Jump to content

”இராணுவ சிப்பாயாக, பாதுகாப்பு செயலாளராக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக... நீங்கள் ஆற்றிய சேவைகளை, போற்றுகின்றோம்.” – மொட்டு கட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர

”இராணுவ சிப்பாயாக, பாதுகாப்பு செயலாளராக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக... நீங்கள் ஆற்றிய சேவைகளை, போற்றுகின்றோம்.” – மொட்டு கட்சி

எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறிந்து கொள்ளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியொருவர் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே, பதவியை இராஜினாமா செய்தது இதுவே முதன்முறை எனவும், அதற்கு நீண்டகால பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கே காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பாதுகாப்பு செயலாளராக பாரிய சேவையாற்றிய ஜனாதிபதியின் இன்றைய இந்த தீர்மானமானது அவர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பையும் நாட்டுப் பற்றையும் வெளிக்காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறியும் என்பதில்... எவ்விதமான சந்தேககமும் இல்லையெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1291232

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பாதுகாப்பு செயலாளராக பாரிய சேவையாற்றிய ஜனாதிபதியின் இன்றைய இந்த தீர்மானமானது அவர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பையும் நாட்டுப் பற்றையும் வெளிக்காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களை கையேந்தவும், நடுத்தெருவில் அலையவும் வைத்தவரை ஒருகாலத்திலும் மறக்கமாட்டார்கள் என நினைக்கிறன். அவர் வேறொரு நாட்டில் இறந்தால் அவருக்கு நலம்.

அதை நீங்கள் சொல்லக்கூடாது, அனுபவித்த மக்கள் சொல்லட்டும்.

2 hours ago, தமிழ் சிறி said:

எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறியும் என்பதில்... எவ்விதமான சந்தேககமும் இல்லையெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

மீண்டும் தங்களுக்கு தாங்களே மாலை அணிவித்து மகிழ்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

மீண்டும் தங்களுக்கு தாங்களே மாலை அணிவித்து மகிழ்கிறார்கள்.

இதனைத்தான்… மாறி, மாறி முதுகு சொறிவது என்பார்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொந்து போயுள்ள அண்ணலின்  அருமை பெருமைகளை அள்ளிவிடுங்க.....😰

முதலில் அவரது அறையில், ஒன்னரைக் கோடி இருந்த காரணத்தை சொல்லுங்கப்பா?🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நொந்து போயுள்ள அண்ணலின்  அருமை பெருமைகளை அள்ளிவிடுங்க.....😰

முதலில் அவரது அறையில், ஒன்னரைக் கோடி இருந்த காரணத்தை சொல்லுங்கப்பா?🤨

 அம்புட்டதால் பாதுகாப்பு காரணம்!

Link to comment
Share on other sites

“அடுத்த பிறவியிலாவது நல்ல குடும்பத்தில் பிறந்து, சுயமாக உழைத்து ஒரு மனிதனாக வாழப்பாருங்கள்” என்று முகநூலில் ஒருவர் சொல்லி இருந்தார்.ஆணிவேருக்கே அசிங்கம் சேர்த்த ஒரு அருவருப்புப் பிராணி,இவருக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள் அவரது சகாக்கள்.அள்ளிக்கொண்டு போன அப்பாவி மக்களின் பணத்தை அந்த ஏழைமக்களுக்கு திருப்பி கொடுக்கப்பாருங்கள் உங்களது பாவக்கணக்கு கொஞ்சம் குறையும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நந்தி said:

“அடுத்த பிறவியிலாவது நல்ல குடும்பத்தில் பிறந்து, சுயமாக உழைத்து ஒரு மனிதனாக வாழப்பாருங்கள்”

ஐயோ! இனி இவர்கள் பிறக்கவே வேண்டாம்,  பூமி  தாங்காது!

  • Like 1
Link to comment
Share on other sites

நாட்டு மக்களை பிச்சை  எடுக்க வைத்த சேவையை விட வேறென்ன சேவையை மக்கள் எதிர்பார்த்தார்கள்?🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறிந்து கொள்ளும்

கதிரையில் ஏற்றி அழகு பார்த்த மக்களுக்கு சொல்லாமல்,? அவர்களை எதிர்கொள்ள முடியாமல் ஒளித்தோடிய கள்ளனுக்கு  இதைவிட வேறு மதிப்பு எதிர்காலத்தில் வரும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள் இவர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

கதிரையில் ஏற்றி அழகு பார்த்த மக்களுக்கு சொல்லாமல்,? அவர்களை எதிர்கொள்ள முடியாமல் ஒளித்தோடிய கள்ளனுக்கு  இதைவிட வேறு மதிப்பு எதிர்காலத்தில் வரும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள் இவர்கள்?

May be an image of 3 people and text that says 'ஒரு நாள் இந்த கோத்தாட அருமை இலங்கை மக்களுக்கு புரிஞ்சு எல்லோரும் கோத்தாவ தேடும்போது MEME SIYA கோத்தா அமெரிக்காவின் ஜனாதிபதியா இருப்பான்'

அந்த நேரம், அமெரிக்கா.. நம்மகிட்ட கடன் வாங்க  லைனிலை நிற்கும். 😂
அந்த நிலைமைக்கு... கொண்டு வந்துடுவார்  இந்த கோத்தா.... 🤦

 

Śhankǝǝ V

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா காசு பார்த்தது தான். 

அனால், அது இந்த நிலைக்கு வந்து இராது 

கோத்தாவை இந்த ஓட வேண்டிய நிலைக்கு கொண்டுவந்தது வியத்மகா. அவர்கள் தன, 2019 வரிக்குறைப்பில் கொள்ளை அடித்தவர்கள். கடன் ஏற்கனவே இருந்தது அனால் சமாளிக்க கூடிய நிலையில் இருந்தது.

imf இந்த முதல் நிபந்தனை வரியை பழைய நிலைக்கு கொண்டு வருவது என்பது, யதார்த்தமாக வியத்மகா கொள்ளை அடித்தது   வெளியில் கொண்டு வந்து இருக்கிறது 

உண்மையை ஒதுக்கி கள்ள வேண்டும். சிங்கள மக்களுக்கு கோத்த சிங்கள மக்கள் விருமியது, நினைத்ததையே செய்தார்.

கோத்த விட்ட பிழை வியத்தமாகவை நம்பி அவர்களை மட்டும் ஆலோசகர்களாக, வேறு தனியான சுதந்திரமான ஆலோசகர்ளை நியமிக்காதது. 

மாரு வளமாக, இலங்கை அரசியலில் எவர் காசு பார்க்கவில்லை, ஒரு சிலரை தவிர.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text that says 'ஒரு நாள் இந்த கோத்தாட அருமை இலங்கை மக்களுக்கு புரிஞ்சு எல்லோரும் கோத்தாவ தேடும்போது MEME SIYA கோத்தா அமெரிக்காவின் ஜனாதிபதியா இருப்பான்'

அந்த நேரம், அமெரிக்கா.. நம்மகிட்ட கடன் வாங்க  லைனிலை நிற்கும். 😂
அந்த நிலைமைக்கு... கொண்டு வந்துடுவார்  இந்த கோத்தா.... 🤦

 

 

கோத்தா, அமெரிக்கா போனால் அமெரிக்காவும் வங்குரோத்து அடைந்துவிடும் என்கிறீர்கள்? ஆனால் அமெரிக்கா இவரை உள்வாங்கும் என நான் நினைக்கவில்லை. இனி இவர்  சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள நேரிடலாம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாய், கோத்தா அமெரிக்க பிரஜா உரிமையையும் இழந்து, குடும்பத்தையும் பிரிந்து அலையப்போறார்! இல்லை ஓரிடத்தில் முடங்குவார், கதை முடிந்தும் போகலாம் அரசியல் கனவு பாதியில் முடிந்ததால். அமெரிக்கா போனாலும் அங்குள்ளவர்கள் விரட்டியடிப்பார்களே! இதென்ன கோத்தாவுக்கு வந்த சோதனை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இன்னும் தமிழர் எதிர்ப்பு இனவாத மாயையில் இருந்து விடுபடவில்லை எனவே ஆட்சியில் முழுமையாக இருந்து நாட்டை முழுமையாக நாசம் பண்ணாமல் இப்படி இடையில் விட்டு போனது எனக்கு வருத்தமே .

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.