Jump to content

காலிமுகத்திடல் தாக்குதல்: கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டம்!​​​​​​​


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலிமுகத்திடல் தாக்குதல்: கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டம்!

காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து கோட்டை ரயில் நிலையம் முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அங்கு பெருமளவிலானோர் ஒன்றுகூடி வருகின்றனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கடந்த மூன்று மாதங்களாக போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை அந்தப் பகுதிக்கு சென்ற பெருமளவிலான படையினர் அங்கிருந்தவர்களை விரட்டியடித்துள்ளனர்.
 

http://www.samakalam.com/காலிமுகத்திடல்-தாக்குத-2/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No description available.

காலிமுகத்திடல் போராட்டக்களம் மீது மேற்கொள்ளப்பட்ட முப்படையினரின் அடக்குமுறையை கண்டித்து நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்களும் எதிர்ப்புக்களும் இடம்பெற்றுவருகின்றது.

No description available.

No description available.

No description available.

இந்நிலையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடியள்ள மக்கள் ஜனாதிபதிக்கு எதிராகவும் காலிமுகத்திடலில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான அடக்குமுறைக்கு எதிராகவும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

No description available.

No description available.

No description available.
 

 

https://www.virakesari.lk/article/132003

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2022/1291990

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிறியர் ரணில் எங்கே ஒளிந்திருந்து, எந்த நாட்டுக்கு பறப்பார் என்று நினைக்கிறியள்? சும்மா இருந்தவர்களை சீண்டி விட்டுள்ளார்.  கோத்தாவையே கைவிட்ட இராணுவம், இவர்சொல்லைக்கேட்டு கையைக்கடிச்சுக்கொண்டு நிக்குது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் கரண்ட் இல்லை, வாகனத்துக்கு எரிபொருள் இல்லை; தேவையான அடிப்படை வசதிகள் இல்லை இல்லை இல்லை. தெருவில் நிற்கின்றார்கள். இவை மீண்டும் தடையின்றி கிடைக்கும்போது கூட்டம் தானாக கலையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, satan said:

ஏன் சிறியர் ரணில் எங்கே ஒளிந்திருந்து, எந்த நாட்டுக்கு பறப்பார் என்று நினைக்கிறியள்? சும்மா இருந்தவர்களை சீண்டி விட்டுள்ளார்.  கோத்தாவையே கைவிட்ட இராணுவம், இவர்சொல்லைக்கேட்டு கையைக்கடிச்சுக்கொண்டு நிக்குது!

சாத்தான்.... ரணில், பறக்கும் நிலை வந்தால்... நேரே அமெரிக்காதான்.
கோத்தா மாதிரி, நாடு நாடாக அலைய விட்டு, அவமானப் படுத்த மாட்டார்கள்.   

ஆனால்.... அவர் செய்த வேலைக்கு, வெளியே விடுவார்கள் என்பது சந்தேகம்தான்.
உள்ளூரிலேயே, சமாதி கட்டி விடுவார்கள் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No description available.

இதற்குள் ஒருவர், புலிக் கொடியின் நிறத்தில்... உடை அணிந்து,
பாயும் புலியுடன்...  நிற்பதை கவனித்தீர்களா.   😂

இதை... இந்தியா கண்டால், மீண்டும் புலி அமைப்பு உருவாகி விட்டது  என்று, 
அலறி துடிக்கப்  போகின்றார்கள்.  மரமண்டைகள்... நல்லாய் துடிக்கட்டும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில இரண்டு சங்கதியிருக்கென்று நான் நினைக்கிறன். ஒன்று, புலிகள்தான் மீள உருவாகி நாட்டை குழப்புகிறார்கள் என்கிற செய்தியை சர்வதேசத்துக்கும், தென்பகுதிக்கும் உரத்துச் சொல்ல தந்திரமாக ஊடுருவியிருக்கலாம், புலிகளை காட்டி எங்களை ஏமாற்ற முடியாது அன்று நடந்தது உரிமைக்கான போராட்டம் அதை கண்டிக்காது விட்டதாலாயே இன்று நமக்கு இந்த நிலை. ஹாஹா .....இப்படி நடந்தால்... (இது எனது ஆசை!) ஆனால் புலிச்சட்டைக்காரருக்கு காலம் கூடாது,  புலி முத்திரை குத்தி உள்ளே போட வசதியாயிருக்கும். அநேகமாக இவர் ஒரு தமிழராய் இருக்கக்கூடும், அதிகமாய் உணற்சி வசப்பட்டிட்டாரோ? எது உண்மை என்பது இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்துவிடப்போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

உள்ளூரிலேயே, சமாதி கட்டி விடுவார்கள் போலுள்ளது.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன், ஆசையும் அதுதான். ஒருவரை தப்ப விட்டதிலிருந்து படித்திருப்பார்களல்லவா?

14 hours ago, தமிழ் சிறி said:

நேரே அமெரிக்காதான்.
கோத்தா மாதிரி, நாடு நாடாக அலைய விட்டு, அவமானப் படுத்த மாட்டார்கள்.   

அரசனை நம்பி இப்போ, அரசனுமில்லாமல் புருஷனுமில்லாமல் அலையிறார் ஒருவர். இதற்கு பின்புமா?

21 hours ago, கிருபன் said:

காலிமுகத்திடல் போராட்டக்களம் மீது மேற்கொள்ளப்பட்ட முப்படையினரின் அடக்குமுறையை கண்டித்து நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்களும் எதிர்ப்புக்களும் இடம்பெற்றுவருகின்றது.

சாதாரண போராட்டத்தை பேசித்தீர்க்காமல், வன்முறைகளை கையாண்டு நிலைமைகளை சிக்கலாக்கி இந்த நிலைக்கு வந்தபின்னும் திருந்தாமல், மீண்டும் வன்முறையை இளையோரிடம் வலிந்து திணிக்கிறார். இது ஒரு சிறந்த அரசியல்வாதிக்குரியது இல்லை. பதில் ஜனாதிபதியாக வந்த இரண்டு நாளிலேயே வன்முறை பதில் என்றால்; இவரின் எதிர்கால அரசியல் ஆயுதத்தாலேயே நிர்ணயிக்கப்படும், அல்லது  இனிமேல் அரசியலை செய்யும் கனவை மறந்துவிட வேண்டியான் இவர். இப்போ; கோத்தா பரவாயில்லைப்போல் என எண்ணத்தொடங்கி விடுவார்கள் ஆர்ப்பாட்டக்காரர்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.