Jump to content

இலவசக் கல்வி, சுகாதாரத்திற்கான அரச உதவிகளை குறைக்குமாறு சர்வதேச நாணயநிதியம் நிபந்தனை விதிக்கலாம் - பாலித கோஹன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலவசக் கல்வி, சுகாதாரத்திற்கான அரச உதவிகளை குறைக்குமாறு சர்வதேச நாணயநிதியம் நிபந்தனை விதிக்கலாம் - பாலித கோஹன

எந்த அரசாங்கம் பதவியேற்றாலும் அது சீனாவுடன் நல்லுறவை பேணும்

-

palitha_koha.jpg

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைளில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலகவங்கியும் அதிகளவு பங்களிப்பினை வழங்கவேண்டும் என சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

கடன்நிவாரணம் தொடர்பில் இலங்கையும்  சர்வதேச நாணயநிதியம் இன்னமும் ஆரம்பகட்ட இணக்கப்பாட்டிற்கு வரவில்லை இலங்கைக்கு அதிகளவு கடன் வழங்கியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலகவங்கியும் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைளை துரிதப்படுத்தக்கூடிய திட்டமொன்றை முன்வைக்கவேண்டும் என கோரப்படுகின்றன என சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன குளோபல் டைம்சிற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை அவசரகாலநிலைமை பிரகடனம் போன்ற  தொடரும் நிலைமைகளிற்கு மத்தியில் கடனில் சிக்கியுள்ள நாட்டிற்கு அதன் சகாக்கள் மேலும் உதவிகளை வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாத இறுதியில் சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது எங்களிற்கு கிடைத்த அறிக்கைகளின் படி பேச்சுவார்த்தைகள்; திருப்திகரமானமுறையில் இடம்பெற்றுள்ளனஇநாங்கள் லண்டனில் சட்டஆலோசகர்களை நியமித்துள்ளோம்இகடன் மறுசீரமைப்பு குறித்து புரிந்துகொள்ளக்கூடிய மேற்குலக நிபுணர்களையும் நாங்கள் நியமித்துள்ளோம் என பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

ஆனால் சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் புதிய அரசாங்கம் பதவியேற்றதும் சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளிற்கான புதிய ஏற்பாடுகள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகள் விதிமுறைகள் பாரமானதாகயிருக்காது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் வரும் ஒவ்வொரு முறையில் எங்களை இறுக்கிகொள்ளவேண்டியது – செலவுகளை கட்டுப்படுத்த- குறைக்கவேண்டியது தவிர்க்க முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ள பாலித கோஹன ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாங்கள் இறுதிகட்டத்தில் இருப்பதால் இது கடினமானது எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் சுகாதார துறைக்கு அரசாங்கம் வழங்கும் நிதியை ( இலவச சுகாதார சேவை) குறைக்குமாறு வேண்டுகோள் விடுக்கலாம் என நாங்கள் கவலை கொண்டுள்ளோம் அதேபோன்று இலவசக்கல்வி குறித்தும் சர்வதேச நாணயநிதியம் பரிந்துரைகளை முன்வைக்கலாம் இது மேலும் அமைதியின்மையை ஏற்படுத்தலாம்.

உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதியமைப்புகளே இலங்கைக்கு அதிகளவு நிதியை வழங்கியுள்ளன.வோல்ஸ்ரீட் போன்றவையும் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளன.இந்த நிதியமைப்புகள் அதிகளவு பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இருதரப்புநிதிஉதவி வழங்குபவர்களும் உதவிகளை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ரணில்விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இன்னமும் தொடர்கின்றன என தெரிவித்துள்ள பாலிதகோஹன பதில் ஜனாதிபதி பதவியில் நீண்டகாலம் நீடிப்பாரா என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுமிகவும் திருப்தியற்ற நிலை ஏனென்றால் நாட்டின் தலைமைத்துவம் குறித்து திடீரென கேள்வி எழுந்துள்ளது இதன் காரணமாக அரசமைப்பு ஏற்பாடுகளை பின்பற்றவேண்டும்குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த அரசாங்கம் பதவியேற்றாலும்  அது சீனாவுடன் சிறந்த உறவை பேணும்சீனா இலங்கையின் முக்கிய வர்த்தக சகா முதலீட்டாளர் இரு நாடுகளிற்கும் இடையில் மூலோபாய உறவுகள் உள்ளன தேர்தலிற்கு பின்னர் பதவியேற்கும் எந்த அரசாங்கமும் சீனாவின் நம்பிக்கையையும் சீன மக்களின் நல்லெணத்தையும் பெறும் என பாலித கோஹன தெரிவித்துள்ளார்
 

 

https://www.virakesari.lk/article/131623

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சமுர்த்தி கொடுப்பனவும் பெரும்பாலும் தவறாக பயன் படுத்ப் படுகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.