Jump to content

நாடாளுமன்றத்தினை... நோக்கி, நகரும் போராட்டக்காரர்கள் – பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெடி வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.. 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் நாளை மின்துண்டிப்பு – நேர விபரம் குறித்த அறிவிப்பு வெளியானது!

நாடாளுமன்றத்திற்கு... அருகில், துப்பாக்கி பிரயோகம்!

நாடாளுமன்றத்திற்கு அருகில் தற்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சித்த நிலையிலேயே இவ்வறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களும் போராட்டக்காரர்களால் அபகரிக்கப்பட்டதாக முறைப்பாடு!

T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களும்... போராட்டக்காரர்களால் அபகரிக்கப்பட்டதாக முறைப்பாடு!

பத்தரமுல்ல – பொல்துவ சந்திக்கு அருகில் நேற்றிரவு (புதன்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இராணுவ சிப்பாய் ஒருவரும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு இராணுவ சிப்பாய் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவரது T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களும் போராட்டக்காரர்களால் அபகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1291117

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 9 people, people standing and text

 

May be an image of 3 people, beard and text that says 'dhanizali Kelaniya Football Complex Liked by namal_rajapaksa and 62 others'

 

May be an image of 4 people, people standing and text that says 'dhanizali Colombo Racecourse 1/6 8 Liked by namal_rajapaksa and 53 others dhanizali Football talk with Namal Rajapaksa sports minister #nr #namalrajapaksa View 1 comment November 10, 2021'

இவர்தான்... நேற்று ரூபவாஹினிக்குள் போய் சண்டித்தனம் காட்டியவர். 
இவர்,  யாருடைய ஆள் என்று புரிந்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

இவ எங்கட @பெருமாள்ட தோஸ்த்

பெரும்ஸ் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி குடுத்திருக்கிறார்👌👏👏👏

மனிசி  நாங்க கொடுக்கும் ஆதரவை பார்த்து பூநகரி மொட்டை கருப்பான் தான் மூன்று நேரமும் சாப்பிடும் கதை உடான்ஸ் சாமியாருக்கு எட்டவில்லை போல உள்ளது .😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:
On 13/7/2022 at 19:27, goshan_che said:

இவ எங்கட @பெருமாள்ட தோஸ்த்

பெரும்ஸ் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி குடுத்திருக்கிறார்👌👏👏👏

மனிசி  நாங்க கொடுக்கும் ஆதரவை பார்த்து பூநகரி மொட்டை கருப்பான் தான் மூன்று நேரமும் சாப்பிடும் கதை உடான்ஸ் சாமியாருக்கு எட்டவில்லை போல உள்ளது

என்ன பெருமாள் உங்க தொகுதி ஆள் போல இருக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

மனிசி  நாங்க கொடுக்கும் ஆதரவை பார்த்து பூநகரி மொட்டை கருப்பான் தான் மூன்று நேரமும் சாப்பிடும் கதை உடான்ஸ் சாமியாருக்கு எட்டவில்லை போல உள்ளது .😃

👍.

சாமியார் கவனம் கபினெட் லெவல் கிசுகிசுக்களில்தான்😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2022 at 10:55, தமிழ் சிறி said:

May be an image of 9 people, people standing and text

 

May be an image of 3 people, beard and text that says 'dhanizali Kelaniya Football Complex Liked by namal_rajapaksa and 62 others'

 

May be an image of 4 people, people standing and text that says 'dhanizali Colombo Racecourse 1/6 8 Liked by namal_rajapaksa and 53 others dhanizali Football talk with Namal Rajapaksa sports minister #nr #namalrajapaksa View 1 comment November 10, 2021'

இவர்தான்... நேற்று ரூபவாஹினிக்குள் போய் சண்டித்தனம் காட்டியவர். 
இவர்,  யாருடைய ஆள் என்று புரிந்ததா?

இலங்கை நெருக்கடி: நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது ஏன்? 'வைரல் போட்டோ' போராட்டக்காரர் கூறுவது என்ன?

  • எம்.மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
41 நிமிடங்களுக்கு முன்னர்
 

போராட்டக்காரர்

இலங்கையில் அதிகார மையங்களாக விளங்கிய 4 முக்கியமான கட்டடங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில், அதில் முன்வரிசையில் செயல்பட்ட ஒரு போராட்டக்காரர், மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டது.

அந்தப் போராட்டக்காரரின் பெயர் டேனிஸ் அலி. புதன்கிழமையன்று பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட்டதிலும் காலி முகத்திடல் மற்றும் அதிபர் மாளிகையில் போராட்டங்களை முன்னெடுத்ததிலும் முக்கியப் பங்காற்றியவர்.

2019, 2020-ஆம் ஆண்டில் அவரும் நாமல் ராஜபக்ஷவும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் புதன்கிழமை முதல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. நாமல் ராஜபக்ஷவுடன் அவர் தொடர்பில் இருப்பதாக பலர் விமர்சனம் செய்தார்கள்.

நாமல் ராஜபக்ஷ தரப்பிலும் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. டேனிஸ் அலி தம்மை முன்பு தம்மைச் சந்தித்ததாகவும் ஆனால் வன்முறைகளுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் நாமல் ராஜபக்ஷ தரப்பிலான ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பிபிசி தமிழிடம் டேனிஸ் அலி பேசினார். "நாமல் ராஜபக்ஷவைச் சந்தித்தது புகைப்படம் எடுத்துக் கொண்டது எல்லாம் உண்மைதான். அந்தப் புகைப்படங்கள்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன". என்றார் அவர்.

"நான் கால்பந்துடன் தொடர்புடையவன். நாமல் ராஜபக்ஷவுக்கும் கால்பந்தில் ஆர்வம் உண்டு. அவர் அப்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். நான் கால்பந்து தொடர்பான ஊடகம் ஒன்று வைத்திருக்கிறேன். எனது அப்பா, தம்பி ஆகியோர் தேசிய அளவில் விளையாடி இருக்கிறார்கள். நானும் பள்ளி அளவில் கால்பந்து விளையாடி இருக்கிறேன். கால்பந்து தொடர்பான நிகழ்வின்போது விளையாட்டு அமைச்சர் என்ற முறையில் நான் அவரைச் சந்தித்தேன்" என்று டேனிஸ் அலி கூறினார்.

போராட்டக்காரர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று கருதுகிறீர்களா என்று கேட்டபோது, "நான் பிரதமர் அலுவலகத்தில் இருப்பது அவர்களுக்குப் பிரச்னை" என்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

"ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்குச் சென்று அதில் மக்களுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புங்கள் என்று கூறினோம். ஆனால் அதைக் கைப்பற்றுவது எங்களது நோக்கமல்ல. அதன் பிறகுதான் எனது புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. என்னை ஒரு தீவிரவாதி போலச் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்" என்றார் டேனிஸ் அலி.

அரசுக் கட்டடங்களை விட்டு வெளியேறிய போராட்டக்காரர்கள்

புதன்கிழமையன்று மிகவும் ஆவேசமாக நடந்த போராட்டங்கள் மறுநாளே சற்றுத் தணிந்திருந்தது. அவசரச் சட்டம், ஊரடங்கு ஆகியவை காரணமாக மக்கள் கூட்டம் குறைந்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, 24 மணி நேரத்துக்கும் மேலாக தங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த பிரதமர் அலுவலக கட்டடத்தை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேறினார்கள். இப்போது அது அரசின் கட்டுப்பாட்டில் சென்றிருக்கிறது.

போராட்டக்காரர்களில் ஒரு தரப்பினர் கட்டடங்களை விட்டு வெளியேறுவதற்கு ஆதரவாக இருந்தாலும் மற்றொரு தரப்பினர் அதை ஏற்கவில்லை. கடைசியாக அரசுக் கட்டடங்களை ஒப்படைப்பது என்ற முடிவுக்கு வந்ததாக டேனிஸ் அலி பிபிசியிடம் தெரிவித்தார்.

"தனிப்பட்ட முறையில் எனக்கு இந்தக் கட்டடத்தை விட்டு வெளியேற விருப்பம் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த முடிவை ஏற்று வெளியேறுகிறோம்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறியபோது பலர் உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினாலும் சிலர் தயக்கத்துடனேயே வெளியேறினார்கள்.

இதே போல் அலரி மாளிகை எனப்படும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதிபர் மாளிகையும் இப்போது அரசின் நிர்வாகத்தின் கீழ் வந்திருக்கிறது.

 

போராட்டக்காரர்கள் வெளியேறிய பிறகு மூடப்பட்ட பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம்

 

படக்குறிப்பு,

போராட்டக்காரர்கள் வெளியேறிய பிறகு மூடப்பட்ட பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம்

கைப்பற்றப்பட்ட 4 கட்டடங்களை போராட்டக்காரர்கள் ஒப்படைந்திருந்தாலும், காலி முகத் திடல் பகுதியில் இருக்கும் அதிபரின் அலுவலகத்தை மட்டும் இப்போது ஒப்படைப்பதாக இல்லை என்று போராட்டகாரர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

முக்கிய இலக்கான கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பது நடந்துவிட்டது. இன்னும் அவர்களுக்குப் பல கோரிக்கைகள் உண்டு. அதற்காக காலி முகத்திடல் பகுதியில் போராட்டம் வெல்லட்டும் என்ற முழக்கங்கள் அதே உற்சாகத்துடனும் புதிய கொண்டாட்டத்துடனும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

https://www.bbc.com/tamil/sri-lanka-62159512

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2022 at 04:34, ஈழப்பிரியன் said:

 

கண்ணுக்கு குளிர்மையான காட்சி, போதுமா வசீ? அப்பப்போ ஆட்சி பீடமேற, கட்டம் கட்டமாக தமிழர்மேல் வைத்த தீ, நிண்டு எரியுது! தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதி வெளிவந்து, இழைக்கப்பட்டவர்களால்  ஏற்றுக்கொள்ளப்படும்வரை தொடர்ந்து எரியக்கடவதாக!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.