Jump to content

ஜனாதிபதி பதவியை... ஏற்க,  தயார் என அறிவித்தார்... சரத் பொன்சேகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி : ரணில், பொன்சேகா உள்ளிட்ட ஐவரின் பெயர் பரிந்துரை

ஜனாதிபதி பதவியை... ஏற்க,  தயார் என அறிவித்தார்... சரத் பொன்சேகா

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இன்று(வியாழக்கிழமை) பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுமாறு தம்மிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே தாம் தெரிவு செய்யப்பட்டால் பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1291194

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத் ஜனாதிபதி ஆக விருப்பம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற பலம் இருந்தால் முதலில், சஜித்தை மீறி பிரதமர் ஆகி காட்டட்டும். சும்மா இரையில்லாத தூண்டிலை வீசிப்பார்ப்போம்... ஏதாவது சிக்குதா என்று என்பதை போல இந்தாள் நிக்குது.

கோதாவை வெளியே வைத்துக்கொண்டு, ரணில் ஜனாதிபதியாக பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் கொண்ட மொட்டு கட்சி அதன் தலைமை மகிந்தர், சிலவேளை பசில் ஊடாக, சில அரசியல், பொருளாதார வேலைகளை செய்ய முனைய போகின்றனர். கூட்டமைப்பு, முஸ்லீம் கட்சிகள்,  

இறுதியில் ராணுவமும், சஜித், சரத் முதலிய பலரும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு உள்ளாகி ஆமாம் சாமி போடுவார்கள். 

இலங்கைக்குள் ஒரு தீர்வு சரி வராவிடில், தமிழர் தனியே போகும் மார்கமும் உண்டாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ம்.....இத்தனையையும் பாத்த பின்னும் பதவியாசை யாரைத்தான் விட்டது? இவருக்கு சிறை யோகந்தான் அதிகம்!

விதியும் ஒவ்வொருவருக்கும் சந்தர்ப்பம் கொடுத்து கதிரையில் இருத்தி, பொறிச்சு விழுத்தி தன் வேலையை இலகுவாக்க எண்ணுதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மட்டுமல்ல கனபேர் ஏற்கத்தயாராகத்தான் நிக்கினம் ஆனால் ஒருத்தரும் அதைக்கொடுக்க  தயாராயில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ragaa said:

அவர் மட்டுமல்ல கனபேர் ஏற்கத்தயாராகத்தான் நிக்கினம் ஆனால் ஒருத்தரும் அதைக்கொடுக்க  தயாராயில்லை 

இல்ல......யாரிடம் வாங்குவதென்று யாருக்கும் தெரியவில்லை......!  🤔

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகாவும் கோத்தாவும் ஒன்று தான். மனித குலத்துக்கு எதிரான பெரும் போர்க்குற்றங்களை.. இனப்படுகொலைகளை செய்தவர்கள்.. நிச்சயம் எந்த மனித சமூகத்திற்கும் திறனான தலைவர்களாக இருக்க முடியாது. அந்த வகையில் ஒப்பிடும் போது.. இந்த ஓநாயை விர ரணில் நரி எவ்வளவோ தேறும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2022 at 13:34, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுமாறு தம்மிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிங்களம் இவ்வளவு நடந்தும் அதன் அடிப்படை தமிழர் எதிர்ப்பு இணவாதத்தில் இருந்து  வெளியில் வரமுடியாமல் இருக்கினம் என்பதையே அவர்களின் கோரிக்கை சொல்கிறது அதாவது முன்னாள் யுத்த கதாநாயகனால் தமிழர் படையை சிதைத்தவரால் நாடு முன்னேறும் என்று இன்னும் நம்புகிறார்கள் . இப்படியான சிந்தனை உள்ள இனவாத கூட்டம் இன்னும் பாடம் பெற வேண்டுமாயின் ரனிலை விட பல நாடுகளின் ஆயுத உதவியுடன் தமிழரை அழித்து சிங்கள கதாநாயகனாக வலம் வந்த இந்த மோட்டு அறிவாளியே ஜனாதிபதியாகனும் ஏனென்றால் சிங்களம் இன்னும் திருந்தவில்லை ...........................

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.