Jump to content

டலஸை முன்னிலைப்படுத்தினோம் ஆனால் தோல்வியடைந்து விட்டார் - மஹிந்த அதிரடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

டலஸ் அழகபெருமவை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம் ஆனால் அவர் தோல்வியடைந்து விட்டார்.

இனி ஸ்தாபிக்கப்படும் அரசாங்கம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். எந்த அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டாலும் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கமைய செயற்படுவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

mahinda11.jpg

பாராளுமன்றில் இன்று புதன்கிழமை 20 ஆம் திகதி ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்தாபிக்கப்படும் அரசாங்கம் தொடர்பில் அவதானித்துக் கொண்டிருக்கிறோம். எந்த அரசாங்கம் தோற்றம் பெற்றாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால் பலவற்றை சாதிக்க முடியும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் கட்சி ரீதியில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை. கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கமைய செயற்படுவேன்.

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெருமவை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம், வாக்களித்தோம் இருப்பினும் போட்டியில் அவர் தோல்வியடைந்து விட்டார். அரசியலில் இது வழமையானது. போட்டியில் ஒருவர் வெற்றி பெறுவார், பிறிதொருவர் தோல்வியடைவார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் தொடர்பில் இரு வேறுப்பட்ட கருத்து காணப்படுகிறது. இருப்பினும் தற்போதைய நிலைமையில் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றார்..

டலஸை முன்னிலைப்படுத்தினோம் ஆனால் தோல்வியடைந்து விட்டார் - மஹிந்த அதிரடி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை பார்றா இவை டளஸைத் தானாம் முன்னிலைப்படுத்தினவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாதவூரான் said:

இங்கை பார்றா இவை டளஸைத் தானாம் முன்னிலைப்படுத்தினவை

அரசியல்வாதிகள்…. வாயை திறந்தாலே பொய்தானே வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது வேட்பாளர் வெல்லவில்லை - மகிந்தா கவலை

தமது கட்சி சார்பில், போட்டியிட்ட டல்லஸ் அழகப்பெரும வெற்றி பெறாதது கவலைதான்.

ஆயினும் இங்கே ஒருவர் மட்டுமே வெல்லமுடியும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

புதிய ஜனாதிபதி நாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு வேலை செய்யவேண்டும்.

போராட்டக்காரர்கள், தமது நோக்கம் நிறைவேறியதால், புதிய ஜனாதிபதிக்குரிய கால அவகாசத்தை கொடுத்து, வீடு செல்லவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

எங்களது வேட்பாளர் வெல்லவில்லை - மகிந்தா கவலை

தமது கட்சி சார்பில், போட்டியிட்ட டல்லஸ் அழகப்பெரும வெற்றி பெறாதது கவலைதான்.

ஆயினும் இங்கே ஒருவர் மட்டுமே வெல்லமுடியும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

புதிய ஜனாதிபதி நாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு வேலை செய்யவேண்டும்.

போராட்டக்காரர்கள், தமது நோக்கம் நிறைவேறியதால், புதிய ஜனாதிபதிக்குரிய கால அவகாசத்தை கொடுத்து, வீடு செல்லவேண்டும்.

கடற்படை தளத்தில்… பதுங்கி இருந்த மகிந்த,
ரணில் வந்த துணிவிலை… சவுண்டு கொடுக்கிறார். 😂
இரண்டு கிழமையில்… கோத்தாவும் வர,
வேதாளம், மீண்டும்.… முருங்கை மரத்தில் ஏறிவிடும். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

கடற்படை தளத்தில்… பதுங்கி இருந்த மகிந்த,
ரணில் வந்த துணிவிலை… சவுண்டு கொடுக்கிறார். 😂
இரண்டு கிழமையில்… கோத்தாவும் வர,
வேதாளம், மீண்டும்.… முருங்கை மரத்தில் ஏறிவிடும். 😎

ரணிலும் அவரது போட்டியாளர் எண்டதை மறைக்கத்தான் டல்லசை இறக்கினவர்...

ஆனால், ரணில் இவர்கள் ஆளுமைக்குள் அகப்படார் என்பது எனது கணிப்பு.

பிரேமதாசர், சந்திரிகா, மைத்திரி என்று அவர் முரண்பட்ட ஆட்கள் அதிகம். அதுவும் மந்திரியாக, பிரதமராக....

இப்போது அதிகாரம் மிக்க ஜனாதிபதி பதவி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை அறிக்கை விட்டவுடன்.. அதனை இப்ப சிங்கள மக்களே நம்பிறதா இல்லை. இதில.. உவர் காமடி பண்ணிக்கிட்டு. அதுசரி.. உவர் எப்ப வெளில வந்தவர்..!!

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதவி கிடைத் பின்னும் ரனில் அவர்களை பாதுகாப்பர் என்பது நெருடல்தான்.அவர் அடுத்த முறை முழு ஜனாதிபதியாக வரத்தான் அலுவல் பார்ப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அறிக்கை விட்டவுடன் சனம் நம்பிபோடுவினம் என்ற நினைப்பு ஏன் மகிந்தவிற்கு வந்ததென்றல், மகிந்த MGRஇன்ற ரசிகனாம், MGR படங்களில் கன்னத்தில் ஒரு மச்சம் வைத்து disguise பண்ணி சனம் அதைப்பார்த்து விசிலடிச்ச ஞாபகம் வந்ததாம் உடனெ அதைமாதிரி ஒரு stunt காட்டியிருஎ்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலிமுக திடல் போராட்டம் எங்கே தமிழருக்கு ஆதரவாய் திரும்பி, சரித்திரத்தை மாற்றி விடுமோ என்கிற அங்கலாய்ப்பு பலர், பல நாடுகள் மத்தியில் இருந்தது. அது இப்போ தணிந்திருக்கும். பாப்போம் மிகுதி எப்படி தொடருமென?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கூறியது உண்மையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். 

டலஸ் அழகப்பெரும விற்கு ஆதரவளிப்பதாக வெளிப்படையாகக் கூறிவிட்டு, TNA ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததாக உள்வீட்டுத் தகவல். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெருமவை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம், வாக்களித்தோம் இருப்பினும் போட்டியில் அவர் தோல்வியடைந்து விட்டார்.

கேட்டுக்கொண்டு சூழ நிக்கிறவர்களாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை, இவர் சிரிப்பதை முகக்கவசம் மறைத்தாலும் கண் மலர்ச்சி தெரிவிக்கிறது இவரின் மகிழ்ச்சியை. எப்படி எல்லோரும் பொய்யை அடித்து மெய்யென்கிறார்கள்?

9 hours ago, பிழம்பு said:

எந்த அரசாங்கம் தோற்றம் பெற்றாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

இவர் சேவையாற்றி களைத்து, இளைத்து விட்டார்,சொல்கிறார் கேளுங்கள். ஆனா அவர் செய்ததுபோல் செய்யாதீர்கள், முடிவு அவருக்கு வந்ததுபோலவே உங்களுக்கும் வரும். காரணம் மக்கள் விழித்து விட்டார்கள்! 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.