Jump to content

ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து


Recommended Posts

ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து

ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து

 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில், ரஷ்ய - இலங்கை உறவை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு மக்களுக்கும் பயனுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேலும் தெரிவித்துள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

நிச்சயமாக அமெரிக்காவோ/மேற்க்கோ, ரஸ்யாவோ எம்மை நியாயமாக நடத்தும், அல்லது தீர்வு தரும் என உடான்ஸ் சாமியார் எங்கும் எழுதியவரல்ல. அதேபோல் வெளிநாட்டு கொள்கை ஒரு போதும் தார்மீகமாக அமையாது ஆகவே நாமும் எ

goshan_che

இங்கே யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பதல்ல பிரச்சனை. மேற்குலகில் இருக்கும் முஸ்லீம்கள் போல புலம் பெயர் தமிழர் சிலரும் இருக்கிறார்கள் என்பதுதான் சொல்லப்படுவது. மேற்குலகில் பல முஸ்லீம்கள்

நீர்வேலியான்

சூப்பர், என்னால் இப்பிடி எழுத முடியவில்லை. இந்த திரி ரஷ்யாவை சார்ந்து போவதால், எனது கருத்து. இந்த புடின் மீதான தனிப்பட்ட காதல், எவ்வளவு யோசித்தாலும் ஏனென்று புரியவில்லை. ரஷ்யாவின் வரலாறே அக்கம் பக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nunavilan said:

ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து

ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்தார் ரஷ்ய ஜனாதிபதி

புட்டின்... உண்மையிலேயே, பெரிய மனுசன் தான். 👍  🥰
இவ்வளவு போர் அமளிக்குள்ளும், ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த செயல் பாராட்டுக்குரியது. 👏

உக்ரைன் ஜனாதிபதி, செலென்ஸ்கி.. 
வாழ்த்து தெரிவிக்காததை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். 😡
உக்ரைனுக்கு  தேயிலை ஏற்றுமதி செய்வதை, ஸ்ரீலங்கா நிறுத்த வேண்டும். 😎
உக்ரைன்காரன்... தேத்தண்ணி குடிக்காமல் இருந்தால் தான், புத்தி வரும். 😂

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் எல்லாம் கோரஸா பாடுங்கோ!

புட்டின் சரணம் கச்சாமி…

செலன்ஸ்கி வீட்டில ரெட் ஆமி….

 

உடான்ஸா ஒளிப்பு மறைப்பு கூட்டுதாபனம் செய்திகள்:

உக்ரேன் போரில் யாழ்கள பிரிகேட் உயிரை கொடுத்து தமக்காக போராடியதற்கு சன்மானமாக, இலங்கையை உடனடியாக பிரித்து தமிழ் ஈழத்தை உருவாக்குமாறு புட்டின் ரணில் ராஜபக்சவுக்கு உத்தரவு.

உருவாக போகும் நாட்டின் எல்லை பாதுகாப்பை, நிர்வாகத்தை பொறுப்பெடுக்க  “பேப் பெக்கோ பெஸ்கி” என்ற ரஸ்ய விமானம்தாங்கி கப்பல் ரஸ்ய வீரர்கள், யாழ்கள பிரிகேட்டுடன் இலங்கை விரைகிறது🤣.

Link to comment
Share on other sites

நிழலியானந்தா எலிபரப்புச் சேவையின் காலை செய்தி:

மேற்கை ஆதரித்து, உக்ரைன் போரில் ரஸ்யாவை எதிர்த்து, ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையாக தட்டச்சில் போரை நிகழத்தியதற்காக மேற்கு ரணிலுக்கு தொலைபேசி எடுத்து உடனடியாக வடக்கு கிழக்கை தமிழர்களின் தாயகமாக அங்கீகரித்து சுய நிர்ணய உரிமையுள்ள தீர்வை கொடுக்குமாறு உத்தரவு!

டொட்டடாங்க்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி என்ன அமெரிக்கா இலங்கையின் கடனை அடைக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

புட்டின்... உண்மையிலேயே, பெரிய மனுசன் தான். 👍  🥰
இவ்வளவு போர் அமளிக்குள்ளும், ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த செயல் பாராட்டுக்குரியது. 

அவர் தனித்து விடப்படுள்ளார், இவர் தனித்து ஆட்சியை கைப்பற்றியுளார். வாழ்த்து தெரிவித்து ஆதரவை பரிமாறிக்கொள்ளட்டுமேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

புட்டின்... உண்மையிலேயே, பெரிய மனுசன் தான். 👍  🥰
இவ்வளவு போர் அமளிக்குள்ளும், ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த செயல் பாராட்டுக்குரியது. 👏

மாண்புமிகு புட்டின் ஏழைகளின் நண்பன்.மேற்குலகு போல் தம்பட்டமடிக்காமல் ஆபிரிக்க நாடுகளில் உணவுப்பஞ்சத்தை நிவர்த்தி செய்து கொண்டிருப்பவர்.

11 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைன் ஜனாதிபதி, செலென்ஸ்கி.. 
வாழ்த்து தெரிவிக்காததை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.

சிறிலங்கா பிரச்சனைக்கு புட்டின் தான் காரணம் என ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த மகா அறிவாளி எல்லோ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மாண்புமிகு புட்டின் ஏழைகளின் நண்பன்.மேற்குலகு போல் தம்பட்டமடிக்காமல் ஆபிரிக்க நாடுகளில் உணவுப்பஞ்சத்தை நிவர்த்தி செய்து கொண்டிருப்பவர்.

சிறிலங்கா பிரச்சனைக்கு புட்டின் தான் காரணம் என ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த மகா அறிவாளி எல்லோ 🤣

ஆனால் பாருங்கோ! நம்ம இனவாதிகள் இனவழிப்பின் போது  சொன்ன காரணங்களும்,  போர் செய்த முறைகளும், ஏற்படுத்திய அழிவுகளும்  புடீன் உக்கிரேனில் செய்யும் போர், காரண முறைகளோடு ஒத்துப்போகின்றன. நீ  உன் நண்பனைக்காட்டு எனக்கு , நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்றொரு பழமொழி உண்டு. சரிதானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

மேற்கை ஆதரித்து, உக்ரைன் போரில் ரஸ்யாவை எதிர்த்து, ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையாக தட்டச்சில் போரை நிகழத்தியதற்காக

புரினின் உக்ரைன் ஆக்கிரமிப்பை நியாபடுத்தியும் அவரின் புகழ்பாடியும் மேற்குலகிகில் வாழ்ந்து கொண்டே அந்த நாடுகளுக்கு எதிரா தீவிர பிரசாரம் செய்த ஈழதமிழர்களுக்காக கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அளவுக்கு வேண்டாம் ஒரு மென்மையான அறிக்கையைஆவது தேசிய இனங்களின் காவலன் புரின் தான் இல்லை தனது வெளிநாட்டு அமைச்சரை கொண்டு ஆவது  சொல்ல வைத்தாரா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புரினின் உக்ரைன் ஆக்கிரமிப்பை நியாபடுத்தியும் அவரின் புகழ்பாடியும் மேற்குலகிகில் வாழ்ந்து கொண்டே அந்த நாடுகளுக்கு எதிரா தீவிர பிரசாரம் செய்த ஈழதமிழர்களுக்காக கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அளவுக்கு வேண்டாம் ஒரு மென்மையான அறிக்கையைஆவது தேசிய இனங்களின் காவலன் புரின் தான் இல்லை தனது வெளிநாட்டு அமைச்சரை கொண்டு ஆவது  சொல்ல வைத்தாரா?

மேற்கு நாடுகளில் வாழ்ந்தால் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமா?
சிறிலங்காவுக்கு ஆயுதமும், இராணுவ ஆலோசனைகளும் வழங்கிய நாடுகள் இந்த மேற்கு நாடுகள்.புலிகளை பயங்கரவாதிகளாக்கியதும் இவர்களே. 12 வருடத்தில் எல்லாம் மறந்து விட்டதா? அல்லது நடிக்கிறீர்களா?

13 hours ago, goshan_che said:

அண்ணைமார் எல்லாம் கோரஸா பாடுங்கோ!

புட்டின் சரணம் கச்சாமி…

செலன்ஸ்கி வீட்டில ரெட் ஆமி….

 

உடான்ஸா ஒளிப்பு மறைப்பு கூட்டுதாபனம் செய்திகள்:

உக்ரேன் போரில் யாழ்கள பிரிகேட் உயிரை கொடுத்து தமக்காக போராடியதற்கு சன்மானமாக, இலங்கையை உடனடியாக பிரித்து தமிழ் ஈழத்தை உருவாக்குமாறு புட்டின் ரணில் ராஜபக்சவுக்கு உத்தரவு.

உருவாக போகும் நாட்டின் எல்லை பாதுகாப்பை, நிர்வாகத்தை பொறுப்பெடுக்க  “பேப் பெக்கோ பெஸ்கி” என்ற ரஸ்ய விமானம்தாங்கி கப்பல் ரஸ்ய வீரர்கள், யாழ்கள பிரிகேட்டுடன் இலங்கை விரைகிறது🤣.

நேட்டோ சரணம் கச்சாமி
வின்ரருக்கு  எணணை கச்சாமி
வின்ரருக்கு காஸ் கச்சாமி

பைடனுக்கு வேல் வேல்
பொறிசுக்கு வேல் வேல்
மக்ரோனுக்கு வேல் வேல்
செலன்ஸ்கிக்கு அரோகரா  என்றும் பாடலாம்.🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

நேட்டோ சரணம் கச்சாமி
வின்ரருக்கு  எணணை கச்சாமி
வின்ரருக்கு காஸ் கச்சாமி

பைடனுக்கு வேல் வேல்
பொறிசுக்கு வேல் வேல்
மக்ரோனுக்கு வேல் வேல்
செலன்ஸ்கிக்கு அரோகரா  என்றும் பாடலாம்.🤣

செலன்ஸ்கிக்கு…. கோவிந்தா, கோவிந்தா…. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

செலன்ஸ்கிக்கு…. கோவிந்தா, கோவிந்தா…. 🤣

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து 

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வாழ்த்துச் சொன்ன சந்தோஷத்தில சீனப்பயணத்துக்கு அடுத்து ரஷ்யாவிலே போய் இறங்கப்போறார் உதவி கேட்டு

ஆமா..... பக்கத்து வீட்டு அண்ணா வாழ்த்துச் சொன்னவரோ இவருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

இவர் வாழ்த்துச் சொன்ன சந்தோஷத்தில சீனப்பயணத்துக்கு அடுத்து ரஷ்யாவிலே போய் இறங்கப்போறார் உதவி கேட்டு

ஆமா..... பக்கத்து வீட்டு அண்ணா வாழ்த்துச் சொன்னவரோ இவருக்கு?

President responsible for attacks on protestors: Sumanthiran - YouTube

வழக்கமாக, எல்லாவற்றுக்கும் முதலில்... வாழ்த்து தெரிவிப்பவர், 
இந்த முறை... தேர்தலுக்கு முதல் நாள், 
இந்திய  தூதரகத்தில் இருந்து வந்த தொலை பேசி அழைப்பை...
ஏபிரகாம் சுமந்திரன் சேர்,  கூட்டத்தில் நின்ற எல்லோருக்கும்... மைக்கில் போட்டுக் காட்ட 
இந்தியா...  அப்செட்  ஆகீட்டுது.  அதாலை... ரணிலுக்கு, நோ வாழ்த்து. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

இந்திய  தூதரகத்தில் இருந்து வந்த தொலை பேசி அழைப்பை...
ஏபிரகாம் சுமந்திரன் சேர்,  கூட்டத்தில் நின்ற எல்லோருக்கும்... மைக்கில் போட்டுக் காட்ட 

அப்படி என்னதான் பேசியிருப்பார்? இவர் பெரிய கொல்லிமலை இரகசியக்காரன் என்றுதானே வெளிநாட்டுத் தூதுவர்கள் தனியே அழைத்து பேசினர். அதற்கிடையில் என்ன நடந்தது இவருக்கு? ஒருவேளை அமெரிக்காவுக்கு எதிரா ஏதும் சொன்னாரோ? ஆனால் அமெரிக்காதான் ரணிலை கொண்டுவந்தது என்றும் தாங்கள் இந்தியாவின் சொல்லுக்கிணங்க ரணிலுக்கு கூட்டாக வாக்களிக்கவில்லை என்றும் சொல்கிறார். ஒருவேளை ஏதும் மாறாட்டம் வந்திருக்குமோ?  என்னதான் நடக்குது நம்ம நாட்டில ஒன்றும் புரியல? 

  • Haha 1
Link to comment
Share on other sites

2 hours ago, satan said:

இவர் வாழ்த்துச் சொன்ன சந்தோஷத்தில சீனப்பயணத்துக்கு அடுத்து ரஷ்யாவிலே போய் இறங்கப்போறார் உதவி கேட்டு

ஆமா..... பக்கத்து வீட்டு அண்ணா வாழ்த்துச் சொன்னவரோ 

ஓம் இன்று வாழ்த்து சொல்லியுள்ளார் நரேந்திரமோடி.

Link to comment
Share on other sites

13 hours ago, விளங்க நினைப்பவன் said:

புரினின் உக்ரைன் ஆக்கிரமிப்பை நியாபடுத்தியும் அவரின் புகழ்பாடியும் மேற்குலகிகில் வாழ்ந்து கொண்டே அந்த நாடுகளுக்கு எதிரா தீவிர பிரசாரம் செய்த ஈழதமிழர்களுக்காக கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அளவுக்கு வேண்டாம் ஒரு மென்மையான அறிக்கையைஆவது தேசிய இனங்களின் காவலன் புரின் தான் இல்லை தனது வெளிநாட்டு அமைச்சரை கொண்டு ஆவது  சொல்ல வைத்தாரா?

உடான்ஸ் சாமியாருக்கு நிழலியானந்தா எழுதிய பதிலை அவர் புரிந்து இருப்பார். மேற்கை ஆதரித்தால் என்ன எதிர்த்தால் என்ன, தமிழர்களுக்கு அதில் எந்த பிரதிபலனோ அல்லது அனுகூலங்களோ அறவே இல்லை என்பதைத் தான் சுவாமி நிழலியானந்தாஜி சொல்ல வந்தார்.

ஆக்கிரமிப்பு + அட்டூழிய போருக்கு எதிராக கதைப்பவர்கள் ஒரு போதுமே மேற்கை ஆதரிக்க முடியாது என்பது தான் யதார்த்தம், முக்கியமாக அமெரிக்காவின் முக்கிய பங்காற்றும் நேட்டோவை ஆதரிக்க முடியாது. அமெரிக்காவின் இரட்டை வேடம் மீண்டும் ஒரு முறை, கடல் தாண்டி, எல்லை தாண்டி, இன்னொரு தேசத்தில் வைத்து பத்திரிகையாளரை படுகொலை செய்ய உத்தரவு இட்ட, யேமனில் தினமும் பலரை கொன்று குவிக்கின்ற சவூதியின் இளவரசரை சந்தித்து கைலாகு (அல்லது கை முட்டி லாகு) கொடுத்ததன் மூலம் அம்பலமாகியது. 

தான் வாழ்கின்ற நாட்டுக்கு எல்லா விடயத்திலும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் அதன் தவறுகளை சுட்டிக் காட்டி எதிர்க்க கூடாது என்றும் நீங்கள் சொல்வதைத் தான் மிக மோசமான போர்க் குற்றங்களை புரிந்த இலங்கை இராணுவத்தினரை ஆதரிக்கும் சிங்களவர்களும் சொல்கின்றனர். இந்த விடயத்தில் நீங்கள் அவர்களுடன் ஒத்துப் போகின்றீர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

ஓம் இன்று வாழ்த்து சொல்லியுள்ளார் நரேந்திரமோடி.

முடிவு அறிவிக்க முதலே வெடி கொழுத்துகிறவர், இப்பதான் தூக்கத்திலிருந்து எழுந்தாரோ? இவரின் பாராமுகம் கண்டுதான்  ஐயாவும் சீனப்பக்கம் திரும்பியிருப்பார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

உடான்ஸ் சாமியாருக்கு நிழலியானந்தா எழுதிய பதிலை அவர் புரிந்து இருப்பார். மேற்கை ஆதரித்தால் என்ன எதிர்த்தால் என்ன, தமிழர்களுக்கு அதில் எந்த பிரதிபலனோ அல்லது அனுகூலங்களோ அறவே இல்லை என்பதைத் தான் சுவாமி நிழலியானந்தாஜி சொல்ல வந்தார்.

ஆக்கிரமிப்பு + அட்டூழிய போருக்கு எதிராக கதைப்பவர்கள் ஒரு போதுமே மேற்கை ஆதரிக்க முடியாது என்பது தான் யதார்த்தம், முக்கியமாக அமெரிக்காவின் முக்கிய பங்காற்றும் நேட்டோவை ஆதரிக்க முடியாது. அமெரிக்காவின் இரட்டை வேடம் மீண்டும் ஒரு முறை, கடல் தாண்டி, எல்லை தாண்டி, இன்னொரு தேசத்தில் வைத்து பத்திரிகையாளரை படுகொலை செய்ய உத்தரவு இட்ட, யேமனில் தினமும் பலரை கொன்று குவிக்கின்ற சவூதியின் இளவரசரை சந்தித்து கைலாகு (அல்லது கை முட்டி லாகு) கொடுத்ததன் மூலம் அம்பலமாகியது. 

தான் வாழ்கின்ற நாட்டுக்கு எல்லா விடயத்திலும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் அதன் தவறுகளை சுட்டிக் காட்டி எதிர்க்க கூடாது என்றும் நீங்கள் சொல்வதைத் தான் மிக மோசமான போர்க் குற்றங்களை புரிந்த இலங்கை இராணுவத்தினரை ஆதரிக்கும் சிங்களவர்களும் சொல்கின்றனர். இந்த விடயத்தில் நீங்கள் அவர்களுடன் ஒத்துப் போகின்றீர்கள்.

நிச்சயமாக அமெரிக்காவோ/மேற்க்கோ, ரஸ்யாவோ எம்மை நியாயமாக நடத்தும், அல்லது தீர்வு தரும் என உடான்ஸ் சாமியார் எங்கும் எழுதியவரல்ல.

அதேபோல் வெளிநாட்டு கொள்கை ஒரு போதும் தார்மீகமாக அமையாது ஆகவே நாமும் எமக்கு ஒப்பீட்டளவில் பயன்படகூடிய மேற்கின் பக்கம் நிற்பதே உசிதம் என்பதே உ.சா வின் கருத்து. மேற்கில் எமக்கு சொற்ப வாக்கு பலமாவது உண்டு. எமது மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களை விடுத்து, ஒரு போதும் எம்மை தமது தூதரக வளவுக்குள் கூட எடுக்காத ரஸ்யாவுடன் நாமாக ஒருதலைகாதல் செய்வது அபத்தமான வெளிநாட்டு கொள்கை என்பதே உ.சாவின் கருத்து. அதேபோல் 2009 வரை இருபகுதியும் எமக்கு ஆப்பு அடித்தாலும், 2009 இற்கு பின் மேற்கினதும், ரஸ்யாவினதும் நம் சம்பந்தமான அணுகுமுறையில் உள்ள வேறுபாட்டையும் உ.சா கருத்தில் எடுக்கிறார்.

அதே போல் மேற்கினை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ரஸ்யாவையும், புட்டினையும் நல்லவர்களாக சித்தரிப்பதை, உக்ரேன் மீது நடக்கும் ஆக்கிரமிப்பை மனிதாபிமான போர் என வர்ணிப்பதை உ.சா எதிர்க்கிறார்.

ரஸ்யா பல நூறு வருடங்களாக சிறிய ஐரோப்பிய தேசிய இனங்களை கருவறுத்ததை, அழிக்கப்படும் ஒரு தேசிய இனமான நாமே, தனி மனித வழிபாட்டு உந்தலால், மேற்கின் மீதான வெறுப்பால், வெள்ளை அடிக்க முனைவதை - உ.சா அடியோடு வெறுக்கிறார்.

மேற்கில் நாம் எல்லோரும் அனுபவிக்கும் ஒப்பீட்டளவு பொருளாதார மேன்மை, மேற்கு செய்யும் ஊத்தை வேலையின் பலந்தான் என்பதால் -குறைந்த பட்சம் நாமும் அந்த ஊத்தையின் ஒரு அங்கமே என்பதையாவது ஏற்க வேண்டும் என உ.சா விரும்புகிறார். மாறாக மேற்கின் ஊத்தை வேலைகளால் விளைந்த நன்மையை அனுபவித்த படியே, அதே ஊத்தை வேலையையை கண்டிப்பதாக பாவ்லா காட்டும் “வெள்ளைவேட்டி” தனத்தையே உ.சா சாடுகிறார்.

அதே போல் மேற்கில் பெரும்பாலும் முதலாம் தலைமுறை குடியேறியாக இருக்கும் நாமே பொதுவெளியில் மேற்கை விமர்சிக்கும் ஒப்பீட்டளவு பேச்சு சுதந்திர்ந்தை, ஜனநாயகத்தை பாவித்து, உலகின் மிக அடக்குமுறை உள்ள ஒரு மாபியா ஸ்டேட்டை - அதுவும் ஜனநாயக நாடுதான் என சீரியஸாக காமெடி பண்ணுவதையும் உ.சா கண்டிக்கிறார்.

பிகு:

உ.சா நேற்று முதல் ஒரு ரம்மியமான கடற்கரை நகரில் வசந்த கால விடுமுறையை கழி(ளி)ப்பதால் - எல்லோரினதும் கருத்துகளுக்கும் தனியாக பதிலிட முடியவில்லை. மன்னிக்கவும்.

 

Edited by goshan_che
  • Like 5
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி உ.சா என்று வருவது வாசிக்கும் போது வேறு மாதிரி இருக்குது.😄ஆனால் பச்சை அதுக்கல்ல கருத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

ஆக்கிரமிப்பு + அட்டூழிய போருக்கு எதிராக கதைப்பவர்கள் ஒரு போதுமே மேற்கை ஆதரிக்க முடியாது

மேற்குலகில் வாழ்ந்து கொண்டு மேற்கை எதிப்பவர்கள் அந்த நாடுகள் செய்த தவறுக்காக ஒன்றும் எதிர்கவில்லை. ரஷ்யாவை பற்றிய பொய்களால் ஏற்பட்ட மோட்டுதனமான நம்பிக்கை அதனால் புரினை  போற்றி துதிபாடுவது, உக்கிரேனை ஆக்கிரமித்ததை ரஷ்ய அட்டூழியங்களை நியாயபடுத்துதல் தாங்கள் பாதுகாப்பாக வாழ்கின்ற நாட்டையே தூற்றுவது எல்லாம். ரஷ்யாவை பற்றிய அவர்களின் மோட்டுதனமான நம்பிக்கை, பிரசாரம் முழுபொய் என்பது அவர்களுக்கே தெரியும். தப்பி தவறியும் அவர்கள் ரஷ்யாவுக்கு சென்று குடியேறமாட்டார்கள்.புத்திசாலிகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

5 hours ago, விளங்க நினைப்பவன் said:

மேற்குலகில் வாழ்ந்து கொண்டு மேற்கை எதிப்பவர்கள் அந்த நாடுகள் செய்த தவறுக்காக ஒன்றும் எதிர்கவில்லை. ரஷ்யாவை பற்றிய பொய்களால் ஏற்பட்ட மோட்டுதனமான நம்பிக்கை அதனால் புரினை  போற்றி துதிபாடுவது, உக்கிரேனை ஆக்கிரமித்ததை ரஷ்ய அட்டூழியங்களை நியாயபடுத்துதல் தாங்கள் பாதுகாப்பாக வாழ்கின்ற நாட்டையே தூற்றுவது எல்லாம். ரஷ்யாவை பற்றிய அவர்களின் மோட்டுதனமான நம்பிக்கை, பிரசாரம் முழுபொய் என்பது அவர்களுக்கே தெரியும். தப்பி தவறியும் அவர்கள் ரஷ்யாவுக்கு சென்று குடியேறமாட்டார்கள்.புத்திசாலிகள்.

ஒரு நாட்டை ஆதரிப்பதற்க்கும் அங்கு போய் குடியேறுவதற்கும் என்ன சம்பந்தம்?
ஆப்கானிஸ்தானை ஆதரிப்பதால் அங்கு போய் குடியேற வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, nunavilan said:

ஒரு நாட்டை ஆதரிப்பதற்க்கும் அங்கு போய் குடியேறுவதற்கும் என்ன சம்பந்தம்?
ஆப்கானிஸ்தானை ஆதரிப்பதால் அங்கு போய் குடியேற வேண்டுமா?

அவையள் அப்பிடித்தான் கதைப்பினம். நாங்கள் எங்கடை அரசியல்வாதிகளை குறை,தவறுகளை சொல்லேக்கை......அப்ப நீங்கள் வந்து செய்து காட்டுங்கோ எண்டுற மாதிரி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

ஒரு நாட்டை ஆதரிப்பதற்க்கும் அங்கு போய் குடியேறுவதற்கும் என்ன சம்பந்தம்?
ஆப்கானிஸ்தானை ஆதரிப்பதால் அங்கு போய் குடியேற வேண்டுமா?

இங்கே யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பதல்ல பிரச்சனை.

மேற்குலகில் இருக்கும் முஸ்லீம்கள் போல புலம் பெயர் தமிழர் சிலரும் இருக்கிறார்கள் என்பதுதான் சொல்லப்படுவது.

மேற்குலகில் பல முஸ்லீம்கள் ஆசியா, ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறியுள்ளார்கள். அவர்கள் அப்படி இங்கே வர காரணம் இங்கே உள்ள பொருளாதார மேன்மை. அந்த மேன்மை மந்திரத்தால் விளையவில்லை. மேற்கின் ஒப்பீட்டலாவில் மேலான ஜனநாயக, பொருளாதார, கட்டமைபுக்களே இதை உருவாக்கின.

இந்த தனிமனித, பொருளீட்டும், லாபம் பார்க்கும் மேற்கின் அரசியல், கலாச்சார, பொருளாதார மேன்மையை அதன் பலன்களை அனுபவித்த படியே - மேற்கில் ஷ்ரியா சட்டம் வேண்டும் என கேட்பார்கள். ஆப்கானில், ஈரானில், சவுதியில் நடக்கும் இஸ்லாமிய 10ம் நூற்றாண்டு ஆட்சி மேற்கை விட திறம் என்பார்கள். ஆனால் செத்தாலும் இந்த நாடுகளுக்கு மட்டும் அல்ல அதை விட நெகிழ்வான மலேசியா, இந்தோனேசியா வில் கூட போய் வாழமாட்டார்கள்.

இதைதான் ரஸ்யா விடயத்தில் அண்ணைமார் செய்கிறார்கள்.

எந்த நாட்டையும் எங்கும் இருந்தும் ஆதரிக்கலாம். ஆனால் ஒரு மோசமான, சுரண்டல் மிகுந்த சர்வாதிகார systemதை நல்லது என்று, அந்த நாட்டிலே வாழாமல், கொலிடே போய் கூட பார்க்காமல், அதைவிட ஒப்பீட்டளவில் சகல சுதந்திரங்களும் உள்ள சிஸ்டத்தில் இருந்து விமர்சிப்பதுதான் விமர்சிக்கபடுகிறது.

தவிரவும் நாம் எல்லோரும் மேற்க்கை தேர்ந்து வந்தவர்கள். இப்போ மேற்கு ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் பலர் மொஸ்கோவில் வந்திறங்கி - ரொமேனியா போடரை நடந்து கடந்து ஈயுவிக்குள் உள்ளிட்டவர்கள். அல்லது இன்னொரு ஈயு அல்லாத நாட்டின் மூலம் அல்லது கிழக்கு ஜேர்மனி மூலம் மேற்கு ஐரோப்பா வந்தவர்கள்.

ஆகவே ஊரில் இருந்து கிளம்பும் போதே, ரஸ்யாவை, கியூபாவை, தேர்ந்தெடுக்க கூடிய வாய்ப்பு, இப்போ இதே நாடுகளுக்கு போக கூடிய வாய்ப்பு அவர்களுக்கு உள்ள போது, அந்த மேன்மையான நாட்டை விட்டு ஏன் இங்கே கிடந்து மாய்கிறார்கள் என்ற கேள்வி நியாயமானதே.

எனது அப்பா கொள்ளைகாரன், அவரை நான் கண்டிகிறேன் என்று சொன்ன படி, அவர் கொள்ளை அடித்து சேர்த்த சொத்தை அனுபவிக்கும் மகன் போல - ஒரு போலித்தனம் இது.

மேற்கின் பிழைகளை யாரும் விமர்சிக்கலாம், ரஞ்சித், விசுகு அண்ணை, நான் என இங்கே மாறாக கதைப்பவர்கள் பலரும் மேற்கை கடுமையாக சாடுபவர்கள்தான் -

ஆனால் இங்கே விமர்சனத்குக்கு உள்ளாவது, மேலே சொல்லபட்ட போலி தார்மீக குமுறலும் (fake moral indignation), புட்டின் மீதானா ஒரு தலைக்காதல், நாயக வணக்கமும், வரலாற்றில் ஐரோப்பிய சிறுபான்மை தேசிய இனங்களுக்கு ரஸ்யா செய்த, செய்கிற கருவறுப்பை வெள்ளை அடிக்கும் செயல்களுமே.

Edited by goshan_che
  • Like 3
  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.