Jump to content

போராட்டங்களில் மாற்றம் தேவை  — கருணாகரன் — 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டங்களில் மாற்றம் தேவை

போராட்டங்களில் மாற்றம் தேவை 

      — கருணாகரன் — 

இலங்கையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட –நம்பப்பட்ட –காலிமுகத்திடல் போராட்டம் (Galle face Revolution) அப்படியே சுருங்கி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் மிகப் பெரிய எழுச்சியைக் கொண்ட Galle face Revoluation, யாருமே எதிர்பார்த்திராத வகையில் ராஜபக்ஸவினரை அதிகாரத்திலிருந்து அகற்றியது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியில் அசைக்கவே முடியாது என்றிருந்த கோட்டபாயவை நாட்டை விட்டே ஓட வைத்தது. ஆனாலும் இறுதியில் அது மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை பிரமராக்கி, இப்பொழுது ஜனாதிபதியாக்கியுள்ளது. எதிர்பார்த்திராத–பொருத்தமற்றவருக்கு – பெரிய பரிசை அளித்திருக்கிறது. இதற்கு ஒரு வகையில் (எதிர்பாராத விதமாக) இந்தப் போராட்டம் (Galle face Revolution) மறைமுகப் பங்களிப்பைச் செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இதற்குப் பரிசாக  – பொருத்தமற்றவருக்குக் கிடைத்த அதிகாரத்தினால் – அது (Galle face Revolution) பெரிய தண்டனையையும் உடனடியாகவே பெற்றுள்ளது. 

ஆம்,ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, உடனடியாக (24 மணி நேரத்துள்) இந்தப் போராடத்தினர் மீது கடுமையான படை நடவடிக்கையை –ஒடுக்குமுறையை – மேற்கொண்டுள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பிணையில் சட்டத்தரணிகள் அமைப்பு மீட்டுள்ளது. இதன்போது பி.பி.ஸி செய்தியாளர் உள்பட வேறு சில ஊடகவியலாளர்களும் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளனர். 

ராஜபக்ஸவினரே செய்யாத, செய்யத் துணியாத காரியத்தை ரணில் விக்கிரமசிங்க செய்திருக்கிறார். ரணிலின் இயல்பும் வழிமுறையும் அதுதான். எந்தப் போராட்டத்தையும் மிகச் சாதாரணமாக ஒடுக்கி விடுவார். மக்கள் எழுச்சியோ, போராட்டமோ, எதிர்ப்போ அவர் விரும்பாத, ஏற்காத ஒன்று. இதற்கு வாய்ப்பாக அவருக்கு இப்பொழுது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியும் கிடைத்துள்ளது. விடுவாரா சும்மா? 

எதிர்பார்க்கப்பட்டது கட்டமைப்பு மாற்றம் (Seystem Change). இலங்கைக்கு வேண்டியதும் அதுதான். இதையே இலங்கையின் அமைதியைக் குறித்தும் எதிர்காலத்தைக் குறித்தும் சிந்திப்போரும் வலியுறுத்துகின்றனர். சர்வதேச சமூகத்தின் விருப்பமும் இதுதான். இதை அது தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. முக்கியமாக இலங்கையின் பன்மைத்துவத்தை உறுதி செய்யுமாறு. அதற்கேற்ற வகையில் அரசியலமைப்பை மாற்றுமாறு. 

இப்போதுள்ள அரசியலமைப்பு, பௌத்த சிங்கள முதன்மைவாதத்தையே அடிப்படையாகக் கொண்டது. பௌத்தத்துக்கே முன்னுரிமை என்று அழுத்தமாக எழுதப்பட்டது. இந்த அரசியலமைப்பே நடைமுறையில் உள்ளது. இதனால்தான் ஏகப்பட்ட பிரச்சினைகளும் இன முரண்பாடுகளும் உள்ளன. அத்துடன் தனியொரு மனிதருக்கு எல்லையற்ற அதிகாரத்தைக் குவித்துள்ள நிறைவேற்ற அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறையையும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக உள்ளது. இதை ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த காலத்தில் வலியுறுத்தி வந்துள்ளார். இதெல்லாம் பல்லின மக்களைக் கொண்ட இலங்கைக்குப் பொருத்தமானவை அல்ல. இந்த மாற்றங்களும் திருத்தங்களும் நிகழாமல், நிகழமுடியாமல் இருப்பதே இலங்கையின் நெருக்கடிக்கும் சிதைவுக்கும் காரணம். 

இப்பொழுது அதிகாரத்துக்கு வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க, லிபரல் ஜனநாயகவாதி என்று கருதப்படுகின்றவர் –கொண்டாடப்படுகின்றவர். புதிய மாற்றங்களைக் கோருகின்றவர். குறிப்பாக பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தைக் கோரியவர். மாற்றங்கள் வேண்டும் என்றவர். 

ஆனாலும் இதை இனி அவர் ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகமே. ஏனென்றால் இப்போது அவர் நிறைவேற்று அதிகாரமுடைய பதவிக்கு வந்து விட்டார். அதன் அதிகார எல்லைகளை ருசிக்காமல் அதை அவர் சுருக்கிக் கொள்ள விரும்ப மாட்டார். அப்படி அதிகாரத்தை இழக்க விரும்பும் மனநிலையுடையவரல்ல ரணில். 

கடந்த காலத்தில் பட்டலந்த படுகொலை, இன ஒடுக்குமுறை அரசியலின் பொறுப்பில் (பிரமராக) இருந்தவர் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் ஒப்பீட்டளவில் ரணிலினுடைய அணுகுமுறைகள் பொதுப்பரப்பில் கவர்ச்சிகரனமானவையே. குறிப்பாக மேற்குலக வட்டாரங்களில் ரணிலுக்குப் பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. ஒன்று அவர் வெளிப்படையான கடும்போக்குவாதி இல்லை என்பது. இரண்டாவது மேற்குலகின் நண்பராக, அதனுடன் நிபந்தனைகளற்று ஒத்துழைக்கக்கூடிய தலைவர் என்பது. மூன்றாவது ஜனநாயகத்தை அதிகம் விரும்புகின்றவர்,அதைப் பலப்படுத்துவதற்கான வழிமுறைகைளைக் குறித்து யோசிப்பவர் என்பது. 

இந்தச் சூழலில் இலங்கையின் எதிர்காலம் எப்படியிருக்கும்? ரணில் தலைமையிலான ஆட்சியின் செயற்பாடுகள் எத்தகையனவாக அமையும். காலிமுகத்திடல் (Galle face Revolution) போராட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் எப்படி அமையும்? எப்படி அமைய வேண்டும் என்பதைக் குறித்துச் சிந்திப்பது அவசியமாகும். 

போராட்டத்தை முன்னெடுத்தோரின் இலக்குகளில் பாதி இப்பொழுது நிறைவேறி விட்டது. முக்கியமாக ராஜபக்ஸவினர் நேரடியான அரசியல் அரங்கிலிருந்து (முன்னரங்கிலிருந்து) அகற்றப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் (மகிந்த ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ, ஷசிந்திர ராஜபக்ஸ) பாரளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். கட்சி ரீதியாகவும் அவர்களுடைய பொது ஜன பெரமுனவே பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. ரணில் விக்கரமசிங்கவின் வெற்றிக்கு அதுவே மறைமுகப்பங்களிப்பையும் செய்துள்ளது. இதற்கு நேரடிக் காரணம், பாராளுமன்றத்தில் நிலவும் சீரழிந்த அரசியல் நடத்தைகளாகும். அது அரசியல் வணிகத்துக்கும் அதற்குத் தோதான பேரங்களுக்கும் கீழ்ப்படிந்தது. எனவேதான் இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று போராடிகள் கோரி வந்தனர். 

ராஜபக்ஸவினரை அதிகாரத்திலிருந்து அகற்றிய கையோடு பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட போராளிகள், மக்களின் மன உணர்வுகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற மாதிரிப் பாராளுமன்றம் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். ஆனாலும் அதை மீறியே ரணில் தெரிவு செய்யப்பட்டுள்ளானர். ரணிலை போராளிகள் மட்டுமல்ல மக்களும் பாராளுமன்றத்தில் உள்ள அரசியற் தரப்பினரும் கூட ஏற்றவர்களில்லை. ஆனாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 134 பேர் அவரைத் தெரிவு செய்து வெற்றியடைய வைத்துள்ளனர். 

மாற்றத்தை (System Change) செய்ய  முடியாத நிலையில்தான் இந்த நாடும் போராட்டத் தரப்பும் (Galle face Revolution) இன்னும் இருக்கின்றனர் என்று தெரிகிறது. இதனால்தான் இப்பொழுது அவர்கள் (Galle face Revolution) அரச ஒடுக்குமுறைக்குள்ளாக வேண்டி வந்தது. இதற்குப் பிரதான காரணம், இந்தப் போராட்டத்தில் எதிர்பார்ப்புகள் முன்வைக்கப்பட்ட அளவுக்கு, அவற்றைச் செயற்படுத்துவதற்கான வழிமுறைத் தொடர்ச்சி முன்வைக்கப்படவில்லை. அதை ஒழுங்கமைக்கும் முறைமைகள் பற்றிச் சிந்திக்கவில்லை. 

எதிர்த்தரப்பின் அதிகாரம், அதன் மாற்றங்கள், அதனுடைய புதிய தந்திரோபயங்கள் எல்லாம் வலுவானவை. அவை பற்றியெல்லாம் சிந்தித்திருக்க வேண்டும். அதைச் சிந்திப்பதற்கு, அதைக்குறித்து உரையாடுவதற்கு, அதை எதிர்கொள்வதற்கு உறுதியான –தெளிவான தலைமைத்துவம் வேண்டும். இந்தப் போராட்டத்தில் அந்தத் தன்மை குறைவாகவே காணப்பட்டது. ஏன் இல்லை என்றே சொல்ல வேண்டும். பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், இளைய பௌத்தத் துறவிகள், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரள் அங்கே இருந்தாலும் அவர்களை வழிப்படுத்தக் கூடிய தலைமை என்ற ஒன்று வெளிப்படையாக –முகம்காட்டக் கூடிய அளவில் இல்லை. பின்னணியில் முன்னிலை சோசலிஷக் கட்சி மற்றும் மக்கள் ஐக்கிய முன்னி என்ற ஜே.வி.பி இருக்கிறது என்று சொன்னாலும் அந்தச் சக்திகளால் முழுமையாக இந்தப் பிரச்சினையைக் கையாள முடியவில்லை. 

இதை – இந்தச் சூழலை, இந்தப் பலவீனத்தை ரணில் தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒன்று தனக்குப் போட்டியாக– நிகராக இன்றைய இலங்கை அரசியற் சூழலில் யாரும் –எந்தத் தரப்பும் –  இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார். இரண்டாவது, தனக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் மூலம் மிக விரைவாக அவர் போராட்டத்தை ஒடுக்க முற்படுவார். பல முனைகளிலும் அதிகாரத்தைப் பிரயோகிக்கவும் கட்டமைக்கவும் முற்படுவார். அப்படியென்றால்தான் அவருடைய அரசியல் பலவீனங்களை மறைத்துக் கொள்வதுடன்,தன்னை முன்னிலையிலும் வைத்துக் கொள்ள முடியும். மூன்றாவது சர்வதேச சமூகத்தின் (தன்னுடைய அரசியல் நட்பு நாடுகளுடன் இணைந்து) ஆதரவுடன் மக்களுடைய உடனடிப் பிரச்சினைகளான எரிபொருள் நெருக்கடி, எரிவாயுப் பிரச்சினை, விவசாயத்துக்குத் தேவையான உள்ளீட்டு விவகாரம் போன்றவற்றுக்கு ஓரளவாவது தீர்வைக் காண முற்படுவார். இதன் மூலம் மக்களின் எழுச்சியையும் எதிர்ப்பலையையும் தணித்து விட முயற்சிப்பார். 

ஒப்பீட்டளவில் ரணில் விக்கிரமசிங்க மிகப் பெரிய அரசியற் தந்திரசாலி. அவர் என்ன நினைக்கிறார், என்ன செய்யப்போகிறார் என்று எவராலும் கண்டறிய முடியாது என்பா். அதுதான் தொடர்ந்தும் நடக்கப்போகிறது. ரணில் என்ன செய்வார்? யாரை வீழ்த்துவார். யாரை அணைத்துக் கொள்வார் என்று யாருக்குமே தெரியாது. அப்படியானதொரு இருண்ட காலகட்டத்தில் –இருண்ட சூழலில் மக்களாகிய நாம் வந்திருக்கிறோம். 

இப்பொழுது போராட்டத்தை முன்னெடுத்தோர் மேலும் உறுதிப்பாட்டுடனும் புதிய அனுபவத் தெளிவோடும் மீளெழுச்சி கொள்ள வேண்டும். குறைந்த ஆபத்தை விட கூடிய ஆபத்தை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். 

ஆகவே காலிமுகப் போராட்டத்தரப்புக்கும் மாற்றத்தை விரும்புகின்ற மக்களுக்கும் இப்பொழுதுதான் பெரிய வேலைகள் கிடைத்துள்ளன. வரலாறு அந்தப் பொறுப்பை சுமத்துகிறது. ஆம், புதிய முறையில் எதிரியை – ரணிலை– நிறைவேற்று அதிகாரத்தை எதிர்கொள்ள வேண்டும். இது எளிய விசயமல்ல. உயிராபத்துகள் நிறைந்தது. அதிகாரத்துடன் மோதுவதும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் இலகுவானதல்ல. இதுவே வரலாற்றின் அனுபவமும் உண்மையுமாகும். 

போருக்குப் பிந்திய இலங்கை இன்னொரு போரை –அதிகாரத்துக்கு எதிரான –பொருளாதா நெருக்கடிக்கு எதிரான போரைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. கால நிர்ப்பந்தமே மாற்றங்களை எப்போதும் உண்டாக்குவன. அந்தக் காலம் இலங்கைக்கு வாய்த்திருக்கிறது. இனி மக்களுடைய மனங்களிலும் கரங்களிலும்தான் அனைத்துமே.  
 

https://arangamnews.com/?p=7911

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.