் பிடிப்பதிலிருந்து மனித இனம் வெளியே வரவேண்டும். வேறு சொல்வதற்கில்லை. 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

அமைதி மதமான முஸ்லிம் மதத்தவர்கள் கிளர்ந்து எழும்ப போகின்றார்கள் என்று ரஞ்சித் அண்ணா சொல்கிறார்.அவர்கள் Kafir களுக்கு எதிரான போரை எப்போதே தொடங்கிவிட்டனரே.அவர்கள் கிளர்ந்து எழுந்து பிறந்தது தானே மேற்க்கு பாக்கிஸ்தான் கிழக்கு பாக்கிஸ்தான்.

இஸ்லாம் மதம் என்னவோ அமைதியான மதம் தான். ஆனால் பின்பற்றுபவர்கள் அதனை மிகவும் தவறான வழியில் புரிந்துகொண்டு பின்பற்றுவதாலேயே பிரச்சினை. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் இன்றிருக்கும் பிரச்சினை நாம் அறியாதது அல்லவே. அதேபோல இந்தியாவும் ஆகிவிடக் கூடாதென்பதுதான் எனது கருத்து. 

இஸ்லாமோ, இந்து மதமோ, கிறீஸ்த்தவமோ மக்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டுமேயன்றி, மக்களை விலங்குகளாக மாற்றக் கூடாது.

மற்றும்படி, இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு நான் ஆதரவென்று நீங்கள் எப்படி முடிவிற்கு வந்தீர்களோ தெரியவில்லை. ஏனென்றால், நாம் அப்படியில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

அவர்கள் கிளர்ந்து எழுந்து பிறந்தது தானே மேற்க்கு பாக்கிஸ்தான் கிழக்கு பாக்கிஸ்தான்.

கிழக்குப் பாக்கிஸ்த்தானும் மேற்குப் பாக்கிஸ்த்தானும் பிறந்ததற்கு மதம் ஒரு காரணம் இல்லை என்று நினைக்கிறேன். 

மேற்குப் பாக்கிஸ்த்தானிய பஷ்டூன், பஞ்சாபி, சிந்தி இனக்குழுக்கள் கிழக்குப் பாக்கிஸ்த்தானிய வங்காளிகள் மீது திணித்த இனரீதியிலான அடக்குமுறையே கிழக்குப் பாக்கிஸ்த்தானின் சுதந்திர எழுச்சிக்கு வித்திட்டு, ஈற்றில் இந்தியாவின் துணையுடன் வெற்றியும் கண்டு பங்களாதேஷ் எனும் சுதந்திர நாடாக மாறியது என்று நினைக்கிறேன். 

ஆனால், இவர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள்தான். ஆகவேதான் இது மத ரீதியிலான போர் இல்லை என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

அது இந்த கட்சி  இப்போது ஆளும்போது என்று இல்லை முன்பு தொடக்கம் இந்தியா அப்படி தானே இருந்து வருகிறது.
அமைதி மதமான முஸ்லிம் மதத்தவர்கள் கிளர்ந்து எழும்ப போகின்றார்கள் என்று ரஞ்சித் அண்ணா சொல்கிறார்.

நீங்கள் கூறுவதால் நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இன்றிருக்கும் உலக இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கான முக்கிய காரணங்கள் ஒன்று பாலஸ்த்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு என்று நான் எண்ணுகிறேன். இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பிற்கு மேற்குலகம் கொடுக்கும் ஆதரவும், இந்த ஆக்கிரமிப்பினை தடுக்கமுடியாது முழு இஸ்லாமிய உலகும் இருக்கும் கைய்யறு நிலையே இஸ்லாமிய அடிப்படைவாதம் உலகு முழுதும் பரவக் காரணமாகிவிட்டது. தாம் மத ரீதியாக அடக்கப்படுகிறோம் எனும் உணர்வே அவர்களை அடிப்படைவாதிகளாக மாற்றியிருக்கிறது. ஆனால் என்ன, தமது எதிர்வினையினை அவர்கள் இன்னொரு நிலைக்கு உயர்த்திவிட்டார்கள். ஆக்கிரமிப்பிற்கெதிரான போராட்டமாக ஆரம்பித்த அவர்களின் போராட்டம் இன்று அடிப்படைவாதிகளால் கடத்தப்பட்டு மதத்தினை மட்டுமே முன்னிறுத்தி மிருகங்கள் போல செயற்பட வைக்கிறது.

இந்தியாவிலும் நிலைமை கிட்டத்தட்ட இதேதான். பாக்கிஸ்த்தான் பிரிந்தபோது பல கோடி முஸ்லீம்கள் இந்தியாவிலேயே இருந்துவிட்டார்கள். புதிய இஸ்லாமியக் குடியரசான பாக்கிஸ்த்தானுக்குள் வாழவேண்டும் என்கிற மத ரீதியிலான உணர்வு அன்று அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால், சுதந்திரத்தின் பின்னரான இந்தியாவின் செயற்பாடே இன்று அவர்களை மத ரீதியில் சிந்திக்க வைக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் காஷ்மீரில் இந்திய ராணுவம் முஸ்லீம்கள் மீது செய்துவரும் மனிதவுரிமை மீறல்களும் அட்டூழியங்களும். அங்கு வாழும் இஸ்லாமிய மக்களின் எழுச்சியுணர்வினை தமக்குச் சாதகமாக்கி, அங்கு வாழும் இந்துக்களை குறிவைத்து இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்துவதால், இந்தியாவும் தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி வருகிறது.

ஈழத்தில் தமிழர்கள் தாக்கப்படும்போது அவ்வபோது தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர்ச்சியடைவதுபோல, காஷ்மீரில் முஸ்லீம்கள் மீது நடக்கும் தாக்குதல்களால் இந்தியாவினுள் வாழும் முஸ்லீம்கள் கொதிக்கிறார்கள். பாரதீய ஜனதாக் கட்சியின் காஷ்மீர் தொடர்பான அண்மைய கொள்கைகள் இதனை மேலும் கொதிநிலைக்கு உயர்த்தியிருக்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

அமைதி மதமான முஸ்லிம் மதத்தவர்கள் கிளர்ந்து எழும்ப போகின்றார்கள் ன்று ரஞ்சித் அண்ணா சொல்கிறார்.

Kaipulla Meme's - Home | Facebook

இது என்ன... புதுசா இருக்கு...... 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

பெளத்த மதவாதிகளாலேயே இலங்கையில் தமிழ்மக்கள் ஒரு இன அழிவைச் சந்தித்தார்கள். இலங்கை சிங்கள - பெளத்த நாடு எனும் கொள்கையினாலேயே மற்றைய இனங்களையும் மதங்களையும் அழிக்கலாம் என்கிற எண்ணக்கரு அவர்களுக்குப் பிறந்தது. தொடர்ந்தும் அந்த எண்ணக்கருவில் பயணிப்பதாலேயே மற்றைய இனங்கள் மீதும் மதங்கள் மீதும் சகிப்புத் தன்மையின்றி கற்காலத்து மிருகங்கள் போல வாழ அவர்களால் முடிகிறது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல இலங்கையின் பெளத்தம்.

மதவாதம் தலைக்கேறுவதால்த்தான் நாகரீகம் காணாமற்போகிறது.

இந்தியாவில் நடப்பதும் இதுதான். இந்துமதத்திற்கும், அதன் குருக்களும் கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் ஏனைய மதங்கள் மீது இவர்களால் மிக இலகுவாக ஆக்கிரமிப்பையும், அக்கிரமங்களையும் செய்ய ஏதுவாகி விடுகிறது.

இந்துக்களுக்கென்று தனியான நாடு தேவை என்று நாம் நினைத்தால், பெளத்தர்களுக்கென்றும் தனியான நாடு ஒன்று தேவை என்று சிங்கள பெளத்தர்கள் கூறுவதை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். 

நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்குலகு கிறீஸ்த்தவ மதத்தினை முன்னிறுத்தியே அக்கிரமிப்புக்களைச் செய்தது, போர்களை நடத்தியதென்பதை நான் மறுக்கவில்லை. உண்மையும் அதுதான். சிலுவை யுத்தம் கிறீஸ்த்தவர்களால் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்டதும் வரலாறு. 

ஆனால், இன்றைய போர்கள் மதத்தினால் தூண்டப்பட்டவையல்ல. பொருளாதார, அரசியல்க் காரணங்களுக்காகவே இன்றைய போர்கள் நடக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் போரிட்டவர்களில் ஜப்பானியர்களைத் தவிர மற்றைய எல்லோரும் கிறீஸ்த்தவர்களே. உக்ரேனும் ரஸ்ஸியாவும் ஒரே மதத்தையே பின்பற்றுகின்றன. 

மதத்தினைத் தூக்கிப் பிடிப்பதிலிருந்து மனித இனம் வெளியே வரவேண்டும். வேறு சொல்வதற்கில்லை. 

உண்மை, மதம் பிடித்து மீண்டு வந்த நாடுகள் தற்போது எதுவுமே இல்லை. மேலை நாடுகள் அரம்பத்திலேயே மதத்தையும் அரசியலையும் கலக்காமல் வேறுபடுத்தியதால் தப்பி விட்டார்கள். அமெரிக்காவில் மீண்டும் மதவாதிகளின் பிடி கொஞ்சம் அதிகரித்து வருகிறது, அல்லது வருவது போன்ற ஒரு தோற்றம் வருகிறது  ஆனாலும் ஒரு கட்டத்துக்குமேல் இங்கு போகமுடியாது என்று நினைக்கிறேன். மற்ற மத நாடுகளை விட  இந்தியாவில் நடப்பதில் அடிப்படையில் ஒரு வித்தியாசம் உள்ளது, இங்கு மதரீதியான இணைவதுடன், ஒரு குறிப்புட்ட பிரிவினர்களை முன்னிலைப்படுத்தி, அவர்களின் கீழ் மீண்டும் வர்ணாசிரம தர்மத்தை கொண்டுவரும் முயற்சி முழு மூச்சாக நடைபெறுகிறது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

மதத்தினைத் தூக்கிப் பிடிப்பதிலிருந்து மனித இனம் வெளியே வரவேண்டும்.

அது தான் சரியானது. ஆனால் முஸ்லிம் மதம் மட்டுமே என்று முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் மதத்தை பின்பற்றாதோரை ஒடுக்குவதும், அல்லாவை மட்டுமே மனிதர்கள் வணங்க வேண்டும் என்பதும், இவர்கள் சிறுபான்மையாக இருக்கின்ற மற்ற மக்களின் நாடுகளில் முஸ்லிம்கள்  நாங்கள் ஒடுக்கபடுகின்றோம் ஜனநாயக உரிமைகள் வேண்டும் என்று கேட்பதையும் தான் காணகூடியதாக உள்ளது.

17 hours ago, தமிழ் சிறி said:

இது என்ன... புதுசா இருக்கு...... 🤣

😂

என்ன செய்வது அல்லாகு அக்பர் என்று சொல்லி அமைதியான செயல்களை செய்வார்கள் என்று பிரசாரம் செய்து தமிழ் கவீர்களை நம்பவைத்துள்ளார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2022 at 00:16, Kapithan said:

என்ன சொல்ல வருகிறீர்கள் ? அவர்கள் அட்டூழியம் புரிந்தார்கள். அதனால் நாமும் புரியலாம். இரண்டும் சரிசமமாக ஆகிவிடும் என்கிறீர்களா ? 

நான் அறிய புலம்பெயர் தேசங்களில் கூடுதலாக இலங்கை தமிழர் என்றால் ஒரு நல்ல மரியாதை உண்டு. இருந்தும் என்ன பலன் நாடற்றவர்கள்.

இதுவும் உங்களுக்கு புரியாது. புரியக்கூடாது. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நான் அறிய புலம்பெயர் தேசங்களில் கூடுதலாக இலங்கை தமிழர் என்றால் ஒரு நல்ல மரியாதை உண்டு. இருந்தும் என்ன பலன் நாடற்றவர்கள்.

இதுவும் உங்களுக்கு புரியாது. புரியக்கூடாது. :cool:

இந்துத்துவ இந்தியா தனிநாடு பெற்றுத்தரும் என்கிறீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்துக்களுக்கென்று தனியான நாடு தேவை என்று நாம் நினைத்தால், பெளத்தர்களுக்கென்றும் தனியான நாடு ஒன்று தேவை என்று சிங்கள பெளத்தர்கள் கூறுவதை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். 

இலங்கை,இலங்கைத்தமிழர் பிரச்சனை முற்றிலும் வேறுபட்டது. இலங்கை தமிழர்கள் ஆரம்பத்தில் தனிநாடு கேட்கவில்லை. தனிநாடு கேட்க உந்தப்பட்டவர்கள்.பிரிவினையை ஆரம்பித்ததே சிங்கள இனவாதிகள் தான். தமிழர்கள் அல்ல.

உலகத்தில் நடக்கும் நாடுகளுக்கிடையிலான பிரச்சனைகளில் ஈழத்தமிழர் பிரச்சனை முற்றிலும் வேறு பட்டது. மற்ற நாட்டு பிரச்சனைகளுடன் எமது நாட்டு பிரச்சனையை எள்ளளவும் ஒப்பிட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இந்துத்துவ இந்தியா தனிநாடு பெற்றுத்தரும் என்கிறீர்களா? 

2009 க்கு பின் தனிநாடு என்ற விடயமே சர்வதேச அளவில் இல்லை. ஏதாவது அதிசயம் நடந்தால் உண்டு.

ஆனால் நான் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்  என்பதை உயிருள்ளவரை நிறுத்த மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

2009 க்கு பின் தனிநாடு என்ற விடயமே சர்வதேச அளவில் இல்லை. ஏதாவது அதிசயம் நடந்தால் உண்டு.

ஆனால் நான் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்  என்பதை உயிருள்ளவரை நிறுத்த மாட்டேன்.

அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2022 at 19:40, ரஞ்சித் said:

தனது இந்துமத அடிப்படைவாதக் கொள்கைகளுக்காக இந்திய மிகவும் பாரதூரமான விலையினைச் செலுத்தப் போகிறது

உண்மைதான், இவர்களின் அதிகார எண்ணங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் அளவே இல்லை. வடக்கில் தாங்கள் நினைப்பதை சாதிக்க கூடியதாக இருப்பதால் தெற்கிலும் காலூன்ற நினைக்கிறார்கள். 

நான் இங்கே இணைத்துள்ள கட்டுரையை நேரம் இருந்தால் பாருங்கள். 

https://tribune.com.pk/story/2365732/tamil-nadu-another-kashmir-for-india?amp=1

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.