Jump to content

உக்ரேனிய தானிய ஏற்றுமதி - உருவாகியது ஒப்பந்தம் - என்கிறது துருக்கி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல கேள்விகள். ரஷ்யா  உதவிய  நாடுகளில் ஒன்றுக்காவது மேற்குலகில் வாழ்கின்ற ஈழத்தமிழன் அதைவிட்டு அங்கே சென்று வாழ தயாரா?

நீங்கள் வேற. 

கியூபாவில் எல்லாம் 😷மலிவாக கிடைக்கும் என்பதால் எமது சனம் அங்கே போய் அடிக்கும் பம்மல் வார்த்தைகளால் எழுத முடியாது?

  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமி

மேற்குலக/முதலாளித்துவ நாடுகளிலும் சமதர்ம மாற்றுக்கட்சிகள் உள்ளன என்பதை இங்கே அறியத்தருகின்றேன். இடையிடையே வரும் ஆங்கில  சொற்களை முடிந்தால் தவிர்க்கவும். ஏனெனில் எனக்கு ஆங்கிலம் தெரியாது.அது மட்டு

விளங்க நினைப்பவன்

யாழ்கள வாசகர்களுக்கு இப்படியான விடயங்களை நீங்கள் விளக்கம் அளிப்பது பெரிய உதவியாக இருக்கும். உக்ரேனை புரின் ஆக்கிரமிக்க போர் தொடங்கியதில் இருந்து தமிழர்கள் தமிழர்களிடம் அவருக்கா செய்கின்ற பிரசாரங்களை ப

vasee

சிக்கலான கோட்பாடுகள்தான், ஆரம்பத்தில்  எனது புரிதலின் அடிப்படையில் இலகுவாக சொல்லிவிடலாம் என நினைத்திருந்தேன் ( இங்கு உள்ள அனைவரும் துறைசார் கல்வியறிவுள்ளோர் அதனால் கல்வியறிவற்ற எனக்கு இந்த கருத்து

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கோசான்,

உங்கள் வசதிக்குத் தகுந்தபடி விபரங்களை இணைக்கிறீர்கள். உது சரியான வேலை இல்லை. 

🤣🤣🤣
 

https://ourworldindata.org/contributed-most-global-co2

இந்தப் புள்ளிவிபரங்கள் 1751-2017 க்கானவை.

வளர்முக நாடுகள் Co2 வெளியேற்றத்தில் கொண்டுவரப்படும் ஒப்பந்தங்களில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி காரணமாகவே அந்த ஒப்பந்தங்களில் ஒப்பமிடப் பின்னிற்கின்றன. 

இந்த உண்மையை இலகுவாக எல்லோரும் மறந்துவிடுகிறோம். 

 

 

எனது வசதிக்காக இல்லை - நான் இணைத்த புள்ளி விபரம் தற்போதைய CO2 அளவுகளை பற்றியது.  நீங்கள் இணைத்தது 1751 இல் இருந்து 250 வருடங்களுக்கான வரலாற்று தரவு (historical data).

வளர்ந்த நாடுகள்தான் புவி வெப்பமாதலை அதிகம் கூட்டின என்பதை நான் எங்கே மறுத்தேன்?

நாம் அதை பற்றி இங்கே கதைக்கவே இல்லை.

எந்த நாடுகள் கைத்தொழில் புரட்சியில் முன் நின்றன என்று அறிந்தால் - புவி வெப்பமாதலின் பெரும் பழி (blame) வளர்ந்த நாடுகளில்தான் என்பது, உங்கள் பாசையில் சொல்வதானால் குழந்தை பிள்ளைக்கும் புரியும்.

ஆனால் இங்கே அலசபட்டது, நான் தரவுகளை இணைத்தது,  குமாரசாமி அண்ணை இப்போ ரஸ்யாவில் மக்கள் சூழல் மாசில்லாத சூழ்நிலையில் வாழ்கிறார்கள் என்று சொன்னதை மறுதலிக்க கொடுக்கபட்ட தரவு.

அதை மறுதலிக்க இப்போதைய தரவைத்தான் கொடுக்க வேண்டும். 250 வருட வரலாற்று டேட்டாவை அல்ல.

தயவு செய்து சக கருத்தாளரை நாணயம் தப்புவதாக குற்றம் சொல்ல முன், திரியில் என்ன விவாதிக்கபடுகிறது என்பதை கவனியுங்கள்🙏

அது மட்டும் இல்லை கற்ப்ஸ் - நீங்கள் தந்த இணைப்பின் படியும் வளர்ந்த நாடுகளோடு, ரஸ்யாவும் 250 வருடமாக சூழலை மாசு படுத்தியே வந்துள்ளது என்பது தெளிவாகிறது.

ஆகவே நான், நுணா, நீங்கள் தந்த எந்த தரவின் படி பார்த்தாலும்

ரஸ்யாவில் சூழல் மாசில்லாதா நிலையில் மக்கள் வசிக்கிறார்கள் என்பது பிழையான கூற்று என்பது நிருபணமாகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

Vaasee சோவியத் யூனியனைக் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். 

சோவியத் யூனியன் எப்போ தேசிய இன அரசியலை ஆதரித்தது ?

எம் போன்ற தேசிய இன அரசியல் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அவர்கள் வைத்த பெயர் “குறுத்தேசியவாதிகள்”.

இலங்கையிலும் இன்றுவரை தமிழ், சிங்கள கம்யூனிஸ்டுகள் தலைவரை ஒரு குறுத்தேசியவாதி என்றே அழைப்பார்கள்.

தேசிய உணர்வு, தொழிலாளர் வர்க்கம் என்ற ஒருமைபாட்டை குலைக்கும் என்பதால் தேசியவாதம் ஒரு விரும்பதாகாத அரசியல் என்பதே மாக்சிச, கம்யூனிச விளக்கம்.

லத்வியாவில் இருந்து ஆப்கனிஸ்தான் வரை, தேசிய இனங்களின் குரல்வளையை நசுக்கி, சுரண்டி, ரஸ்ய இன, மொழி, கலாசார மேலாண்மையை, வர்க்க ஒற்றுமை என்ற பெயரில் திணித்தது சோவியத் யூனியன். 

Edited by goshan_che
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

விசுகு தன்னை வியாபாரி எனக் கூறியுள்ளபடியால் அதனை மனதிலிருத்தி கருத்துரைப்பது நன்று.

🤣🤣

விசுகு அண்ணை மட்டும் அல்ல கற்ப்ஸ்,

முதலாளிதுவ நாட்டின் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் வசியும், தொழில் முனைவுகள் செய்யும் நீங்களும், நானும் கூட வியாபாரிகள்தான்🤣.

என்ன விசுகு அண்ணை வெற்றியடைந்த வியாபாரி😜.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல கேள்விகள். ரஷ்யா  உதவிய  நாடுகளில் ஒன்றுக்காவது மேற்குலகில் வாழ்கின்ற ஈழத்தமிழன் அதைவிட்டு அங்கே சென்று வாழ தயாரா?

நேட்டோ பிரதேசவாதிகளை ரூமேனியாவில் சென்று வாழ சொன்னால் வாழ்வீர்களா??🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, kalyani said:

நேட்டோ பிரதேசவாதிகளை ரூமேனியாவில் சென்று வாழ சொன்னால் வாழ்வீர்களா??🙂

இப்போதே நாம் நேட்டோ நாடு ஒன்றில் தானே வாழ்கிறோம் ஆகவே இன்னொரு நேட்டோ நாட்டுக்கு போகதேவையில்லை.

நாம் ரஸ்யாவில் ஓடி வந்து தஞ்சம் கேட்டு இருந்த படி நேட்டோவை ஆதரித்தால் - அப்போ ரொமேனியாவுக்கு போக சொல்லுவது நியாயமாக இருக்கும்.

அப்படி எண்டாலும் ரஸ்யாவை விட ரொமேனியா திறம் எண்டு போக சொல்லாமலே ரொமேனியா வழியாக மேற்கு ஐரோப்பாவுக்கு ஓடி வந்தவர்கள்தான் நாம் என்பதையும் மறக்க கூடாது.

Edited by goshan_che
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கியூபாவில் எல்லாம் 😷மலிவாக கிடைக்கும் என்பதால் எமது சனம் அங்கே போய் அடிக்கும் பம்மல் வார்த்தைகளால் எழுத முடியாது?

😂

எல்லாம் 😷 மலிவாக கிடைக்கும் என்பதால் மேற்குல நாடுகளில் வாழ்ந்து கொண்டு கொலிடேக்கு மட்டும்  தானே அங்கே

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எனது வசதிக்காக இல்லை - நான் இணைத்த புள்ளி விபரம் தற்போதைய CO2 அளவுகளை பற்றியது.  நீங்கள் இணைத்தது 1751 இல் இருந்து 250 வருடங்களுக்கான வரலாற்று தரவு (historical data).

வளர்ந்த நாடுகள்தான் புவி வெப்பமாதலை அதிகம் கூட்டின என்பதை நான் எங்கே மறுத்தேன்?

நாம் அதை பற்றி இங்கே கதைக்கவே இல்லை.

எந்த நாடுகள் கைத்தொழில் புரட்சியில் முன் நின்றன என்று அறிந்தால் - புவி வெப்பமாதலின் பெரும் பழி (blame) வளர்ந்த நாடுகளில்தான் என்பது, உங்கள் பாசையில் சொல்வதானால் குழந்தை பிள்ளைக்கும் புரியும்.

ஆனால் இங்கே அலசபட்டது, நான் தரவுகளை இணைத்தது,  குமாரசாமி அண்ணை இப்போ ரஸ்யாவில் மக்கள் சூழல் மாசில்லாத சூழ்நிலையில் வாழ்கிறார்கள் என்று சொன்னதை மறுதலிக்க கொடுக்கபட்ட தரவு.

அதை மறுதலிக்க இப்போதைய தரவைத்தான் கொடுக்க வேண்டும். 250 வருட வரலாற்று டேட்டாவை அல்ல.

தயவு செய்து சக கருத்தாளரை நாணயம் தப்புவதாக குற்றம் சொல்ல முன், திரியில் என்ன விவாதிக்கபடுகிறது என்பதை கவனியுங்கள்🙏

அது மட்டும் இல்லை கற்ப்ஸ் - நீங்கள் தந்த இணைப்பின் படியும் வளர்ந்த நாடுகளோடு, ரஸ்யாவும் 250 வருடமாக சூழலை மாசு படுத்தியே வந்துள்ளது என்பது தெளிவாகிறது.

ஆகவே நான், நுணா, நீங்கள் தந்த எந்த தரவின் படி பார்த்தாலும்

ரஸ்யாவில் சூழல் மாசில்லாதா நிலையில் மக்கள் வசிக்கிறார்கள் என்பது பிழையான கூற்று என்பது நிருபணமாகிறது. 

கோசான்,

உங்களுடன் முரண்படுதல் என்பது புரிதலின்பால் வருவது. சோ , நோ கொவித்தல். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

 

அது  உங்கள் நிலைப்பாடு?

ஆனால் மிக நீண்டதூரம் போயாச்சு?

இனி  திரும்ப வரமுடியாது என்பது  எனது  நிலைப்பாடு

அத்தோடு நீங்கள் குறிப்பிடும் பன்முகத்தன்மையும் தோற்றுப்போனதொரு  நடைமுறை?

 

7 hours ago, goshan_che said:

Boom and bust are part of the cycle.  முதலாளிதுவம் வரமுதல் இருந்த ஆண்டான் அடிமை முறையிலும் இது வேறு வடிவில் இருந்தது. இனியும் இருக்கும். உலகம் “லாப நோகிகில்” இயங்கும் வரை இருக்கும்.

நீங்கள் சொல்லும் chaos theory (வண்ணத்து பூச்சி) ஒரு தியரிதான், ரூல் அல்ல. அப்படியே அது சரி என்றாலும் தனியே பொருளாதாரத்துக்கு மட்டும் அல்ல “இயங்கு நிலை” யில் இந்த பிரபஞ்சத்தில் உள்ள சகலதுக்கும் அது பொருந்தும்.

ஆகவே வேறு ஒரு வடிவில் சமதர்ம பொருளாதாரத்திலும் இது நடக்கும் (நடப்பதென்றால்). 

இந்த திரைப்படம் அவுஸ்ரேலிய திரைப்படம்.

இந்த காணொளியில் இடையே Fractal வடிவம் காட்டப்படுகிறது, இந்த திரைப்படத்தின் நாயகன் fractal economy எனும் அடிப்படையினை வைத்து வங்கியினை திவாலாக்குவார் திட்டமிட்டு.

பொதுவாக பொருளாதாரத்தில் கோட்பாடுகளை விளங்கப்படுத்துவதற்காக நிறைபோட்டி சந்தை என வரையறுப்பர், அதாவது பொருளின் விலையில் எந்தவித அதிகரிப்பு மட்டுமன்றி சரியான விலையினை காட்டும் என்பதாகக்கொள்ளலாம்.

Efficient Market Hypothesis (EMH)

https://www.investopedia.com/terms/e/efficientmarkethypothesis.asp

ஆனால் நடைமுறையில் அப்படியில்லை அதற்குக்காரணம் கடன்.

சந்தை பொருளாதாரத்தில் உள்ள கடன் இல்லாவிட்டால் பொருளாதரம் கீழ் உள்ளதுபோல இருக்கும்.

ஒரு சீரான 45 பாகை வளர்ச்சியுடன் இருக்கும்.

https://courses.lumenlearning.com/wm-macroeconomics/chapter/reading-the-new-economy-controversy/

காசு இல்லாத போதும் கடனுக்கு பொருள்களை வாங்கும் போது உற்பத்தி அதிகரிக்கும், பின்னர் கடனை திருப்பி செலுத்தும் போது செலவீடு குறைந்து உற்பத்தி குரைவடையும் இது சுற்றினை (Cycle) உருவாக்கும்.

https://nucleuswealth.com/articles/suspending-the-debt-cycle-is-capitalism-finished/

இந்த சுற்றுகள் மனித உளவியலின் அடிப்படையில் நிகழ்கிறது.

மக்கள் ஒருவரை பின்பற்றும் முறைமை இந்த நிலமையினை தீவிரமாக்குகிறது (Herd mentality).

வீட்டு விலைகள் அதன் உண்மையான அளவினை விட அதிகரித்தல்.

Tulip mania நிகழ்வினை இப்போது பார்ப்பவர்களுக்கு முட்டாள்தனமாகத்தெரியும் ஆனால் அக்கால கட்டத்தில் அவ்வாறில்லை.

https://www.investopedia.com/terms/h/herdinstinct.asp

இந்த சந்தைநிலயினை Fractal Market Hypothesis (FMH) என்பதினூடாக வரையறுக்கிறார்கள்.

https://www.investopedia.com/terms/f/fractal-markets-hypothesis-fmh.asp

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

எல்லாம் 😷 மலிவாக கிடைக்கும் என்பதால் மேற்குல நாடுகளில் வாழ்ந்து கொண்டு கொலிடேக்கு மட்டும்  தானே அங்கே

இலங்கையிலும் எல்லாம் கிடைக்கும். ஆனால் கொஞ்சம்  செலவு அதிகம். 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்போதே நாம் நேட்டோ நாடு ஒன்றில் தானே வாழ்கிறோம் ஆகவே இன்னொரு நேட்டோ நாட்டுக்கு போகதேவையில்லை.

நாம் ரஸ்யாவில் ஓடி வந்து தஞ்சம் கேட்டு இருந்த படி நேட்டோவை ஆதரித்தால் - அப்போ ரொமேனியாவுக்கு போக சொல்லுவது நியாயமாக இருக்கும்.

அப்படி எண்டாலும் ரஸ்யாவை விட ரொமேனியா திறம் எண்டு போக சொல்லாமலே ரொமேனியா வழியாக மேற்கு ஐரோப்பாவுக்கு ஓடி வந்தவர்கள்தான் நாம் என்பதையும் மறக்க கூடாது.

போகத்தேவை இல்லை என்பதல்ல பொயின்ற். ரூமேனியாவில் வாழ்வீர்களா என்பது தான். வேறை யாரையும் கோட் பண்ணினால்  அழையா விருந்தாளியாக  வந்து ஆட்டுக்குள் மாட்டை விடுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சோவியத் யூனியன் எப்போ தேசிய இன அரசியலை ஆதரித்தது ?

எம் போன்ற தேசிய இன அரசியல் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அவர்கள் வைத்த பெயர் “குறுத்தேசியவாதிகள்”.

இலங்கையிலும் இன்றுவரை தமிழ், சிங்கள கம்யூனிஸ்டுகள் தலைவரை ஒரு குறுத்தேசியவாதி என்றே அழைப்பார்கள்.

தேசிய உணர்வு, தொழிலாளர் வர்க்கம் என்ற ஒருமைபாட்டை குலைக்கும் என்பதால் தேசியவாதம் ஒரு விரும்பதாகாத அரசியல் என்பதே மாக்சிச, கம்யூனிச விளக்கம்.

லத்வியாவில் இருந்து ஆப்கனிஸ்தான் வரை, தேசிய இனங்களின் குரல்வளையை நசுக்கி, சுரண்டி, ரஸ்ய இன, மொழி, கலாசார மேலாண்மையை, வர்க்க ஒற்றுமை என்ற பெயரில் திணித்தது சோவியத் யூனியன். 

சோவியத் யூனியன் எமது போராட்டத்திற்கு ஆதரவு வளங்கவில்லையா என்பது தெரியாது, ஆனால் பலச்சமனிலை  நிலவிய காலத்தில் (1986) ஒரு நாடு எமது போராட்டத்திற்கு உதவியிருந்தாகக கேள்விப்பட்டேன் அவர்கள் புலிகளுக்கு வழங்கிய ஆயுதத்தினில் 80 விகிதத்தினை மட்டும் புலிகளுக்கு கொடுத்து விட்டு 20 % ஈரோசிற்கு இந்தியா அதனை பிரித்து கொடுத்ததாகக்கேள்விப்பட்டேன்.

பின்னாளில் அந்த நாட்டினை அமெரிக்கா துவைத்து எடுத்திருந்தது.

இங்கு நான் கூறும் கருத்து ஒற்றை ஏகாதிபத்தியம் என்பது ஒரு கடை மட்டுமிருந்தால் அவர்கள் சொல்வதே விலை என்ற நிலமையினை, நான் நினைக்கிறேன் என்னால் தெளிவாக விளங்கப்படுத்த முடியவில்லை, அல்லது எனது கருத்தினை தவறானது என ஒரு நிலையான முடிவினை முற்கூட்டியே எடுத்து விட்டது போலவும் இருக்கலாம்.

மற்றது அவுஸ்ரேலியா சீன மாகாணம் ஆகுதல் என்பதுடன் தொடங்கி செல்லும் கருத்துக்கு பதில் சொல்ல தேவையில்லை, ஆனாலும் உங்கள் கருத்துகளை மதிக்காமல் விட்டது போல உங்களுக்கு தெரியலாம், ஆனால் அடிப்படையில் அவுஸ்ரேலியா ஏற்கனவே அமெரிக்க மாகாணமாகவுள்ளது அப்படி அவுஸ்ரேலியா சீன மாகாணம் ஆனால் அமெரிக்காவும் மாறியிருக்கும்.

பொதுவாக இப்படி அடிப்படையில்லாமல் பேசுவது பொதுவான விடயம் தான், விளங்க நினைப்பவர் உங்களுக்க்காக சொல்லவில்லை இது மேலை நாடுகளில் இருவர் பேசிக்கொண்டிருக்கும் போது எந்தவித மன்னிப்பும் இன்றி இடையில் குறுக்கிட்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என புரியாமல் அவர்கள் பேசிய வார்த்தையில் ஒன்றினை அரைகுறையாகக்கேட்டுகொண்டு அந்த முழுசம்பாசணயினையே கடத்தும் எங்களவர்களை குறிப்பிடுகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

ரஸ்ய வெளிநாட்டு அமைச்சர் கொங்கோ , மற்றும் சில ஆபிரிக்க நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பேச்சுவார்த்தை  உணவுப்பொருட்கள்  ஏற்றுமதி சம்பந்தமானதாக இருக்கலாம் என செய்திகள் கூறுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

ரஸ்ய வெளிநாட்டு அமைச்சர் கொங்கோ , மற்றும் சில ஆபிரிக்க நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பேச்சுவார்த்தை  உணவுப்பொருட்கள்  ஏற்றுமதி சம்பந்தமானதாக இருக்கலாம் என செய்திகள் கூறுகின்றன.

கொங்கோ மற்றும்  ஆபிரிக்க  நாடுகளுக்கு வியாபாரம் செய்வதாக  வெளியில்  வேண்டுமானால் காட்டலாம்

ஆனால் வரவு????? 0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2022 at 00:37, kalyani said:
On 25/7/2022 at 22:49, விளங்க நினைப்பவன் said:

நல்ல கேள்விகள். ரஷ்யா  உதவிய  நாடுகளில் ஒன்றுக்காவது மேற்குலகில் வாழ்கின்ற ஈழத்தமிழன் அதைவிட்டு அங்கே சென்று வாழ தயாரா?

நேட்டோ பிரதேசவாதிகளை ரூமேனியாவில் சென்று வாழ சொன்னால் வாழ்வீர்களா??

ரஷ்யா உதவிய நாடுகளில் ஒன்றுக்காவது மேற்குலகில் வாழ்கின்ற ஈழத்தமிழன் அதைவிட்டு அங்கே சென்று வாழ தயாரா என்று நான் கேட்டது ஆண்டவர் பூட்டின் வாழ்கின்ற சொர்க்கம் ரஷ்யாவிலேயே வாழபிடிக்காமல் நேட்டோமேற்குலநாடுகளே தஞ்சம் என்று விரும்பி வாழ்கின்ற புரின் பக்தர்கள் ரஷ்யா உதவி செய்த நாடுபக்கம் செல்வார்களா நோ தாங்ஸ் என்று கும்பிட்டுவிட்டு தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2022 at 17:39, சுவைப்பிரியன் said:

தலை சுத்துது.

சிக்கலான கோட்பாடுகள்தான், ஆரம்பத்தில்  எனது புரிதலின் அடிப்படையில் இலகுவாக சொல்லிவிடலாம் என நினைத்திருந்தேன் ( இங்கு உள்ள அனைவரும் துறைசார் கல்வியறிவுள்ளோர் அதனால் கல்வியறிவற்ற எனக்கு இந்த கருத்து புரிந்தால் அது மற்றவர்களுக்கும் இலகுவாகப்புரிந்து விடும் என நினைத்தேன்)

அல்லது இந்தக்கருதுகோள்கள் தவறாக இருக்கலாம் அல்லது எனக்கு இந்த கருதுகோளை மற்றவர்களுக்கு புரியவைக்கமுடியாமல் இருக்கலாம்.

மேலே உள்ள காணொளியில் கூர்ப்பு பற்றி கூறப்படுகிறது முதலாவது வகை டார்வினது கோட்பாடு, இந்த கூர்ப்பு கோட்பாடு போலவே பொருளாதாரமும், உலக ஒழுங்கும் உள்ளதாகக்கருதுகிறேன்.

இதில் கூறப்படும் Punctuated Equilibrium போலவே தற்போதுள்ள பொருளாதாரத்தினை Punctuated Growth economy என கூறுகிறார்கள்.

உலக ஒழுங்கை தீர்மானிப்பதில் முதல் காரணி கல்வி அதன் மூலம் உருவாகும் புதிய தொழில்னுட்பம், உற்பத்தி அதிகரிப்பு அதனால் உலக வர்த்தகத்தில் ஏற்படும் வர்த்தக வகிபாகம், அது வழங்கும் பொருளியல் வளத்தினால் அதிகரிக்கும் பாதுகாப்பு செலவீன அதிகரிப்பு என நீண்டு செல்லும்.

உலக ஒழுங்கை தொடர்ச்சியாக தக்க வைக்க கல்வியறிவும், பொருளாதார பலமும் வேண்டும் அதனடிப்படையிலேயே நாடுகள் குடி வரவு கொள்கைகளை வகுக்கின்றன.

2 ஆம் உலக யுத்தத்தின் பின் ஏற்பட்ட பொருளாதார நெருககடி இங்கிலாந்தினை உலக ஒழுங்கினை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த நிலையிருந்து கீழிறக்கிவிட அமெரிக்கா அந்த இடத்தினை எடுத்து கொண்டது.

இங்கு யார் நல்லவர் கெட்டவர் அல்ல பிரச்சினை, பாதிக்கப்பட்ட தேசிய இனமான எமக்கு எது இலாபம் என அறிதல்.

அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தாக்குதல் பல நியாயமான போராட்டங்களுக்கு முடிவு கட்டிவிட்டது, இந்த நிலை பனிப்போர் காலத்தில் ஏற்ப்பட்டிருந்தால் ஒரு சம்பவமாக உலகம் கடந்துவிட்டிருக்கும் .

கோசான் கூறுவது போல இரஸ்சியா ஒரு காலத்திலும் உலக ஒழுங்கை தீர்மானிக்க முடியாது, இதனல் உலகு இழப்பதற்கு எதுவுமில்லை ஆனால் இரஸ்சியா தெரியாமலே அடக்குமுறைக்க்குள்ளாகியுள்ள தேசிய இனங்களிற்கு நன்மை செய்கிறது என்பதுதான் எனது கருத்து.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2022 at 00:53, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யா உதவிய நாடுகளில் ஒன்றுக்காவது மேற்குலகில் வாழ்கின்ற ஈழத்தமிழன் அதைவிட்டு அங்கே சென்று வாழ தயாரா என்று நான் கேட்டது ஆண்டவர் பூட்டின் வாழ்கின்ற சொர்க்கம் ரஷ்யாவிலேயே வாழபிடிக்காமல் நேட்டோமேற்குலநாடுகளே தஞ்சம் என்று விரும்பி வாழ்கின்ற புரின் பக்தர்கள் ரஷ்யா உதவி செய்த நாடுபக்கம் செல்வார்களா நோ தாங்ஸ் என்று கும்பிட்டுவிட்டு தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்😂

எங்கட பொன்னுச்சாமி சனம் சாகும் போது கமறாவுக்கு காட்சியளிக்கிறார். என்னுடைய கணவரை மாதக்கணக்காக காணவில்லை என பாரியாரின் புளுகு.

294915329_1214681959382480_8433660459385

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சியரலியோன் கொடியின் கீழான முதலாவது தானிய கப்பல் ஒடிசியாவில் இருந்து கருங்கடல், பொஸ்போரஸ் நீரிணை வழியாக மத்திய தரைக்கடலை அடைந்து, லெபனானை அடையும் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

உடன்படிக்கை படி:

உக்ரேனிய, ஐநா, துருக்கி அதிகாரிகள் அடங்கிய குழு கப்பல்களில் ஆயுதம் வரவில்லை, கருங்கடலில் அவற்றின் பயணம் என்பவற்றின் மீதான அவதானிப்பை மேற்கொள்ளும்.

உக்ரேனிய கப்பல்கள் கண்ணி வெடி இல்லாதபகுதியால் கப்பலை வழிநடத்தும்.

https://www.theguardian.com/world/2022/aug/01/grain-ship-leaves-ukraine-port-for-first-time-since-russia-blockade

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கிடந்த பஞ்சப்பரதேச துருக்கி இப்ப பொலிஸ் வேலை பாக்க வெளிக்கிட்டதுதான் ஆகப்பெரிய கொடுமை. நேட்டோ எண்ட பெயரிலை ஒரு விடுதலை இனத்தை அழித்துக்கொண்டிருக்கும் நாடு. அதற்கு துணை போகும் மேற்குலகம்.😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானியங்களை ஏற்றிய முதல் கப்பல் உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது!

தானியங்களை ஏற்றிய முதல் கப்பல் உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது!

தானியங்களை ஏற்றிச் செல்லும் முதல் கப்பல் உக்ரைன் துறைமுகத்திலிருந்து உலக உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்கில் புறப்பட்டது.

கருங்கடல் வழியாக உக்ரைன் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க கடந்த ஜூலை 22ஆம் திகதி, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தில், உக்ரைனிய கப்பல்கள் தானியக் கப்பல்களை துறைமுக நீர் வழியாக உள்ளேயும் வெளியேயும் வழிநடத்துகின்றன.

ஏற்றுமதி நகரும் போது ரஷ்யா ஒரு போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்கிறது. துருக்கி – ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் ஆயுதக் கடத்தல் குறித்த ரஷ்ய அச்சத்தைப் போக்க கப்பல்களை ஆய்வு செய்கிறது. கருங்கடல் வழியாக தானியங்கள் மற்றும் உரங்களை ரஷ்ய ஏற்றுமதி செய்வதற்கும் இந்த ஒப்பந்தம் உதவுகிறது.

ரஷ்யாவின் பெப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிய தானியங்களின் உலகப் பற்றாக்குறை மில்லியன் கணக்கானவர்களை பட்டினி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

படையெடுப்பு, உணவு விலைகளை உயர்த்தியது, எனவே உக்ரைனின் துறைமுகங்களைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் முக்கியமானது. ஒடேசாவில் சுமார் 20 மில்லியன் டன் தானியங்கள் இருப்புகளில் சிக்கியுள்ளன.

https://athavannews.com/2022/1293164

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2022 at 14:27, குமாரசாமி said:

சும்மா கிடந்த பஞ்சப்பரதேச துருக்கி இப்ப பொலிஸ் வேலை பாக்க வெளிக்கிட்டதுதான் ஆகப்பெரிய கொடுமை. நேட்டோ எண்ட பெயரிலை ஒரு விடுதலை இனத்தை அழித்துக்கொண்டிருக்கும் நாடு. அதற்கு துணை போகும் மேற்குலகம்.😡

புட்டினின் விசர் வேலையால் அமெரிக்காவை விடவும் அதிகம் நன்மை அடைந்த நாடு என்றால் அது துருக்கியும் அதன் அதிபர் எர்டோஹானும்தான்.

கடும் பொருளாதார நெருக்கடி, துருக்கியின் நீண்ட மதசார்பின்மையை கைவிட்டு இஸ்லாமியவாதம் நோக்கி நகர்வதால் மேற்கோடு முறுகல், அடுத்து வரும் தேர்தலில் எர்டஹான் வெல்வதே கேள்விகுறி என இருந்த நிலையில் எல்லாருக்கும் வேண்டபட்டவராகி தனதும் நாட்டினதும் நிலையை சடுதியாக உயர்த்திவிட்டார் ஏர்டஹான்.

எனக்கு இவரை பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை ஆனால்

1. மக்ரோன் போல் புட்டினை நம்பி அவமானபடுத்த படாமல் புட்டினை அவர் பாணியில் டீல் பண்ணுவது

2. குர்தி போராளிகள் விடயத்தில் பின்லாந்து, சுபீடனை மிரட்டி பணிய வைத்தது

3. அதே நேரம் வெளிப்படையாக தனது பலம், பற்றி “படம்” காட்டாமல் - அமைதியாக செயல்படுவது.

என்பன இவர் ஒரு கனமான நபர் என காட்டுகிறது.

இவரின் அடுத்த நகர்வாக சிரியாவுக்குள், எல்லையில் உள்ள குர்தி மண்ணில் துருக்கிய படைகள் ஊடுருவி 80 கிமி அகல தடுப்பு வலயம் (buffer zone) அமைக்கும் என்கிறார்கள்.

ஒட்டமான் காலத்துக்கு முன்பே இருந்து ரஸ்யாவும், துருக்கியிம் பிராந்திய ஆளுமைக்கு போட்டியிடுவோர். 

உக்ரேனிய முறுகல் முடிவில் இராஜதந்திர கனம் (diplomatic clout), தமது சொல்லுக்கு கட்டுபட்ட நிலம், பிராந்திய வல்லரசு என்ற தகமை (status) சகலதிலும் ரஸ்யாவை துருக்கி முந்தி இருக்க வேண்டும் என்பதே துருக்கியின் திட்டம்.

அவர்களுக்கு புட்டின் ஒரு வரப்பிரசாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

புட்டினின் விசர் வேலையால் அமெரிக்காவை விடவும் அதிகம் நன்மை அடைந்த நாடு என்றால் அது துருக்கியும் அதன் அதிபர் எர்டோஹானும்தான்.

கடும் பொருளாதார நெருக்கடி, துருக்கியின் நீண்ட மதசார்பின்மையை கைவிட்டு இஸ்லாமியவாதம் நோக்கி நகர்வதால் மேற்கோடு முறுகல், அடுத்து வரும் தேர்தலில் எர்டஹான் வெல்வதே கேள்விகுறி என இருந்த நிலையில் எல்லாருக்கும் வேண்டபட்டவராகி தனதும் நாட்டினதும் நிலையை சடுதியாக உயர்த்திவிட்டார் ஏர்டஹான்.

எனக்கு இவரை பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை ஆனால்

1. மக்ரோன் போல் புட்டினை நம்பி அவமானபடுத்த படாமல் புட்டினை அவர் பாணியில் டீல் பண்ணுவது

2. குர்தி போராளிகள் விடயத்தில் பின்லாந்து, சுபீடனை மிரட்டி பணிய வைத்தது

3. அதே நேரம் வெளிப்படையாக தனது பலம், பற்றி “படம்” காட்டாமல் - அமைதியாக செயல்படுவது.

என்பன இவர் ஒரு கனமான நபர் என காட்டுகிறது.

இவரின் அடுத்த நகர்வாக சிரியாவுக்குள், எல்லையில் உள்ள குர்தி மண்ணில் துருக்கிய படைகள் ஊடுருவி 80 கிமி அகல தடுப்பு வலயம் (buffer zone) அமைக்கும் என்கிறார்கள்.

ஒட்டமான் காலத்துக்கு முன்பே இருந்து ரஸ்யாவும், துருக்கியிம் பிராந்திய ஆளுமைக்கு போட்டியிடுவோர். 

உக்ரேனிய முறுகல் முடிவில் இராஜதந்திர கனம் (diplomatic clout), தமது சொல்லுக்கு கட்டுபட்ட நிலம், பிராந்திய வல்லரசு என்ற தகமை (status) சகலதிலும் ரஸ்யாவை துருக்கி முந்தி இருக்க வேண்டும் என்பதே துருக்கியின் திட்டம்.

அவர்களுக்கு புட்டின் ஒரு வரப்பிரசாதம்.

துருக்கிக்கு இதெல்லாம் நேட்டோ எனும் பயங்கரவாத அமைப்புக்குள் இருப்பதன் பலாபலன்கள். 
மற்றும்படி துருக்கி எது சொன்னாலும் பெரியண்ணனும் கேட்டாகணும்....ஏன்னா நெலம அப்படி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

துருக்கிக்கு இதெல்லாம் நேட்டோ எனும் பயங்கரவாத அமைப்புக்குள் இருப்பதன் பலாபலன்கள். 
மற்றும்படி துருக்கி எது சொன்னாலும் பெரியண்ணனும் கேட்டாகணும்....ஏன்னா நெலம அப்படி 😂

உண்மைதான்.

என்ன ஆயுதம் இருந்தும் என்ன பயன்.

அமெரிக்கா, ரஸ்யா இருவரையும் தன் அமைவிட பெறுமதியை வைத்து மட்டும் வெட்டி ஆடுகிறது துருக்கி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

உண்மைதான்.

என்ன ஆயுதம் இருந்தும் என்ன பயன்.

அமெரிக்கா, ரஸ்யா இருவரையும் தன் அமைவிட பெறுமதியை வைத்து மட்டும் வெட்டி ஆடுகிறது துருக்கி.

 

இப்ப தெரியுதா????
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விண்ணப்பித்த துருக்கியை ஜேர்மனி ஏன் முளையிலையே கிள்ளி விட்டதென.....? 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
    • எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
    • இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣. 5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.