Jump to content

பார்வை - தாட்சாயணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பார்வை

 

பச்சை வைப்பர் இழைக்கண்ணாடிகள் இருபக்கமும் கூரைகளாய்  வளைந்து இறங்கிய கூடாரம்.  மழைத்துளிகள்  வளைந்த விளிம்புகளில் சிறு பிள்ளைகள் சறுக்கி விழுவது போல விழுந்து வழிந்தன. வெளிமுற்றத்தின் குடை நிழலொன்றில் மழைக்கு ஒதுங்கியபடி அந்தக் கூடாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தரணிகா. அவள் வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தன, கீதாஞ்சலி இன்னும் வரவில்லை. மழையின் சாரல்கள் அவளது பயணத்தில் இடையூறு தந்திருக்கக் கூடும் என நினைத்தாள். வானம் காலையில் வெயிலின் பளிச்சிடலோடு சிறிது தகதகப்போடு தான் இருந்தது. நாலைந்து நிமிடங்களுக்குள் திடுமென்று சூழ்ந்த இருண்மையின் நெருக்கத்தை எப்படி விலக்குவது?. அதற்குப் பிறகு சூழ்ந்த சாம்பல் நிறம் சூழலை ஒரு இனிய அமைதிக்குள் தள்ளியது. சிறிய மெல்லிய ரீங்காரத்தில் மழை தூறிப் பெரிதாகி எதிர்பார்க்காத வகையில் இரைந்து கொண்டிருந்தது. அந்தப் பச்சைக் கூடாரத்தின் கீழ் ஒன்றை ஒன்று பார்த்தபடி கல் திண்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. நடுவில் கல் மேசைகள் . மேசைக்கு முன்பிருந்த திண்டுகளில் அமர்ந்தபடி அங்கு வந்தவர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தார்கள். உள்ளே ஏதோ பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது போல என நினைத்துக் கொண்டாள். சற்றைக்குள் அவர்களும் கலைந்து உள்ளே போய் விட்டார்கள். அவ்விடம் வெறிச்சோடியது.மழைத் தூறல்கள் வடிந்து   உதிர்ந்தன. காற்று ஈரம் உலர்ந்து வீசியது.

தரணிகா குடை நிழலை விட்டு வெளியே வந்தாள். சுற்றிலும் தெரிந்த பனைகளின் உச்சிகளில் அலங்கார லாந்தர்கள் தொங்கிக்  கொண்டிருந்தன. இரவுகளில் அந்த விளக்குகள் எந்த நிறத்தில் ஒளிரக் கூடும் என அறிய வேண்டும் போலிருந்தது. வெளிகளை  அலைந்து  சுழன்ற  பார்வை இப்போது அந்தப் பச்சைக் கூடாரத்தினுள் திரும்பியது. உள் கூரை முகடுகளில்  தடித்த கயிறுகளால் சுற்றப்பட்ட சக்கரங்கள் நான்கு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்க, மையத்தில் மின்னொளிர் விளக்குப் பொருத்தப்பட்டிருந்தது. அந்த வண்டிச் சக்கர முனைகளில் பொருத்தப்பட்டிருந்த ஐந்து கயிற்றுத் துணுக்குகளிலும் மின்குமிழ் பொருத்தும் வகையிலான வால்வுகள் பொருத்தப்பட்டிருந்தன.

அந்த இடத்தின் இயற்கையுடன் இணைந்த அழகை வியந்து ரசித்தவாறே உள்ளே நுழைந்து மழையின் ஈரக்குளிர்ச்சி உறைந்திருந்த கல் திண்டொன்றில் அமர்ந்து வாட்ஸப்பைத் திறந்தாள்.

“பத்து மணிக்கு சந்திக்கலாம்”  கீதாஞ்சலியின் செய்தியில் கூட ஒரு புன்முறுவல் இருந்தது. தரணிகா நேரத்தைப் பார்த்தாள். 

பத்து ஒன்பது.

முகநூலைத் திறக்கலாம் என நினைத்தபோது சற்றுத் தூரத்தில் நீல நிறத்தில் ஒரு ‘வெகா’ வருவது தெரிந்தது. கரு நீல ஹெல்மெட்டோடு ஊதா நிறத்தில் மழைக்கவசம் அணிந்த அந்தப் பெண் ‘வெகா’வை  நிறுத்தினாள்.  

சுற்றுமுற்றும் பார்வையைச் சுழற்றியபின் தனித்திருந்த தரணிகாவை  நோக்கி வந்தாள். மழைக் கவசத்தில்  வீழ்ந்திருந்த நீர்த்துளிகள் இலேசான சிலுசிலுப்பின் அசைவை ஏற்படுத்தின. 

‘சொறி, கன நேரம் காக்க வச்சிட்டன் போல,”  சொல்லிக்கொண்டே  முன்னால்அமர்ந்தாள்.

தரணிகா புன்னகைத்தாள். 

“நான் இப்ப தான் உங்களை முதன் முதல் பாக்கிறேன் எண்டு நினைக்கிறன்  …”

” ஓ, வெரி சொறி, உங்களை எனக்குத் தெரியும். அதுக்காக என்னை   உங்களுக்குத் தெரியும் எண்டு நான் நினைச்சிருக்கக் கூடாது தான்.

ஐ ஆம் கீதாஞ்சலி.”

சற்றே எழுந்து கைகளை முன்னால் நீட்டிக் குலுக்கினாள்.

“பரவாயில்லை. உங்களுக்கு என்னைத் தெரிஞ்சிருக்குது…” சொன்ன போது தரணிகாவின் உதடுகளில் வெறும் புன்னகை ஒன்று எழுந்து மறைந்தது.

” உங்களைத் தெரியாமலா…” உற்சாகமாய்ப் பேசத் தொடங்கிய கீதாஞ்சலி சொற்களை மெல்ல விழுங்கினாள். சிறு குரங்கொன்று  கூடாரத்தின் கூரையில் தொங்கிக் கொண்டிருந்த வண்டிச் சக்கரங்களைப் பிடித்துத் தொங்கி அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. 

“என்ன மழையப்பா, வானமே பிச்சுக் கொட்டுற மாதிரியெல்லோ பொழிஞ்சு தள்ளுது,”  கீதாஞ்சலி மழைக் கோர்ட்டில் படிந்திருந்த மழைத்துளிகளை உதறினாள்.

“ம்ம், எதிர்பார்க்கவே இல்லைத்தான், இப்பிடியொரு மழையை…”

சற்று நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியிருந்தார்கள். மௌனம் கனத்திருந்த அந்த நிமிடத்தைக் குலைத்தபடி தரணிகா கேட்டாள்.  

“சொல்லுங்கோ, என்ன விஷயத்தை நீங்கள் என்னட்டை அறிய வேணும்?” குரங்குக் குட்டி இப்போது சக்கரத்தில் தலைகீழாகத் தொங்கியது.

கீதாஞ்சலி ஒன்றும் பேசாமலே அவளை ஒரு நிமிடம் பார்த்தாள். பின் நிதானித்து ஒற்றை ஒற்றையாய் சொற்களை உச்சரித்துக் கேட்டாள்.

“டிவோர்ஸ் பண்ணுற அளவுக்கு அப்பிடி என்ன பிரச்சினை?”

தரணிகா சட்டென்று சிரித்தாள். சக்கரத்தில் தொங்கிய குரங்குக்குட்டி  திடீரென்று உந்தப்பட்டு அவர்களைப் பார்த்தது. பின் விருட்டென்று அப்பால் போயிற்று.

“இதைக் கேக்கவா வந்தீங்கள்…?” வலிந்து வரவழைத்த புன்னகை அவள் விழிகளில் படபடத்தது.

கீதாஞ்சலி அவளது பதில்களில் உன்னிப்பாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

“நீங்கள் ரிப்போட்டர் தானை, இதெல்லாமுமா உங்கட நியூஸ் பேப்பருக்குக்   குடுப்பீங்கள்?”

“இல்லையில்லை, இது என்ரை பேர்சனல் இன்றெஸ்ட்டிலை கேட்கிறன்”

கூரை விளிம்புகளைத் தாங்கியிருந்த மரத்தீராந்தியில் குரங்குக் குட் டி முன்னும், பின்னுமென அலையத் தொடங்கிற்று.

 “ஏன், என்னிலை மட்டும் அவ்வளவு அக்கறை உங்களுக்கு? உலகத்தில எத்தனையோ பேர், எத்தனையோ கல்யாணம், எத்தனையோ டிவோர்ஸ்? என்னிலை மட்டும் அப்பிடியென்ன ஸ்பெஷல் அக்கறை?”

“ஏனெண்டால், நீங்கள் டிவோர்ஸ் பண்ணினவரைத் தான் நான் ‘மறீ’ பண்ணப் போறன்.”

கீதாஞ்சலி அவளைப் பார்த்தபடியே சொன்னாள்.   

தரணிகாவின் விழிகளில் பரவிய ஆச்சரியம் சற்றைக்குள் மலர்ந்து விரிந்தது,

“அட, பிறகென்ன, வாழ்த்துகள் ரெண்டு பேருக்கும்” 

கீதாஞ்சலி எதுவும் பேசவில்லை. அவளையே கூர்ந்து பார்த்தபடியிருந்தாள். தரணிகாவின்  மனதில் என்ன இருக்கிறதென்பது அவள் பேசும்வரைக்கும் புரியவே புரியாது போலிருந்தது.  

“நீங்கள் என்ரை டிவோர்ஸுக்குக் காரணம் அறிஞ்சிட்டுத் தான் அவரைக் கட்டுறதுக்கு முடிவு எடுக்கப் போறீங்களோ, இல்லாட்டி முடிவு எடுத்த பிறகு சஞ்சலப்பட்டு என்னட்ட வந்திருக்கிறீங்களோ?”

“நான் அவரை மறி பண்ண முடிவெடுத்திட்டன், எனக்கு அவரை நல்லாத் தெரியும். அப்பிடி அவரை டிவோர்ஸ் பண்ணுற அளவுக்கு என்ன நடந்ததெண்டு அறிய வேணும் போலை கிடந்தது, அது தான்…” கீதாஞ்சலி வார்த்தைகளை இழுத்தாள்.

“அவனிலை அப்பிடி ஒரு பிழையுமில்லை” தரணிகா மெல்லப் புன்னகைத்தாள்

“என்ன நடந்ததெண்டா, சாதாரணமா அப்பிடி சொல்லுறதுக்கு எதுவுமேயில்லை, ஆனா என்ன நடந்ததெண்டதுக்கு ஒரு பதில் இருக்கத் தானை வேணும்”

“எனக்குத் தெரிஞ்சு ரெண்டு பேரும் விரும்பித் தானை கட்டினீங்கள்”

“விரும்பிக் கட்டினதெண்டதே உண்மையோவெண்டு எனக்கிப்ப சந்தேகமாக் கிடக்குது. அவன் என்னை விரும்பிறான்  எண்டு சொல்லேக்க எனக்கும் வேற தெரிவு ஒண்டும் இருக்கேல்லைத் தானை…”

“மூண்டு வருசத்துக்குப் பிறகு இப்ப என்ன திடீரெண்டு?”

“எதுவும் திடீரெண்டு நடக்கிறதில்லை. எல்லாமே உள்ளுக்குள்ளையே அதுக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டு தானிருக்கும். வெளீல  தெரியாட்டிலும் உள்ளை எவ்வளவு இடைவெளி இருந்திருந்தால் நாங்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பம்…”

“இடைவெளியெண்டு என்னத்தை சொல்லுறீங்கள்…?”

“இடைவெளியெண்டு… ம்ம்…. ஒரு உதாரணம் சொல்லுறனே, அந்த மூண்டு வருசத்திலையும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் எனக்குப் பின்னாலை அவனிண்டை கண்கள் சுழண்டு கொண்டே இருந்தது எனக்குத் தெரியும்”

“அப்ப, சந்தேகப் பிறவி எண்ணுறீங்களோ?”

“சந்தேகப்பிறவி…?  ஊஹும்… அப்பிடியில்லை, ஆனா, என்னெண்டு சொல்லுறது?” அவளது முகத்தில் ஒரு சஞ்சலம் அசைந்தது.

“உங்களைக் கோட்ஸிலையிருந்து அவன் எடுக்கேக்குள்ள ஒரு பிரஸ் ரிப்போர்ட்டரா நான் அங்க வந்தனான். அப்ப அவன் உங்களிலை காட்டின கரிசனையும், அக்கறையும் என்னை ஒரு விதத்தில இம்ப்ரெஸ் பண்ணினது. உங்களுக்கு அவன் வாழ்க்கை தரக் கூடும் எண்டு நான் அப்பவே நினைச்சனான். அது உண்மையும் ஆச்சுது…”

“ஆனா, இப்பிடியொரு சந்திப்பு எங்களுக்கிடையிலை வருமெண்டு நீங்கள் நினைச்சேயிருக்க மாட்டீங்கள், அப்பிடித்தானே?”  காந்தள் மலரின் சிவப்பு அவள் வார்த்தைகளில் படிந்தது.  

“ம்ம். உண்மை தான்….” பெருமூச்சு காற்றில் இறங்கியது.

“நான் கூட இப்பிடி ஆகுமென்று நினைக்கேல்லை, டிவோர்ஸ் பண்ணுற ஒவ்வொருத்தரும் தங்கட கல்யாண நாளிலை தாங்கள் டிவோர்ஸ் பண்ணுவம் எண்டு நினைச்சோ கல்யாணம் பண்ணீனம்” 

“இல்லைத் தான். உங்கட நிலைமை, நான் கனவிலையும் நினைச்சுப் பாராதது….”

“இப்பிடி ஆகும் எண்டு நினைச்சிருந்தால் அப்பவே, அவனை ரிஜெக்ட் பண்ணியிருக்கலாம், எல்லாம் அனுபவம் வந்து சொல்லித் தர வேண்டியிருக்கு. சில வேளைகளிலை வாழ்க்கை மேலோட்டமா வாழுற ஆக்களுக்கு நல்லாயிருக்கும். ஒவ்வொண்டையும் நுணுக்கமா ஆராய்ஞ்சு பாக்க வெளிக்கிட்டால் சீ.. எண்டு போகும்”

“சீ எண்டு போற அளவுக்கு, அப்பிடியென்ன அருவெறுப்பு?”

“அதுக்கு, உங்களை மாதிரி வெறுமனே ரிப்போர்ட்டர் வேலையிலை இருந்தால் காணாது. நீங்கள் அப்பிடி, அப்பிடியே என்ரை வாழ்க்கையை வாழ்ந்து பாக்கோணும்”

“அப்பிடியெண்டா ஒரு போராளியாய் நான் இருந்திருக்க வேணும் எண்ணுறீங்களோ…?”

‘போராளியாய் இருக்க வேண்டியதில்லை, முன்னாள் போராளியாய் இருந்தால் தான் அது உங்களுக்கு விளங்கும்”

“போராளிகளா இருக்கேக்க உச்சாணிக் கொம்பிலே ஏத்தி விட்டிட்டு யுத்தக் கைதி ஆனவுடனை கீழை தள்ளி விட்டது பற்றிக் கதைக்கிறீங்களோ…?” 

“இதுகளைப் பற்றிக் கதைக்க என்ன கிடக்கு? அது தான் யதார்த்தம். அது தான் நடந்த உண்மை. அப்ப நாங்கள் துவக்கு கொண்டு திரிஞ்ச நேரத்தில சனம் தந்த மரியாதைக்கும் அதுக்குப் பிறகு வெளீல வரேக்க பாத்த அனுதாப, இகழ்ச்சிப் பார்வைக்கும் தான் எவ்வளவு வித்தியாசம். இதை ஜீரணிக்க ஏலாமல் தான் எத்தனையோ போராளிகள் மனம் குன்றிக் கிடக்குதுகள். அது ஒரு பக்கம். அதெல்லாத்தையும் நான் எதிர்பார்த்ததாலை அதை நினைச்சு  வருத்தப்படுறதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை. நான் சொல்ல வாறது வேறை, மரீட் லைஃப் எண்ணுறதுக்கும், போராளி லைஃப்  எண்ணுறதுக்கும் புள்ளி போட்டு இணைச்சு வச்சிருக்கிறது பற்றி”

“நான் அறிஞ்ச வரைக்கும், அவன் பெண்களை மதிக்கிறவன், அக்கறை காட்டுறவன், ஒரு இடத்தில கூட அவன் பெண்களை அவமானப்படுத்தி நான் பாத்ததில்லை.”

“அவமானமெண்டா என்னவெண்ணுறது ஆளுக்கு ஆள் வேறுபடும்.. சாதாரணமான ஒரு பொம்பிளைக்கு அவன் ஒரு நல்ல ஹஸ்பண்டா இருப்பான்”

“ஏன் உங்களுக்கென்ன?”

“எனக்குப் பிடிக்குதில்ல”

“என்ன பிடிக்குதில்ல? அவனைப் பிடிக்குதில்லையா? இல்லாட்டி மரீட் லைஃபிலையுள்ள   செக்ஸுவல் ரிலேசன்ஷிப் பிடிக்குதில்லையா?”

“செக்ஸுவல் ரிலேஷன்சிப் வேண்டாமெண்டா நான் கலியாணம் கட்டியிருக்கத் தேவையில்லை”

“அப்ப…”

“நான் ஒரு போராளி, கைது செய்யப்பட்டு நீண்ட நாளா தடுப்புச் சிறையிலே இருந்தவள்….” 

“அதெல்லாம் தெரிஞ்ச கதை தானே…?”

“அதெல்லாம் தெரிஞ்சு கொண்டவரை கலியாணம் கட்டுறது மோசமான சித்திரவதை”

“சித்திரவதையெண்டா…?”

“தடுப்புச் சிறையிலை எனக்கு என்ன நடந்திருக்குமெண்ட கேள்வி…?’

“ஏன், அவன் அதெல்லாம் கேட்டவனோ…?”

“உள்ளுக்குள்ளை உள்ள கேள்வி, கேள்வியாத் தான் வர வேணுமெண்டதில்லையே…?”

“விளங்கேல்லை”

“அவனிண்டை கண்கள் எனக்குப் பின்னாலை என்ரை முதுகைத் துளைக்கிற மாதிரிப் பார்க்கிற பார்வையில எனக்கு அது தெரியுது” 

“அது எப்பிடி, அப்பிடித்தான் நினைக்கிறான் எண்டு தெரியுது?”

“அது தான் நீங்கள் கேட்ட மாதிரி, செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்புக்குப் போக முதல் அன்பா அணைச்சுக் கொள்ளுவான். அந்த நேரம் எல்லாம் மறந்த நிம்மதி எனக்குள்ளை வாற  நேரம் பாத்து, 

‘நோகுதோ, நான் இப்பிடிப் பிடிச்சால் பிரச்சினை இல்லையோ?”

‘இஞ்சை…. நோவில்லையோ…?’

‘அங்கை தொட்டால் ஏதும் ப்ரோப்ளமோ?’

எண்டு அதிகப்படியா வழியுற அந்த வார்த்தைகளுக்க என்ன கிடக்குது?”

“அதை அப்பிடியான கேள்வி எண்டு ஏன் நினைக்கிறீங்கள். அளவுக்கதிகமான  பாசமாயும் இருக்கலாம் தானை?”

“அளவுக்கதிகமான  பாசமெண்டு நினைச்சா அது வெளி வேசமெண்டு தான் நான் சொல்லுவன். அப்பிடி அவன் கேக்கிற நேரம் எனக்கு உடலெல்லாம் கூசுற மாதிரிக் கிடக்கும். அது உடம்பு வலியில்லை. மனசைக் குத்திக் கிழிக்கிற வலி”

“சில வேளை உங்களுக்கு அந்த மாதிரி நடந்திருந்தா, உங்களுக்கு கஷ்டம் தரக் கூடாதெண்டு அவன் நினைச்சிருக்கலாம் தானை.”

“சில வேளை அப்பிடி நடந்திருந்தா,… சில வேளை அப்பிடி நடந்திருந்தா… அப்பிடித்தான் அவங்கள் நடந்தவங்கள் எண்டு காட்ட வேணும் எண்டது தான் இஞ்சை உள்ள தமிழ்த் தேசியவாதிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் விருப்பம் போல கிடக்கு…”

“அப்ப, அப்பிடி நடக்கேல்லை எண்ணுறீங்களோ…?”

“நான் அவங்களைத் தூய்மையானவங்களா ஒருக்காலும் சொல்லேல்லை, அவங்கள் மோசமானவங்களும்  இருந்தாங்கள், நல்லவங்களும் இருந்தாங்கள், அதை மாதிரி, வதை பட்ட பெண் கைதிகள்  இல்லாமலில்லை. சில இடைவெளிகளுக்குள்ளாலையும், பெரிய கைகள் தலையீட்டாலையும், நல்லவங்களிண்டை பார்வை பட்டதிலையும் வெளீல வந்த கைதிகளும் இருக்கீனை, அது, அவரவர் விதியோ, இல்லாட்டி, புத்திசாலித்தனம், தந்திரம் எண்டு எதை வேணுமெண்டாலும் சொல்லிக் கொள்ளலாம். இதுக்குள்ளை நீ எந்த வகையெண்டு தயவு செய்து என்னைக் கேக்க வேண்டாம். கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமுக்குள்ளை அல்லல்பட்ட போராளிப் பெண்களிண்டை ஒரு பிரதிநிதி தான் நான். நான் சீரழிக்கப்பட்டிருக்கலாம், இல்லாட்டி போன மாதிரியே திரும்பி வந்திருக்கலாம். ஆனா, அந்தப் பார்வை, முதுகைத் துளைக்கிற  அந்தப் பார்வை ஜீரணிக்க முடியாமலிருக்குது என்னாலை”

தீராந்தியில் தாறும் மாறுமாய்த் தாவிக் கொண்டிருந்த குரங்குக் குட்டி இப்போது சலித்துப் போய் வெளியே மரத்தில்தாவியது.

“என்னைப் பொறுத்தவரைக்கும், அவன் உங்களிலை அதிகப்படி அக்கறை காட்டினவன். தான் எவ்வளவு அக்கறை காட்டியும் தன்னை நீங்கள் புரிஞ்சு கொள்ளேல்லை எண்டு சொன்னவன்”

“புரிஞ்சு கொள்ளாதது ஆர், எண்ணுறது நீங்கள் நல்லா யோசிச்சாத் தெரியும். ஒரு காலத்திலை, போராட்டம், போராட்டம் எண்டு அதுக்காகவே சகலத்தையும் குடுத்து, கடைசில பயங்கரமான தோல்வியோட நிக்கிற வலி, அதுக்குப் பிறகான வாழ்க்கை, அதை ஏற்க முடியாத அவமானம், எல்லாத்துக்குள்ளேயிருந்தும் வெளீலை வந்து இழந்து போன வாழ்வை இனியாவது வாழுவம் , சாதாரண எளிய பெண்ணுக்கு கிடைக்கிற  வாழ்க்கையாவது கிடைக்கட்டும் எண்டு எல்லா இறுக்கங்களையும் கரைச்சு இளக ஆரம்பிச்சால் அந்த நேரம் பாத்து, ‘ அவங்கள் சரியாக்  கஷ்டப்படுத்தினவங்களோ?, ‘நல்லா வருத்திப் போட்டாங்கள் போல’, நான் மெல்லமாத் தொடட்டுமோ’ எண்ட விசர்த்தனமான கதைகள். என்ன தான் நடந்தா என்ன? நடக்காட்டி என்ன? புருசனோட ஒரு பொம்பிளை சேர நினைக்கேக்க வேற அவமானங்களைப் பற்றிப் பேசுறது அவளுக்கு இழைக்கிற துரோகம் எண்டு அவனுக்குத் தெரியாதோ?”

“தமிழருக்கு இழைக்கப்படுற அநீதியாலை அவன் கொதிச்சுப் போய் இருக்கிறான்”

“இல்ல, தெரியாமல் தான் கேட்கிறன், இப்ப இவ்வளவு கொதிச்சுப் போய் இருக்கிறவர் அப்ப நாங்கள் போராடின நேரம் எங்கை போனவர்? வந்திருக்கலாமே எங்களோட போராட…”

“அதில்லை, அவர் சொன்னதை நான் சொன்னன்”

“அவர்…. ஓ, நீங்கள் அவனை  ரீமேரேஜ் பண்ணப் போறீங்கள், என்ன?”

“எனக்கு அவனைத் தெரியும், உங்களையும் தெரியும். ரெண்டு பேருக்குமிடையில என்ன பிரச்சினை எண்டு அறிய நினைச்சன்”

“உங்களுக்கு அப்பிடி ஒரு பிரச்சினை வரவே வராது, அவன் உங்களுக்கு நல்ல ஹஸ்பண்டா இருப்பான்” தரணிகா இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தாள்.

“ஆனா, எனக்கு என்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்த அந்தப் பார்வை பிடிக்கேல்லை. அப்பிடி ஒரு பார்வை என்ரை முதுகுக்குப் பின்னாலை உறுத்திக் கொண்டிருக்கத் தக்க படி அந்த உறவைக் கொண்டு இழுக்க என்னாலை முடியேல்லை. அதை விடத் தனியாவே இருந்திடலாம்.”

“ஆனா, உங்கட எதிர்காலம்…?”

“அது எப்பவோ போச்சுது, பொது வாழ்விலை ஈடுபட வேணுமெண்டு எப்ப நினைக்கிறமோ, அப்பவே எங்கட தனிப்பட்ட விருப்பு, வெறுப்பிலை   இருந்து வெளீல வந்திட வேணும்., நான் வந்திட்டன்.  ஆனா, பொது வாழ்விலையிருந்து ஒரு காலமும் எங்கட சொந்த வாழ்க்கைக்குத் திரும்ப ஏலாது, அப்பிடியொரு பார்வை, அவனிட்டை இருந்து மட்டுமில்ல, வேறை எங்கை, எங்கயோவிருந்தெல்லாம் வருது. அந்தப் பார்வை என்னை வாழ விடாது. அவனுக்கு என்ரை வாழ்த்துக்களை சொல்லி விடுங்கோ. இன்னும் ஒண்டை நான் சொன்னதாய் சொல்லுங்கோ. ஒரு பெண் ‘ரேப்’ பண்ணப்படுறதை விடப் பயங்கர வலி, அதுக்காகப் புருஷன் நடந்து கொள்ளுற விதம், அது ஆத்திரம், ஆவேசமாய் இருந்தாலும் சரி,அனுதாபம், அவமானம் எதுவெண்டாலும் சரி, எல்லாம் ஒண்டு தான்….”

வெளியே உக்கிரமான இருள் படரத் தொடங்கியது. மழையின் சீற்றத்துளிகள் வீச்சுடன் கீழிறங்கின. கூடாரத்துக்குள்ளிருந்து மரத்தில் தாவிய குரங்குக் குட்டி கண்களில் சிக்கவேயில்லை.

 

https://solvanam.com/2022/07/24/பார்வை-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகப் படியான அனுதாபமும், பாசம் என்னும் பேரில் காட்டும் பரிவும் கூட சிறை மீண்ட ஒரு போராளிப் பெண்ணுக்கு அவமானம்தான்......இப்பொழுது தாரணிகாவின் பக்கம் பந்து நிக்குது......ஒருவேளை தாரணிகாவும் அவனிடம் "அந்த நேரத்தில்" நீ அவளிடம் இப்படித்தான் இருந்தனியோ, இங்கே தொட்டால் உனக்கு பிடிக்குமோ என்று கேட்கும்போது அந்த மனவலி அவனுக்கு புரியலாம்.....!  😴

இணைப்புக்கு நன்றி கிருபன்......!  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.