Jump to content

ஆஸ்துமா - உணவு முறையே சிகிச்சையாக


Recommended Posts

ஆஸ்துமா - உணவு முறையே சிகிச்சையாக

ஆஸ்துமா என்பது ஒவ்வாமையால் ஏற்படும் நோய் என்பது அனைவரும் அறிந்ததே. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் போதிலும் கூட ஆஸ்துமா தொல்லைக்கு பலர் ஆட்பட்டு வருகின்றனர்.

சிலருக்கு சுற்றுச்சூழல் நிலைமைகளாலும், சிலருக்கு கோதுமை, முட்டைகள், பால், சாக்கலேட்டுகள், பீன்ஸ், உருளைக்கிழங்கு, மாட்டிறைச்சி போன்ற உணவுகளாலும் கூட ஆஸ்துமா ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

மேலும் சிலருக்கு மனச்சிக்கல்கள் காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது. இளம் வயதில் ஆஸ்துமா ஏற்படும் 25 சதவீதத்தினருக்கு உணர்வுபூர்வ பாதுகாப்பின்மை, பெற்றோர்கள் அன்பும் அரவணைப்பும் இன்மை ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் பரம்பரையில் யாருக்கேனும் சரும ஒவ்வாமை, ஆஸ்துமா இருந்தால் அது பின்வரும் தலைமுறையினரையும் பாதிக்கிறது.

ஊட்டச்சத்து மருத்துவ நிபுணர் டாக்டர் ராயல் லீ, ஊட்டச்சத்து குறைபாடுகளாலும், அட்ரினலின் போதாமையாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது என்கிறார். மேலும் இவர் தனது ஆய்வில் மாவுச்சத்துப் பொருட்கள் (Carbohydrates) ஏற்காமை மற்றும் குறைந்த சர்க்கரை ஆகியவற்றாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது என்கிறார்.

உணவு பழக்க வழக்கமே சிகிச்சை

நவீன மருத்துவத்தில் ஆஸ்துமாவை அத்ரதையாக ஒழிக்க முடியவில்லை. தற்காலிக சிகிச்சைகளே உள்ளன. மேலும் ஆஸ்துமாவிற்கு கொடுக்கப்படும் மருந்துகள் நோயாளிகளை மருந்தடிமைகளாக மாற்றி விடுகிறது. மேலும் இவைகள் ஆஸ்துமாவை நிரந்தரமாக்கி விடுகின்றன.

ஆஸ்துமாவிற்கு பிரதம காரணமாக கூறப்படும் அலர்ஜியும் கூட தவறான வாழ்முறை, குறையும் தடுப்பு சக்தி, உணவுப் பழக்க வழக்க தவறுகளால் குலையும் உடல் ஒத்திசைவு போன்றவற்றின் அறிகுறியே. எனவே ஆஸ்துமாவிற்கு உண்மையான சிகிச்சை என்பது கழிவகற்ற உறுப்புகளின் பழுதை நீக்கி அதை நல்ல முறையில் செயலாற்றத்தூண்டுவது மற்றும் முறையான உணவுப் பழக்க வழக்கங்களால் வேஸ்ட் மற்றும் நச்சுப் பொருட்களை உடலிலிருந்து அகற்றுவதுமாகும்.

முதலில் எலுமிச்சை சாறு, தேன் ஆகியவை மட்டுமே உட்கொண்டு 3 முதல் 5 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இந்த உண்ணாநோன்பு காலகட்டத்தில் வென்னீர் கொண்டு குடலை சுத்தம் செய்ய வேண்டும். உண்ணா நோன்பிற்கு பிறகு உடல் நச்சுச் பொருளை அகற்ற வெறும் பழங்களை மட்டுமே 5 அல்லது 7 நாட்களுக்கு உட்கொள்வது நலம். பிறகு சிறிது, சிறிதாக பிற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு நோய் குணமடைவதில் முன்னேற்றம் தெரியும் காலக்கட்டத்தில் சீரான இடைவெளிகளில் சிறு உண்ணா நோன்புகள் அவ்வப்போது தேவைப்பட்டால் மேற்கொள்வது நலம்.

ஆஸ்துமாவிற்கு வெஜிடேரியன் உணவு முறைகளே சிறந்தது. மாவுச்சத்துகள், கொழுப்புச் சத்துகள் மற்றும் புரோட்டீன்களை குறைவாக உட்கொள்ள வேண்டும். பழங்கள், பச்சைக் காய்கறிகள், பழுத்த விதைகள் மற்றும் தானியங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.

காலை உணவு - உலர் கொடி முந்திரியுடன் சில வகை உலர் பழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.

மதிய உணவு - வேகவைத்த காய்கறிகளுடன் கோதுமை ரொட்டி அல்லது சப்பாத்திகள்.

இரவு உணவு - சமைக்கப்படாத காய்கறிகளால் ஆன சாலட்.

இரவு உணவை உரங்கச் செல்வதற்கு 2 மணி நேத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ளவும்.

கபம் சேரும் உணவு வகைகளான அரிசி, சர்க்கரை, அவரை விதைகள் மற்றும் தயிர், வறுக்கப்பட்ட சீரணிக்க சிரமம் ஏற்படுத்தும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். ஸ்ட்ராங் டீ, காபி, மது, ஊருகாய்கள், பதப்படுத்தப்பட்ட பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுகளை கைவிடுவது நல்லது. முதல் சில தினங்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிறிது குணம் தெரிந்த பிறகு சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆஸ்துமா நோயாளிகள் தாங்கள் சாப்பிடும் திறனுக்குக் கீழே சிறிய அளவில் உணவு உட்கொள்ள வேண்டும். மேலும் உணவை நன்றாக அரைத்து மென்று விழுங்க வேண்டும். தினமும் 8 முதல் 10 டம்ளர் குடிநீர் அருந்த வேண்டும், சாப்பிடும்போது நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

கடுமையாக ஆஸ்துமா தாக்கும்போது, பசியின்மை ஏற்படும். அப்போது அவர்களை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. 2 மணிக்கொருதரம் வென்னீர் கொடுத்து வந்தால் போதுமானது.

ஆஸ்துமா சிக்சையில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. மூச்சுத் திணறல் இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தேனை நிரப்பி அதை மூக்கின் அருகே வைத்து மூச்சை இழுத்தால் மூச்சு விடுதலில் உள்ள சிரமம் நீங்கும். இது ஒரு மணி நேரம் வரை தாங்கும். தேனின் வாசனையை உள்ளுக்கு இழுத்தாலும், தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து அருந்தினாலும் நல்ல பலனை கொடுக்கும்.

ஆஸ்துமா சிகிச்சையில் தேன் ஒரு அற்புத மருந்தாக பரிணமிக்கிறது. மூச்சுக் குழல் நோய்களுக்கு 1 ஆண்டு பழைய தேன் உதவுவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் ராபர்ட் டி. ரெய்னால்ட்ஸ், ஆஸ்துமாவில் வைட்டமின் பி-6 குறைபாடு பங்களிப்பு இருந்தால், நாளொன்றுக்கு இருமுறை வைட்டமின் பி-6ஐ 50 மி.கி. எடுத்துக் கொண்டால் மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார். தினமும் பி-6 வைட்டமின் சத்துக்களை சேர்ப்பது மூச்சுத்திணறலை ஒரு வாரத்தில் குணப்படுத்தி விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

காற்று, சூரியன், தண்ணீர் இவை மூன்றும் மிகச்சிறந்த இயற்கை நிவாரணிகளாகும். வாரம் ஒரு முறை உண்ணா நோன்பு, எப்போதாவது எனீமா, மூச்சுப்பயிற்சிகள், புதிய காற்று, உலர்ந்த தட்பவெப்பம், இலகுவான தேக பயிற்சிகள் ஆகியவைகளும் ஆஸ்துமாவின் நீண்ட நாளைய சிகிச்சையில் பங்களிக்கும், மேலும் விவரங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகுவது எப்போதுமே சிறந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.