Jump to content

தமிழ்க் கட்சிகளின் இயங்காநிலை “கண்ணீர்விட்டா வளர்த்தோம்”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கட்சிகளின் இயங்காநிலை “கண்ணீர்விட்டா வளர்த்தோம்”

சி.அ.யோதிலிங்கம்

காலிமுகத்திடல் போராட்டத்தின்; முதலாம் கட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் சென்று தனது பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்திய பின் இராஜினமாக்கடிதத்தை அனுப்பியுள்ளார். போராட்டத்தின் முதலாம் கட்டம் முடிவடைந்துள்ளதால் தந்திரோபாய ரீதியாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், என்பவற்றிலிருந்து வெளியேறியுள்ளனர். 

Functionality-of-the-Tamil-parties-_rais

இரண்டாவது கட்டப் போராட்டம் ரணிலின் ஆட்சிக்கு எதிரானது. இங்கு ரணில் ஆட்சியை மட்டுமல்ல அவருக்கு பின்னாலுள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துடனும் போராட வேண்டும். இதற்கு வேறுபட்ட மூலோபாயங்களும் தந்திரோபாயங்களும் தேவை. அணி சேர்க்கைகளும் வேறுபடும் 90நாட்களுக்கு மேல் போராடிய போராட்டக்காரர்களுக்கு சற்று ஓய்வும் தேவையாக உள்ளது. இந்த வகையில் பின்வாங்கல் புத்திசாலித்தனமான முடிவேயாகும்.

வருகின்ற 19ஆம் திகதி ஜனாதிபதிக்கான வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறும் போது ரணில் வேட்பு மனுத்தாக்கல் செய்வார். 20ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறும் போது ரணில் வெற்றியடைவதற்கே வாய்ப்புக்கள் உள்ளன. ரணில் 123பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக கூறியிருக்கின்றார். மொட்டு கட்சியினருக்கும் ரணிலை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. 

ரணிலுக்கு  உள்நாட்டில் செல்வாக்கு இல்லாத போதும் சர்வதேச அளவில் வேறு எவருக்கும் இல்லாத செல்வாக்கு அவருக்குள்ளது. அவர் மேற்குலகின் செல்லப்பிள்ளையாக இருப்பதால் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் அவரை ஆதரிப்பதற்கு தயாராக இருக்கின்றன. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றனவும் ஆதரிக்க தயாராக இருக்கின்றன. ரணிலை நியமிப்பதன் மூலம் ராஜபக்‌ஷக்களுக்கும் பிடி இருக்கின்றது. ரணிலுக்கும் பிடி இருக்கின்றது. ரணிலின் அரசியல் இருப்பு ராஜபக்‌ஷக்களில் தங்கியிருக்கின்றது. அதேவேளை ராஜபக்‌ஷக்கள் உட்பட மொட்டு கட்சியினரின் பாதுகாப்பு ரணிலில் தங்கியிருக்கின்றது. 

ரணிலின் பதவிஏற்போடு காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த சிங்கள உயர்வர்க்கம் போராட்ட ஆதரவிலிருந்து கழரத் தொடங்கியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் என்பவற்றிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறி அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றது. போராட்டக்காரர்களைப் பொறுத்தவரை ‘கறையான் புற்றெடுக்க கருநாகம்’ புகுந்த நிலைதான். 

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் சிலர் யாழ்ப்பாணம் வந்து தமிழ்ச் செயற்பாட்டாளர்களிடம் பேசியபோது தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் அவர்களிடம் கேட்ட கேள்வி “கோட்டாவை வீட்டுக்கு அனுப்பிய பின் அடுத்தது என்ன?” என்பது தான். அதற்கு போராட்டக்காரர்களிடம் உறுதியான பதில் இருக்கவில்லை. கோட்டாவை வீட்டுக்கு அனுப்பி ரணிலுக்கு முடிசூடுவதற்காக நாம் போராடவில்லை. இந்த அரச முறைமை முழுமையாக மாற்றுவதற்குத்தான் போராடுகின்றோம் எனக் கூறியிருந்தனர். 

இந்த நெருக்கடி என்பது பெரும் தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள், புவிசார் அரசியல்காரரான இந்தியா, பூகோள  அரசியல்காரர்களான அமெரிக்கா, சீனா, என்பவற்றின் நலன்களுக்கிடையிலான மோதல் தான். எனவே நெருக்கடிக்கான தீர்வு என்பது இந்த நலன்கள் சந்திக்கின்ற புள்ளி தான். அந்தச் சந்திக்கும் புள்ளி ஏதேஒரு வகையில் இதில் சம்மந்தப்பட்ட ஆறு தரப்பினரையும் திருப்தி செய்வதாக இருக்க வேண்டும். 

ஆனால் தற்போதைய ரணிலின் பதவியேற்பு சம்பந்தப்பட்ட ஆறு தரப்பினரையும் திருப்திசெய்தது எனக்கூற முடியாது. பூகோள அரசியல் காரர்களில் ஒருவரான அமெரிக்காவிற்கு மட்டும் முழுமையான வெற்றி கிடைத்துள்ளது. பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு ரணில் தரப்பு, சஜித் தரப்பு எனப் பிரிந்து கிடக்கின்றது. இதில் சஜித் தரப்புக்கு தோல்விதான். எனவே லிபரல் தரப்பிற்கு அரை வெற்றியே கிடைத்தது எனக்கூறலாம்.

பூகோள அரசியல் காரர்களில் ஒருவரான சீனாவிற்கு இது தோல்வியே. தோல்வியடைந்த தரப்பு சும்மா இருக்கப்போவதில்லை. எனவே போராட்டக்காரர்களுக்கும் அவர்களுக்கு பின்னால் நிற்கின்ற தொழில் சங்கங்களுக்கும் சீனாவே நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறப்படுகின்றது. ஏற்கனவே துறைமுக கிழக்கு முனைய போராட்டங்களின் போதும் சீனாவே எதிர்ப்பு தொழிற்சங்கங்களுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்வதைத் தவிர சீனாவிற்கு வேறு தெரிவில்லை.

புவிசார் அரசியல்காரரான இந்தியாவிற்கு தனது பிராந்தியத்தில் அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்துவது கொஞ்சம் கடுப்புத்தான். ரணில் மேற்குலக முகம் கொண்டவர் என்பதும் அதற்கு அதிருப்தி தான். இரண்டு காரணங்களுக்காக தனது அதிருப்தியை சற்று அடக்கி வாசிக்கின்றது. ஒன்று தனது கொல்லைப்புறத்தில் அமைதியின்மை உருவாகுவதை அது விரும்பவில்லை. இரண்டாவது சீனாவின் ஆதிக்கத்திற்கு முகம் கொடுக்க இந்தோ - பசுபிக் மூலோபாயக் கூட்டில் அதுவும் இணைந்திருக்கின்றது. அந்தக் கூட்டு பலவீனப்படுவதையும் அது விரும்பவில்லை.

பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு மொட்டுக் கட்சி, சுயாதீனப் பாராளுமன்றக் குழு, ஜே.வி.பி என்பவற்றை உள்ளடக்கியது. இதில் மொட்டுக்கட்சி தற்காப்பு நிலையை எடுத்துள்ளது. ஏனையவற்றிற்கு தோல்விதான். இந்த இனவாதப்பிரிவில் உள்ள மகாநாயக்கர்களுக்கும் ஒரு வகையில் தோல்விதான்.

இந்த நெருக்கடி மைதானத்தில் சம்பந்தப்பட்டவர்களில் ஒரு தரப்பைத் தவிர சகல தரப்பினரும் தங்கள் தங்கள் நலன்களிலிருந்து விளையாடியிருந்தனர். சில தரப்பிற்கு முழு வெற்றியும், சில தரப்பிற்கு அரை வெற்றியும், வேறுசில தரப்பிற்கு அரைத் தோல்வியும், சில தரப்பிற்கு முழுத் தோல்வியும் கிடைத்திருந்தன. ஆனால் ஒரு தரப்பு மட்டும் நெருக்கடி மைதானத்தில் விளையாடுவதற்கு கௌரவமான இடமிருந்த போதும் மைதானத்தில் விளையாடவேயில்லை. அது தமிழ்த்தரப்புத் தான். 

தமிழ்த்தரப்பில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பொறுப்பை ஒப்படைக்க கூட்டமைப்பு தனிநபரான சுமந்திரனிடம் பொறுப்பை ஒப்படைத்தது. சுமந்திரன் தனித் தரப்பாக விளையாடுவதற்கு பதிலாக தமிழ் மக்களின் நலன்களைக் கைவிட்டுவிட்டு பெருந்தேசியவாத லிபரல் தரப்பின் ஒருசாராருக்காக விளையாடினார். தற்போதும் விளையாடிக்கொண்டிரு;கிறார். இந்த நெருக்கடி மைதானத்தில் தாயகத்திற்கு வெளியே இருக்கும் மனோகணேசன் கொடுத்த குரலைக்கூட சுமந்திரனோ, சாணக்கியனோ கொடுக்கவில்லை. 

போராட்டக்காரர்கள் அரசியல் கட்சிகள் சந்திப்பின்போது மனோகணேசன் “இந்நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு மூலகாரணம் தீர்க்கப்படாத இனப்பிரச்சினை தான். அதற்குப் பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு தேட முடியாது” எனத் தெளிவாகக் கூறியிருந்தார். சுமந்திரனோ ஜனாதிபதி நியமனம் பற்றிய அரசியல் யாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போராட்டக்காறர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். தமிழ் மக்கள் விவகாரம் பற்றி வாயயே திறக்கவில்லை.

கோட்டாபய, மஹிந்த, பஷில் ஆகியோரை பதவிநீக்குவதற்கு அரசியல் யாப்பிற்கு வெளியிலான அணுகுமுறை தேவை. ஜனாதிபதி நியமனத்திற்கு மட்டும் அரசியல் யாப்பு வழிமுறை தேவைதானா? என்ற கேள்வியை முறையாக கேட்பதற்கு யாரும் இருக்கவில்லை. போராட்டக்காரர்களுக்கு தற்போதுள்ள ஒரேயொரு ஆறுதல் சஜித்தரப்பு, சுயாதீனப் பாராளுமன்றக்குழு, தமிழ்த்தரப்பு, சீனா என்பவை ரணில் அரசிற்கு வெளியில் நிற்பதுதான். இந்த அணி இருக்கும்வரை நெருக்கடிக்களம் சூடாக இருப்பதற்கே வாய்ப்புக்கள் உண்டு. 

தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளில் முழுமையாகவே நம்பிக்கை இழந்துள்ளனர். கூட்டமைப்பிலும் நம்பிக்கை இல்லை மாற்றாக வந்தவர்களிலும் நம்பிக்கை இல்லை. எந்தத் தரப்பும் தமிழ் மக்களின் நலன்களிலிருந்து நெருக்கடி மைதானத்தில் தலையீடு செய்யவில்லை. இதனால் இந்த விவகாரத்தை சிவில் அமைப்புக்கள் தங்கள் கைகளில் எடுப்பதற்கு முயற்சிசெய்து வருகின்றன. 

தமிழ் மதத் தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி ஒருங்கிணைந்து குரல் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். சிவில் தரப்பில் இன்னோர் பிரிவினர் தமிழ்ப் பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.  தமிழ் மக்களின் அபிலாi~கள் தமிழ்த்தேசியக் கட்சிகள் முன்னெடுக்காவிட்டால் இக்கட்சிகளை தமிழ் மக்களிடம் அம்பலப்படுத்தி அரங்கிலிருந்து அவற்றை அகற்றுவதைத் தவிர வேறு தெரிவில்லை.

 “நதிகள் ஒருபோதும் பின்னோக்கி பாய்வதில்லை”

 தமிழ்க் கட்சிகள் இதனைப் புரிந்துகொள்ளுமா? 
 

 

https://www.virakesari.lk/article/131587

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//“நதிகள் ஒருபோதும் பின்னோக்கி பாய்வதில்லை” தமிழ்க் கட்சிகள் இதனைப் புரிந்து கொள்ளுமா?// 👌

நதிகள் முன்னோக்கி செல்லும் பொழுது, பாறைகளோ, தடைகளோ வந்தால் பாறையை சுற்றி ஓடி கடலை அடையும்.. ஆனால் தமிழ்க் கட்சிகள் பல கிளை நதிகளாக பிரிந்து போய் கடைசியில் வலுவிழந்துவிடும்..எப்பொழுதுதான் உணருவார்களோ தெரியவில்லை

 

  • Like 1
Link to comment
Share on other sites

Quote

போராட்டக்காரர்கள் அரசியல் கட்சிகள் சந்திப்பின்போது மனோகணேசன் “இந்நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு மூலகாரணம் தீர்க்கப்படாத இனப்பிரச்சினை தான். அதற்குப் பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு தேட முடியாது” எனத் தெளிவாகக் கூறியிருந்தார். சுமந்திரனோ ஜனாதிபதி நியமனம் பற்றிய அரசியல் யாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போராட்டக்காறர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். தமிழ் மக்கள் விவகாரம் பற்றி வாயயே திறக்கவில்லை.

தற்போதுள்ள தலைவர்களில் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர் மனோ கணேசன் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

தற்போதுள்ள தலைவர்களில் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர் மனோ கணேசன் மட்டுமே.

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்காகவா?👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

 “நதிகள் ஒருபோதும் பின்னோக்கி பாய்வதில்லை”

https://www.geographyrealm.com/rivers-flow-backwards/

கட்டுரையாளருக்கு தெரியாத பல விடயங்கள் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு தெரியும். அதனாலேதான் அவர்கள் ஆறுதலாக கறு(ரு)மம் ஆற்(த்து)றுகிறார்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.