Jump to content

ரணிலுக்கும், டக்ளஸ் தேவானந்தாவுக்கும்...  இடையில் சந்திப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் மூன்று நாள் விஜயம்!

ரணிலுக்கும், டக்ளஸ் தேவானந்தாவுக்கும்...  இடையில் சந்திப்பு!

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள சில முஸ்லிம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்பாக மெத்தனமான கொள்கையை கடைப்பிடிக்குமாறு பதில் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

தடை செய்யப்பட்டுள்ள சில அமைப்புக்கள் இலங்கைக்கு முதலீடுகளை கொண்டு வந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக.. செயற்பட்ட அமைப்புக்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1291525

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எதிர்வு கூறப்பட்டுள்ளது இச்சந்திப்பின் மூலம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கை நான் கவனித்துக்கொள்கிறேன். வடக்கை நீ கொஞ்சம் அடக்K வாசிக்கப் பாருங்கோ..சரியா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழர்க்கு ரணில் இதனால் கூறிக்கொள்வது என்னவெனில் சிங்களம் தமிழர் இனப்பிரச்சனை விடையத்திலான எமது அணுகுமுறை எப்போதும்போலவே  இருக்கும் என்பதாகும்.

அதாவது டேவிட் கமரோன் இலங்கை வந்தபோது தமிழர் தரப்பை அதுவும் வடமாகாண முதலமைச்சரை யாழ் நூலகத்தில் சந்தித்தார் அதன் குறியீடு என்னவெனில் தமிழர் தரப்பது அரசியல் இருப்பு வடக்கில் இருக்கு அதனால் அந்த அரசியல் இருப்பை இங்கிலாந்து அங்கீகரிக்கிறது அல்லது மதிப்பளிக்கிறது என்பதாகும்.

தவிர நரேந்திர மோடி இலங்கை வந்தபோது யாழ்ப்பாணத்துக்கும் வந்தார் ஆனால் தமிழர் தரப்பை யாழில் வைத்துச் சந்திக்கவில்லை இறுதி நேரத்தில் அதுவும் போகும்போது கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தில் வெறும் பதினைந்து நிமிடங்கள் சந்த்தித்தார் அதன் பொருள் நாம் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைல் உள்ளவர்களை விட உங்களை முக்கியமானவர்களாகவோ அல்லது நட்பானவர்களாகவோ அல்லது உங்கள் பிரச்சனையில் கரிசனை உள்ளவர்களாகவோ இலங்கையின் ஆட்சியாளர்களுக்குப் புரிந்து கொள்ளக்கூடயதாக நடக்க விரும்பவில்லை என்பதாகும்.

அதுபோலவே டக்ள்சைச் சந்திப்பது சிங்களத்துடன் ஒத்திசைவாக இருப்பவர்களையே நாம் எதிகாலத்தில் நட்புடன் இருப்போம் என்பதாகும்.

இனிமேல் தமிழர் தரப்பு தங்களது கோரிக்கைகளை இப்போதைய எவரிடமும் வைக்கத் தேவையில்லை என்பதே இதன் பொருள்.

ஆனால் வெதம் ரோசம் மானம் கெட்ட சம் சும் விக்கி மாவை சுரேஸ் வகையறாக்கள் வரிசைகட்டி நிக்குங்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம்.. உவர் குத்தியருக்கு சொறீலங்கா பாராளுமன்றில் 50 பேர் எம் பி இருக்கினம். அதுதான் ரணில் சந்திச்சு ஆதரவு கேட்டிருப்பார்.

ரணில் ஒரு குள்ள நரி.. ஏதோ குறுகிய தேவைக்காக.. இந்த கொலைஞரை சந்திச்சிருப்பார். யாரை எங்கவைச்சு தட்டப் போறாய்ங்களோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம்.. உவர் குத்தியருக்கு சொறீலங்கா பாராளுமன்றில் 50 பேர் எம் பி இருக்கினம். அதுதான் ரணில் சந்திச்சு ஆதரவு கேட்டிருப்பார்.

ரணில் ஒரு குள்ள நரி.. ஏதோ குறுகிய தேவைக்காக.. இந்த கொலைஞரை சந்திச்சிருப்பார். யாரை எங்கவைச்சு தட்டப் போறாய்ங்களோ. 

வெள்ளை வான் திறப்பை… டக்ளசிடம் கொடுத்திருப்பார்.
ரணிலுக்கு… இப்போ, இப்படிப் பட்ட ஆட்கள் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம்.. உவர் குத்தியருக்கு சொறீலங்கா பாராளுமன்றில் 50 பேர் எம் பி இருக்கினம். அதுதான் ரணில் சந்திச்சு ஆதரவு கேட்டிருப்பார்.

ரணில் ஒரு குள்ள நரி.. ஏதோ குறுகிய தேவைக்காக.. இந்த கொலைஞரை சந்திச்சிருப்பார். யாரை எங்கவைச்சு தட்டப் போறாய்ங்களோ. 

ஒரு ஆசனமுள்ள விக்கியரே துள்ளி குதிக்கும் போது

இரு ஆசனமுள்ளவன் சும்மா இருப்பானா?

8 minutes ago, தமிழ் சிறி said:

வெள்ளை வான் திறப்பை… டக்ளசிடம் கொடுத்திருப்பார்.
ரணிலுக்கு… இப்போ, இப்படிப் பட்ட ஆட்கள் தேவை.

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.

கஜன் கோஸ்டியை யாரும் தேடலையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்களில் 93.8 % பேர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டம் (university degrees) ஒன்றை தங்களது குறைந்த பட்ச கல்வித் தகைமையாக கொண்டு இருக்கிறார்கள்.
நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களில் 90 % பேர் பல்கலைக்கழக பட்டம் ஒன்றை தங்களது குறைந்த பட்ச கல்வித் தகமையாக கொண்டு இருக்கிறார்கள்.
பிரித்தானியா பாராளுமன்றத்திற்கு குறித்த நாட்டு மக்களால் தெரிவு செய்யபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் 85 % பேர் பல்கலைக்கழக பட்டம் (university degrees) ஒன்றை தங்களது குறைந்தபட்ச கல்வி தகமையாக கொண்டு இருக்கிறார்கள்.
அவுஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர்களில் 75 % பேர் பல்கலைக்கழக பட்டம் (university degrees) ஒன்றை தங்களது குறைந்தபட்ச கல்வி தகமையாக கொண்டு இருக்கிறார்கள்.
இது மட்டுமின்றி மேற்குறித்த நாடுகளில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் கல்வி தகமைகளோடு, நேர்மறையான விழுமியங்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அனுபவங்களையும் கொண்டு இருக்கிறார்கள்.
இதனால், சட்டவாக்க சபைகள் என சொல்லப்படும் பாராளுமன்றங்களில் குறித்த நாட்டின் வளர்ச்சி குறித்து ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தவும் காத்திரமான தீர்மானங்களை எடுக்கவும் முடிக்கின்றது.
நாட்டின் நலன் சார்ந்த சட்டங்களை உருவாக்க முடிக்கின்றது
குறித்த நாட்டில் வசிக்கும் சகல மக்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்த முடிகின்றது.
பேச்சு சுதந்திரம் உட்பட்ட மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடிகின்றது.
அரசியல் தலையீடுகள் அற்ற அரச நிருவாகத்தை ஏற்படுத்த முடிகின்றது.
இதனூடாக மேற்குறித்த நாடுகள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறவும் சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி நகரவும் பங்களிக்கிறார்கள்.
குறிப்பாக நியூசிலாந்து பாராளமன்றத்தில் அங்கம் வகிக்கும் மருத்துவத்துறை சார்ந்த நிபுணர்கள் கோவிட் 19 பெரும் தொற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள பங்களித்தவர்களில் முன்னணியில் இருந்தார்கள்.
ஆனால்,
அண்மைய தகவல்களின் அடிப்படையில் இலங்கை பாராளுமன்றதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 225 பாராளமன்ற உறுப்பினர்களில் (Legislators) 94 பேர் GCE O/L Level பரீட்சையில் சித்தி பெற தவறியவர்களாக இருக்கிறார்கள் . அதாவது 42 % மான இலங்கை பாராளமன்ற உறுப்பினர்கள் GCE O/L Level பரீட்சையில் கூட சித்தி பெறவில்லை.
இதுமட்டுமின்றி இலங்கையில் கொலை குற்றாவளிகள் , போதைப்பொருள் வியாபாரிகள் , ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் என சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் பலரும் பாராளமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார்கள்.
வடக்கு கிழக்கிலும் இதே நிலைமை தான் இருக்கிறது
குழந்தைகளை பணத்திற்காக கடத்தி கொலை செய்த பிள்ளையான் வடக்கு கிழக்கில் அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்
யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகின்றார்.
உலகில் எங்காவது இது சாத்தியமா ? அதாவது சட்டவாக்க சபையாக கருதப்படும் பாராளமன்றத்தில் தெரிவு செய்யப்படும் மேற்குறித்த கிரிமினல் குற்றவாளிகள் தான் சட்டங்களை உருவாக்குகின்றார்கள்
அங்கயன் இராமநாதன், வியாழேந்திரன் போன்றோர் 19 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிதார்கள்
வெறும் 2 ஆண்டுகளில் அதற்கு முரணான 20 ஆம் திருத்த சட்ட திருத்திற்கும் ஆதரவாக வாக்களிக்கிறார்கள்.
17 ஆம் திருத்தம் , 18 ஆம் திருத்தம் , 19 ஆம் திருத்தம் , 20 ஆம் திருத்தம் என ஒன்றுக்கு ஒன்று முரணான சட்ட திருத்தங்களுக்கு ஆதரவாக ஆட்சியில் இருக்கும் தரப்புகளை திருப்திப்படுத்த டக்ளஸ் தேவானந்தா வாக்களிக்கிறார். இப்போது 21 ஆம் திருத்தும் முன்மொழியப்பட்டால் அதற்கும் ஆதரவாக வாக்களிப்பார்கள் . இவர்கள் யாருக்கும் எந்த குற்ற உணர்வும் இல்லை
இதே நிலை தான் தெற்கிலும் இருக்கின்றது இவ்வாறான கிரிமினல்களை சொந்த இலாபங்களை வாக்களித்து விட்டு புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை
Parliament not a place for thugs and hooligans
Copied
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Ahasthiyan said:
இதுமட்டுமின்றி இலங்கையில் கொலை குற்றாவளிகள் , போதைப்பொருள் வியாபாரிகள் , ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் என சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் பலரும் பாராளமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார்கள்.
வடக்கு கிழக்கிலும் இதே நிலைமை தான் இருக்கிறது
குழந்தைகளை பணத்திற்காக கடத்தி கொலை செய்த பிள்ளையான் வடக்கு கிழக்கில் அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்
யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகின்றார்.
உலகில் எங்காவது இது சாத்தியமா ? அதாவது சட்டவாக்க சபையாக கருதப்படும் பாராளமன்றத்தில் தெரிவு செய்யப்படும் மேற்குறித்த கிரிமினல் குற்றவாளிகள் தான் சட்டங்களை உருவாக்குகின்றார்கள்
அங்கயன் இராமநாதன், வியாழேந்திரன் போன்றோர் 19 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிதார்கள்
வெறும் 2 ஆண்டுகளில் அதற்கு முரணான 20 ஆம் திருத்த சட்ட திருத்திற்கும் ஆதரவாக வாக்களிக்கிறார்கள்.
17 ஆம் திருத்தம் , 18 ஆம் திருத்தம் , 19 ஆம் திருத்தம் , 20 ஆம் திருத்தம் என ஒன்றுக்கு ஒன்று முரணான சட்ட திருத்தங்களுக்கு ஆதரவாக ஆட்சியில் இருக்கும் தரப்புகளை திருப்திப்படுத்த டக்ளஸ் தேவானந்தா வாக்களிக்கிறார். இப்போது 21 ஆம் திருத்தும் முன்மொழியப்பட்டால் அதற்கும் ஆதரவாக வாக்களிப்பார்கள் . இவர்கள் யாருக்கும் எந்த குற்ற உணர்வும் இல்லை
இதே நிலை தான் தெற்கிலும் இருக்கின்றது இவ்வாறான கிரிமினல்களை சொந்த இலாபங்களை வாக்களித்து விட்டு புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை

எங்கேயோ எப்போதோ நானும் இதைத்தான் கூறினேன்
ஈழத்திலும் இலங்கையிலும் மக்கள் திருந்த வேண்டும்
இலங்கையில் திருந்திவிட்டார்கள்
ஈழத்தில் இன்னும் திருந்தவேயில்லை
இப்போதும் நாங்கள் எப்படித்   தப்பி அங்கிருந்து வந்தோமோ அதே போல அவர்களும் தப்பி வந்து வாழ நினைக்கின்றார்கள்
யாரை குற்றம் கூறுவது என்று தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் யாருக்காவது வழக்குரைஞருக்கான சான்றிதழ் தேவைஎனில் யாழ்ப்பாணத்தில ஒருவர் இருக்கிறார் 10 லட்சம் கொடுத்தால் ஒறிஜினல் சேட்டிபிக்கற் வரும். ஆனால் என்ன கோர்ட்டில வாய்தா வாங்கத்தான் முடியும் மற்றப்படி எதுவும் ச்ய்ய முடியாது. விரும்பினால் கூட்டமைப்பில சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம்.

வசதி எப்படி!

 

தவிர பின்லாந்தில் ஒரு அரசியல் கட்சி இருக்கு அதன் பெயர் அடிப்படைவாத பின்லாந்தியர்கள் என்பதாகும் அதில் முக்கிய் அபதவிகளில் உள்ளவர்கள் எல்லாம் கிரிமினல்கள் குடிவருவோருக்கு எதிர்ப்பானவர்கள் களவு கொள்ளை வேலை வெட்டி இல்லாதிருப்பது இவர்களது வேலை ஆனால் என்ன கேவலம் என்றால் இந்த நாட்டில் இதுதான் மூன்றாவது பெரிய கட்சி. கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வைத்திருக்கு. 

உலகின் வயது குறைந்த பெண் பிரதமர் சன்ன மரின் அவரது தாயார் ஓருபால் ஈர்ப்பாளர் அவரே இதைப் பொது வெளியில் கூறியிருக்கிறார்.
சரி அதை விடுங்கோ 
வெளிநாட்டு அலுவல்கள் மந்திரி  ஒரு பால் ஈர்ப்பாளர் 

அதையும் விடுங்கோ 

இந்த நாட்டின் அதிபர் 69 வயதில ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தார் 

ஆனாலும் இந்த நாடு உலகின் மகிழ்சியானவர்கள் வாழும் நாட்டின் வரிசையில் முதலாவதாக மூன்றுதடவை தொடர்ச்சியாஅக வருகுது.

ஆனால் நான் இங்கு மகிழ்சியாக இல்லை

ஆழ்பவர்களும் சட்டத்தை அமூல் படுத்துபவர்களும் ஒழுங்காக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

மலிவு விலைக்கடையில் பத்துப் பைசாவுக்கு இனிப்பு வாங்கினால் 14 விகிதன் விற்பனை வரியைக்க்ட்டிவிட்டுத்தான் நான் இனிப்பை வாயில போடவேண்டும் அதாவது 1.4 சென்ற் அரசுக்குக் கொடுக்க வேண்டும் நீங்கள் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் இதுதான் விடையம்.

இலங்கையில் போராட்டம் ஆரம்பிக்க முதலேயே இந்தியாவில் ஒரு லீற்றர் பெற்றோல் விலை இலங்கைக் காசுக்கு நாநூறு ரூபாக்கு மேல் ஆனால் அப்போது இலங்கையில் பெற்றோல் விலை அரைவாசியாகும் அப்போ எல்லாருடைய ............யும் மோட்டார் சைக்கிளிலதானே இருக்கும்  சோம்பேறிகள் வாழும் நாடு இலங்கை.

யாழில் விசேட பாடசாலைகள் வரிசையில் காட்லிக் கல்லூரியும் யாழ் இந்துவும் முதலிடம் ஆனால் அங்கு படிக்கும் மாணவர்கள் ரியூசனுக்குப் போகாமல் விடுகிறார்களா இல்லையே.

நான் அறிய ஒரு பாடசாலை வாத்தியா கொடில்களில்ரியூசன் கொடுக்கிறார் கபொத சாதாரண உயர்தர்ப் பெறுபேறுகள் வந்தால் அவரது படமும் தேர்ச்சிபெற்ற மாணவர்களது படமும் கட் அவுட்டில கட்டித்தொங்கப்போடப்படும் ஆனால் அவர் படிப்பித்த பாடசாலையில் அவரிடம் அதே பாடம் எடுத்த மாணவர்கள் எத்தனைபேர் தேர்ச்சி பெற்றார்கள் என்றால் பதில் இல்லை.

இன்னுமொரு ஆசிரியர் 
பிந்தங்கிய பகுதியில் ஐந்து வருடம் வேலை செய்ய வேண்டும் மல்லாவிக்கு மாத்திவிட்டாங்கள் ஆனால் யாரையோ பிடித்து வேலைனைக்கு மாறிவிட்டார் ஏனெண்டால் அதுவும் பிந்தங்கிய பகுதியாம் அவரது தந்தையும் ஓய்வுபெற்ற ஆசிரியர் அதுவும் யாழில் பிரபலமான ஒரு பாடசாலையில் படிப்பித்து ஓய்வுபெற்றவர் அவரிடம் நான் கேட்டேன் ஏன் மல்லாவிக்கும் போகலாம்தானே என அவர் அதற்குச் சொன்ன பதில் "அங்க அவனுக்கு ஒரு பம்பலும் இல்லை" என ஆக அரசாங்கத்தில காசை வாங்கிக்கொண்டு பிந்தங்கிய பகுதியில இருக்கும் மாணவர்களது கல்வி உரிமையை குறிப்பிட்ட ஆசிரியர் அறுக்கிறார்.

இந்த ஆசிரியர் அண்மையில் இலங்கையின் அரச தொலைக்காட்சியில் நான் அடுத்த பிறவியிலும் ஆசிரியராகப் பிறக்கவே விரும்புகிறேன் எனப்பேட்டி கொடுக்கிறார்,

இப்படியான மக்கள் இருந்தால் நாடு வங்குரோத்து நிலையை அடையுமா இல்லையா.

கொசுறாக மண் எண்ணை மகேஸ்வரனது தம்பி துவாரகீஸ்வரன் வருடா வருடம் கட்டும் வரி ஆகக்குறைந்த அளவே ஆகும் என ஒரு அரச வரி மதிப்பாளர் புலம்புகிறார்.

புலம்பெயர் தமிழ் லூசுப்பயல்கள் இவற்றுக்கெல்லாம்தான் காசு அனுப்புகினம்.

எனது கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2022 at 19:39, தமிழ் சிறி said:

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதுவும் மாறாது விட்ட இடத்திலிருந்து தொடரும் எனும் செய்தி!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.