Jump to content

கறுப்பு ஜூலை நினைவுநாள் காலிமுகத்திடலில் அனுஷ்டிப்பு ! தமிழ் மக்களின் படுகொலையை ஆற்றுகை மூலம் வெளிப்படுத்திய கலைஞர் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலை நினைவுநாள் காலிமுகத்திடலில் அனுஷ்டிப்பு ! தமிழ் மக்களின் படுகொலையை ஆற்றுகை மூலம் வெளிப்படுத்திய கலைஞர் !

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை இனக்கலவரங்களின் 39 ஆவது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. 

1983 ஆம் ஆண்டு , ஜூலை 23 ஆம் திகதி நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டது.

இதன்போது கொழும்பிலும், ஏனைய பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும், அழிக்கப்பட்டும், வடக்கு நோக்கி அகதிகளாகவும் விரட்டியடிக்கப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு பெரும் எண்ணிக்கையானோர் படுகாயம் அடைந்தனர்.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தின் ஆதரவுடன்  குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்றையதினம் காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்றது.

இவ்வாறு, தமிழருக்கு எதிரான இனஅழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலையின் 39 ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு பல்வேறு, இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், 1983 ஜூலையில் கொடூரமாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை அடையாளப்படுத்தும் வகையில் கலைஞர் பிரபுத்த தனுஷ்க காலிமுகத்திடலில் ஆற்றுகையொன்றை அரங்கேற்றியிருந்தார்.

295231069_450228470445978_16607580675562

295283449_450228590445966_53143275980023

295496114_450228497112642_21377523090463

295049929_450228550445970_34515107115214

295065482_450249393777219_55624339571793

FYbObAsaUAApN4u.jpg

295691323_450250167110475_89277063380271

294418953_450249490443876_30595883393730

294645798_450250073777151_22376230971118

294731746_450249667110525_75977484562108

294895787_450249560443869_58804534031525

294898161_450249970443828_90760583185585

295084080_450249933777165_17587559824246

295179901_450250123777146_10051956690938

295179901_450250123777146_10051956690938

295831666_450249473777211_32831149490456

295502897_450249587110533_40662666124615

FYbObA3aIAAOD-U.jpg

படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர்ந்து கலைஞர் பிரபுத்த தனுஷ்க என்பவரால் மேற்கொள்ளப்பட்ட வலிமிகுந்த கலைப்படைப்பாக மனதை உருக்கும் விதத்தில் அரங்கேற்றியிருந்தார்.

FYbObCKaIAAi8GM.jpg

FYbObA2agAE2G8a.jpg

இதேவேளை, 1983 ஜூலை மாதம் அரசாங்கத்தின் ஆதரவுடன் காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்றையதினம் கொழும்பு பொரளை மயானமருகில் இடம்பெற்றது. வடக்கு-கிழக்கு-தெற்கு-மலையகம்-புலம்பெயர் சகோதரத்துவம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

294961399_449501083852050_93412217374535

294348983_449501573852001_67446665885247

294662074_449501307185361_47940251475765

294958613_449501500518675_13602011244136

படங்கள் - மாற்றம்

 

https://www.virakesari.lk/article/132191

 

  • Like 1
Link to comment
Share on other sites

 பிரபுத்த தனுஷ்கவிற்கு நன்றி. உணர்வு பூர்வமாக பங்காற்றியிருக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபுத்த தனுஷ்... தனது உடலை வருத்தி, இதனை செய்து காட்டியதன் மூலம்
சில சிங்களவராவது மன வருத்தப் பட்டார்கள் என்றாலே..
மனமாற்றத்தின்  ஆரம்பம் என கொள்ளலாம்.
ஆனால்... போக வேண்டிய தூரம் மிக அதிகமானது.

பிரபுத்த தனுஷுக்கு  நன்றி. 🙏

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபுத்த தனுஷ்கவிற்கு நன்றி ஆனால் ஒருவர் இருவரால் ஆண்டு கணக்கில் சிங்கள பேரினவாதம் உடனே போய்விடாது .

உதாரணத்துக்கு 

 

 

லண்டனில் இருந்து இலங்கை திரும்பிய கலாநிதி விக்கிரமபாகு மீது தாக்க

நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு உள்ளார். விமான நிலையத்தின் அதிகாரிகள் பொலிஸார் முன்னிலையில் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாக ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. கலாநிதி விக்கிரமபாகுவை வரவேற்பதற்காக கட்சி ஆதரவாளர்களும் மனித உரிமைவாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் மனித உரிமைவாதிகளும் சட்டத்தரணிகளும் கூடி இருந்ததாகவும் அவர்களுக்கு முன்னிலையிலேயே சீருடை அணிந்த அதிகாரிகள் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

அண்மையில் லண்டன் வந்திருந்த கலாநிதி விக்கிரமபாகு லண்டனில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்விலும் உரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தார். மேலும் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் கலாநிதி விக்கிரமபாகு கலந்துகொண்டு இலங்கை அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் 100,000 பேர்வரை மரணமடைந்ததாகவும் கலாநிதி விக்கிரமபாகு தெரிவித்து இருந்தார்.

விமானநிலையத்திற்கு வெளியே கலாநிதி விக்கிரமபாகு வரவும் ஒரு டசின் வரையான சீருடை அணிந்த விமானநிலைய அதிகாரிகள் விக்கிரமபாகுவைச் சூழ்ந்து ‘துரோகி’ என முழக்கமிட்டு உள்ளனர். ‘மகிந்தவால் இணைக்கப்பட்ட நாட்டை, துரோகி பிரிக்கப் பார்க்கிறாய்!” என சீருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் முழங்கி உள்ளனர். மேலும் கலாநிதி விக்கிரமபாகு வானில் ஏறி அவ்விடத்தை நீங்கும்வரை இவர்கள் கோசம் எழுப்பி உள்ளனர்.

கலாநிதி விக்கிரமபாகுவின் வருகை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற எம்ரிவி ஊடகவியலாளர் பிரேம் லால் லங்கா ஈ-நியூஸ் ஊடகவியலாளர் சாந்த விஜயசூரிய ஆகியோரும் தாக்கப்பட்டதாக அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

டிசம்பர் 02ல் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதிபதி ராஜபக்ச உரையாற்ற இருந்ததற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு கலாநிதி விக்கிரமபாகுவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தனவும் முக்கிய காரணமாக இருந்ததாக அரச தரப்பில் தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ள நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்று உள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள லங்கா சாசமாஜக் கட்சி உறுப்பினருடன் தொடர்பு கொண்ட போது கலாநிதி விக்கிரமபாகு மீது எவ்வித தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆனால் அவரைக் காண வந்திருந்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சிருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் சிலர் ‘துரோகி’ என்றும் ‘நாட்டைப் பிரிக்க வந்த துரோகி’ என்ற வகையிலும் கோசங்களை எழுப்பியதாகவும் தெரிவித்தார். கோசங்களை எழுப்பியவர்கள் கலாநிதி விக்கிரமபாகுவை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இத்தாக்குதலினால் வாகனம் மிக மோசமாக சேதமடைந்து உள்ளது.

நவம்பர் 28ல் கலாநிதி விக்கிரமபாகு தேசம்நெற் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். (இன்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன உடன் சந்திப்பு.) நீண்டகாலமாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற கலாநிதி விக்கிரமபாகு சென்ற கூட்டத்திலும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்து இருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு உடன் தொடர்புகொள்ள முயற்சிக்கப்பட்ட போதும் உடன் தொடர்புகொள்ள முடியவில்லை.

https://thesamnet.co.uk/?p=23555

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசிலர் தமிழ் மக்களின் அவலங்களை உணர்வு பூர்வமாக வெளிக் கொண்டுவருகின்றனர், அவர்களுக்கு நன்றி.......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்பாட்டமில்லாமல்,  முகந்தெரியாமல், விளம்பரமில்லாமல் இந்த மாற்றத்திற்கு உழைத்த அனைத்து உங்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்! 

5 hours ago, பெருமாள் said:

‘துரோகி’ என முழக்கமிட்டு உள்ளனர். ‘மகிந்தவால் இணைக்கப்பட்ட நாட்டை, துரோகி பிரிக்கப் பார்க்கிறாய்!”

நாட்டை கொள்ளையடித்து, வளங்களை வெளிநாடுகளுக்கு விற்று, மக்களை ஏதிலிகளாக்கியவர்கள் மட்டும் தியாகிகள். இவர்களும் துடைத்தெறியப்படுவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

பிரபுத்த தனுஷ்கவிற்கு நன்றி ஆனால் ஒருவர் இருவரால் ஆண்டு கணக்கில் சிங்கள பேரினவாதம் உடனே போய்விடாது .

உதாரணத்துக்கு 

 

 

லண்டனில் இருந்து இலங்கை திரும்பிய கலாநிதி விக்கிரமபாகு மீது தாக்க

நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு உள்ளார். விமான நிலையத்தின் அதிகாரிகள் பொலிஸார் முன்னிலையில் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாக ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. கலாநிதி விக்கிரமபாகுவை வரவேற்பதற்காக கட்சி ஆதரவாளர்களும் மனித உரிமைவாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் மனித உரிமைவாதிகளும் சட்டத்தரணிகளும் கூடி இருந்ததாகவும் அவர்களுக்கு முன்னிலையிலேயே சீருடை அணிந்த அதிகாரிகள் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

அண்மையில் லண்டன் வந்திருந்த கலாநிதி விக்கிரமபாகு லண்டனில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்விலும் உரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தார். மேலும் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் கலாநிதி விக்கிரமபாகு கலந்துகொண்டு இலங்கை அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் 100,000 பேர்வரை மரணமடைந்ததாகவும் கலாநிதி விக்கிரமபாகு தெரிவித்து இருந்தார்.

விமானநிலையத்திற்கு வெளியே கலாநிதி விக்கிரமபாகு வரவும் ஒரு டசின் வரையான சீருடை அணிந்த விமானநிலைய அதிகாரிகள் விக்கிரமபாகுவைச் சூழ்ந்து ‘துரோகி’ என முழக்கமிட்டு உள்ளனர். ‘மகிந்தவால் இணைக்கப்பட்ட நாட்டை, துரோகி பிரிக்கப் பார்க்கிறாய்!” என சீருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் முழங்கி உள்ளனர். மேலும் கலாநிதி விக்கிரமபாகு வானில் ஏறி அவ்விடத்தை நீங்கும்வரை இவர்கள் கோசம் எழுப்பி உள்ளனர்.

கலாநிதி விக்கிரமபாகுவின் வருகை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற எம்ரிவி ஊடகவியலாளர் பிரேம் லால் லங்கா ஈ-நியூஸ் ஊடகவியலாளர் சாந்த விஜயசூரிய ஆகியோரும் தாக்கப்பட்டதாக அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

டிசம்பர் 02ல் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதிபதி ராஜபக்ச உரையாற்ற இருந்ததற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு கலாநிதி விக்கிரமபாகுவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தனவும் முக்கிய காரணமாக இருந்ததாக அரச தரப்பில் தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ள நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்று உள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள லங்கா சாசமாஜக் கட்சி உறுப்பினருடன் தொடர்பு கொண்ட போது கலாநிதி விக்கிரமபாகு மீது எவ்வித தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆனால் அவரைக் காண வந்திருந்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சிருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் சிலர் ‘துரோகி’ என்றும் ‘நாட்டைப் பிரிக்க வந்த துரோகி’ என்ற வகையிலும் கோசங்களை எழுப்பியதாகவும் தெரிவித்தார். கோசங்களை எழுப்பியவர்கள் கலாநிதி விக்கிரமபாகுவை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இத்தாக்குதலினால் வாகனம் மிக மோசமாக சேதமடைந்து உள்ளது.

நவம்பர் 28ல் கலாநிதி விக்கிரமபாகு தேசம்நெற் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். (இன்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன உடன் சந்திப்பு.) நீண்டகாலமாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற கலாநிதி விக்கிரமபாகு சென்ற கூட்டத்திலும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்து இருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு உடன் தொடர்புகொள்ள முயற்சிக்கப்பட்ட போதும் உடன் தொடர்புகொள்ள முடியவில்லை.

https://thesamnet.co.uk/?p=23555

2010 news ???

Mahinda was the President and Gota was Defence Secy

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் பிரபுத்த தனுஷ்க தமிழ் மக்களுக்கு எதிரான அநீதி என்பது இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே சிங்கள ஆட்சியாளர்களால் தொடர்ந்து இழைக்கப்பட்டே காலங்கள் கடந்துள்ளன. மொழியாலும் மதத்தாலும் மற்றையோரை ஒடுக்கிய ஆதிக்க மனப்பான்மையில் இருந்து சிங்கள சமூகம் மீளும்வரை இலங்கையை பிடித்த சாபம் நீங்காது.  தோழர் உங்கள் ஒருவர் குரல் குறைந்தபட்சம் பொதுவெளியில் ஓராயிரமாக மாறும்போது நிச்சயம் அனைத்திலும் மாற்றம் ஏற்படும்.  தொடர்ந்து செயற்படுங்கள் தோழர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

2010 news ???

Mahinda was the President and Gota was Defence Secy

ஆம் நாதமுனியர் கலாநிதி  விக்கிரமார் போன்றவர்கள் இருந்தும் சிங்களவரிடையே தெளிவை கொண்டுவர முடியவில்லை இலட்சத்தில் ஒருத்தன் தமிழருக்கு ஆதரவாய் இருந்து ஒரு பயனும் இல்லை . வழக்கம் போல் சிங்களத்தை நம்பி கெடுவதில் நம்மவர் ஒரு சிலர் முன்னுக்கு நிப்பது வழமையானது .

நகை தங்கம் போன்றவற்றுடன் பஸ்சில்போனவர்கள் இடையில் உள்ள காம் பில் உள்ளவர்கள் நல்ல நட்ப்பு பஸ்சில் போன நாப்பது பேருக்கும் ராஜவிருந்து சிங்கள ஆமி கொடுக்கின்றது விருந்தில் மதி மயங்கி பஸ்சில் கொண்டு போன தங்கத்தின் அளவு சொல்லபடுகின்றது பிறகென்ன குழந்தை குட்டி அனைவரையும் கொன்று போட்டு தங்கத்தை எடுத்தபின் அதே பஸ்சில் போட்டு சடலங்களை மிஞ்சாமல் எரித்தார்கள் இடம் திரிகோணமலை . நஞ்சுடன்  திரத்தி வரும் பாம்பை கூட நம்பலாம் சிங்களத்தை நம்புவது முட்டாள்தனம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் தமிழ் ஆதரவு பேசி அரசியலுக்கு வரும்போது கிடைக்கும் அனுபவம், மீண்டும் அரசியலில் நிலைத்து நிற்கவேண்டுமானால் தமிழர் எதிர்ப்பு எடுத்தாலே நிலைத்து நிற்கலாம் என்பது இந்த நாட்டின் நியதி. இதற்கு ஆரம்பத்தில் சிங்களம் மட்டுமே அரசமொழி என சட்டம் கொண்டுவந்த பண்டாரநாயக்க, வாசுதேவா இன்னும் பலரின் ஆரம்ப அரசியல்  வாக்குறுதிகள் சான்று. விக்கிரமநாயக்கா அதே காரணத்துக்காகவே அரசியலில் இருந்து தூக்கி வீசப்பட்டா. ஆனால் அவர் அரசியலுக்காக தன் கொள்கையை மாற்றி பேசவில்லை, உண்மையை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். பிரபுத்த தனுஷ்க இந்த இளைஞர் சொல்வதை சிங்களம் ஏற்றுக்கொண்டு, மாற்றம் வருமாக இருந்தால்; விக்கிரம நாயக்கா போன்றவர்களை சிங்களம் தேர்ந்தெடுக்கும், அது நிலைத்து நிற்கும்!

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.