Jump to content

ஜனாதிபதியின்... இல்லத்தில், பணத்தினை எண்ணியவர் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் இல்லத்தில் பணத்தினை எண்ணியவர் கைது!

ஜனாதிபதியின்... இல்லத்தில், பணத்தினை எண்ணியவர் கைது!

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 14, மல் மாவத்தையினைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த சந்தேக நபர் கொழும்பு ஹுசேனியா வீதியிலுள்ள கடையொன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பொதுமக்கள் அரச கட்டடத்தை முற்றுகையிட்டதன் பின்னர் காணப்பட்ட பணத்தை எண்ணிக் கொண்டிருந்த ஒருவரே இவர் என்பதும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை சிலர் எண்ணும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதன் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1292660

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதியின்... இல்லத்தில், பணத்தினை எண்ணியவர் கைது!

போராட்டத்தை ஒடுக்குவதோடு, எதிர்காலத்தில் இப்படியொரு மக்கள் போராட்டம் வரக்கூடாதென்பதற்கான அடக்குமுறை தொடரப்போவதற்கான அறிகுறியாகவே இந்தக் கைது நடவடிக்கை. தெரிந்தெடுத்துக் கைதுசெய்வதன் ஊடாக  தனிமனிதக் குற்றமாக்கித் தனிமைப்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கைது நடவடிக்கை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nochchi said:

போராட்டத்தை ஒடுக்குவதோடு, எதிர்காலத்தில் இப்படியொரு மக்கள் போராட்டம் வரக்கூடாதென்பதற்கான அடக்குமுறை தொடரப்போவதற்கான அறிகுறியாகவே இந்தக் கைது நடவடிக்கை. தெரிந்தெடுத்துக் கைதுசெய்வதன் ஊடாக  தனிமனிதக் குற்றமாக்கித் தனிமைப்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கைது நடவடிக்கை. 

சரியாக சொன்னீர்கள், நொச்சி.
இந்த வார நக்கீரன் வார இதழில்… மெல்ல கொல்லும் நஞ்சு என்று, ரணிலை வர்ணித்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரூ.1.78 கோடியை உடன் கையளிக்கவும்

ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்களால், அங்கிருந்து கைப்பற்றப்பட்டு கையளிக்கப்பட்ட 17.8 மில்லியன் (1.78 கோடி) ரூபாயை உடனடியாக நீதிமன்றத்தில் கையளிக்குமாறு, கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, நேற்று (28) கட்டளையிட்டார்.

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதியன்று ஜனாதிபதி மாளிகையில் இருந்து 17.8 மில்லியன் ரூபாய் பணம் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டதாக கோட்டை பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.

பொலிஸாரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும் அது தொடர்பான அறிக்கை எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதவான் குறித்த பணத்தை உடனடியாக நீதிமன்றத்தில் கையளிக்குமாறு கட்டளையிட்டார்.

அதுமட்டுமின்றி பணம் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரையும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

ஜனாதிபதி மாளிகையில் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தவர்களில், குறித்த நான்கு சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ரூ-1-78-கோடியை-உடன்-கையளிக்கவும்/175-301313

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றிலே போட்டாலும்அளந்து போடவேணும் என்று சொல்வார்கள். இவர்களிடம்  சாட்சியோடு  எண்ணிக்கொடுத்ததையே இன்னும்  உரிய தரப்பிடம்  ஒப்படைக்கவில்லை, எண்ணாமல் கொடுத்திருந்தால் சுருட்ட வசதியாக இருந்திருக்கும். எண்ணியவர் கைது, வாங்கியவர் என்னவானார்? அவரை வாங்கிய பணத்தோடு கைது செய்து பணத்தை சரி பார்க்கவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் நாம் விடும் அறிவித்தல் என்னவெண்டால், கோத்தாவின் கோவணத்தையும் எடுத்தவர்கள் கையளித்து விடுங்கள். நேற்று கோத்தாவின் கொடியை கொண்டு போய், படுக்கையில் விரித்து படுத்தவரை கைது செய்துள்ளார்கள்.

அவரை செக் பண்ணி பார்த்திருக்க வேண்டும்... சிலவேளை கோத்தாவின் கோவணத்தை போட்டுக் கொண்டிருக்க கூடும்.

கோவணம் இல்லாமல்,கோத்தா சிங்கப்பூரில், வீட்டினுள் முடங்கி போய் இருக்கிறார். தயவுடன் அதை கொடுத்து உதவுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

இத்தால் நாம் விடும் அறிவித்தல் என்னவெண்டால், கோத்தாவின் கோவணத்தையும் எடுத்தவர்கள் கையளித்து விடுங்கள். நேற்று கோத்தாவின் கொடியை கொண்டு போய், படுக்கையில் விரித்து படுத்தவரை கைது செய்துள்ளார்கள்.

அவரை செக் பண்ணி பார்த்திருக்க வேண்டும்... சிலவேளை கோத்தாவின் கோவணத்தை போட்டுக் கொண்டிருக்க கூடும்.

கோவணம் இல்லாமல்,கோத்தா சிங்கப்பூரில், வீட்டினுள் முடங்கி போய் இருக்கிறார். தயவுடன் அதை கொடுத்து உதவுங்கள்.

ஜனாதிபதியின் கொடியை திருடியவர் கைது!

ஜனாதிபதியின் கொடியை திருடியவர் கைது!

கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஜனாதிபதியின் கொடியை திருடிய 54 வயதான நபர் ஒருவர் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இருந்து திருடப்பட்ட ஜனாதிபதியின் கொடியை குறித்த நபர் படுக்கை விரிப்பாக பயன்படுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

https://athavannews.com/2022/1292833

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் பணத்தொகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

ஜனாதிபதி மாளிகையில் இருந்து... மீட்கப்பட்டதாக கூறப்படும், பணத் தொகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.

ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் பணத்தொகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட சுமார் ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தொகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்த சம்பவம் இடம்பெற்று 3 வாரங்கள் நிறைவடைந்துள்ளதுடன், குறித்த பணத்தொகை தொடர்பில் நீதிமன்றுக்கு எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை என கொழும்பு கோட்டை நீதிவான் நேற்று சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், குறித்த பணத்தொகையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதிவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த பணத்தொகை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1292855

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and people standing

ஜனாதிபதி மாளிகையில்... பணத்தை எண்ணியவர்கள், 
கட்டிலில் படுத்தவர்களை... கைது செய்ய முடியும் என்றால்..
உடற்பயிற்சி செய்த, போலீஸ்காரரையும் கைது செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டைகொள்ளையடிக்கிறவனுக்கு உயர் பதவி, வெளிநாட்டு உல்லாசம். கொள்ளையடித்து பதுக்கிய பணத்தை எண்ணி உரியமுறையில் கையளித்தவர் கைது. விசித்திரமான நாட்டில் வினோதமான சட்டம்! 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.