Jump to content

ரணிலின் ஆட்டம் ஆரம்பம்; கோட்டாகோகம மீது தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் ஆட்டம் ஆரம்பம்; கோட்டாகோகம மீது தாக்குதல் 


கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ரணலன-ஆடடம-ஆரமபம-கடடககம-மத-தககதல/175-300899

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மை என்றால்.. ரணில் தப்புத்தாளம் போடுறார். மாணவர்களின் பலத்தை இராணுவத்தைக் கொண்டு அடக்க முற்பட்டு.. தோற்றவர்கள் பலர். இது பிலிப்பைன்ஸ் மார்க்கோஸின் நிகழ்வுகளுக்கு ஒத்து எல்லாம் நடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்,  ரணிலுக்கு…. பதவி விலக இரண்டு வாரம் கால அவகாசம் கொடுத்தவர்கள்.
ரணில்… அவர்கள் மீது, தாக்குதலை தொடுத்ததன் மூலம்,
நாளையே…. பெரிய போராட்டம் வெடிக்கும்.
ஆனால் அதை அடக்க… துப்பாக்கி சூடுகள் கூட நடத்தப் படலாம்.

நாளைக்கு… அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவும் இருக்கின்றது.
ஏதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை நாளை அறியலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ரணிலின் ஆட்டம் ஆரம்பம்; கோட்டாகோகம மீது தாக்குதல் 

அல் ஜஸீரா மற்றும் பீ.பீ.சீ போன்ற செய்திகளில் 'கோட்டா கோ கோம்' போராட்டக் கொட்டைகள் பிடுங்கி எறியப்படும் காட்சிகள் 00:30 மணிக்கு ஒளிபரப்பாகியது. நள்ளிரவு 01:00மணிக்கு முகமூடிகள் அணிந்து படையினர் உள்ளடங்கலாக நடவடிக்கையில் ஈடுபட்டதைக் காண முடிந்தது. நாளை சுடுகலனும் பாவிக்கப்படலாம். அமெரிக்க, இந்திய ஆசீர்வாதத்தோடு மீண்டும் அப்பாவிகள் காவுகொள்ளப்பட உள்ளனர். அதேவேளை முன்னணிப் போராட்டக்காரர் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். உறவுகள் முன்பே சுட்டியதுபோல் நரியினது வேலை ஆரம்பித்தவிட்டது. ரணிலின் தொடக்கமும் முடிவும் உறுதியாகிறதாகவே தென்படுகிறது.
நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் அதிபராக வேறு ஒருவர் வந்து இருப்பினும் இதே நடவடிக்கையே. அப்புறப்படுத்தல் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விடயம் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்கள் ரணிலுக்கு சந்தர்ப்பம் கொடுத்து வெள்ளியுடன் தாம் தமது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்போவதாகக் கூறியபின்னரும், வியாழன் இரவே ரணில் தனது அதிகாரத்தைக் காட்டத் தொடங்கியிருப்பது, போராட்டக்காரர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லவே என்று கூறப்படுகிறது. 

பழைய ஆட்சியாளர்களை, ஊழல்ப் பெருச்சாளிகளை அப்புறப்படுத்தவென்று வந்த போராட்டம் இன்று அதே பெருச்சாளிகளால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

இனிமேல் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும். 

ராஜபக்ஷேக்கள் பெளத்தத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பவர்கள், தமது வாக்கு வங்கியை அதிகரிக்க. 

ரணில் பிக்குகளை தூரத்தில் வைத்திருப்பவர் என்று அறியப்பட்டவர். ஆனால், தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் அவரும் சென்றிருப்பது கங்காராமயவின் ஆசீர்பெற. அதுமட்டுமல்லாமல், ராணுவத்தின்மீதான பூரண அதிகாரம் தனக்கிருப்பதாகக் காட்ட ராணுவத் தலைமையகத்திற்கும் உடனே சென்று முப்படைப் பிரதானிகள், பொலீஸ் உயர் அத்தியட்சகர் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் பெருந்தலைகளோடு ஆலோசனைக் கூட்டமும் நடத்தியிருக்கிறார்.

இந்த நரி தற்போது சிங்கத்தின் தோல்போர்த்தி வந்திருக்கிறது. நண்மைக்கல்ல. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்களை இலக்குவைத்து இழுத்துச் செல்லும் அதிரடிப்படை. காலில் விழாத குறையாகக் கெஞ்சும் இளைஞனும் அவனது துணையும். "மச்சான், நான் உங்களைப் பார்த்து அப்படிக் கூறவில்லை, என்பாட்டில் வீட்டிற்குத்தான் செல்கிறேன், தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்" என்று அவன் கெஞ்சியும், தனது துப்பாக்கியை இன்னொரு வீரனிடம் கொடுத்துவிட்டு அவனை எப்படியாவது இழுத்துச்செல்ல அந்த அதிரடிப்படைவீரன் முயல்கிறான். 

https://twitter.com/dhothaka/status/1550237788133814272?s=20&t=lWqFI---E20UjdcuSMgjFA

https://twitter.com/dhothaka/status/1550237788133814272?s=20&t=lWqFI---E20UjdcuSMgjFA

எந்த ராணுவம் உங்களின் யுத்த கதாநாயகர்கள் என்று இதுவரை கூவினீர்களோ, அதே ராணுவம் இப்போது உங்கள் முன்னால் வந்து நிற்கிறது. எங்கே, இப்போது கூறுங்கள் பார்க்கலாம் நீங்கள் எங்களின் உண்மையான் கதாநாயகர்கள் என்று ?

Edited by ரஞ்சித்
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடடா   அரசால் ஊட்டி வளர்க்க படட படையினரின் போக்கு இப்பொது விளங்கும்....   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

போராட்டக்காரர்கள் ரணிலுக்கு சந்தர்ப்பம் கொடுத்து வெள்ளியுடன் தாம் தமது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்போவதாகக் கூறியபின்னரும், வியாழன் இரவே ரணில் தனது அதிகாரத்தைக் காட்டத் தொடங்கியிருப்பது, போராட்டக்காரர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லவே என்று கூறப்படுகிறது. 

அன்று ஏதிலிகளாக நின்ற எம்மை, எப்படி ஓட ஓட விரட்டி கொன்று குவித்தார்களோ அந்த சூழலை இவர்களும் கண்டு, அனுபவித்து அதன் வலியை உணரவேண்டாமோ? காலம் முழு மூச்சோடு இறங்கியிருக்குது, ஏறினாலும் விடாது, இறங்கினாலும் விடாது தான் நினைத்ததை நடத்தி முடிக்கும் வரை. தோல்வியோடு வீட்டுக்கு போய் ஓய்வெடுக்காமல்  வலிந்து வந்து நிக்கிறவர்களோடு தன் பழைய கணக்கை தீர்க்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

அன்று ஏதிலிகளாக நின்ற எம்மை, எப்படி ஓட ஓட விரட்டி கொன்று குவித்தார்களோ அந்த சூழலை இவர்களும் கண்டு, அனுபவித்து அதன் வலியை உணரவேண்டாமோ? காலம் முழு மூச்சோடு இறங்கியிருக்குது, ஏறினாலும் விடாது, இறங்கினாலும் விடாது தான் நினைத்ததை நடத்தி முடிக்கும் வரை. தோல்வியோடு வீட்டுக்கு போய் ஓய்வெடுக்காமல்  வலிந்து வந்து நிக்கிறவர்களோடு தன் பழைய கணக்கை தீர்க்க.

இல்லை சாத்.

எமக்கு நடந்தவற்றுடன் இவற்றை ஒப்பிடவே முடியாது. இன்றுவரை சுடப்பட்டுக் கொல்லப்பட்ட சிங்களவர் ஒருவர் தான். நேற்றிரவு கூட ஆயுதங்கள் பாவிக்காமலேயே மக்களை விரட்டியிருக்கிறார்கள். இப்போராட்டங்களில் ஒரு சிங்களவனும் உயிரிழக்கக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். தமது ராணுவத்தின்மீதும், பொலீஸ் மீதும் மக்கள் வெறுப்படையாமல் பார்த்துக்கொள்வதில் மிகக் கவனமாக ஆட்சியாளர்கள் செயலாற்றுகிறார்கள். தமிழர்மீது தாம் நடத்திய அக்கிரமங்களை சிங்களவர் ஒருபோதுமே உணர அவர்கள் விடப்போவதில்லை. மக்கள் தமது "யுத்தக் கதாநாயகர்கள்" எனும் விம்பம் நொருங்காமல் எப்போதும் மனதில் இருக்க சகலதையும் இந்த ஆட்சியாளர்கள் செய்வார்கள். 

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இல்லை சாத்.

எமக்கு நடந்தவற்றுடன் இவற்றை ஒப்பிடவே முடியாது. இன்றுவரை சுடப்பட்டுக் கொல்லப்பட்ட சிங்களவர் ஒருவர் தான். நேற்றிரவு கூட ஆயுதங்கள் பாவிக்காமலேயே மக்களை விரட்டியிருக்கிறார்கள். இப்போராட்டங்களில் ஒரு சிங்களவனும் உயிரிழக்கக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். தமது ராணுவத்தின்மீதும், பொலீஸ் மீதும் மக்கள் வெறுப்படையாமல் பார்த்துக்கொள்வதில் மிகக் கவனமாக ஆட்சியாளர்கள் செயலாற்றுகிறார்கள். தமிழர்மீது தாம் நடத்திய அக்கிரமங்களை சிங்களவர் ஒருபோதுமே உணர அவர்கள் விடப்போவதில்லை. மக்கள் தமது "யுத்தக் கதாநாயகர்கள்" எனும் விம்பம் நொருங்காமல் எப்போதும் மனதில் இருக்க சகலதையும் இந்த ஆட்சியாளர்கள் செய்வார்கள். 

உண்மை. பார்வைக்கு வன்நடவடிக்கைபோன்ற தோற்றப்பாட்டினையும் இழப்புகளற்ற மென் நடவடிக்கையூடாக போராட்டக்காரரை அப்புறப்படுத்தவே முயல்வார்கள். கதாநாயகவிம்பம் பாதுகாக்கப்படுதல்தான் அவர்களது முதலீடு. அதனை இழக்கவிரும்பமாட்டார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“கோட்டா கோ கம” படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுள் வந்தது! – ஊடகவியலாளர்கள் உட்பட பலர் மீது தாக்குதல் – பலர் காயம்!

July 22, 2022
spacer.png

 

கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினரால் நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 8 பேர் காயமடைந்துள்ளதுடன், ஊடகவியலாளர்கள்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டாகோகமவில் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் – இரண்டு ஊடகவியலாளர்கள் கைது!

கோட்டாகோகமவில் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன். இரண்டு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளரான சதுரங்க பிரதீப் குமார, கசுன் குமாரகே ஆகியோர் கிராஸ்கட் எனும் பகுதியில் இடைமறிக்கப்பட்டு விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் எந்தவொரு காவல் நிலையத்திலும் ஒப்படைக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கோட்டாகோகம போராட்டக்களத்தில் ஊடகவியலாளர் றசிக குணவர்தன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது தலையில் இரும்பு கம்பியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுள் வந்தது!

கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது போராட்டக்களத்திலிருந்த சட்டத்தரணி ஒருவர் உட்பட 10 போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், காலிமுகத்திடல் பகுதிக்கு சிவில் உடையணிந்த இராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் மற்றும் விமானப்படையை சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினருடன் மோத வேண்டாம், இல்லையெனில் அவசரச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் போது பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறாத வண்ணம் கோட்டா கோ கம பகுதியை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோட்டா கோ கம பகுதியில் கூடாரங்கள் மற்றும் தடயங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 

https://globaltamilnews.net/2022/178696

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலி முகத்திடல் போராட்டக்களம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது – ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்!

காலி முகத்திடல் போராட்டக்களம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது – ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட எட்டிற்கும் மேற்பட்டவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், இரண்டு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த பகுதியில் இருந்த சில வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை போராட்டக்கள பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காலிமுகத்திடல் பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதுடன், காலிமுகத்திடல் பிரதேசத்திற்குச் செல்லக்கூடிய அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு முற்றாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்தியின் சுற்றுவட்டத்தில் இருந்து பாதை மூடப்பட்டுள்ளதுடன், ஷங்கிரிலா ஹோட்டல் அருகில் பாலதக்ஷ மாவத்தையும் குறுக்காக மறிக்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் சைத்திய வீதி, லோட்டஸ் வீதி என்பனவும் குறுக்காக மறிக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலி முகத்திடல் பிரதேசத்தை நோக்கிச் செல்ல எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுத்துள்ளதுடன்,செல்ல முற்படும் சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1291940

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் - ஏற்றுக்கொள்ள முடியாதவிடயம் - சர்வதேச மன்னிப்புச்சபை

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டித்துள் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு  இது ஏற்றுக்கொள்ள முடியாதது  அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும்  என வேண்டுகோள் விடுத்துள்ளது.

army_atta.jpg

டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படவேண்டும்,இலங்கை அதிகாரிகள் உடனடியாக இந்த வன்முறை நடவடிக்கைகளை கைவிடவேண்டும்,சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும் பத்திரிகையாளர்கள் கோட்டா கோ கமவிற்குள் நுழைவதை தடுக்ககூடாது,பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்வதை தடுப்பது பத்திரிகை சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயல் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்;துள்ளது.

126007286_mediaitem126007485.jpg

FYObD6tacAEIEfi.jpg

FYObJYYakAA4kaW.jpg

FYOa--HaQAAWxKY.jpg

FYObCw5aMAELjD7.jpg

FYOTYTuaAAEO4yC.jpg

FYOTaiyaUAAaovx.jpg

FYOTVzAaMAA4Wk7.jpg

FYOTXZdaQAAsTuS.jpg
 

https://www.virakesari.lk/article/131991

 

 

ஆர்ப்பாட்ட முகாம்கள்மீது படையினர் தாக்குதல் - தலைவர்கள் கைது அல்ஜசீரா

ஆர்ப்பாட்டக்காரர்கள்  மீது ஈவிரக்கமற்ற தாக்குலை மேற்கொண்ட பின்னர் இலங்கை இராணுவத்தினர் தலைநகர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றியுள்ளனர்.

அருகில் உள்ள கோட்டா கோ கம  ஆர்ப்பாட்ட கூடாரங்களை அழித்த படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர்கள் பலரை கைதுசெய்துள்ளதுடன் அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையிலிருந்து ஆர்;ப்பாட்டக்காரர்கள் வெளியேறி சில மணிநேரங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

22ம் திகதி ஜனாதிபதி செயலக பகுதியிலிருந்து வெளியேறும் தங்கள் நோக்கத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

protests_atta1.jpg

நள்ளிரவளவில் பெருமளவு படையினர் கோட்டாகோகம பகுதியை நோக்கி செல்வதாக நாங்கள் கேள்விப்பட்டோம்,தீடிரென அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி ஓடுவதை பார்த்தோம் என இளம் ஆர்ப்பாட்டக்காரரான நிபுன் சாரக ஜெயசேகர அல்ஜசீராவிற்கு  தெரிவித்தார்.

அதன் பின்னர் அவர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து ஈவிரக்கமின்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என அவர் குறிப்பிட்டார். இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து தப்பமுயன்றவேளை அவர் சிறிய காயங்களிற்கு உட்பட்டுள்ளார்.

இhhணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டவேளை அதனை நேரடியாக ஒளிபரப்பு செய்த ஜெயசேகர எனினும் நிலவிய குழப்பநிலை காரணமாக தனது கையடக்கதொலைபேசியை தொலைத்துள்ளார்.

தாக்குதல் காரணமாக பத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மோசமாக காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறு தடவை பிரதமராக பதவி வகித்த ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் மீதான ராஜபக்சக்காளின் நீண்ட கால செல்வாக்கு குறித்து அதிகரித்துவரும் கடும் சீற்றத்தை காணப்பட்ட  தொடர் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து  முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடினார்.

தாக்குதல் கைதுகள் குறித்து அறிந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் அனைவரினதும் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும் கைதுசெய்யப்பட்டவர்கள் எங்கே உள்ளனர் என்பதை தெரிவிக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நான் பொலிஸ்மா அதிபரையும் இராணுவதளபதியையும் தொடர்புகொள்ள முயன்றுள்ளேன்,தேவையற்ற படைபலபிரயோகம்  நாட்டிற்கும் அதன் சர்வதேச கௌரவத்திற்கும் உதவாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டவேளை நிலவிய குழப்பம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான அஞ்சன பண்டாரவத்தை அல்ஜசீராவிற்கு இவ்வாறு தெரிவித்தார்.

எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை,தீடிர் என அவர்கள் வந்து சத்தமிட்டவாறு ஆபாசவார்த்தைகளில் ஏசியவாறு  தாக்குதல் மேற்கொண்டு எங்களை அங்கிருந்து துரத்தினார்கள் என அவர் குறிப்பிட்டார்.

அங்கு 200 படையினர் காணப்பட்டனர் ஆனால் அந்த பகுதி இராணுவத்தினரின் கடல்போல காணப்பட்டது என்றார் அவர்.

சமூக ஊடகங்கள் மூலம் தாக்குதலை ஒளிபரப்பிக்கொண்டிருந்தவேளை விமானப்படையை சேர்ந்த ஒருவர் தலையில் தாக்கினார் என இளம் செயற்பாட்டாளர் சபீர் முகமட் தெரிவித்தார்.

அவர் பின்னால் இருந்து வந்து தலையில் தாக்கினார் எனது கையடக்க தொலைபேசியை பறித்து எறிந்தார்,நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த பலர் தாக்கப்பட்டனர் என அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்தார்.

அவர்கள் கோட்டா கோ கமவை மூடிவிட்டனர் எந்த பத்திரிகையாளரும் உள்ளே செல்ல முடியாது என அவர் குறிப்பிட்டார்.

பலர் தாக்குதல்களை சமூக ஊடகங்கள் மூலம் நேரலை செய்தனர் எனினும் அதிகாரிகளின் தலையீட்டால் அது அடிக்கடி பாதிக்கப்பட்டது.

படையினர் எவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களின் பகுதிக்கு வந்தனர்  மீடியா மீடியா என சத்தமிட்ட நபரை எப்படி திருப்பியனுப்பினர் என்பதை வீடியோக்கள் காண்பித்துள்ளன.

அதன் பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களை சோதனையிட்டனர்.

FYPDKgxUsAQtNS1.jpg

ஆர்ப்பாட்ட இயக்க தலைவர்களில் ஒருவரான மெலானி குணதிலக கோட்டா கோ கம பகுதிக்கு செல்ல முயன்றவேளை படையினரால் தடுக்கப்பட்டார், அவர் படங்களை எடுக்கமுயன்றவேளை இராணுவவீரர் ஒருவர் கையடக்க தொலைபேசி பறித்து அவற்றில் உள்ளவற்றை அழித்தார் என அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்தார்.

எனது நண்பர் கேள்விகேட்க முயன்றவேளை படையினர் அவரையும் கைதுசெய்தனர் என அவர் தெரிவித்தார்.

22ம் திகதி 2 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளிக்கவுள்ளனர் என்ற அறிவிப்பின் பின்னர் 22 ம் திகதி அதிகாலையி;ல் 1 மணிக்கு மிகப்பெருமளவு இராணுவத்தினர்  கோட்டா கோ கமவை சுற்றிவளைத்து  அனைத்து திசைகளில் இருந்தும் ஆயுதமற்ற ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க தொடங்கினார்கள் என ஆர்ப்பாட்ட தலைவர்கள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

தகவல்தொழில் நிலையம்,அங்கவீனமுற்ற படையினர் கூடாரம் 

நாளாந்தம் பெருமளவானவர்களிற்கு உணவளித்த சமூக சமையலறை உட்பட பல கூடாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என ஆர்ப்பாட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தரணி நுவான் போபகே செயற்பாட்டாளர்கள் லகிருசில்வா,அனுரங்க, அங்கவீனமுற்ற படை வீரர் ஒருவர் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விக்கிரமசிங்க இன்று புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பதவியேற்ற பின்னர் பின்னர் ரணில் விக்கிரமிங்க நான் அரச கட்டிடங்களை ஆக்கிரமித்தல் அரசாங்கத்தை பதவி கவிழ்க்க முயலுதல் போன்றவற்றை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார்.

நாளை நாளை நாங்கள் இங்கிருந்து செல்வோம் என பகிரங்கமாக அறிவித்திருந்தோம்,நாங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்க தீர்மானித்தோம்,தங்கள் அதிகாரத்தை காண்பிப்பதை தவிர இதனை செய்வதற்கான நோக்கம் வேறு எதுவும் இருக்க முடியாது ஆர்ப்பாட்ட இயக்கத்தை மிரட்டி ஒடுக்குவதே அவர்களின் நோக்கம் என ஜெயசேகர குறிப்பிட்டார்.
 

 

https://www.virakesari.lk/article/131994

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ராணுவம் நள்ளிரவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: பிபிசி தமிழ் செய்தியாளரும் தாக்கப்பட்டார்

22 ஜூலை 2022, 02:24 GMT
புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்
YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இலங்கையில் பாதுகாப்புப் படையினர் தலைநகர் கொழும்புவில் உள்ள முக்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்ட முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி கூடாரங்களை அகற்றத் தொடங்கியுள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே இருந்த போராட்டக்காரர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்குச் சில மணிநேரத்திற்கு முன்னதாக, நூற்றுக்கணக்கான துருப்புகள் மற்றும் போலீஸ் கமாண்டோக்கள் போராட்டக்காரர்களை நோக்கி திடீரென தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

பிபிசி செய்தியாளர்கள் மணிகண்டன், அன்பரசன் எத்திராஜன், ஜெரின் சாமுவேல் ஆகியோர் பிபிசி நேரலையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, வீடியோ செய்தியாளர் ஜெரின் ராணுவத்தால் தாக்கப்பட்டார். அதோடு, ராணுவ வீரர் ஒருவர் அவருடைய கைபேசியைப் பறித்து, அதிலிருந்து வீடியோக்களை அழித்தார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பிறகு இது நிகழ்ந்துள்ளது.

 

இலங்கை ராணுவம் போராட்டக்காரர்கள் மீது திடீர் தாக்குதல்

 

படக்குறிப்பு,

இலங்கை ராணுவம் போராட்டக்காரர்கள் மீது திடீர் தாக்குதல்

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் 13ஆம் தேதியன்று நாட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர், சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமாவை கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதியன்று ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு, 20ஆம் தேதியன்று நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்க, பொதுமக்களிடம் செல்வாக்கு இல்லாதவராகக் காணப்படுகிறார். மேலும், போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

 

இலங்கை ராணுவம் போராட்டக்காரர்கள் மீது திடீர் தாக்குதல்

நாட்டின் நிதியைத் தவறாகக் கையாண்டமைக்காக ராஜபக்ஷ நிராகத்தின் மீது பலர் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரச்னையின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார்கள். ஆனால், அவர் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மறுநாளே தெருக்களில் சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

விக்ரமசிங்க பதவியேற்ற உடனேயே, அரசாங்கத்தைக் கவிழ்க்க அல்லது அரசாங்க கட்டடங்களை ஆக்கிரமிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் ஜனநாயகம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியதோடு, அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

ராணுவத்தால் கலைக்கப்பட்ட போராட்டக்காரர்கள்

எதிர்ப்பு இயக்கத்தை விரைவில் அரசாங்கம் படிப்படியாக ஒடுக்கக்கூடும் என்று போராட்டக்காரர்கள் மத்தியில் கவலைகள் இருந்தன. ஜனாதிபதி செயலகத்தின் வளாகம் மாத்திரம் போராட்டக்காரர்களின் வசமிருந்த நிலையில், அதை இன்று மதியம் அரசாங்கத்திடம் கையளிக்க போராட்டக்காரர்கள் தீர்மானித்திருந்தனர்.

இருப்பினும், இலங்கையில் ஜனாதிபதி செயலகத்தை கடந்த 104 நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்த போராட்டகாரர்கள், இன்று (22-07-2022) அதிகாலை ராணுவத்தால் கலைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் உள்ளிட்ட படை வீரர்களை ஈடுபடுத்தி, அரசாங்கம் ஜனாதிபதி செயலகம் மற்றும் அதை அண்மித்த வளாகத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய ராணுவம் மற்றும் போலீஸார் வரழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து வீதிகளையும் ராணுவத்தினர், தடுப்பு வேலிகளை அமைத்து மூடியிருந்தனர்.

அதன்பின்னர், திடீரென ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வருகை தந்த ராணுவம், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.

ராணுவத்தின் தடியடி தாக்குதலை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள், ஜனாதிபதி செயலக வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

பிபிசி செய்தியாளர் மீது தாக்குதல்

ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியிலிருந்து இளைஞர், யுவதிகள் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்களை கலைப்பதற்காக ராணுவம் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், பிபிசி தமிழ் பேஸ்புக் பக்கத்தின் ஊடாக நேரடி ஒளிபரப்பை வழங்கிக் கொண்டிருந்தோம்.

இதன்போது, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர், பிபிசி தமிழ் செய்தியாளர் மணிகண்டன் மற்றும் வீடியோ செய்தியாளார் ஜெரினின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்திருந்தனர்.

 

இலங்கை ராணுவம் போராட்டக்காரர்கள் மீது திடீர் தாக்குதல்

அதைத் தொடர்ந்து, நாம் பிபிசி செய்தியாளர்கள் என்று எமது செய்தியாளர்கள் கூறி பாதுகாப்புப் பிரிவிற்கு தெளிவூட்டல்களை வழங்க முயன்ற சந்தர்ப்பத்தில், ஊடக கடமைகளுக்கு மீண்டும் மீண்டும் இடையூறு விளைவித்தனர்.

அதன் பின்னர், பிபிசி தமிழ் வீடியோ செய்தியாளர் ஜெரின் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதுடன், ஜெரினுடைய வயிற்றின் மீது ராணுவ அதிகாரியொருவர் தனது பாதணி அணிந்த பாதங்களினால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதையடுத்து, ஏனைய பிபிசி செய்தியாளர்களின் உதவியுடன், தாக்குதலுக்கு இலக்கான செய்தியாளர் அருகிலுள்ள நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

குறித்த பகுதியைச் சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டமையினால், வாகனங்கள் உள்ளே பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் முடியாத நிலைமை காணப்பட்டது.

அதன்பின்னர், 1990 என்ற இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டு, தாக்குதலுக்கு இலக்கான எமது செய்தியாளரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆம்புலன்ஸ் குறித்த பகுதிக்கு வருகை தந்து, பிபிசி செய்தியாளரை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உதவியது.

இந்நிலையில், குறித்த ஊடகவியலாளருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

காவல்துறை செய்தித்தொடர்பாளர் எஸ்.எஸ்.பி.நிஹல் தல்டுவா பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டது குறித்து தனக்குத் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரிப்பதாகவும் கூறியுள்ளார்

இதேவேளை, கொழும்பின் பிரதான பகுதிகளில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-62261266

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் : அமெரிக்க தூதுவர் கவலை

U.S.-ambassador_-galle-face-protest_-attகொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை  குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அதிகாரிகள் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றோம் என தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கான உடனடி அனுமதியை வழங்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

https://www.virakesari.lk/article/131995

காலிமுகத்திடல் போராட்டம் மீது அடக்குமுறை : கனடா, பிரித்தானியா கண்டனம்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை  குறித்து பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஆழ்ந்த கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளன.

galle-face-protests_-Canada_-Britain_.jp

குறித்த சம்பவம் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் தெரிவிக்கையில்,

uk.JPG

காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலையடைகிறேன்.  அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகின்றோம் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவிக்கையில்,

canada.JPG

காலி முகத்திடல் போராட்டக் களத்தில் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை.  அதிகாரிகள் நிதானத்துடன் செயல்படுவதும் வன்முறையைத் தவிர்ப்பதும் முக்கியம் என கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
 

https://www.virakesari.lk/article/131996

காலிமுகத்திடல் போராட்டம் மீது அடக்குமுறை : சுவிற்சர்லாந்து கண்டனம்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட  நடவடிக்கை குறித்து சுவிஸ்லாந்து உயர்ஸ்தானிகர் டொமினிக் ஃபர்க்லர் ஆழ்ந்த கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில்  சுவிற்சர்லாந்து உயர்ஸ்தானிகர் டொமினிக் ஃபர்க்லர்தெரிவிக்கையில்,

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைகிறேன்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான உரிமை முக்கியமானது.

காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கான உடனடி அனுமதியை வழங்கவேண்டும். இலங்கைக்கு பரஸ்பர மரியாதையும் ஒத்துழைப்பும் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

swiss.JPG
 

https://www.virakesari.lk/article/131998

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் – அமெரிக்கா

காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்குங்கள் – அமெரிக்கா வலியுறுத்து!

நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்குமாறும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://athavannews.com/2022/1291964

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது - ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு. எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது என ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

29.jpg
 

 

https://www.virakesari.lk/article/132004

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம், தூதுவர்களால் கவலைப்படுவதைத் தவிர வேறென்னதான் செய்ய முடியும். பரவாயில்லை, கவலைப்படவாவது செய்தார்கள். தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோதும் கவலைப்பட்டார்களா? யாருக்காவது நினைவிருக்கிறதா?

  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது - ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு. எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது என ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

29.jpg
 

 

https://www.virakesari.lk/article/132004

நீங்கள்நல்லா கவலைப்படுங்கோ, இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படும் போது ஒன்றும் செய்யாமல் கைகட்டி இருந்து விட்டு இப்ப ஒரு சின்ன தாக்குதலுக்கே இப்பிடி 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தூதுவர், பிரித்தானிய தூதுவர், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி நாடகமாடுகிறார்களா
பிள்ளையையும் நுள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுதல் தானே இது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அமெரிக்க தூதுவர், பிரித்தானிய தூதுவர், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி நாடகமாடுகிறார்களா
பிள்ளையையும் நுள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுதல் தானே இது

 

இவர்கள் அவசரமாக  அனுதாபப்படுகிறார்கள்  என்றால்.....???

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமை தங்கள் கையை மீறிவிடுமோ என்று கவலைப்படுகிறார்கள். ரணிலோடு தொடர்ந்து செயலாற்ற விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்திருந்ததே? நல்லாட்சி காலத்தில் ராஜபக்ஸ் குடும்பத்தை ஐ. நாவில் காப்பாற்றியவர் இன்று அதே கோட்டில். பாப்போம் எப்படி முடியுதென்று? கடைசியாய் ஆப்கானிஸ்தானில நடந்ததுபோல் அமெரிக்க இராணுவம் இதுதான் சந்தர்ப்பம் என்று வந்து இறங்கினாலும் ஆச்சரியமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அமெரிக்க தூதுவர், பிரித்தானிய தூதுவர், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி நாடகமாடுகிறார்களா
பிள்ளையையும் நுள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுதல் தானே இது

மேற்கு நாடுகள் எல்லாம் கவலை தெரிவித்து விட்ட நிலையில்….

பக்கத்து நாடான இந்தியா… இன்னும் கவலை தெரிவிக்கவில்லை என்று,
எனக்கு கவலையாக இருக்கு. 😁

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.